google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: விதை தேர்வு மற்றும் நாற்றுகள் உற்பத்தி

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

விதை தேர்வு மற்றும் நாற்றுகள் உற்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதை தேர்வு மற்றும் நாற்றுகள் உற்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜனவரி, 2024

நிலக்கடலையில் விதைத்தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

கடலையில் விதைத்தேர்வு :

  • நடவு செய்யப்படும் பருவம், தங்களது பகுதியில் நிலவும் மண் தன்மை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உள்ளூர் அல்லது உயர் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை தாங்கி வளரக்கூடிய அல்லது எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  • தேர்வு செய்த இரகங்களை வேளாண்மை துறை அல்லது அறிவியல் ஆராய்ச்சி நிலையம் அல்லது வேளாண் கல்லூரி அல்லது பல்கலைக் கழங்களிலிருந்து பெறப்பட வேண்டும். 
  • ஏனெனில் இந்த விதைகள் சான்றிதழ் பெறப்பட்டதால் இரகத்தின் உறுதி மற்றும் முளைப்புத்திறனில் நம்பகத்தன்மை இருக்கும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் அப்பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகளால் சாகுபடி செய்யக்கூடிய ரகமாக  இருக்கும் பட்சத்தில் எளிதில் விற்பனை செய்திடவும் மேலும் அதில் ஏற்படும் சந்தேகங்களை மற்ற விவசாயிகளிடம் கலந்து யோசிக்கவும் இயலும்.
  • ஒருவேளை தேர்வு செய்யப்பட்ட இரகத்தின் விதைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது எனில், அறுவடை செய்து 45-150 நாட்கள் மட்டுமே ஆனதா என உறுதி செய்ய வேண்டும்.
  • 45 நாட்களுக்கு குறைவான விதை நிலக்கடலையில் ஒருமித்த முளைப்பு மற்றும் அதிகப்படியான முளைப்பு திறனை எதிர்பார்க்க இயலாது.
  • அதே போன்று 150 நாட்களுக்கு மேற்பட்ட விதை நிலக்கடலையை தேர்வு செய்யும்போது முளைப்பு திறன் மிகவும் குறைவாக காணப்படும்.
  • பெறப்பட்ட விதைக்கடலை முளைப்பு திறனுக்கு உட்படுத்த வேண்டும். இவை குறைந்தது 90% முளைப்புத் திறன் இருக்க வேண்டும். இல்லையெனில் விதையின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
  • 200 கிலோ விதைக்கடலையை உடைத்தால் அதிலிருந்து நல்ல விதை பருப்பு சுமார் 50-80 கிலோ வரை மட்டுமே பெற முடியும்.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைக்கடலைகள் 7.2 மி.மி விட்டமுள்ள சல்லடைக் கொண்டு சலித்து நல்ல பருமனான நோய் தாக்காத பெரிய விதைகளையே விதைக்க பயன்படுத்த வேண்டும்.
  • இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலையை உடைக்கும் போது எப்போது உடைக்கப்பட்டது என்ற விபரம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்
  • பெறப்பட்ட விதை கடலை நடவுக்கு 3-4 நாட்களுக்கு முன்னதாக உடைத்து விதைக்கடலையை பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
  • இதனை சல்லடை கொண்டு சலிக்கும்போது ஒரு கிலோ விதைபருப்பிலிருந்து 80-100 கிராம் விதைகள் நீக்கப்படும்.
  • உடைந்துபோன, சுருங்கிய, வற்றிபோன மற்றும் நோய் தாக்கிய பருப்புகளை நீக்கி விடவேண்டும்.
  • நாம் தேர்வு செய்யும் ரகத்தினை பொறுத்து அதற்கு பயன்படுத்தும் களைக்கொல்லிகளை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ரகத்திற்கும் ஒரே மாதிரியான களைக்கொல்லியை அதை அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

திங்கள், 20 நவம்பர், 2023

சின்ன வெங்காயத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறை...

முன்னுரை:

  • சின்ன வெங்காயம் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 45,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையாக சின்ன வெங்காயம் விதை காய்களை கொண்டே சாகுபடி செய்து வருகிறார்கள். இது குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயனைக் கொண்டு இருந்தாலும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது
  • இதைத் தவிர்த்திட சின்ன வெங்காயம் விதைகளை நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்து அதை பிடுங்கி நடுவது மிகவும் செலவு குறைவான முறையாகும். மேலும் இதற்கு தேவையான விதை மற்றும் இடு பொருட்களை அரசு மானியத்தில் வழங்குவது மேலும் விவசாயிகளின் செலவினத்தை குறைக்கிறது.

இரகத்தை தேர்வு செய்தல் மற்றும் விதை அளவு:

  • அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு சின்ன வெங்காய இரகங்கள் இருந்தாலும் அதில் கோ-5(On), புல்லட், டெய்லர்...... போன்ற இரகங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் உகந்தது.http://ecoursesonline.iasri.res.in/Courses/Production%20Technology%20of%20Vegetables%20&%20Flowers/HORT281/Data%20Files/lec15.html
  • விதையின் தரம், தேர்வு செய்யப்படும் இரகம், மாற்றங்கள் அமைக்கும் முறை, நிலத்தின் தன்மை மற்றும் பருவம் முதலியவற்றைப் பொறுத்து ஏக்கருக்கு 1-1.50 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure
நாற்றங்கால் அமைக்கும் முறை:

  • ஒரு ஏக்கர் நடவு செய்திட சுமார் 200 முதல் 250 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படுகிறது. இது சற்று நிழல் பாங்கான இடத்தில் இருந்தால் உகந்தது. இல்லையெனில் 50 சதவீதம் நிழல் வலை கூடாரம் அமைத்து அதில் நாற்று விடலாம்.
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்/கம்போஸ்ட் அல்லது மண்புழு உரத்துடன் தலா 100 கிராம் Trichoderma harzianum, Pseudomonas fluorescence, 2 கிலோ DAP மற்றும் இரண்டு கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு நன்கு உழுவு செய்து மண்வெட்டியால் கொத்தி விட வேண்டும்.
  • 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் நில அமைப்பை பொருத்து போதுமான அளவு நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்திட வேண்டும். அப்போது தான் பாத்தியின் ஒரு புறத்திலிருந்து விதைகளை விதைப்பு செய்தல், நீர் பாய்ச்சல், உரமிடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
  • இவ்வாறாக அமைக்கப்பட்ட மேட்டுப்பத்தியில் ஏழு முதல் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் கையால் 2-3 சென்டிமீட்டர் ஆழமுள்ள கோடுகள் இடவேண்டும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை இதில் பரவலாக இட வேண்டும். பின்னர் இதில் மக்கிய தொழு உரத்தினை தூவி விடுவதால் விதைகள் மூடிவிடும்.
  • விதைப்பு செய்த மேட்டுப்பாத்தியில் வைக்கோல், காய்ந்த புல், இலை சருகுகள்.. இதர இது போன்று ஏதேனும் ஒரு பொருட்களை மேட்டுப்பத்தியில் பரவலாக இட்டு மூடி விட வேண்டும். இது கதகதப்பு தன்மையை ஏற்படுத்தி விதைகளை எளிதில் முளைக்க செய்கிறது. விதையின் தன்மையை பொறுத்து விதைகள் விதைப்பு செய்த 6 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure

நாற்றுகளை எப்போது பிடுங்கி நட வேண்டும்:

  • ஜூன்- ஜூலை மாதங்களில் விதைப்பு மேற்கொண்ட மேட்டுப்பத்தியில் இருந்து 38-42 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நிலத்தில் நட வேண்டும். பிடுங்கி நடும் போது மிளகு வடிவ சிறு காய்கள்  நாற்றுகளில் இருப்பதை உறுதி செய்திடவும்.

  • செப்டம்பர் முதல் நவம்பர் காலங்களில் விதைப்பு  மேற்கொள்ளும் தருணத்தில் 45 லிருந்து 50 நாட்கள் கழித்து நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும்.

நாற்றுகளை பராமரிக்கும் முறை:

  • நாற்றுகளில் அழுகல் அல்லது ஏதேனும் நோய்கள் தென்பட்டால் Trichoderma harzianum அல்லது Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10  கிராம் பத்து லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • விதைப்பு மேற்கொண்ட 15 மற்றும் 30ஆம் நாளில் 19:19:19/20:20:20 என்ற நீரில் கரையும் உரத்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து மாலை நேரங்களில் ஊற்றி விடவும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

லேபிள்கள்

Recent Posts

Popular Posts