கொடி காய்கறி பயிர்களில் சிவப்பு பூசணி வண்டு தாக்குதலும் அதன் மேலாண்மையும்...
|முன்னுரை:
- கொடி காய்கறி பயிர்களான பரங்கி, பூசணி, சுரை, பீர்க்கன், புடலை, வெள்ளரி, பாகல் மற்றும் பல்வேறு காய்கறிகள் நாம் அன்றாட வாழ்வில் பிரதானமாக உண்ணக்கூடிய காய்கறி பயிராக திகழ்வதால் இதன் சாகுபடி வருடம் முழுவதும் காணப்படுகிறது.
- கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களுக்கு குறிப்பாக கொடி காய்கறி பயிர்கள் நல்ல விலையில் விற்கப்படுவதால் தற்சமயம் பல்வேறு இடங்களில் பொடி காய்கறிகள் சாகுபடிகள் உள்ளது.
- கொடி காய்கறி பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் தற்சமயம் சாகுபடி உள்ள பயிர்களில் சிகப்பு பூசணி வண்டு தாக்குதல் காணப்படுகிறது.
- இந்தப் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மையை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த வண்டுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன இவை ஒவ்வொன்றும் நிறத்தில் சற்று வேறுபடும்.
வாழ்க்கை சுழற்சி:
- முட்டை- தனியாக அல்லது கொத்தாக மண் அல்லது செடிகளின் தண்டுப் பகுதியில் இடப்படுகிறது.
- இளம்புழுக்கள்- 10 முதல் 15 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் Grub என்று அழைக்கப்படும் இளம் புழுக்கள் வேர்களை பாதிக்கும் திறனுடையது. இதன் வாழ்நாள் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும்.
- கூட்டுப்புழு- இளம் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறி சுமார் 10-15 நாட்கள் வரை இந்த நிலையில் இருக்கும் பின்பு வண்டுகளாக மாறும்.
- வண்டு- வண்டுகள் பயிரின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இதன் மொத்த வாழ்நாள் 60 முதல் 85 நாட்கள்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- பயிரின் இலை, தண்டுப் பகுதி, காய்கள் மற்றும் சில நேரங்களில் வேர் பகுதியை தாக்கும்.
- இளம் புழுக்கள் வேர்கள், மற்றும் மண்ணில் காணப்படும் காய்களையும் உண்ணுவதால் வேர்ப்பகுதியில் அழுகல் உருவாகலாம்.
- தீவிர தாக்குதலின் போது செடிகள் காய்ந்து இறந்துவிடும் அபாயமும் உள்ளது.
- இலை, பூக்கள், மொட்டுக்கள் மற்றும் காய்களை உண்பதால் இலைகளில் துளைகள் மற்றும் சல்லடை போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
- இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பீடு ஏற்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...
- ஒருமுறை கொடி காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
- வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு கண்டிப்பாக இடவேண்டும்.
- அவ்வப்போது பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட வேண்டும் இதனால் முட்டைகளை அழிக்கலாம்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீர் வழியாக ஏக்கருக்கு ஒரு லிட்டர் மெட்டாரைசியம் மற்றும் டிரைக்கோடெர்மா கொடுக்க வேண்டும்.
- இதன் மூலம் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம் மற்றும் முட்டைகளை அழித்து தாக்குதலை குறைக்கலாம்.
- இயற்கை பூச்சி விரட்டி திரவங்களான பத்திலை கசாயம் /ஐந்திலை கசாயம்/இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல்/ புகையிலை கரைசல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் வண்டுகள் எளிதில் வயலை விட்டு வெளியேறி விடும்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு நான்கு கிலோ விதம் Fibronil குருணை இடலாம்.
- இலை வழியாக தெளிப்பதற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பயன்படுத்தலாம்.
- Malathion, Dimethoate, Spinosad, Phenthoate, Cyantraniliprole
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக