google-site-verification: googled5cb964f606e7b2f.html மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 8 மார்ச், 2025

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இதன் அறிகுறிகள்  அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படும். மிதமான வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் பனிப்பொழிவு ஆகியவை இலைப்புள்ளி நோய் உருவாவதற்கு சாதகமாக திகழும்.
  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை நாம் பயன்படுத்தும் விதை கருணை மூலமாகத்தான் நிலத்திற்கு வருகிறது. சாதகமான சூழ்நிலை அமையும் பொழுது பெருக்கமடைந்து தண்ணீர் காற்று மற்றும் பண்ணை பணிகளின் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது. எனவே ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக மஞ்சள் சாகுபடி செய்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 
  • சுமார் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கும் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் ஒழுங்கற்ற வடிவில் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். 
  • இலைப் புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும் ஓரப்பகுதி பழுப்பு நிறத்திலும் காணப்படும். இலை புள்ளிகள் பிரதானமாக இலையின் விளிம்புகளில்  காணப்படும். இதை பார்ப்பதற்கு பொட்டாசியம் சத்து குறைபாடு அல்லது கருகல் நோய் போன்று இருக்கும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட  இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தலாம். 
  • பயிரின் அடிப்பகுதியில் காணப்படும் முதிர்ந்த மற்றும் காய்ந்த இலைகளை அகற்றுவதால் நல்ல காற்றோட்டம் கிடைக்க பெறும். சூரிய ஒளி மற்றும் காற்று உட்புகுவதால் நோய் பரவுதல் தடுக்கப்படும். 
  • நீர்ப்பாச்சுதல் மருந்து தெளித்தல் போன்ற பண்ணை பணிகளை காலை நேரத்தில் மேற்கொள்ளாமல் மதியம் அல்லது மாலை வேளையில் செய்வதால் நோய் பரவுதலை குறைக்கலாம். 
  • உயிர் பூஞ்சான கொல்லியான Trichoderma மற்றும் Pseudomonas இந்த நோய்க்கு எதிராக திறன் பட செயல்படுவதால், இதனை வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • நோய்கள் வருவதற்கு முன்னதாக அல்லது நோயின் ஆரம்ப நிலையில் Carbendazim/ Carbendazim+ Mancozeb /Propineb/COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்படும் அளவில் கலந்து தெளிக்கலாம். 
  • நோய் பரவுதல் அதிகமாக தென்படும் வேளையில் Propiconazole/ Difenoconazole/ Azoxystrobin + Mancozeb/ Metiram+ Pyroclosrobin போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலை தடுக்க இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

 

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts