google-site-verification: googled5cb964f606e7b2f.html மே 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 1 மே, 2026

மா தண்டு துளைப்பான் மேலாண்மை

முன்னுரை:

  • மா மரங்களை பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும் மா தண்டு துளைப்பான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது. 
  • ஏனெனில் மறைமுகமாக தாக்கி மரங்களை அழித்துவிடும். 
  • மா தண்டு துளைப்பான் காரணமாக சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.

🪲 வாழ்க்கை சுழற்சி : 

  • வண்டுகள் பெரிதாகும் கடினமான இறக்கைகளைக்  கொண்டிருக்கும். முன் இறக்கையில் இருபுறமும் சிகப்பு புள்ளிகள் காணப்படும். 
  • இதன் உணர் கொம்புகள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் காணப்படும் வெடிப்புகள் சிறு சிறு காயங்கள் போன்ற இடங்களில் வண்டுகள் தனது முட்டைகளை தனித்தனியாக  இடும்.
  • சுமார் 15- 25 நாட்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6-8 மாத காலம் வரை மரத்தின் தண்டு அல்லது கிளை  பகுதியில் உள்ள திசுக்களை துளைத்து உண்டு வாழும்.
  • கூட்டுப் புழுக்கள் பாதித்த இடங்களில் காணப்படும். 
  • வண்டுகளின் நடமாட்டம்  மே முதல் ஜூன் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதனால் புழு தாக்குதலை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை எப்படி பார்க்கலாம். 

தாக்குதலின் அறிகுறிகள் :

  • வண்டுகள் நேரடியாக பதிப்பை ஏற்படுத்தாது.
  • இளம் புழுக்கள் மரத்தின் தண்டு அல்லது கிளைப் பகுதியில்   துளையிட்டு தொடர்ச்சியாக உண்டு பல்வேறு அறைகளை ஏற்படுத்தும். 
  • திசுக்களை உண்டு     மரத்தூள் சக்கைகளை வெளியேற்றும்.
  • சில நேரங்களில் மரத்தில் தண்டுப் பகுதியில் இருந்து சாறு வெளியேறுவதை காண இயலும். 
  • கிளை அல்லது தண்டைத் துளைத்து உண்ணுவதால் ஊட்டச்சத்து மற்றும் நீர் மரங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஒரு ஒரு பகுதியாக இறந்துவிட்டது. 
  • சரியாக கவனிக்கவில்லை  எனில் மரம் இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • முறையான பராமரிப்பு அவசியம்.  பராமரிப்பு இல்லாத தோப்புகளில் வண்டு தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • வண்டு தாக்குதல் குறைவாக இருக்கும் நிலம்  போன்ற ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த வண்டுகள் தாக்கும் இதர பயிர்களான பப்பாளி, அத்தி, முருங்கை, ரப்பர், மல்பரி போன்றவற்றை ஊடுபயிராகவோ அல்லது அருகிலோ சாகுபடி செய்யக்கூடாது. 
  • மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இறந்த மரங்களை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில்  காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மோனோகுரோட்டாபாஸ் கலந்து தடவ வேண்டும். 
  • இதனால் முட்டையிடும் சதவீதம் குறையும்.
  • வண்டுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக விளக்கு பொறி வைத்து அதனை கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • மே முதல் ஜூன் மாத இரவில் வரை மரத்தின் தண்டு பகுதியில் நைலான்  வலைகளை கட்டி வைக்கலாம். இதில் முட்டையிடும் வண்டுகள் எளிதில் மாட்டிக் கொள்ளும்.
  • புழு தாக்குதல் இருப்பின்  துளையிலிருந்து புழுக்களை அகற்றி விட்டுப் பின்னர் மோனோகுரோட்டாபாஸ் அல்லது Dichlorovos மருந்தில் பஞ்சை நனைத்து  துளையில் வைக்க வேண்டும்.
  • Arka borer control (ABC) பொருளை மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் தடவுவதன் மூலம் முட்டையிடுதல் தடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்ட புழுக்களும் இறந்துவிடும். இது சுமார் 4 மாத காலம் வரை புழு தாக்குதல் இல்லாமல்  பாதுகாக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

Recent Posts

Popular Posts