google-site-verification: googled5cb964f606e7b2f.html நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நவரை பட்டத்தின் சிறப்புகள்:

  • தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நெல் சாகுபடிக்கு என உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த நவரை பட்டம்.
  • பருவ மழையில் பெய்யக்கூடிய மழை நீரை சேகரித்து வைத்து அடுத்த கோடை பருவத்தில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராகுவது தான் இந்த பருவம்.
  • ஆரம்ப நிலையில் நீர் ஆதாரம் இருந்தாலும் அதிக வெப்ப காலங்களில் நீர் தேவையை குறைக்க குறைந்த வாழ்நாள் உடைய நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்பயிர்கள்
  • அதாவது பயிர்கள் பூக்கும் தருணத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஆவியாதல் மற்றும் பயிர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் தேவையை குறைத்திட ஏதுவாக குறைந்த வாழ்நாள் உடைய ரகங்களை தேர்வு செய்தல் அவசியம். 
  • எனவே இந்த பட்டத்திற்கு அதிக வறட்சி மற்றும் வெப்பநிலையை தாங்கி வளரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். 
  • பொதுவாக இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களின் அறுவடை தருணத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
  • இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள் மிதமான உயரத்தில் இருப்பதால் காற்று மற்றும் மழை காரணமாக சாயும் அபாயம் இல்லை. 

சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை: 

  • தரமான ரகம் மற்றும் விதைகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • சான்றிதழ் பெற்ற ரகத்தை வாங்குவது சிறந்தது. 
  • பெறப்பட்ட விதைகளை காலை அல்லது மாலை வெப்பநிலை சிறிது நேரம் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்தலாம். 
  • நாற்றங்காலில் அதிக உரம் இடுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விடுவதால் பயிர்கள் நடவுக்கு பின்பு செழித்து வளரும். 
  • இந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் நடுத்தர சன்ன வகையை சார்ந்ததால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் அதிக எண்ணிக்கையில் தூர் கட்டும் திறனுடையது. ஆரம்ப நிலையில் தூர்கள் வெடிப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  • இந்த ரகங்கள் அதிக மகசூலை தர வல்லது என்பதால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்து சரிவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும். 
  • குறிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

உகந்த ரகங்கள்: 

  • ADT 36, ADT 37, ASD 16, IR 64, ASD 18, ADT 42, ADT 43 MDU 5 மற்றும் பல ரகங்கள் உள்ளது.
  • தங்களது பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பிரதானமான மற்றும் அதிக சந்தை மதிப்புடைய ரகங்களை ஆராய்ந்து பின்னர் சாகுபடி செய்யவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


undefined 202 undefined

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts