google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 9 ஜனவரி, 2025

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மை...

  • இலை உண்ணும் புழு அல்லது கருந்தலைப்புழு என்று அழைக்கப்படும் இந்த புழுவானது ஒருவகை பட்டாம்பூச்சி இனத்தின் இளம் பருவம் ஆகும். புழு பருவம் மட்டுமே சேதப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிரதானமாக தென்னை பயிரையும் தென்னை மரம் சாகுபடி இல்லாத இடங்களில் பரவலாக பனை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது.
  • தென்னை மரங்களில் வருடம் முழுவதும் இதன் தாக்குதல் பரவலாக காணப்பட்டாலும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது அதிக அளவில் இனப்பெருக்கம் அடைந்து மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். 
  • பருவமழை முடியும் தருவாயில் இருந்து வசந்த காலம் மற்றும் கோடை பருவத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திகழும் சாதகமான வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம் காரணமாக அதிக அளவு இனப்பெருக்கம் அடைந்து பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். 
  • இலங்கையில் தென்னை மரங்களில் முதன் முதலில் பதிப்பை ஏற்படுத்திய இந்தக் கருந்தலைப் புழுக்கள் ஆரம்ப காலத்தில் பனை மரத்தை உண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • பெரும்பான்மையான பனை வகை மரம் மற்றும் செடிகளை மாற்றுப் பயிராக கருந்தலைப் புழுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது இதில் அழகு தாவரம் மற்றும் பாக்கு மரங்களும் உட்பட. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

தாய் அந்தப் பூச்சிகள் இரவு நேரத்தில் இலையின் அடிப்பிறத்தில் முட்டைகளை இடுகிறது இந்த முட்டைகள் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு வெடித்து புழுக்களை வெளிவிடுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கருந்தலைப்புழுக்களின் இளம் புழுக்கள் சுமார் 40 முதல் 45 நாட்கள் பல தோல் உரித்தல் நிகழ்வின் மூலம் உயிர் வாழ்வதால் அதிக அளவு சேதத்தை ஏற்படுகிறது.இதன் மொத்த வாழ்நாள் சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும்.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலையின் அடிப்பகுதியில் பச்சயத்தை உண்ணுவதால் இலைகள் எரிந்தது போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி இலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும். 
  • தாக்குதல் தீவிரமடையும் போது பாதிப்படைந்த அடி இலைகள் காய்ந்து தொங்கும்.
  • தென்னங் குலைகள் விரைப்புத்தன்மை இல்லாமல் சற்று தொங்கும். மேலும் குரும்பை உதிர்தலும் காணப்படும்.
  • இலையின் அடி புறத்தில் எச்சங்களால் ஆன கூட்டின் உட்பகுதியில் புழுக்கள் காணப்படும். 
  • தீவிர நிலை தாக்குதலின் போது இலைகள் மட்டுமின்றி இலை காம்பு, பாலை மற்றும் காய்களிலும் பாதிப்பை காண இயலும்.
  • இதனால் இலைகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மரங்களின் உணவு உற்பத்தி திறன் குறைவதால் விளைச்சலில் இழப்பு ஏற்படுகிறது.தீவிரமாக பாதிப்படைந்த மரங்களில் சுமார் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது இந்த மகசூல் இழப்பீடு சுமார் மூன்று வருடம் வரை காணப்படும்.


கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாதிப்படைந்த இரண்டு முதல் மூன்று வெளி இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை அல்லது ஆரம்ப நிலை தாக்குதலின் போது  முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணி அட்டைகளை எக்டருக்கு 3000 வீதம் கட்டலாம்.
  • ஒட்டுண்ணி அட்டைகளை மரத்தின் வெளி இலைகளில் கட்டுவது சிறந்தது.
  • முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணிகளை தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 60 முதல் 90 நாட்களுக்கு பிறகு 75-80 சதவீதம் வரை புழுக்களை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.
  • ஜனவரி முதல் மே மாதம் வரை தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு ஏதுவாக ஏக்கருக்கு ஒரு எண் வீதம் விளக்கு பொறி பயன்படுத்தலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு கரைசல்களை இலை வழியாக தெளிக்கலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்வதை தவிர்த்து இயற்கை உரங்களை அடிப்படையாக வைத்து சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது. 
  • தாய் அந்து பூச்சியினால் சுரக்கப்படும் Tricosatrine மூலக்கூறு பொருளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தியும் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
  • சிறிய மரங்களை தாக்கும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் Bt தெளிப்பதாலும் இதன் பரவுதலை குறைக்கலாம். 
  • அல்லது Chlortraniliprole / Dichlorovos/ Quinalphose/ Malathion போன்ற ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். 
  • வேர் அல்லது தண்டு வழியாக ரசாயன மருந்துகளை கொடுப்பதால் சுமார் 6 மாதங்கள் வரை அதன் எச்சங்கள் மரத்தில் இருப்பதால் முடிந்த அளவு வேர் வழியாக கொடுப்பதை தவிர்க்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts