google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நீரின் உப்பு தன்மையை குறைக்கும் நெல்லி மர கட்டைகள் ( பெருநெல்லி )

  • பாசன நீரில் உள்ள உப்பு தன்மையை ஓரளவிற்கு குறைக்கவும், கடின நீரை மென்னீராக மாற்றுவதற்கும் நெல்லி மர கட்டைகளை ( பெருநெல்லி ) தண்ணீரில் ஊற வைத்து பின்னர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நமது பாரம்பரிய விவசாயத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபுத் தொழில்நுட்பமாகும் .
  • நெல்லி மரக்கட்டைகள் நீரின் உப்புத்தன்மையை எவ்வாறு குறைக்கின்றன என்பதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
  • நெல்லி மரக்கட்டைகளில் உள்ள தனித்துவமான வேதிப்பண்புகள் நீரின் உப்புத்தன்மை மற்றும் கடினத்தன்மையைக் குறைக்கின்றன.
  • நெல்லி மரத்தின் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் அமைப்புகள் நீரில் கரைந்துள்ள அதிகப்படியான சோடியம் (Na⁺), குளோரைடு (Cl⁻), கால்சியம் (Ca²⁺), மற்றும் மெக்னீசியம் (Mg²⁺) போன்ற உப்புக்களை தன்னுடைய மேற்பரப்பில் ஈர்த்து ஒட்டிக்கொள்ளும் (Adsorb) திறன் கொண்டவை. இந்த நிகழ்வு பயோ-அட்ஸார்ப்ஷன் (Bio-adsorption) என்று அழைக்கப்படுகிறது. 
  • நெல்லி மரத்தின் வைரப்பகுதியில் (Heartwood) இயற்கையாகவே டானின்கள் (Tannins), பாலிபினால்கள் (Polyphenols) மற்றும் கரிம அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நீரில் உள்ள கடினமான உப்புகளுடன் வினைபுரிந்து, அவற்றை நீரில் கரையாத கூட்டுப் பொருட்களாக மாற்றி அடியில் படிய (Precipitate) வைக்கின்றன. இதனால் நீரின் மேல் அடுக்கில் உப்பின் அடர்த்தி குறைகிறது.
  • தண்ணீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் நெல்லி மர கட்டைகளை ஊற வைக்கும் கால இடைவெளி ஆகிவற்றைப் பொறுத்து சுமார் 50 சதவீதம் வரை கூட உப்பின் தன்மையை குறைக்கும் என ஆய்வு கட்டுரைகள் விவரிக்கின்றன. 
  • இதன் காரணமாக தண்ணீரின் காரத்தன்மை குறைந்து நடுநிலைத் தன்மை பெறுகிறது. 
  • இது மட்டும் இன்றி தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறது. 
  • இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை மென்மையாக்கி அந்த நீரை நாம் பருகலாம் இதனால் எந்த தீங்கும் ஏற்படாது.
  • பாசனக் கிணறுகள் அல்லது தண்ணீர்த் தொட்டிகளில் நெல்லி மரக் கட்டைகளை  போடுவதன் மூலம், நீரிலுள்ள சோடியம்,  குளோரை, கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் அளவை குறைத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 
  • நீரின் உப்பு தன்மை குறைவதால் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பயிர்கள் மிக எளிதாக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக விளைச்சலைத் தரும். 


மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u

பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • தற்போது பூசணி சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. 
  • தற்சமயம் சாகுபடி செய்யப்படும் பூசணிக்காய்கள் பெரும்பான்மையாக திருஷ்டிக்காக பயன்படுத்தப்படுவதால் மிக எளிதாக தூக்கி உடைக்கக்கூடிய எடை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அழகிய வடிவில் இருக்க வேண்டும்.
  • அதற்கு ஏற்றவாறு ஒரு சில தனியார் ரகங்கள் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • உதாரணத்திற்கு Suguna 316 (East West seed), Seema super (Chia Tai seeds), MAHY 1(Mahyco), Sowmya (Kalash seeds), VNR AG(VNR seeds)
  • சாகுபடியில் மண் தன்மையை பொறுத்த வரையில் மிதமான அமில முதல் நடுநிலைத் தன்மையுடன் மிகவும் ஏற்றது. 
  • விதை அளவு ஏக்கருக்கு 5 (50 கிராம்) பாக்கெட்டுகள் போதுமானது. 
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரத்தினை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி இடவேண்டும்.
  • ஒரு ஏக்கர் சாகுபடிக்கு தேவையான 40 கிலோ தழைச்சத்து மற்றும் தலா 20 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை 45 நாட்களுக்கு முன்னதாக முழுமையாக கொடுத்து விட வேண்டும். 
  • பரவலாக பூக்கள் தென்படும் பொழுது காய் பிடிப்பு திறனை மேம்படுத்த Ethrel என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு நான்கு முதல் ஐந்து மில்லி கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் தேமோர் கரைசல்/ கடல்பாசி உரம் அல்லது நன்கு புளித்த மோரை தெளிக்கலாம். 
  • முதல் அறுவடை 60 முதல் 65 நாட்களில் கிடைக்கும்... அதிகபட்சமாக மூன்று முறை அறுவடை செய்யும் போது சுமார் 10 முதல் 12 டன் வரை ஏக்கருக்கு கிடைக்கும். 
  • தற்சமயம் சராசரியாக ஒரு கிலோ ரூபாய் 10 முதல் 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
  • அறுவடை காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்ட இன்னும் சற்று விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • அதிக வெப்பநிலை இருப்பதால் இலை சுரங்க ஈக்கள், வைரஸ் தொற்று, பழ ஈ மற்றும் இலை உண்ணும் புழுக்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u

சூரியகாந்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான சூரியகாந்தி விதைகளில் இருந்து  கிடைக்கக்கூடிய எண்ணெய் குறைந்த கொழுப்புத் தன்மை உடையதால் இருதய நோயாளிக்கு உகந்ததாக திகழ்கிறது. 
  • சமீப காலங்களாக எண்ணெய் வித்து பயிர்களுக்கு *நல்ல விலை* கிடைப்பதால் விவசாயிகள் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றி அதிக மகசூல் பெற முடியும். 
  • சூரியகாந்தி மானாவரி பயிராக *கார்த்திகை* மற்றும் *ஆடிப்பட்டத்தில்* சாகுபடி செய்யப்படுகிறது. போதுமான தண்ணீர் வசதி இருந்தால் இதர பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
  • *ரகம் தேர்வு செய்தல்* : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, 100 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடிய *COH 3* அல்லது *COH 4* தேர்வு செய்து விதைக்கலாம் அல்லது வணிக ரீதியாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் *Veda*, *Vanitha* (Kurnool seeds) , *Rising Sun* போன்ற தனியார் ரகங்களையும் தேர்வு செய்து விதைக்கலாம். 

  • *விதை அளவு* - ஏக்கருக்கு *இரண்டு* கிலோ
  • ஓரளவிற்கு அனைத்து வகையான மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. பொதுவான வடிகால் வசதி இருக்க வேண்டியது இன்றியமையாது. 

  • அதிக அளவிலான *தொழு உரம் உரத்தை அடி* *உரமாக* இடுவது அவசியம். இதனுடன் தேவையான அளவு ரசாயன உரங்களையும் கலந்து அடிஉரமாக இடவேண்டும். 
  • *பயிர் இடைவெளி* - வரிசைக்கும் வரிசைக்கும் 2 அடி செடிக்கும் செடிக்கும் ஒரு அடி பயிர் இடைவெளி அவசியம்.
  • மிதமான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது விதைகளை சுமார் ஒரு inch ஆழத்தில், குழிக்கு இரண்டு விதை என்ற முறையில் விதைக்க வேண்டும். 
  • சராசரியாக *பத்து* நாட்களில் முளைப்புத்திறன் தெரியும் அப்போது விடுபட்ட இடங்கள் அல்லது விதைகள் முளைக்காத இடத்தில் *தப்பு* *விதைகளை* விதைக்க வேண்டும்.

  • முளைத்து வரும் இரண்டு செடிகளில் ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்கி விடவும். 
  • வளர்ச்சி பருவம் அல்லது பூக்கும் தருணத்தில் அதிக மழை பெய்தால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். 
  • அதேபோன்று இரசாயன முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்துக்களை பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும் சற்று கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் நேரத்தில் வேர்கள் பாதித்து வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கும்.

  • சுமார் 25 நாட்கள் கழித்து களைகளை அகற்றிவிட்டு, தேவையான மேல் உரங்களை இட்டு நீர் பாய்ச்சவும். மானவரிமுறையில் சாகுபடி செய்யும் பொழுது ஈரப்பதம் இருக்கும் பொழுது உரம் இடவேண்டும். 
  • பூக்கள் வெளிவரும் தருணத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பஞ்சகாவியா / தேமோர் கரைசல் அல்லது போரான் தெளிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெற இயலும்.
  • ரகங்களைப் பொறுத்து அறுவடை சுமார் 95 நாள் முதல் சுமார் 140 நாட்கள் வரை தேவைப்படும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u?s=cl&p=a&mlu=4&ilr=4

வியாழன், 9 ஜூலை, 2026

இயற்கை துப்புரவாளர்கள் – சாண வண்டு

முன்னுரை:

இயற்கை சூழலில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலையைப் பேணுவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது. அவ்வாறு இயற்கையின் ஒரு அற்புத படைப்பாக திகழ்வதுதான் இந்த சாண வண்டு  (Dung Beetle) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதுவும் சாதாரண பூச்சி வகையில் ஒன்றுதான். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் உழைப்பு உன்னதமாக கருதப்படுகிறது. இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய பணியை செய்வதால் இதனை சூற்றுச்சூழலின் பொறியாளர்/இயற்கையின் துப்புரவாளர்கள் /சாணம் உருட்டு வண்டு என அழைக்கப்படுகிறது.

உடலமைப்பு மற்றும் இனப்பெருக்கம்:

மற்ற பூச்சி இனங்களை போன்றே இதன் உடலமைப்பும் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். வயிற்றின் சராசரி நீளம் 0.5 செ.மீ ஆகும். தலையில் கண்கள் மற்றும் விசிறி போன்ற உணர்கொம்புகள் இருக்கும். மார்பு பகுதியில் கடினமான இளங்கொம்பும் ஆறு கால்களும் உள்ளன. முன்னங்கால்கள் சிறியதாகவும் பின்னங்கால்கள் பெரியதாகவும் காணப்படும். பின்னங்கால்களால் தான் சாணியை உருட்டி செல்கின்றன. வயிறு உணவு செரிப்பதற்கு உதவி புரிகிறது.

இவற்றின் முன்பகுதி மண்வெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இது சாணத்தை உருட்ட உதவுகிறது. இவை கருப்பு, பழுப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. அவற்றின் நெற்றியில் காணப்படும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமின்றி நிலத்தில் சுரங்கம் தோண்டப் பயன்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறு சாணத்தை மட்டுமே உண்ணும், அதுவும் இலைத்தழைகளை உண்ணும் விலங்குகளின் (ஆடு, மாடு, குதிரை, யானை) சாணத்தினையே விரும்பி உண்ணும். இவை சாணத்தை ஒரு பந்தாக உருட்டி அதில் முட்டையிடும், முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இந்த சாணத்தை உண்டு வளரும், இவை சுமார் 3 மில்லி மீட்டர் அளவிலிருந்து 3 செ.மீ அளவு வரை காணப்படுகிறது. சாணி வண்டில் இதுவரை சுமார் 7000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சாணி வண்டுகள் கூட்டமாக வாழும் நல்ல மோப்ப சக்தி உடையது. 

மழைபொழிவு காலத்தில் சாணி வண்டுகள் இனப்பெருக்கத்திற்கான தனது துணையை தேடும். அளவில் பெரிதான சாணி உருண்டையை உருட்டி பெண் வண்டை கவரும். ஆண் மற்றும் பெண் வண்டுகள் ஒரே வளைக்குள் வாழ்ந்து முட்டையிடும். முட்டையிலிருந்து வரும் இளம் புழுக்கள் சாணியை உண்டு வண்டாக வெளியே வரும். இவ்வண்டுகளின் ஆயுள் காலம் 2-3 மாதம், சில வண்டுகள் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

முக்கிய வகைகள்

1.  உருட்டும் சாண வண்டு

·சாணத்தை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்கின்றன.

பாதுகாப்பான இடத்தில் புதைத்து அதில் முட்டையிடும்.

2.   தோண்டும் சாண வண்டு

· சாணத்தின் கீழ் சுரங்கம் தோண்டி அதில் முட்டையிடும்.

3.   சாணத்தின் உள்ளே வாழும் வண்டு

·சாணத்தின் உள்ளேயே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

விவசாயத்தில் இதன் நன்மைகள்:

  • சாணத்தை மண்ணுக்குள் கொண்டு செல்வதால் கரிமச்சத்து அதிகரிக்கும். மேலும் நுண்னுயிரிகளின் பெருக்கம் நன்றாக இருக்கும்.
  • சுரங்கம் தோண்டுவதால் நீர் பிடிப்பு திறன் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சி மேம்படும்.
  • சாணம் மண்ணில் மட்குவதால் ஊட்டச்சத்துகள் மீண்டும் மண்னிற்கு திரும்புகின்றன.
  • சாணத்தில் முட்டையிடும் ஈக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இனப்பெருக்கம் தடைபடும்.
  • சாணத்தில் இருக்கும் விதைகள் மண்ணுககுள் கொண்டு செல்வதால் உயிரினப் பல்வகைமை அதிகரிக்கும்.
  • மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன.

பாதுகாப்பின் அவசியம்:   

          இன்றைய தீவிர வேளாண்மையில், கால்நடைகளுக்கு அதிக அளவில் வழங்கப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளின் எச்சங்கள் சாணத்தில் இருப்பதால் பல சாண வண்டுகள் உயிரிழக்கின்றன. இதனால் சாண வண்டு இனங்கள் பல பகுதிகளில் குறைந்து வருகின்றன. எனவே அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மிகவும் அவசியம்.

முடிவுரை

        சாண வண்டு என்பது சாணத்தை உருட்டும் ஒரு சாதாரண G+ச்சி அல்ல. அது இயற்கையின் துப்புரவாளன், மண் வளத்தை மேம்படுத்தும் உயிரியல் பொறியாளர், ஊட்டச்சத்து மறுசுழற்சியாளர் மற்றும் விவசாயிகளின் மறைமுக நண்பன். மண்ணின் ஆரோக்கியம் பயிர் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் இதன் பங்கு அளப்பரியது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS?s=cl&p=a&ilr=1&amv=1

சனி, 4 ஜூலை, 2026

வாழையில் மெக்னீசியம் (Mg) சத்து குறைபாடு – அறிகுறிகள் மற்றும் மேலாண்மை

 

மெக்னீசியம் என்பது தாவர வளர்ச்சிக்கு தேவையான இரண்டாம் நிலை பேரூட்டச்சத்து (Secondary Macronutrient) ஆகும். இது குளோரோபில் மூலக்கூறின் மைய அணுவாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மற்றும் மாவுச்சத்து  உருவாக்கத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது.

மெக்னீசியம் தாவரத்தில் இடம்பெயரும் (Mobile nutrient) தன்மை கொண்டது. எனவே, குறைபாடு ஏற்பட்டால் முதலில் வயதான இலைகளிலிருந்து Mg இளம் இலைகளுக்கு நகர்ந்து விடுகிறது. இதனால் கீழ் இலைகளிலேயே முதற்கட்ட அறிகுறிகள் தோன்றுகின்றன.

மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பிரதான செயல்பாடுகள்:

1. குளோரோபில் உருவாக்கம்

ü குளோரோபில் மூலக்கூறின் மையத்தில் Mg உள்ளது.

ü Mg இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெறாது.

2. ஒளிச்சேர்க்கை

ü  சூரிய ஒளியை வேதியியல் ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

ü  CO-ஐ கார்போஹைட்ரேட்டாக மாற்றும் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது.

3. ATP உருவாக்கம்

ü Mg இல்லாமல் ATP செயல்படாது. ATP என்பது தாவரத்தின் "ஆற்றல் நாணயம்" ஆகும்.

4. நொதிகளின் (Enzymes) செயல்பாடு

ü 300-க்கும் மேற்பட்ட நொதிகள் Mg இருப்பினால்தான் சிறப்பாக செயல்படுகின்றன.

5. சர்க்கரை கடத்தல்

ü இலைகளில் உருவாகும் சர்க்கரை பழம் மற்றும் குலைக்கு நகர Mg உதவுகிறது.

வாழையில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

  • முதலில் வயதான இலைகளில் தோன்றும்.
  • இலை நரம்புகள் பச்சையாக இருந்து, நரம்புகளுக்கு இடையிலான பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும் (Interveinal Chlorosis).
  • குறைபாடு அதிகரித்தால் இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகி காய்ந்து விடும்.
  • பச்சையத்தின் அளவு குறைந்து உணவு உற்பத்தி குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும். இதற்கு நீல நோய் என்ற பெயர் உண்டு
  • பற்றாக்குறை அதிகரித்தால் மட்டைகள் தண்டு பகுதியில் இருந்து விலகி காணப்படும்.
  • தண்டின் வலிமை குறையும்
  • குலை எடை மற்றும் பழத்தின் தரம் குறையும்.
  • பழங்கள் சிறியதாக இருத்தல்

Magnesium deficiency in BananaHorticulture :: Deficiencies and Disorders-Banana-Magnesium

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

o   மணற்பாங்கான மண்

o   அமில மண் (pH < 5.5)

o    கரிமப்பொருள் குறைவு

o   அதிக மழையால் Mg கழுவிச் செல்லுதல்

o   அதிக தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கால்சியம் இடுதல்

மேலாண்மை:

1. மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்

2. அடி உரமாக ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

3. குறைபாட்டு அறிகுறியின் ஆரம்ப நிலையில் செடி ஒன்றுக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.

4. அதிக தழைச்சத்து,  சாம்பல் சத்து மற்றும் கால்சியம் தவிர்க்க வேண்டும்.

5. 1% மெக்னீசியம் சல்பேட் இலைத் தெளிப்பு: 2–3 முறை

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறவும். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

வியாழன், 2 ஜூலை, 2026

நூற்புழுக்களுக்கு எதிரான உயிரியல் போராளிகள்

Pochonia chlamydosporia  மற்றும் Purpureocillium lilacinum நீடித்த வேளாண்மைக்கான நிலையான தீர்வு

பயிர் சாகுபடியில் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் நிலையற்ற தட்பவெப்ப சூழ்நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், களைகள் மட்டுமல்லாமல் கண்களுக்குப் புலப்படாத நூற்புழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் வாழும் இந்நுண்ணுயிர் போன்ற விலங்குகள் தாவர வேர்களைத் தாக்கி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை குறைத்து, பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பெருமளவில் பாதிக்கின்றன.

தோட்டக்கலை பயிர்களில் சுமார் 10 - 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் உடையது.

நூற்புழு (Nematode) என்றால் என்ன?

நூற்புழுக்கள் (Plant Parasitic Nematodes) என்பது மண்ணில் வாழும் மிகச் சிறிய, நீளமான, நூல் போன்ற நுண்ணுயிர் விலங்குகள் ஆகும். இவை தாவர வேர்களில் ஊசி போன்ற ”Stylet என்ற உறுப்பை நுழைத்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன.

முக்கிய தீங்கு விளைவிக்கும் நூற்புழுக்கள்

1. வேர்முடிச்சி நூற்புழு - Root-knot nematode (Meloidogyne spp.)

2.  மொச்சை வடிவ நூற்புழு - Reniform nematode (Rotylenchulus reniformis)

3. வேர்குத்தும் நுற்புழு – Pratylenchus spp

4. சிட்ரஸ் நுற்புழு – Tylenchulus semipenetrans

5. வாழை துளைக்கும் நூற்புழு – Radopholus similis

6. சுழல்  நூற்புழு – Helicotylenchus spp

இவை வாழை, தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை, மா, மாதுளை, பப்பாளி, கொய்யா,  எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:

ü வேர்களில் முடிச்சுகள் உருவாகுதல்

ü வேர் வளர்ச்சி குறைதல்

ü சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைதல்

ü குன்றிய பயிர் வளர்ச்சி

ü இலை மஞ்சளாதல்

ü வறட்சியை தாங்கும் திறன் குறைதல்

ü  பூ மற்றும் காய் உதிர்தல்

ü மகசூல் குறைதல்

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறிகளை ஒத்து இருப்பதால் அளவுக்கு அதிகமாக உரம் இடுதலை தவிர்த்து நூற்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியல் முறையில்  நூற்புழுக்களை கட்டுப்படுத்துதல்:

நூற்புழுக்களை கட்டுப்படுத்த பிரதானமாக இரண்டு பூஞ்சாணங்கள் பயண்படுத்தப்படுகிறது.

1. Pochonia chlamydosporia

 2. Purpureocillium lilacinum

முக்கிய வேறுபாடுகள்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

முக்கிய இலக்கு

நூற்புழு முட்டைகள்

நூற்புழு முட்டைகள்  +  பெண் நூற்புழுக்கள்

செயல்படும் வேகம்

மிதானமாக (நீண்டகால தாக்கம்)

விரைவாக (விரைவு தாக்கம்)

வேர் மண்டல குடியேற்றம்

சிறந்தது நீண்டகால நிலைக்கும்

மிதானமானது

முக்கிய நொதிகள்

அதிக Chitinase

அதிக Protease

இரண்டாம் நிலை நச்சப் பொரட்கள்

குறைவு

அதிகம்

Root-knot nematode கட்டுப்பாடு

சிறந்தது

சிறந்தது வேகமான தாக்கம்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

Cyst Nematode கட்டுப்பாடு

மிகவும் சிறந்தது

மிதானமானது

தாவர வளர்ச்சி ஊக்குவித்தல் (LAA, Phosphate solubilisation)

அதிகம்

மிதானமானது

மண்ணில் நீடிக்கும் திறன்

அதிகம்

மிதானமானது

பயன்படுத்தும் வழிமுறைகள்: 

  • 100 கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்துடன் 1 கிலோ பர்புரியோசிலியம் லிலாசினம் கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின்னர் அடி உரமாக இடவேண்டும்.
  • திரவ வடிவ திரவங்களை ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கலாம். 
  • பழப் பயிர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு 500 முதல் 1 கிலோ இடலாம்.
  • போச்சோனியா கிளமிடோஸ்போரியா உயிரியல் பூஞ்சானத்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் நன்கு நன்கு மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ü நூற்புழு முட்டைகள் மற்றும் பெண் நூற்புழுக்களை அழிக்கிறது.

ü வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ü பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

ü இரசாயனப் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் போது கவணிக்கப்பட வேண்டியவை

ü முழு பலன் பெற மண்ணணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

ü நேரடி வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.

ü பயன்படுத்தும் முன் லேபிளில் உள்ள வழிமறைகளை பின்பற்றவும்.

முடிவுரை:

நூற்புழுக்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்றாலும், அவை ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியது. இவற்றை கட்டுப்படுத் Pochonia chlamydosporia  மற்றும  Purpureocillium lilacinum  போன்ற நன்மை பயக்கும் பூஞ்சாணங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த, அறிவியல் பூர்வமான மற்றும் பொருளாதார ரீதியாக பயனுள்ள தீர்வாகும்.

மண் வளத்தை காக்கும் இந்த உயிரியல் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வதே எதிர்கால நிலையான வேளாண்மைக்கான முக்கிய அடித்தளமாக அமையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

Recent Posts

Popular Posts