முன்னுரை:
- பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மஞ்சள் சாகுபடி தமிழ்நாட்டின் பிரதான பயிர்களில் ஒன்றாக திகழ்கிறது. கிழங்கு வகையை சார்ந்த இந்த பயிர் நறுமணம் மற்றும் வாசனைக்காக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் அழகு சாதன பொருள்கள் தயாரிப்பில் இதன் பயன் எண்ணிலடங்காதது.
- தமிழ்நாட்டின் ஈரோடு தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் என பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் பயிர் சாகுபடியை பற்றி விரிவாக பார்ப்போம்.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை:
- மஞ்சள் ஒரு வெப்பமண்டல பயிராக திகழ்வதால் சராசரி முதல் அதிக வெப்பநிலை நிலவக்கூடிய தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். போதுமான நீர் வசதி இருப்பது மிக அத்தியாவசியம்.
- பல்வேறு மண் அமைப்பிலும் வளரக்கூடிய மஞ்சள் பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடைய மணல் பாங்கான மண் மிகவும் உகந்தது.
- களிமண் மற்றும் செம்மண் போன்ற பகுதியில் சாகுபடி செய்யும் பொழுது மண் இறுக்கத்தை போக்க போதுமான அளவு தொழு உரம் இட்டு சாகுபடி செய்யலாம்.
- களர் மண்ணில் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம் மேலும் அமில காரத்தன்மை 5 முதல் 7.5 வரை இருக்கலாம். நீர் தேங்கும் அமைப்புடைய வயல்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
பருவம்:
அந்தந்த மாவட்டத்தில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவு பருவம் தேர்வு செய்யப்படுகிறது. பொதுவாக மே இறுதியில் இருந்து ஜூன் இறுதிக்கு இடைப்பட்ட காலம் நடவு செய்வதற்கு உகந்தது.
நிலம் தயாரித்தல்:
- மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரிய கலப்பையை தேர்வு செய்து கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு வடக்கு திசையில் உழுது மண்ணை தூளாக்கி பண்படுத்த வேண்டும் வேண்டும்.
- கடைசி உழவு அல்லது ரோட்டாவேட்டர் மூலம் உழவு செய்வதற்கு முன்னதாக நன்கு மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 4 டன் என்ற அளவிற்கு குறையாமல் அடி உரமாக இட வேண்டிய உரங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி வேண்டும்.
பார் அமைத்தல்:
- ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் பார் ஆரம்பித்து சாகுபடி செய்யப்படுகிறது.
- அகன்ற பாத்தி அமைத்தல், முகடு பள்ளம் முறையில் பார்கள் அமைத்து மற்றும் மேட்டுப்பாத்தி அமைத்தல் போன்ற பல்வேறு முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.
- மண் அமைப்பு, நீர் இருப்பு திறன் மற்றும் நீர் பாசன முறை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உகந்த பார் அமைக்கும் முறையை தேர்வு செய்யவும்.
விதை அளவு மற்றும் விதை நேர்த்தி:
- ஏக்கருக்கு சுமார் 800 முதல் 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும்.
- விதை மஞ்சள் நோய் அல்லது பூச்சி தாக்காத வயல்களில் இருந்து தரமானதாக தேர்வு செய்வது மிக அவசியம்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஒரு கிலோ விதை மஞ்சளுக்கு 4 கிராம் விரடி அல்லது சூடோமோனஸ் 10 என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து சுமார் 30 நிமிடம் உலர்த்தி பின் நடவு செய்ய வேண்டும்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது COC மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நேத்தி செய்து பின்பு நடவு செய்யலாம்.
பயிர் இடைவெளி:
சாகுபடி செய்யப்படும் முறைக்கு ஏற்றவாறு வரிசை இடைவெளி 45-60 சென்டிமீட்டர் எனவும் பயிருக்கான இடைவெளி 15-25 சென்டி மீட்டர் வரை இருக்கலாம்.
உர நிர்வாகம்:
- மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவது மிக அவசியம்.
- பொதுவாக பரிந்துரைக்க கூடிய உர அளவு/ ஏக்கர் - தழைச்சத்து- 60-70 கிலோ, மணி சத்து- 20-25 கிலோ, சாம்பல் சத்து- 40-45, நுண்ணூட்டச் சத்து- 10 கிலோ, கடலை/ஆமணக்கு புண்ணாக்கு-50 கிலோ, ஜிங் சல்பேட்- 15-20 கிலோ, இரும்பு சல்பேட் 25 கிலோ போன்ற உரங்களை ஐந்தாக பிரித்து நடவு செய்த 30 நாட்களில் இருந்து மாதம் ஒரு முறை விட்டு நன்கு நீர் பாய்ச்சவும்.
- சொட்டுநீர் பாசனம் வழியாகவும் நீரில் கரையும் உரங்களை கரைத்து கொடுக்கலாம்.
- நான் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை ஏக்கருக்கு மூன்று லிட்டர் Humic அமிலம்/ மூன்று லிட்டர் ஈயம் கரைசல்/ மூன்று லிட்டர் NPK உயிர் உரம்/200 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கொடுக்க வேண்டும்.
ஊடு பயிரிடுதல்:
ஆரம்ப காலத்தில் குறைந்த வாழ்நாள் கொண்ட சின்ன வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி மற்றும் கீரை வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:
கிழங்கு மற்றும் கழுத்து அழுகல் நோய்:
- பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் கிழங்கு அல்லது கழுத்து அழுகல் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் பிரதான அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகி காணப்படுதல்.
- இதனை கட்டுப்படுத்த T. viride அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு என்று மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து வேர்ப்பகுதியில் வாரம் ஒரு முறை என இரண்டு முறை ஊற்ற வேண்டும்.
இலைப்புள்ளி நோய்:
இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும்.
மஞ்சள் கொப்புள நோய்:
இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும்.
தண்டு துளைப்பான்:
- பயிரின் ஒரு சில இலைகள் மட்டும் சற்று மஞ்சள் நிறமாக மாறி கருவகுது இதன் அறிகுறியாகும்.
- ஆரம்ப நிலை தாக்குதலின் போது Bacillus thuringiensis என்ற உயிரியல் 10 லிட்டர் தண்ணீருக்கு 70-100 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
- தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் எரிய விட வேண்டும். இதன் மூலம் தாய் அந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- ரசாயன முறையில் கட்டுப்படுத்த Emamectin/Novluron/ Chlortraniliprole/ Flubendamide/Spinosad/ Tetraniprole போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.