இயற்கை துப்புரவாளர்கள் – சாண வண்டு
முன்னுரை:
இயற்கை சூழலில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலையைப்
பேணுவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது. அவ்வாறு இயற்கையின் ஒரு அற்புத
படைப்பாக திகழ்வதுதான் இந்த சாண வண்டு (Dung
Beetle) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதுவும் சாதாரண பூச்சி வகையில் ஒன்றுதான். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன்
உழைப்பு உன்னதமாக கருதப்படுகிறது. இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய பணியை செய்வதால்
இதனை சூற்றுச்சூழலின் பொறியாளர்/இயற்கையின் துப்புரவாளர்கள் /சாணம் உருட்டு வண்டு என
அழைக்கப்படுகிறது.
உடலமைப்பு மற்றும் இனப்பெருக்கம்:
மற்ற பூச்சி இனங்களை போன்றே இதன் உடலமைப்பும் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று
பகுதிகளாக பிரிக்கலாம். வயிற்றின் சராசரி நீளம் 0.5 செ.மீ ஆகும். தலையில் கண்கள் மற்றும்
விசிறி போன்ற உணர்கொம்புகள் இருக்கும். மார்பு பகுதியில் கடினமான இளங்கொம்பும் ஆறு
கால்களும் உள்ளன. முன்னங்கால்கள் சிறியதாகவும் பின்னங்கால்கள் பெரியதாகவும் காணப்படும்.
பின்னங்கால்களால் தான் சாணியை உருட்டி செல்கின்றன. வயிறு உணவு செரிப்பதற்கு உதவி புரிகிறது.
இவற்றின் முன்பகுதி மண்வெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இது சாணத்தை உருட்ட உதவுகிறது. இவை கருப்பு, பழுப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. அவற்றின் நெற்றியில் காணப்படும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமின்றி நிலத்தில் சுரங்கம் தோண்டப் பயன்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறு சாணத்தை மட்டுமே உண்ணும், அதுவும் இலைத்தழைகளை உண்ணும் விலங்குகளின் (ஆடு, மாடு, குதிரை, யானை) சாணத்தினையே விரும்பி உண்ணும். இவை சாணத்தை ஒரு பந்தாக உருட்டி அதில் முட்டையிடும், முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இந்த சாணத்தை உண்டு வளரும், இவை சுமார் 3 மில்லி மீட்டர் அளவிலிருந்து 3 செ.மீ அளவு வரை காணப்படுகிறது. சாணி வண்டில் இதுவரை சுமார் 7000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சாணி வண்டுகள் கூட்டமாக வாழும் நல்ல மோப்ப சக்தி உடையது.
மழைபொழிவு காலத்தில் சாணி வண்டுகள் இனப்பெருக்கத்திற்கான
தனது துணையை தேடும். அளவில் பெரிதான சாணி உருண்டையை உருட்டி பெண் வண்டை கவரும். ஆண்
மற்றும் பெண் வண்டுகள் ஒரே வளைக்குள் வாழ்ந்து முட்டையிடும். முட்டையிலிருந்து வரும்
இளம் புழுக்கள் சாணியை உண்டு வண்டாக வெளியே வரும். இவ்வண்டுகளின் ஆயுள் காலம் 2-3 மாதம்,
சில வண்டுகள் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
முக்கிய வகைகள்
1. உருட்டும் சாண வண்டு
·சாணத்தை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்கின்றன.
பாதுகாப்பான இடத்தில் புதைத்து அதில் முட்டையிடும்.
2.
தோண்டும் சாண வண்டு
· சாணத்தின் கீழ் சுரங்கம் தோண்டி அதில் முட்டையிடும்.
3.
சாணத்தின் உள்ளே வாழும் வண்டு
·சாணத்தின் உள்ளேயே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
விவசாயத்தில் இதன் நன்மைகள்:
- சாணத்தை மண்ணுக்குள் கொண்டு செல்வதால் கரிமச்சத்து அதிகரிக்கும். மேலும் நுண்னுயிரிகளின் பெருக்கம் நன்றாக இருக்கும்.
- சுரங்கம் தோண்டுவதால் நீர் பிடிப்பு திறன் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சி மேம்படும்.
- சாணம் மண்ணில் மட்குவதால் ஊட்டச்சத்துகள் மீண்டும் மண்னிற்கு திரும்புகின்றன.
- சாணத்தில் முட்டையிடும் ஈக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இனப்பெருக்கம் தடைபடும்.
- சாணத்தில் இருக்கும் விதைகள் மண்ணுககுள் கொண்டு செல்வதால் உயிரினப் பல்வகைமை அதிகரிக்கும்.
- மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன.
பாதுகாப்பின் அவசியம்:
இன்றைய தீவிர வேளாண்மையில்,
கால்நடைகளுக்கு அதிக அளவில் வழங்கப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளின் எச்சங்கள்
சாணத்தில் இருப்பதால் பல சாண வண்டுகள் உயிரிழக்கின்றன. இதனால் சாண வண்டு இனங்கள் பல
பகுதிகளில் குறைந்து வருகின்றன. எனவே அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும்
மிகவும் அவசியம்.
முடிவுரை
சாண வண்டு என்பது சாணத்தை உருட்டும் ஒரு சாதாரண G+ச்சி அல்ல. அது இயற்கையின் துப்புரவாளன், மண் வளத்தை மேம்படுத்தும்
உயிரியல் பொறியாளர், ஊட்டச்சத்து மறுசுழற்சியாளர் மற்றும் விவசாயிகளின் மறைமுக நண்பன்.
மண்ணின் ஆரோக்கியம் பயிர் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் இதன்
பங்கு அளப்பரியது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS?s=cl&p=a&ilr=1&amv=1

