google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: சிறப்பு பயிர்கள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சிறப்பு பயிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு பயிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

சவுக்கு மரம் சாகுபடியில் இரகத் தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

 

  • விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மேலும் இடு பொருட்களின் விலை போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகள் நீண்ட நாட்கள் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.
  • அந்த வகையில் சவுக்கு மரம் சாகுபடி தென் தமிழகத்தில் ஒரு இன்றியமையாத மரப்பயிராக மாறி வருகிறது. 
  • காகிதம் தயாரித்தல், விறகு, கம்பங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக சாகுபடி செய்யப்படும் சவுக்கு மரமானது காற்று தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது. 
  • அனைத்து வகையான மண் அமைப்பிலும் வளரக்கூடிய திறனுடையது. குறைந்த செலவினம், குறைந்த ஆள் தேவை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் இருத்தல், நல்ல விலை போன்ற காரணங்களால் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. 
  • சவுக்கு மரத்தில் பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில நேரத்தில் பண்புகள் விளைச்சலை இருமடங்காக உதவி புரியும். 
  • கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய அளவிலான மரப்பயிர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சிறந்த ரகங்களை வெளியிட்டுள்ளது. 
  • விதை பண்ணை விதைகள் கலப்பின ரகங்கள், Clone வகைகள் பல்வேறு ரகங்களை வெளியிட்டுள்ளது. 
  • உதாரணத்திற்கு, IFGTB- CH -1, IFGTB- CH -2, IFGTB- CH -5. இதில் குறைந்த வாழ்நாள் திறன் அதிக மகசூல் கொடுக்க கூடிய ரகமாக CH -5 திகழ்கிறது.

CH -5 சவுக்கு ரகத்தின் சிறப்பு பண்புகள்...

  • தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை தவிர மற்ற இடங்களில் சாகுபடி செய்ய மிக உகந்தது. 
  • அனைத்து வகையான மண் வகைகளும் சாகுபடி செய்யலாம். 
  • மரங்கள் சீரான மற்றும் ஒருமித்த வளர்ச்சியுடன் காணப்படும்.
  • தண்டுப் பகுதிகள் தொடர்ச்சியாகவும் நேராகவும் வளரும் திறன் உடையது. 
  • சராசரியாக 30 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும். 
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. 
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. 
  • மற்ற ரகங்களை விட அதிக விளைச்சல் சராசரியாக விளைச்சலை இருமடங்காக்கும் திறனுடையது. 
  • மற்ற ரகங்கள் சுமார் 40 டன் விளைச்சல் கொடுக்கக் கூடியதாக இருக்கும் நிலையில் இந்த ரகம் 70 முதல் 80 டன் மகசூல் தரக்கூடியது. 
  • சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கன்றுகளை தேர்வு செய்வது மிக மிக அவசியம். 
  • இதை எளிதாக்கும் வகையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தனியார் நர்சரிகளை உரிமம் கொடுத்து இந்த ரகங்களை விற்பனை செய்து வருகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


சனி, 8 மார்ச், 2025

மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை-நடவு முதல் அறுவடை வரை

முன்னுரை:

  • பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மஞ்சள் சாகுபடி தமிழ்நாட்டின் பிரதான பயிர்களில் ஒன்றாக திகழ்கிறது. கிழங்கு வகையை சார்ந்த இந்த பயிர் நறுமணம் மற்றும் வாசனைக்காக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் அழகு சாதன பொருள்கள் தயாரிப்பில் இதன் பயன் எண்ணிலடங்காதது.
  • தமிழ்நாட்டின் ஈரோடு தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் என பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் பயிர் சாகுபடியை பற்றி விரிவாக பார்ப்போம்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: 

  • மஞ்சள் ஒரு வெப்பமண்டல பயிராக திகழ்வதால் சராசரி முதல் அதிக வெப்பநிலை  நிலவக்கூடிய தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். போதுமான நீர் வசதி இருப்பது மிக அத்தியாவசியம். 
  • பல்வேறு மண் அமைப்பிலும் வளரக்கூடிய மஞ்சள் பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடைய மணல் பாங்கான மண் மிகவும் உகந்தது.
  • களிமண் மற்றும் செம்மண் போன்ற பகுதியில் சாகுபடி செய்யும் பொழுது மண் இறுக்கத்தை போக்க போதுமான அளவு தொழு உரம் இட்டு சாகுபடி செய்யலாம்.
  • களர் மண்ணில் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம் மேலும் அமில காரத்தன்மை 5 முதல் 7.5 வரை இருக்கலாம். நீர் தேங்கும் அமைப்புடைய வயல்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். 

பருவம்: 

அந்தந்த மாவட்டத்தில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவு பருவம் தேர்வு செய்யப்படுகிறது. பொதுவாக மே இறுதியில் இருந்து ஜூன் இறுதிக்கு இடைப்பட்ட காலம் நடவு செய்வதற்கு உகந்தது. 

நிலம் தயாரித்தல்: 

  • மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரிய கலப்பையை தேர்வு செய்து கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு வடக்கு திசையில் உழுது மண்ணை தூளாக்கி பண்படுத்த வேண்டும் வேண்டும்.
  • கடைசி உழவு அல்லது ரோட்டாவேட்டர் மூலம் உழவு செய்வதற்கு முன்னதாக நன்கு மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 4 டன் என்ற அளவிற்கு குறையாமல் அடி உரமாக இட வேண்டிய உரங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி வேண்டும்.

பார் அமைத்தல்: 

  • ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் பார் ஆரம்பித்து சாகுபடி செய்யப்படுகிறது.
  • அகன்ற பாத்தி அமைத்தல், முகடு பள்ளம் முறையில் பார்கள் அமைத்து மற்றும் மேட்டுப்பாத்தி அமைத்தல் போன்ற பல்வேறு முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • மண் அமைப்பு, நீர் இருப்பு திறன் மற்றும் நீர் பாசன முறை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உகந்த பார் அமைக்கும் முறையை தேர்வு செய்யவும். 

விதை அளவு மற்றும் விதை நேர்த்தி: 

  • ஏக்கருக்கு சுமார் 800 முதல் 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். 
  • விதை மஞ்சள் நோய் அல்லது பூச்சி தாக்காத வயல்களில் இருந்து தரமானதாக தேர்வு செய்வது மிக அவசியம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஒரு கிலோ விதை மஞ்சளுக்கு 4 கிராம் விரடி அல்லது சூடோமோனஸ் 10 என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து சுமார் 30 நிமிடம் உலர்த்தி பின் நடவு செய்ய வேண்டும். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது COC மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நேத்தி செய்து பின்பு நடவு செய்யலாம். 

பயிர் இடைவெளி: 

சாகுபடி செய்யப்படும் முறைக்கு ஏற்றவாறு வரிசை இடைவெளி 45-60 சென்டிமீட்டர் எனவும் பயிருக்கான  இடைவெளி 15-25 சென்டி மீட்டர் வரை இருக்கலாம்.

உர நிர்வாகம்: 

  • மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவது மிக அவசியம். 
  • பொதுவாக பரிந்துரைக்க கூடிய உர அளவு/ ஏக்கர் - தழைச்சத்து- 60-70 கிலோ, மணி சத்து- 20-25 கிலோ, சாம்பல் சத்து- 40-45, நுண்ணூட்டச் சத்து- 10 கிலோ, கடலை/ஆமணக்கு புண்ணாக்கு-50 கிலோ, ஜிங் சல்பேட்- 15-20 கிலோ, இரும்பு சல்பேட் 25 கிலோ போன்ற உரங்களை ஐந்தாக பிரித்து நடவு செய்த 30 நாட்களில் இருந்து மாதம் ஒரு முறை விட்டு நன்கு நீர் பாய்ச்சவும். 
  • சொட்டுநீர் பாசனம் வழியாகவும் நீரில் கரையும் உரங்களை கரைத்து கொடுக்கலாம்.
  • நான் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை ஏக்கருக்கு மூன்று லிட்டர் Humic அமிலம்/ மூன்று லிட்டர் ஈயம் கரைசல்/ மூன்று லிட்டர் NPK உயிர் உரம்/200 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கொடுக்க வேண்டும்.

ஊடு பயிரிடுதல்:

ஆரம்ப காலத்தில் குறைந்த வாழ்நாள் கொண்ட சின்ன வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி மற்றும் கீரை வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். 

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 
கிழங்கு மற்றும் கழுத்து அழுகல் நோய்:

  • பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் கிழங்கு அல்லது கழுத்து அழுகல் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் பிரதான அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகி காணப்படுதல்.
  • இதனை கட்டுப்படுத்த T. viride அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு என்று மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து வேர்ப்பகுதியில் வாரம் ஒரு முறை என இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

இலைப்புள்ளி நோய்:

இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும். 

மஞ்சள் கொப்புள நோய்:

இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும். 

தண்டு துளைப்பான்: 

  • பயிரின் ஒரு சில இலைகள் மட்டும் சற்று மஞ்சள் நிறமாக மாறி கருவகுது இதன் அறிகுறியாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது Bacillus thuringiensis என்ற உயிரியல் 10 லிட்டர் தண்ணீருக்கு 70-100 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
  • தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் எரிய விட வேண்டும். இதன் மூலம் தாய் அந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த  Emamectin/Novluron/ Chlortraniliprole/ Flubendamide/Spinosad/ Tetraniprole போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 27 ஜனவரி, 2025

எள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை..

  • தமிழ்நாட்டில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் ரகங்கள்- TMV 3, TMV 4, TMV 7, VRI 3, VRI 4, YLM 66 மற்றும் ஒரு சில ரகங்கள் 
  • உகந்த பட்டம்- கோடை பருவம், ராபி மற்றும் காரிப்
  • விதை அளவு- எக்டருக்கு 5 கிலோ வரை 
  • விதை நேர்த்தி- Trichoderma  பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் அல்லது தேவையின் அடிப்படையில் இதர உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தலாம்.
  • மண் அமைப்பு- கட்டிகள் இல்லாத பொல பொலப்பான மண் விதைகள் முளைப்பதற்கு சாதகமாக திகழும். இல்லையெனில் முளைப்புத் திறனில் பின்னடைவு ஏற்படும்.
  • விதைப்பு- அனுபவம் மிக்க விவசாயிகள் மணல் கலக்காமல் விதைப்பு மேற்கொள்வார்கள். தேவையில்லை போதுமான அளவு மணல் கலந்து நன்கு கலக்கி பின்பு விதை தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் விதைகள் ஒரு இன்ச் ஆழத்தைத் தாண்டி செல்லக்கூடாது அவ்வாறு சென்றால் முளைப்பு திறன் பாதிக்கும் ஏனெனில் இது மிகவும் இலகுவான விதை அமைப்பு உடையது. 
  • ஊட்டச்சத்து மேலாண்மை- மண் பரிசோதனை அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட பொதுவான உர பரிந்துரை மக்கிய தொழு உரம் 12.5 டன், 35 கிலோ தழைச்சத்து, தலா 23 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ இட வேண்டும் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பிற்கு. 
  • மண் அமைப்பு பயிரின் வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் இதர உரங்களை பயன்படுத்தலாம். 
  • களை நிர்வாகம்- 25 முதல் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும் அப்பொழுது மிக நெருக்கமாக இருக்கும் செடிகளை கலைத்து விட வேண்டும்.
  • நீர் மேலாண்மை- நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. பயிரை நன்கு வதங்க விட்டு  வதங்க விட்டு பின்னர் நீர் கொடுக்க வேண்டும்.
  • பயிரின் மொத்த வாழ் நாட்களில் சராசரியாக 5 முதல் 6 முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. 
  • காய் பிடிப்பு தருணத்தில்  சல்பேட் இடுவதால் காய்களில் எண்ணெய் இருப்புத்திறன் சற்று மேம்படும் மேலும் இது மகசூலை அதிகரிக்கும்.
  • கிராமப்புறங்களில் ''பிடித்து எட்டு எள்'' என்பார்கள். இது எதனை குறிப்பிடுகிறது என்றால் அரை அடி உயரமுடைய தண்டு பகுதியில் சராசரியாக 8 காய்கள் இருக்க வேண்டும் என்பதுதான். 
  • அறுவடை- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும் தருணம். தண்டுப் பகுதியின் அடிப்புறத்தில் உள்ள காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்து மணிகளை பிரித்தெடுக்கலாம். 
  • அறுவடையை தாமதம் செய்தால் மணிகள் வெடித்து விதைகள் சிதறும் எனவே உரிய நேரத்தில் அறுவடை செய்வது மிக இன்றியமையாது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 25 ஜூலை, 2024

பாக்கு பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நடவு செய்தல்:

  • பொதுவாக பாக்கு அதிக வறட்சி அல்லது தொடர்ச்சியாக நீர் தேங்கும் பகுதியில் சாகுபடி செய்ய உகந்த பயிர் அல்ல. அவ்வாறு சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது.
  • மேலும் இதற்கு 50% ஆவது நிழல் தேவைப்படுகிறது. எனவே நடவு செய்வதற்கு முன்பதாக இதனை பற்றி யோசிக்கலாம். நிழல் தரக்கூடிய பயிர்களில் ஊடுபயிராகவோ அல்லது வரப்பு பயிராகவும் பாக்கு கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு தயார் படுத்த வேண்டும்.
  • மண்ணின் தன்மை நில அமைப்பை பொறுத்து வேர் வளர்ச்சி மாறுபடும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மணல் பாங்கான மண் அமைப்பில் நல்ல வேர் மற்றும் பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • பொதுவாக பாக்கு மரத்தின் வேர்கள் 70% வரை முப்பது சென்டிமீட்டர் ஆழத்தில் தான் இருக்கும். அதுமட்டுமின்றி தண்டுப் பகுதியிலிருந்து பக்கவாட்டில் சுமார் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையுடையது.
  • எனவே மண்ணின் தன்மையை பொறுத்து ஒரு மீட்டர் நீளம், அகலம், ஆழம் உடைய குழிகளை எடுத்து சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நன்கு காய விடவும்.
  • நடவு செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பாக தலா 100 கிராம் Trichoderma மற்றும் Metarhizium ஆகியவற்றை 10  லிட்டர் தண்ணீரில் கலந்து. குழிக்கு ஒரு லிட்டர் வீதம் பொறுமையாக தெளிக்க வேண்டும்.
  • குழி ஒன்றுக்கு ஐந்து கிலோ மண்புழு உரம், தலா 50 கிராம் Trichoderma/Pseudomonas, உயிர் உரம், VAM, 100 கிராம் இடித்த வேப்பங்கொட்டை மற்றும் Humic குருணை  ஆகியவற்றை மேல் மணலுடன் கலந்து மூன்றில் ஒரு பங்கு குழி நிரம்பும் வரை கொட்டவும்.
  • பிறகு இதில் செடிகளை நட்டு மீண்டும் சிறிதளவு மண் கலவையை இட்டு நீர் விட வேண்டும்.
  • கன்றுகள் வளர வளர மண் அணைத்துக் கொண்டே வரவேண்டும் குழிகள் நிரம்பும் வரை.
  • நல்ல வளர்ச்சி மற்றும் அதிக இலைகள் உடைய குறைந்தது ஒரு வருடம் ஆன பாக்கு நாற்றுகளை நடவுக்காக பயன்படுத்தலாம்.

உர /ஊட்டச்சத்து மேலாண்மை: 

  • பாக்கு பயிர் தொடர்ச்சியாக வளரும் தன்மை உடையதாகவும் காய்க்கும் திறன் படைத்ததாகவும் இருப்பதால் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
  • பொதுவாக பாக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களை வரிசைப்படுத்தி பார்த்தால் தழைச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மணிச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, காப்பர், போரான் மற்றும் மிகக் குறைந்த அளவில் இதர நுண்ணூட்ட சத்துக்கள்.
  • எனவே இந்த ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் பயிர்களுக்கு வழங்க வேண்டும். 
  • வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பரிந்துரைக்கப்படும் உரங்களை பிரித்து போதுமான மண் ஈரப்பதம் இருக்கும் போது இட வேண்டும். 
  • பயிரின் தண்டு பகுதியில் இருந்து சுமார் 50 முதல் 60 சென்டிமீட்டர் தள்ளி 25 முதல் 50 சென்டி மீட்டர் ஆழத்தில் இட வேண்டும். ஏனெனில் இங்கு தான் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக்கூடிய வேர்கள் அமைந்துள்ளது.
  • முதல் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ரசாயன உரங்களை தவிர்த்து அதிக அளவு இயற்கை உரங்களை மண்புழு உரம்/தொழு உரம்/பசுந்தாள் பசுந்தலை உரங்கள்/புண்ணாக்கு வகைகள் அல்லது கிடைக்கப்பெறும் அல்லது கிடைக்க பெறும் இயற்கை பயன்படுத்தி பயிர் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதனால் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மண் வளமாக மாறுதல் மற்றும் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கப்பெறும்.ஒரு வருடங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக ரசாயன உரங்களை பயன்படுத்தலாம்.
  • ஒரு மரத்திற்கு தலா 15 கிலோ தொழு உரம்,100 கிராம் தழைச்சத்து, 50 கிராம் மணிச்சத்து, 150 கிராம் சாம்பல் சத்து மற்றும் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச் சத்து ஆகியவற்றை பருவ மழையின் போது இடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை, பயிர் வளர்ச்சி, ஊடு பயிர் இடுதல் முதலியவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழி முறையை வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
  • இதைத் தவிர மண்ணின் தன்மையை மாற்றவும் கால்சியம் ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கப் பெறவும் பருவ மழையின் போது சுண்ணாம்பு இட வேண்டும். அதேபோன்று நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடு ஏதேனும் தென்படும் தருணத்தில் இலை வழியாக தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.
  • நாம் கொடுத்த ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் பயிர்களுக்கு கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஹுமிக் அமிலம்/வேஸ்ட் டீ கம்போசர்/ஈயம் கரைசல்/உயிர் உரங்கள் அல்லது இயற்கை தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பயிர் மற்றும் மண்ணை உருவாக்கலாம்.

பூச்சி மேலாண்மை:

பாக்கு சாகுபடியில் பல்வேறு பூச்சி தாக்குதல்கள் காணப்பட்டாலும் கடந்த ஒரு வருடங்களில் நமது குழுவில் பகிரப்பட்ட முக்கியமான சில பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றின் மேலாண்மையை பற்றி பார்ப்போம்.

சிகப்பு கூன் உண்டு:

  • இளம் பயிர்களின் தண்டு மற்றும் குருத்துப் பகுதியை துளைத்து உண்பதால் பயிர்கள் படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறி கருகி பின்னர் இறந்துவிடும். தண்டுப் பகுதியில் சிறிய துளைகள், சாறு வடிதல், மரங்கள் சாய்தல், குருத்துப் பகுதியில் அழுகல், நுனி இலைகள் நிறம் மாறுதல் முதலியவை இவற்றின் பிரதான அறிகுறியாகும்.
  • இதனைக் கட்டுப்படுத்த சுத்தமாக பராமரித்தல், பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல், தொடர்ச்சியாக வயலில் இதன் அறிகுறிகள் தென்படுகிறதா என பார்த்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல் என பல வழிமுறைகள் உள்ளது.

சிகப்பு மற்றும் வெள்ளை பேன்:

  • பொதுவாக பேன் தாக்குதல் ஆரோக்கியம் குறைந்த பயிர்களை எளிதில் தாக்குகிறது. இளம் மற்றும் முதிர்ந்த பொருட்கள் இலைகளின் அடிப்புரத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மேல் புறத்தில் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் இலை கருகி விடுகிறது. இலையின் அடி புறத்தில் சிகப்பு நிற பூச்சி மற்றும் அதன் வலைகளை எளிதில் காண இயலும்.
  • இதனை கட்டுப்படுத்த வயதை சுத்தமாக வைத்திருத்தல், பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுதல், அதிக வறட்சி அல்லது நீர்த்தேக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல், கோடை பருவத்தில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை Verticillum lecanii தெளித்து வருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் பொழுது இரசாயன மருந்தான spiromesifen 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி தெளிக்கலாம்.

நோய் மேலாண்மை: 

அடித்தண்டு அழுகல் நோய்:

  • பராமரிப்பு அற்ற, அடர் நடவு மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பாக்கு பயிரில் இந்த நோய் பொதுவாக காணப்படுகிறது. அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் நாளடைவில் நுனி இலைகளுக்கும் பரவுதல், தரை மட்டத்திற்கு அருகில் உள்ள தண்டுப் பகுதியில் புள்ளிகள் உருவாகி நாளடைவில் பெரிதாகும். இந்த இடங்களில் சாறு வடிதல் மற்றும் அழுகல் இதன் பிரதான அறிகுறிகள் ஆகும். 
  • எனவே முறையான பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மிக அவசியம். ஆரம்ப நிலையில் Trichoderma vridae இயற்கை உயிர் பூஞ்சான கொல்லியையும் தீவிர நிலையின் போது Hexaconazole, Fosetyl aluminium, Metalaxyl மற்றும் COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம். 

மஞ்சள் இலை நோய்: 

  • முதிர்ந்த இலைகளின் நுனிப்பகுதியில் மஞ்சள் நிற மாற்றத்தை ஆரம்ப நிலையில் காண இயலும். நாளடைவில் இது இலையின் மையப் பகுதியை நோக்கி நகரும். தீவிரமடையும் பொழுது பயிரின் அனைத்து இலைகளிலும் அறிகுறிகள் பரவி இலைகள் கருகி விடும். 
  • வயலை சுத்தமாக பராமரித்தல், நன்கு இயற்கை வழி ஊட்டச்சத்து கொடுத்தல் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்றவற்றின் இந்த நோய் பரவுதலை தவிர்க்கலாம்.


புதன், 5 ஜூன், 2024

நுண் கீரைகளும் (Micro Greens) அதன் சாகுபடி தொழில்நுட்பமும்

நுண் கீரைகள்: 

  • ஆங்கிலத்தில் மைக்ரோ கிரீன்ஸ் (Micro Greens) எனப்படும் நுண்/தளிர் கீரைகள் என்பது நன்கு வளர்ந்த கீரைகளுக்கும் முளைக்கட்டிய பயிர்களின் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம்/நாட்கள் ஆகும்.
  • இதில் பயிரின் இலைகள், தண்டு பகுதி மற்றும் வேர் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கீரையாக நாம் பயன்படுத்துகிறோம். இதன் இலை மற்றும் தண்டுப் பகுதி ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பகுதிகளாக பார்க்கப்படுகிறது.
  • சுமார் 7 முதல் 10 சென்டிமீட்டர் வளர்ச்சி உடைய மைக்ரோ கிரீன்ஸ் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும்.அதாவது நாம் தேர்வு செய்த பயிரை பொறுத்து விதைகள் முளைத்த ஏழு முதல் அதிகபட்சமாக 15 நாட்களில் கீரைகளை அறுவடை செய்து பயன்படுத்துவதாகும்.
  • தானியங்கள், பயிறு வகைகள், கீரைகள், காய்கறி விதைகள் மற்றும் நாம் உண்ண கூடிய இதர பயிர் வகைகளையும் இவ்வாறு வளர்த்து நாம் பயன்படுத்தலாம்.

இதன் ஊட்டச்சத்து பண்புகள்:

  • பல்வேறு ஆய்வுகளில் மைக்ரோ கிரீன்ஸ் சாதாரணமாக விளைவித்து உண்ணக்கூடிய காய்கறி பயிர்களை விட சுமார் ஐந்து மடங்கு வைட்டமின் மற்றும் கரோட்டினாய்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்கள் இதை தொடர்ந்து உண்பதால் மிக எளிதாக தேவையான ஊட்டச்சத்தை பெறலாம். இதனால் பல்வேறு நாள்பட்ட வியாதிகள், இருதயம் சம்பந்தமான நோய்கள், அல்சைமர் நோய்கள், நீரிழிவு நோய், பல்வேறு வகையான புற்று நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் நீங்க இது உதவி புரியும்.

இதன் முக்கியத்துவம்: 

  • குறைந்த முதலீடு அதிக லாபம்.
  • வளர்ப்பது மிகவும் எளிது. உயர் தொழில்நுட்பம் தேவையில்லை.
  • குறைந்த நாட்களில் அறுவடை செய்யக் கூடியது.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லை எனவே இரசாயன மருந்து பயன்பாடு இல்லை. 
  • முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள். 
  • எனவே அதிக அளவு ஊட்டச்சத்து மிகுந்தது.

சாகுபடி தொழில்நுட்பம்:

  • இதை சாகுபடி செய்வதற்கு தரமான விதைகளை தேர்வு செய்து அவற்றை ஆழமற்ற தட்டில் மண் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தி சாகுபடி செய்யலாம். 
  • தேர்வு செய்யப்படும் தட்டு ஆழம் அற்றதாகவும் போதுமான வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். 
  • விதைகளை தட்டில் நடவு செய்து அதனை மிதமான வெப்பநிலை மற்றும் ஒளி கிடைக்கக்கூடிய இடத்தில் தினமும் சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 
  • அதிக ஒளி ஊடுருவும் இடத்தில் சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரம் நுண் கீரைகள் இருந்தால் மட்டுமே போதும்.
  • நாம் தேர்வு செய்யும் பயிரை பொறுத்து 7 முதல் 15 நாட்கள் கழித்து இதனை அறுவடை செய்து பயன்படுத்தலாம். 
  • செலவு இன்றி எளிதாக சாகுபடி செய்யலாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னவென்றால் தரமான தண்ணீர் மற்றும் விதை, மிதமான வெப்பநிலை மற்றும் ஒளி. 
  • அறுவடை செய்த நுண் கீரைகளை அப்படியே சமைத்து சாப்பிடலாம் அல்லது மதிப்பு கூட்டல் செய்து பயன்படுத்தலாம். 
  • ரூபாய் 10,000 இருந்தாலே இதன் உற்பத்தியை தொடங்கி விடலாம்.

ஏற்படும் சவால்கள்:

  • மக்களுக்கு இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவு படுத்தி விட்டு தான் பின்னர் உற்பத்தி செய்ய வேண்டும்.
  • நுண் கீரைகள் மிகக் குறைந்த அளவே நீர்ச்சத்துக் கொண்டதால் அதனை எளிதில் இழந்து துவண்டு விடும். 
  • எனவே இதனை கெடாமல் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பது மிக சவாலானது.மதிப்பு கூட்டல் மிகவும் புதிதானது எனவே அதை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • இதை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாததால் இதை விற்பனை செய்வதில் சற்று சுனக்கம் ஏற்படலாம்.
  • மற்ற உணவுகளுடன் சேர்த்து பச்சையாகவும் உண்ணலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



திங்கள், 15 ஏப்ரல், 2024

லட்சத்தில் லாபம் தரும் எலுமிச்சை சாகுபடி

எவ்வாறு சாகுபடிக்கு உகந்தது:

  • நல்ல மகசூல் மற்றும் தகுந்த விலை கிடைக்கிறது.
  • வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது.
  • அதிக சுண்ணாம்பு மண்ணை தவிர அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மையுடையது.
  • மிகவும் குறைவான தண்ணீர் இருந்தால் போதும்.
  • மிகவும் வறட்சியான சூழ்நிலையையும் தாங்கி வளரும்.
  • மிகவும் குறைவான இடுபொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவினம்.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இதில் மிகவும் குறைவு.
  • கால்நடை, குரங்குகள் அல்லது மற்ற விலங்கினங்கள் செடிகள் அல்லது மகசூலை சேதம் செய்வதில்லை.

எந்த ரகம் சாகுபடி செய்யலாம்:

  • தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டு ரகங்கள்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒன்று நாட்டு ரகமான பெரியகுளம் 1 மற்றொன்று ஓட்டு ரகம் பாலாஜி ஆகும்.
  • பெரியகுளம் 1: திருநெல்வேலி மாவட்டம் கடயம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ரகம் வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது. வருடத்திற்கு சுமார் 3500- 4000 பழங்கள் கிடைக்கும். பழத்தின் எடை சராசரியாக 40-45 கிராம் இருக்கும். இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் மெல்லியதாகவும் காணப்படும். நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. பராமரிப்பது மிகவும் எளிது.
  • பாலாஜி: இது ஆந்திர மாநிலத்தால் வெளியிடப்பட்ட ரகம். இதன் இலைகள் கரும் பச்சை நிறத்தில் நாட்டு ரகத்தை விட இலைகள் சற்று பெரிதாகவும் மொத்தமாகவும் இருக்கும். வருடத்திற்கு சுமார் 2500 முதல் 3000 காய்கள் கிடைக்கும் ஒரு பழத்தின் சராசரி எடை 50 கிராம் இருக்கும். எளிதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படும். பராமரிப்பு மற்றும் உர செலவு அதிகம்.

எவ்வாறு நடவு செய்ய வேண்டும்:

  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து இரண்டு அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை நடவுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தயார் செய்து அதில் நன்கு மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, உயிர் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் ஆகியவற்றை இட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பயிர் இடைவெளி- 6 X 6 மீட்டர் (ஏக்கருக்கு 110 கன்றுகள்)

நீர் மற்றும் உர மேலாண்மை:

  • மண்ணின் தன்மையை பொறுத்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் விடலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தான் நீர் விட வேண்டும்.
  • சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவதால் கூடுதல் பலன்கள் உண்டு.
  • நாம் விடும் நீர் நேரடியாக தண்டுப் பகுதியை தொடக்கூடாது அவ்வாறு நெருங்கினால் பூஞ்சான நோய்கள் தாக்குதல் காணப்படும்.

  • வருடத்திற்கு நான்கு முறை உரம் இட வேண்டும். இயற்கை முறையில் உரம் இடுவது சிறந்தது. கண்டிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இட வேண்டும் குறிப்பாக காப்பர், இரும்பு, போரான், மாங்கனிசு மற்றும் துத்தநாக சத்துக்கள்.
  • விரிவான உர மேலாண்மை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

களை மேலாண்மை மற்றும் ஊடு பயிரிடுதல்:

  • முதல் ஐந்து வருடங்களுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் நீர் இருப்பதின் அடிப்படையில். இடையில் உழவு செய்தால் வேர்கள் பாதிக்காத வண்ணம் செய்ய வேண்டும்.
  • களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தவே கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் செடிகளின் காய்ப்பு திறனை பெரிய அளவில் குறைத்து விடும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்:

  • சொறி நோய், die back எனப்படும் கருகல், வைரஸ் நோய்கள்,அஸ்வினி, மாவு பூச்சி, சில்லிட் இலை சுரங்க புழுக்கள், வேர்ப்புழு மற்றும் சில நோய் மற்றும் பூச்சிகள் தாக்கும் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.
  • எலுமிச்சையில் காணப்படும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் கட்டுப்படுத்தும் முறையை நாம் ஏற்கனவே நமது whatsapp குழு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவாத்து செய்தல்:

  • மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிளைகளை மட்டும் வெட்டி அகற்றலாம் அதைத்தவிர எவ்வித கவாத்து பணியும் செய்யக்கூடாது.

மகசூல் மற்றும் லாபம்:

  • சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு செடிகள் முழு திறனில் காய் பிடிக்கும். செடிகளை நன்கு பராமரித்தால் செடி ஒன்றிற்கு சராசரியாக 4000 பழங்களை அறுவடை செய்யலாம்.
  • நன்றாக பராமரித்தால் எளிதாக வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ஒரு ஏக்கரில் இருந்து லாபம் எடுக்கலாம்.

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


செவ்வாய், 12 டிசம்பர், 2023

லாபகரமான எண்ணெய் பனை சாகுபடி

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு         எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர் செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.
இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:
  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.

  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.

அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:
 

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  • தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4 வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

செவ்வாய், 21 நவம்பர், 2023

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை...

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில்  நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர்  செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.


இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:

  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய்  செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.
  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.


அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid  மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  •  தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4  வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

    இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.   https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

x

திங்கள், 20 நவம்பர், 2023

இலாபம் தரும் ஆமணக்கு பயிர் சாகுபடி...

ஆமணக்கு சாகுபடி எவ்வாறு உகந்தது :

    அதிக வறட்சி, வளமற்ற மண், குறைந்த மழைப்பொழிவு, அதிக களைகள் வளரக்கூடிய நிலம், வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நோய் /பூச்சி தாக்குதல் அதிகம் உள்ள இடம் என எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வளரக்கூடியதாக திகழ்கிறது. எனவே தான் இதை சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்.

விதைதேர்வு மற்றும் நேர்த்தி :

    கோ1, TMV-5, TMV-6, YRCH-1, YTP-1, GAUCH -4, TMVCH என பல்வேறு அரசு வெளியிடப்பட்ட ரகங்களும் அதைத் தவிர பல்வேறு தனியார் நிறுவன ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு கிலோ விதை தேவைப்படும். தனியார் நிறுவன விதைகள் நேர்த்தி செய்தே வரும். உள்ளூர் ரகங்களை தேர்வு செய்யும் போது அதனை Pseudomonas மற்றும் Trichoderma கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.https://oilseeds.dac.gov.in/Castor.aspx

நிலம் தயார் செய்தல் மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல் :

    கோடைகாலத்தில் நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைத்து மண் கடினத்தன்மை இல்லாமல் இருந்தால் தான் நன்கு வேர் வளர்ச்சி காணப்படும். ஆமணக்கு வேர்கள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது எனவே மண் பொலபொலப்புடன்இருக்க வேண்டும் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு அடையும். அதிக மழை அல்லது நீர் தேங்கும் பகுதிகளில் பார் அமைத்து பயிரிடுதல் உகந்தது. ராகங்களை பொறுத்து பயிர் இடைவெளி 5 முதல் 8 அடி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/Agriculture/oilseeds_castor_ta.html

உர மேலாண்மை :

    ஏக்கருக்கு நான்கு முதல் எட்டு டன் மக்கிய தொழு உரம். முடிந்தால் உயிர் பூஞ்சான் கொல்லி கொண்டு உட்டமேற்றி இடலாம். அடி உரமாக -DAP/காம்ப்ளக்ஸ் -100 கிலோ + Gypsum -50 கிலோ + நுண்ணூட்ட உரம் -10 கிலோ. நடவு செய்த 45 நாட்கள் கழித்து மேல் உரமாக காம்ப்ளக்ஸ் இரண்டு மூட்டை.

களை மேலாண்மை:

    ஆமணக்கு விதைகள் சற்று விரைவாக முளைப்பு திறன் கூடியது என்பதால் நடவு செய்த இரண்டாம் நாளில் களை கொல்லி அடிக்க வேண்டும். நடவு செய்த 45 நாட்களில் கை களை எடுக்க வேண்டும்.

அறுவடை செய்தல்:

    தேர்வு செய்யப்படும் ரகங்களை பொறுத்து 120 முதல் 175 நாட்கள்  கழித்து அறுவடை செய்யலாம். குளையில் காணப்படும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காய்கள் பழுப்பு நிறம்  மாறும் போது கொத்தை  வெட்டி  மூன்று நாட்கள் சாக்கியில் மூடி வைத்திருந்து பின்னர் நன்கு காய வைக்க வேண்டும்.https://agritech.tnau.ac.in/ta/post_harvest/pht_oilseeds_ta.html

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

    அதில் பெரிதாக நோய் அல்லது பூச்சிகள் வருவதில்லை. அவ்வாறு தோன்றும் பட்சத்தில் இயற்கை முறையில் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop_insect_oil_castor_ta.html

மகசூல் மற்றும் விலை:

    ஏக்கருக்கு 1 டன் வரை கூட மகசூல் எடுக்கலாம். கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்கும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

Recent Posts

Popular Posts