google-site-verification: googled5cb964f606e7b2f.html தர்பூசணியில் தண்டு கருகல்(Gummy) நோய் மேலாண்மை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 21 மார்ச், 2025

தர்பூசணியில் தண்டு கருகல்(Gummy) நோய் மேலாண்மை...

  • தர்பூசணி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக தண்டு கருகல் அதாவது ஒட்டும் தண்டு கருகல் Gummy stem blight எனப்படும் பூஞ்சான நோய் மிக அதிக அளவில் காணப்படுகிறது. 
  • இந்த நோய் மிக வேகமாக பரவுவதால் இதன் மூலம் இவர் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. தர்பூசணி மட்டும் இல்லாமல் முலாம்பழம் பயிரையும் தாக்கும் திறனுடைய இந்த நோய் சில நேரங்களில் தண்டு அழுகல் நோய் எனவும் கூறப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • சராசரி வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட வறட்சிக்கு பிறகு அதிகப்படியான மழை 
  • பனிப்பொழிவு 
  • இலைகள் நீண்ட நேரமாக ஈரப்பதத்துடன் இருத்தல்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயின் ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் நீள் பட்டத்தில் கருப்பு முதல் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் விளிம்புகளுக்கு அருகில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்று நான் ஒன்று இணைந்து கருகல் போன்ற அறிகுறியாக காணப்படலாம்.
  • இலை புள்ளியின் நடுப்பகுதி சற்று நீர்த்த நிறமாக மாறி நாளடைவில் உதிர்ந்து காணப்படும். 
  • இந்த நோய் தண்டு பகுதியில் தாக்குவதால் தண்டில் ஆரம்பத்தில் புள்ளிகள் தோன்றி நாளடைவில் கருகலாக மாறும். 
  • இதனால் தண்டுப் பகுதியில் வெடிப்பு காணப்பட்டு அதிலிருந்து வெளி சிகப்பு நிற ஒட்டு திரவம் வெளிவருவதை காண இயலும்.
  • இலைகள் அதிக அளவு கருகுவதால் பயிர் வளர்ச்சி தடைப்படும். 
  • தண்டுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் தருணத்தில் மொத்த பயிலும் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • கவனிப்பற்ற நிலையில் தீவிர நோய் தாக்குதலின் போது காய்களை தாக்கி அழுகலை ஏற்படுத்தும்.



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் தாக்குதலை ஏற்படுத்துவதால், தரமான விதை மற்றும் நாற்றுகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • நாற்றுப் பண்ணையில் இருந்து நாற்றுகளை கொள்முதல் செய்யும் பொழுது தண்டு கருகல் நோய் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விதைகள் அல்லது நாற்றுகள் இயற்கை அல்லது இரசாயன பூஞ்சான கொல்லி  மருந்துகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்னர் நடவு/விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • முந்தைய பயிர்களின் கழிவுகளில் இந்த பூஞ்சைகள் நீண்டு வாழ்வதால் அதனை முற்றிலும் அகற்றுவது மிக அவசியம். 
  • இந்த நோய் தாக்காத இதர பயிர் வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்வது சிறந்தது. 
  • கோடை பருவத்தில் தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம்.
  • கொடி காய்கறி பயிர்கள் வயலில் தானாக முளைத்து வருவதை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் சூடோமோனஸ் அல்லது பேசில்லஸ் தெளித்து வரவேண்டும். 
  • தீவிர நோய் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி அப்புறப்படுத்துவது நல்லது. 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் நோய் தாக்குதலின் தீவிரத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை இலை வழியாக தெளிக்கலாம்.
    • Zineb
    • Chlorothalonil
    • Mancozeb
    • Azoxystrobin + Mancozeb
    • Azoxystrobin + Difenoconazole
    • Tebuconazole + Trifloxystrobin
    • Fluxapyroxad + Pyraclostrobin 
    • Boscalid + Pyraclostrobin 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இருந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts