google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: நோய் மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மார்ச், 2025

தர்பூசணியில் தண்டு கருகல்(Gummy) நோய் மேலாண்மை...

  • தர்பூசணி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக தண்டு கருகல் அதாவது ஒட்டும் தண்டு கருகல் Gummy stem blight எனப்படும் பூஞ்சான நோய் மிக அதிக அளவில் காணப்படுகிறது. 
  • இந்த நோய் மிக வேகமாக பரவுவதால் இதன் மூலம் இவர் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. தர்பூசணி மட்டும் இல்லாமல் முலாம்பழம் பயிரையும் தாக்கும் திறனுடைய இந்த நோய் சில நேரங்களில் தண்டு அழுகல் நோய் எனவும் கூறப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • சராசரி வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட வறட்சிக்கு பிறகு அதிகப்படியான மழை 
  • பனிப்பொழிவு 
  • இலைகள் நீண்ட நேரமாக ஈரப்பதத்துடன் இருத்தல்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயின் ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் நீள் பட்டத்தில் கருப்பு முதல் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் விளிம்புகளுக்கு அருகில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்று நான் ஒன்று இணைந்து கருகல் போன்ற அறிகுறியாக காணப்படலாம்.
  • இலை புள்ளியின் நடுப்பகுதி சற்று நீர்த்த நிறமாக மாறி நாளடைவில் உதிர்ந்து காணப்படும். 
  • இந்த நோய் தண்டு பகுதியில் தாக்குவதால் தண்டில் ஆரம்பத்தில் புள்ளிகள் தோன்றி நாளடைவில் கருகலாக மாறும். 
  • இதனால் தண்டுப் பகுதியில் வெடிப்பு காணப்பட்டு அதிலிருந்து வெளி சிகப்பு நிற ஒட்டு திரவம் வெளிவருவதை காண இயலும்.
  • இலைகள் அதிக அளவு கருகுவதால் பயிர் வளர்ச்சி தடைப்படும். 
  • தண்டுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் தருணத்தில் மொத்த பயிலும் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • கவனிப்பற்ற நிலையில் தீவிர நோய் தாக்குதலின் போது காய்களை தாக்கி அழுகலை ஏற்படுத்தும்.



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் தாக்குதலை ஏற்படுத்துவதால், தரமான விதை மற்றும் நாற்றுகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • நாற்றுப் பண்ணையில் இருந்து நாற்றுகளை கொள்முதல் செய்யும் பொழுது தண்டு கருகல் நோய் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விதைகள் அல்லது நாற்றுகள் இயற்கை அல்லது இரசாயன பூஞ்சான கொல்லி  மருந்துகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்னர் நடவு/விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • முந்தைய பயிர்களின் கழிவுகளில் இந்த பூஞ்சைகள் நீண்டு வாழ்வதால் அதனை முற்றிலும் அகற்றுவது மிக அவசியம். 
  • இந்த நோய் தாக்காத இதர பயிர் வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்வது சிறந்தது. 
  • கோடை பருவத்தில் தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம்.
  • கொடி காய்கறி பயிர்கள் வயலில் தானாக முளைத்து வருவதை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் சூடோமோனஸ் அல்லது பேசில்லஸ் தெளித்து வரவேண்டும். 
  • தீவிர நோய் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி அப்புறப்படுத்துவது நல்லது. 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் நோய் தாக்குதலின் தீவிரத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை இலை வழியாக தெளிக்கலாம்.
    • Zineb
    • Chlorothalonil
    • Mancozeb
    • Azoxystrobin + Mancozeb
    • Azoxystrobin + Difenoconazole
    • Tebuconazole + Trifloxystrobin
    • Fluxapyroxad + Pyraclostrobin 
    • Boscalid + Pyraclostrobin 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இருந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


சனி, 8 மார்ச், 2025

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இதன் அறிகுறிகள்  அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படும். மிதமான வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் பனிப்பொழிவு ஆகியவை இலைப்புள்ளி நோய் உருவாவதற்கு சாதகமாக திகழும்.
  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை நாம் பயன்படுத்தும் விதை கருணை மூலமாகத்தான் நிலத்திற்கு வருகிறது. சாதகமான சூழ்நிலை அமையும் பொழுது பெருக்கமடைந்து தண்ணீர் காற்று மற்றும் பண்ணை பணிகளின் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது. எனவே ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக மஞ்சள் சாகுபடி செய்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 
  • சுமார் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கும் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் ஒழுங்கற்ற வடிவில் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். 
  • இலைப் புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும் ஓரப்பகுதி பழுப்பு நிறத்திலும் காணப்படும். இலை புள்ளிகள் பிரதானமாக இலையின் விளிம்புகளில்  காணப்படும். இதை பார்ப்பதற்கு பொட்டாசியம் சத்து குறைபாடு அல்லது கருகல் நோய் போன்று இருக்கும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட  இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தலாம். 
  • பயிரின் அடிப்பகுதியில் காணப்படும் முதிர்ந்த மற்றும் காய்ந்த இலைகளை அகற்றுவதால் நல்ல காற்றோட்டம் கிடைக்க பெறும். சூரிய ஒளி மற்றும் காற்று உட்புகுவதால் நோய் பரவுதல் தடுக்கப்படும். 
  • நீர்ப்பாச்சுதல் மருந்து தெளித்தல் போன்ற பண்ணை பணிகளை காலை நேரத்தில் மேற்கொள்ளாமல் மதியம் அல்லது மாலை வேளையில் செய்வதால் நோய் பரவுதலை குறைக்கலாம். 
  • உயிர் பூஞ்சான கொல்லியான Trichoderma மற்றும் Pseudomonas இந்த நோய்க்கு எதிராக திறன் பட செயல்படுவதால், இதனை வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • நோய்கள் வருவதற்கு முன்னதாக அல்லது நோயின் ஆரம்ப நிலையில் Carbendazim/ Carbendazim+ Mancozeb /Propineb/COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்படும் அளவில் கலந்து தெளிக்கலாம். 
  • நோய் பரவுதல் அதிகமாக தென்படும் வேளையில் Propiconazole/ Difenoconazole/ Azoxystrobin + Mancozeb/ Metiram+ Pyroclosrobin போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலை தடுக்க இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

 

மஞ்சள் பயிரில் இலை கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மஞ்சள் பயிரில் பிரதானமாக தோன்றும் நோய்களாக இலைப்புள்ளி நோய், கருகல், கொப்புள நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் திகழ்கிறது.
  • நாம் ஏற்கனவே இலைப்புள்ளி நோயைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் நடப்பு பருவத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு முக்கியமான நோயான இலை கொப்புள (Leaf blotch)நோயைப் பற்றி விரிவாக காணலாம். 

நோயின் அறிகுறிகள்:

  • இந்த நோயானது பெரும்பான்மையாக பயிரின் அடி பகுதியில் காணப்படும் இலைகளில் ஆரம்பமாகும். சுமார் ஒரு மில்லி மீட்டர் அகலம் உள்ள மிகச் சிறிய புள்ளி அடியில காணப்படும். இதனை இலையின் இரு புறங்களிலும் காண இயலும். 
  • ஆரம்பத்தில் புள்ளிகள் பழுப்பு நிறத்தில் உருவானாலும் பின்னர் சிகப்பு நிறமாக மாறும். எண்ணற்ற சிறு சிறு புள்ளிகள் மிக நெருக்கமாக இடையில் காணப்படுவதால் பார்ப்பதற்கு கருகல் நோய் போன்று தெரியும்.
  • எண்ணற்ற புள்ளிகள் இலையின் பெரும்பான்மையான பகுதியை சென்றடைவதால் இலைகளின் உற்பத்தித்திறன் பாதிப்படைந்து கண்டிப்பாக மகசூல் இழப்பீடு ஏற்படும். நன்கு பராமரிப்பு உடைய வயல்களில் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம் அதில் சுமார் 20% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாத வயல்களில் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
  • இலையில் காணப்படும் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலைகள் கருகி இறந்து விடும். இந்த நோய் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மிக அதிக அளவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த காலத்தில் திகழும் அதிக காற்று ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு இந்த பூஞ்சை உறக்க நிலையில் இருந்து வெளிவந்து மிக வேகமாக பெருக்கம் அடைய சாதகமாக திகழ்கிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த நோயை கட்டுப்படுத்த தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • நிலத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் மேலும் பயிர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி அடிமட்ட இலைகள் வரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 
  • இந்த நோயானது பாதிக்கப்பட்ட கிழங்குகளில் இருந்து மற்றொரு வயலுக்கு செல்வதால் விதைக் கிழங்குகளை தேர்வு செய்யும் போது கவனம் தேவை. அதேபோன்று பாதிக்கப்பட்ட பயிரின் எச்சங்களில் இந்த பூஞ்சானம் நீண்ட நாட்கள் இருப்பதால் ஒரு முறை சாகுபடி செய்த பிறகு நிலத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். 
  • பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர் செய்வதால் இந்த நோய் பரவுதலை தடுக்க இயலும். 
  • நோய் தாக்குதலை தடுக்க அல்லது ஆரம்ப நிலையின் போது உயிர் பூஞ்சான கொல்லிகலான Pesudomonas மற்றும் Trichoderma ஆகியவற்றை தொடர்ச்சியாக தெளித்தும் பாசன நீர் வழியாகவும் கொடுத்து வர வேண்டும்.
  • வெங்காயம் ஊடுபயிராக இருக்கும் வயல்களில் அல்லது வெங்காய இலையை அரைத்து தெளிக்க கூடிய பயிர்களில் இந்த நோய் தாக்குதல் மிக மிக குறைவாகத்தான் காணப்படுகிறது எனவே இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யலாம். 
  • பல்வேறு வகையான ரசாயன மருந்துகள் இந்த நோய்களுக்கு எதிராக திறன் பட செயல்படும் உதாரணத்திற்கு.. Azoxstrobin+ Tebuconazole, Triclostrobin +Tebuconazole, Flusilazole + Carbendazim போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது இதுபோன்று பல மருந்துகள் உள்ளது அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். 
  • இலையில் ஈரப்பதம் இருக்கும் போது வயலில் புகுந்து ஒரு வேலையும் செய்ய வேண்டும் இது மேலும் நோய் பரவுதலை அதிகப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 8 ஜனவரி, 2025

தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...
  • இயற்கையில் தென்னை மரங்கள் கடல் சார்ந்த பகுதிகளில் தோன்றி, அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்றதால்  தான் இதனை யாத்திரை செய்யும் கொட்டை எனவும் கூறுவார்கள்.
  • அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது கடல் சார்ந்த பகுதியில் திகழும் மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இதன் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது என்பது தெரிய வருகிறது. 
  • தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் தன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது அதில் வேர்களும் உட்பட. இதை அடிப்படையாக வைத்து தான் இதன் வேர் அமைப்பை அழியும் வேர்கள் மற்றும் அழியா வேர்கள் என வகை படுத்துகிறோம்.
  • இந்த அழியும் மற்றும் அழியா வேர்களின் செயல்பாடுகளும், புதுப்பிக்கும் விகிதமும் (Regenerative Capacity) தான் மரத்தின் ஆரோக்கியத்தையும் காய்ப்பு திறனையும் நிர்ணயிக்கிறது. 
  • தென்னை சாகுபடி செய்யப்படும் மண் அமைப்பு (மணல் பாங்கான இடம்) மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இந்த வேர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. மணல் பாங்கான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்களின் வேர்கள் ஆழமாகவும் மிக நீண்டு காணப்படுவதால் இவை அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் காய்ப்பு திறனுடன் காணப்படுகிறது. மேலும் இது போன்ற இடத்தில் வளர்க்கப்படும் மரத்தில் வேர்களின் புதுப்பிக்கும் திறன் அதிகம் காணப்படுகிறது எனவே இவை நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மை உடையது.
  • ஆனால் அதற்கு மாறாக சாகுபடி செய்யப்படும் இடங்களில் இவை அனைத்துமே கேள்விக்குறிதான். 
  • தென்னையில் வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. வேர் வளர்ச்சி அதிகப்படுத்தக்கூடிய இயற்கை மற்றும் இரசாயன உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வரும் பொழுது வாத நோயால் பாதிக்கப்பட்ட மரங்களைக் கூட மீட்டு விடலாம் என பல ஆய்வுகள் கூறுகிறது. 
  • ஏனெனில், போதுமான அளவு புதுப்பிக்கக்கூடிய அழியும் வேர்களை உற்பத்தி செய்ய தூண்டும் பொழுது இவை அதிக அளவு நீர் மட்டும் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கடத்துகிறது இது மரங்களுக்கு தாங்கி வளரும் சக்தியை தருகிறது. 
  • Phytoplasma நோய் கிருமிகள் இந்த அழியும் வேர்களை தாக்கி அதன் செயல்பாடுகளை இழக்க வைத்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்வதை படிப்படியாக குறைத்து மரங்களை பலவீனமாக்கி பின்னர் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • பல்வேறு ஆய்வுகளில் அடிமரம் எனப்படும் தண்டுப் பகுதியில் இந்த அழியும் மற்றும் அழியா வேர்களை புதுப்பிக்க இயலும் அதனால் வாடல் நோயால் தாக்கப்பட்ட மரங்களை மீட்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருபுறம் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதும் மற்றொருபுறம் புது ஊட்டச்சத்து வேர்களை உற்பத்தி செய்யவும் கடைசியாக நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூடிய நடவடிக்கை எடுத்தால் மரங்களை மீட்க சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. 
  • இது ஒருபுறம் இருக்க, வாஸ்குலார் கற்றையில் மட்டுமே வாழும் திறன் படைத்த இந்த Phytoplasma நோய் காரணி அந்தப் பகுதியை உண்டு வாழும் பூச்சியினால் மட்டுமே பரப்பப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வெகுவாக பரவுதலை கட்டுப்படுத்தலாம். 
  • வாடல் நோயால் தாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படாத மரங்களின் நீர் உறிஞ்சித் திறன் மற்றும் ஊட்டச்சத்து அளவை கணக்கிடும் பொழுது பாதிக்கப்படாத செடிகள் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அடிப்படையில் இருப்பதை காண முடிகிறது. எனவே பயிர்களின் ஆரோக்கியத்தன்மை மற்றும் இந்த ஊட்டச்சத்துக்கள் நோயை தாங்கி வளரும் தன்மையை மரத்திற்கு கொடுக்கிறது. 
  • நோய் காரணிகளின் இருப்பிடமாக திகழும் களைகள் குறிப்பாக ஒருவித்திலை களைகள் அதிக அளவு பைட்டோபிளாஸ்மா நோய்க் கிருமிக்கு அடைக்கலமாக திகழ்கிறது. எனவே தென்னந்தோப்பில் களை மேலாண்மை மிக இன்றியமையாத அகத்தி திகழ்கிறது.
  • அந்தந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகங்கள் வாடல் நோய் காரணியை தாங்கி வளரும் தன்மை உடையதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 6 ஜனவரி, 2025

நெல் பயிரில் பாக்டீரியா இலை கோடு நோய் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தும் முறை

  • நெல் சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்தில் குறிப்பிட்ட சில நோய் அல்லது பூச்சிகள் பிரதானமாக காணப்படும். பருவத்திற்கு ஏற்ப என்ன நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படலாம் என்பதை அறிந்திருந்தால் சாகுபடி செய்வது மிக எளிது.
  • நெல் சாகுபடியில் ஒரே விதமான அறிகுறிகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு காணப்படுவது நாம் அறிந்ததே எனவே அதன் அறிகுறிகளை வேறுபடுத்த தெரிந்து கொண்டால் சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.

பாக்டீரியா இலை கோடு நோய்:

  • இந்த நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக பாக்டீரியா இலை கருகல் நோய்
  • மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இலையின் நுனிப்பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் வெளிர் பழுப்பு நிற மாற்றம் காணப்படுவது பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி ஆகும்.
  • அதேபோன்று இலையின் விளிம்புகள் தெளிவான நிறம் மாற்றம் அதாவது பச்சை முதல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அதனை பொட்டாசியம் சத்து குறைபாடு எனலாம்.
  • இதேபோன்று அறிகுறிகளை தோற்று விக்கக் கூடியது தான் இந்த இலை கோடு நோய்.

நோயின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலையில் வெளிர் பச்சை நிற நீள் வட்டப் புள்ளிகள் சிறிதாக இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் அளவில் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படும். தற்போது பார்க்கும் பொழுது சிறு சிறு கோடுகள் போன்று காணப்படும்.
  • படிப்படியாக இந்த கோடுகள் வெளிர் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் தீவிரமடையும் பொழுது பழுப்பு நிறத்திலும் காணப்படும். 
  • அதிகாலை வேளையில் இந்த நீள் வட்ட புள்ளிகளில் இருந்து பாக்டீரியாக்கள் திரவம் சுரக்கப்படும். 
  • பின்பு நிலை முழுவதும் கருகும் அபாயம் ஏற்படும் இதனால் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் தொய்வு ஏற்படும்.

சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான அல்லது அதிக வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நோயால் தாக்கப்பட்ட வயலில் சாகுபடி செய்தல்
  • அதிக மழை, பனிப்பொழிவு, நீர் பாய்ச்சுதல் மற்றும் அதிக காற்று வீசும் தருணம்

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பருவத்திற்கு ஏற்றவாறு தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ரகத்திற்கு ஏற்றவாறு உரிய பயிர் இடைவெளியுடன் நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க பெறும். 
  • சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதனை விதை  நேர்த்தி  பயன்படுத்துவது மிக முக்கியம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து விதை நெல்லை தேர்வு செய்ய வேண்டும். 
  • விதை நெல்லை சுடு தண்ணீர் பயன்படுத்தி நேர்த்தி செய்தும் விதைக்கலாம். 
  • வயலில் அதிக சேர் இருக்க கூடாது அதே சமயம் அதிக அளவு தண்ணீரும் விட கூடாது எனவே காய்ச்சலும் பாய்ச்சலும் நீர் விடுவது சிறந்தது. 
  • ஏற்கனவே நெல் சாகுபடி செய்த வயதாக இருந்தால் முந்தைய பயிர்களின் கழிவு நன்கு மக்கும் வரை காத்திருந்து பயிர் செய்வது நல்லது.
  • கோடை பருவத்தில் வயலை ஆழமாக உளவு செய்து நோய் தாக்கும் கிருமிகளை அழிக்க முயற்சி செய்யலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
  • அதிக அளவு உரம் இதுவரை தவிர்க்கவும் இது மேலும் நோய் பரவுதல் ஊக்குவிக்கும்.
  • Xanthomonas வகையை சேர்ந்த இந்த பாக்டீரியா எளிதில் கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • நோய் தாக்குதலை தொடர்ச்சியாக ஆராய்ந்து ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கலாம். 

  • சாகுபடி செலவை குறைக்க Bacillus subtilis மற்றும் Pseudomonas கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதால் நோயை கட்டுக்குள் வைக்கலாம். அல்லது கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை இலை வழியாக தெளிக்கலாம்.
  • Copper oxychloride- 50% - 2-2.5 கி/ 10 liter தண்ணீருக்கு
  • Coper hydroxide-  10கி/ 10 liter தண்ணீருக்கு
  • Streptomycin sulphate + Tetracycline Hydrochloride 90:10 SP- 20 கி/10 liter தண்ணீருக்கு

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

செவ்வாய், 24 டிசம்பர், 2024

மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை

 இலை உருக்குலைவு (Malformation) நோய்:

  • மா பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படக்கூடிய ஒரு பிரதான நோயாக இந்த உருக்குலைவு நோய் நிகழ்கிறது.
  • பயிர்கள் நாற்றுகளில் அல்லது நிலத்தில் நட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் இதனை இலை உருக்குலைவு நோய் என்பார்கள். இதனால் பயிர் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு பயிர்கள் இறக்க நேரிடலாம்.
  • பூத்தலின் போது இருந்ததில் ஏற்படும் தருணத்தில் இதழை பூக்கள் உருக்குலைவு நோய் என்பவர்கள் இதனால் மகசூல் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை கூட இழப்பீடு ஏற்படலாம்.
  • இந்த நோய் முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை.

நோய் தொற்றுக்கான காரணங்கள்:

  • இது ஒரு பூஞ்சை தொற்றால் ஏற்படும் நோய் என்று கருதப்பட்டாலும் பல்வேறு இதர காரணிகளும் இந்த உருக்குலைவு நோய் தாக்குதலுக்கு சாதகமாக திகழ்கிறது.
  • மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மண் ஈரப்பதம், நிலையற்ற மழை பொழிவு, ஆரம்ப கால கட்டத்தில் மொட்டுகளை தாக்கும்  பேன், பாதிப்படைந்த பயிர்களில் இருந்து ஒட்டு கட்டுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்குகளில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த நோய் உருவாவதற்கும் பரவுவதற்கும் உதவி புரிகிறது. 

இலை உருக்குலைவின் அறிஅறிகுறிகள்:


1.இளம் கன்றுகளில் தளிர்களின் வளர்ச்சி குன்றி செதில் போன்ற அமைப்புடைய இலைகளை குருத்துப் பகுதியில் மிக நெருங்கிய அமைப்புடன் உருவாக்குகிறது.

2.இதனால் கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு நாளடைவில் இறக்க நேரிடலாம்.

3.மிகக் குறைந்த இடைவெளியில் அதிக தளிர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் இதனை சில நேரங்களில் தலைக்கொத்து நோய் எனவும் கூறுவார்கள்.

4.சில நேரங்களில் நுனிப்பகுதி தடித்து காணப்படலாம். 

5.இளம் கன்றுகளில்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருக்குலை அறிகுறி மீண்டும் காணப்படலாம். 

பூ உருக்குலைவின் அறிகுறிகள்:

1.பூக்கள் மிக நெருக்கமாகவும் சற்று பெரிதாகவும் பூங்கொத்துகளில்  காணப்படும்.

2.நாளடைவில் பூங்கொத்து கருப்பு நிறமாக மாறி உதிரும். 

3.இதனால் பூ உதிர்வு அல்லது பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். இதன் காரணமாக சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரம்ப காலத்தில் அதாவது நாற்றுகள் அல்லது நிலத்தில் நடவு செய்த சில மாதங்களில் அறிகுறிகள் தென்பட்டால் பாதித்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். 
  • இந்தச் செடிகளை கவாத்து செய்து மீள முயற்சிப்பது தவறான அணுகுமுறை. வளர்ந்த மரத்தில் இலை உருக்குலைவு நோய் தென்பட்டால் பாதித்த பகுதியை மட்டும் கவாத்து செய்து பராமரிக்கலாம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் வாஸ்குலார் திசுக்களை இந்த பூஞ்சைகள் சென்றடைவதால் ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளை தெளிக்க வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட இலை அல்லது பூங் கொத்துகளை அகற்றிவிட்டு இயற்கை அல்லது இரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து ஒட்டு கட்டுதலுக்கு வேர் அல்லது தாய் செடிகளை தேர்வு செய்யக்கூடாது.
  • வெளியில் இருந்து வேர் செடிகளை வாங்கும் பொழுது நேரடியாக பண்ணையை ஆய்வு செய்து தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பூக்கள் நன்கு பூக்க ஏதுவாக NAA 20ppm தெளிக்கலாம். முன்னெச்சரிக்கைக்காக இயற்கை அல்லது இரசாயன தெளிப்புகளும் மேற்கொள்ளலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை

  • பாக்கு சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முதலாவதாக திகழ்வது பழ அழுகல் நோய் அதனை தொடர்ந்து இந்த அடித்தண்டு அல்லது வேர் அழுகல் நோய் திகழ்கிறது. 
  • இந்த நோய் முதன்முதலாக பாக்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. பின்னர் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டது. இதன் தாக்குதலால் சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் பாக்கு மரங்கள் இறந்து விடுவதாகவும் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 25-30 சதவீதம் மரங்களைக் கூட இழக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


                   

  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சைகள் வேர்ப்பகுதியை தாக்கி அதனை சிதைத்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை தடை செய்வதால் அறிகுறிகள் காணப்படுகிறது. 
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்  ஒன்று தரைமட்டத்திற்கு மேல் மற்றும் தரைமட்டத்திற்கு கீழ் உள்ள அறிகுறிகள் என்ற முறையில்.
  • வேர் அமைப்பு பாதிக்கப்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படும், இதனால் வேர்கள் வளர்ச்சி இன்றி காய்ந்து அழுக நேரிடலாம் சில நேரங்களில் வேர்களில் துர்நாற்றம் காணப்படும்.
  • மரத்தின் அடி இலை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் முறிந்து தொங்கும்.
  • நாளடைவில் இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளில் காணப்படலாம். 
  • மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் காய்கள் நோய் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே உதிர ஆரம்பித்து விடும் இதை கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் பரவலாக வெளிர் பழுப்பு நிற மாற்றத்தை காண இயலும் இதிலிருந்து வெளியிடப்படும் திரவம் நாளடைவில் பிசின் போன்று காட்சியளிக்கும். 
  • தாக்குதல் தீவிரமடையும் பொழுது தொண்டை பகுதியில் ஒரு சில இலைகள் மட்டுமே காணப்படும் பலவீனமாக இருக்கக்கூடிய மரங்கள் முறிந்து கீழே விழுகலாம். 
  • தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பூஞ்சைகளின் வளர்ச்சி காளான் போன்று காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்க்கும் பொழுது அதிலும் நிறமாற்றம் காணும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னையில் பாக்கு ஊடு பயிராக சாகுபடி செய்யும் போது இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 
  • அடர் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • வளமான மண் அமைப்புடைய நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சைகள் மண்ணில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து தாக்குதலை ஏற்படுத்தும் மேலும் தாக்குதலின் அறிகுறிகள் பின் நாளில் மட்டுமே தெரிவதால் பயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது சற்று கடினம். 
  • பாதிப்படைந்த மரத்தை தனிமைப்படுத்த வேண்டும் அதாவது மரத்தைச் சுற்றி 30 சென்டிமீட்டர் அகலத்தில் ஆழமான குழி எடுத்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் மற்ற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
  • தீவிரமாக பாதித்த மரங்களை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • பயிர் கழிவுகள் எதுவும் இல்லாத அளவிற்கு நிலத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக உழவு செய்தல், ஊடு பயிர் செய்தல் மண்ணை கிளறுதல் போன்ற கிளறுதல் பூஞ்சைகள் எளிதில் பரவலாம் எனவே இதை தவிர்க்கவும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியம் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும். 
  • பருவ மழைக்கு முன்னும் பின்னும் Trichoderma harzianum மற்றும் Pesudomonas florescence வேர்ப்பகுதிகளுக்கு கொடுப்பதால் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடை செய்ய உதவி புரியும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் தகுந்த நேரத்தில் கொடுக்கலாம்.
    • Carbendazim + Mancozeb
    • Copper Oxychloride
    • Tridemorph
    • Hexaconazole
    • Root feeding- Propiconazole/ Hexaconazole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வெள்ளி, 6 டிசம்பர், 2024

நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

நெல் பயிரில் குலை நோய் மேலாண்மை:

  • நெல் பயிரில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் குலை நோய் என்பது சற்று சவாலானதாகவும் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்படும் அனைத்து ரகங்களையும் தாக்கும் திறனுடையது. 
  • தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலை அதாவது குறைந்த வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், மழை தருணம், மேக மூட்டமான சூழ்நிலை, சாதகமான பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் மோசமான மண் அமைப்பால் பெரும்பான்மையான இடங்களில் குலை நோய் காணப்படுகிறது. 
  • பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த நோயானது பயிரின் பெரும்பான்மையான பாகங்களை அதாவது இலை, தண்டு, இலை உறை, கழுத்து பகுதி, கதிர் என அனைத்து பாகங்களில் தொற்றை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. 
  • பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதலை நாம் காண இயலும் எப்போதெல்லாம் சாதகமான சூழ்நிலைகள் அமைகிறதோ. 
  • ஆரம்பத்தில் சிறிய புள்ளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த பூஞ்சை நோய் நாளடைவில் ஒழுங்கற்ற அல்லது நீள் வட்ட வடிவில் புண்கள் போன்ற சற்று பெரிதான புள்ளியை உருவாக்குகிறது. 

  • கரும்புள்ளி நோய் மற்றும் குலை நோய் ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து நோயை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 
  • குலை நோய் அறிகுறியானது புள்ளியின் மையப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் அதன் ஓரங்கள் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். வேகமாக பரவும் தன்மையுடைய இந்த  இலைப்புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து கருகல் அறிகுறி போன்ற காட்சியும் சில நேரங்களில் காண இயலும். 
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள், இலை உறைகள் சில நேரங்களில் தண்டு பகுதி காய்ந்து சருகு போன்று மாறும் காட்சியை காண இயலும்.
  • மிக எளிதாக காற்று மூலமாகவும் பண்ணைப் பணிகள் மூலமாக அடுத்தடுத்த பயிர்களுக்கு பரவும் தன்மை உடையது அதற்கேற்றவாறு நாம் செயல்பட வேண்டும். 
  • நிலம் அதிகளவு சேற்றுடன் இருக்கும் பொழுது இந்த நோய் தாக்குதல் தண்டு மற்றும் அதன் உறை பகுதியில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட இடம் நோய்த்தொற்றுடன் இரண்டாம் நிலையாக அழுகலும் காணப்படலாம். இதனால் அதிக பயிர் இழப்பீட்டை நாம் காண இயலும் குறிப்பாக ஆரம்ப நிலையில்.
  • பயிர்கள் பூக்கும் அல்லது தொண்டை கருவாக இருக்கும் நேரத்தில் நோய் தொற்று மற்றும் சாதகமான சூழ்நிலை திகழும் பொழுது சுமார் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை காண இயலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • பருவ மழைக்கு ஏற்றவாறு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும். அதாவது பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலை பருவ மழைக்கு இணையாக  இருக்கக் கூடாது.
  • நோய் தாக்குதல் குறைவாக காணப்படும் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • மழைக்காலங்களில் சாகுபடி செய்யும் பொழுது தழைச்சத்து உரத்தை மிகக் குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் அதுவும் சிறிது சிறிதாக கொடுத்து வர வேண்டும். 
  • பயிரின் இலை பகுதியில் ஈரப்பதம் திகழும் பொழுது பண்ணைப் பணிகள் அல்லது பூஞ்சையை கட்டுப்படுத்தக்கூடிய எந்தவித தெளிப்புகளும் செய்யக்கூடாது இது பயனற்றது.
  • முன்னெச்சரிக்கையாக தெளிப்புகள் மேற்கொள்வது இந்த நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கணிசமாக கட்டுப்படுத்துகிறது. 
  • விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்வது மிகவும் நல்லது குறிப்பாக Pseudomonas மற்றும் Trichoderma பயன்படுத்தி. 
  • காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விடுவது மிக சிறந்தது. மேலும் இது பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.
  • மழை பருவத்தில் சாகுபடி செய்பவர்கள் சற்று அதிக இடைவெளி விட்டு காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் படி செய்யலாம்.
  • பொட்டாசியம், கால்சியம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை போதுமான அளவு கொடுக்கும் பொழுது மேலும் பயிர்கள் நோய் எதிர்ப்பு திறனுடன் செயல்படும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் சூடோமோனஸ் திரவத்தை மட்டும் நம்ப வேண்டும் ஏனெனில் மற்ற எந்த ஒரு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் இந்த நோயை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே இதனை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தலாம்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்... 

    • Carbendazim
    • Carbendazim + Mancozeb
    • Hexaconazole
    • Tebuconazole
    • Tricyclazole
    • Trifloxystrobin + Tebuconazole
    • Picoxystrobin

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


வெள்ளி, 29 நவம்பர், 2024

சேப்பங்கிழங்கில் Phytophthora இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை அமையும் பொழுது இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படும். Phytophthora எனப்படும் பூஞ்சையினால் ஏற்படும் எந்த இலைக் கருகல் நோய் கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
  • மண் மற்றும் பாதிப்படைந்த கிழங்குகளில் மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் திறன் படைத்த இந்த பூஞ்சைகள், தண்ணீர் மண் கிழங்கு மற்றும் காற்றினால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 



  • பயிரின் நுனி அல்லது நடுப்பகுதியில் திகழும் இலையின் மேற்பரப்பில் அடர் பழுப்பு முதல் ஆலிவ் பச்சை நிறத்தில் புள்ளிகள் அல்லது புண்கள் காணப்படும். 
  • இந்த புள்ளிகளை சுற்றி வெளிர் மஞ்சள் நிறைய வளையம் காணப்படும். 
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இதிலிருந்து மஞ்சள் அல்லது வெளிர் சிகப்பு நிற திரவம் வெளியேறுவதை காண இயலும். 
  • சில நேரங்களில் இந்த புண்களை சுற்றி வெள்ளை நிற பூஞ்சைகள் காண இயலும். இந்த புண்களின் நடுப்பகுதி சிதைந்து உதிர்வதை காணலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிர்களில் 50 சதவீதம் இலைப்பரப்பை நாம் இலக்க நேரிடும். 
  • தீவிர தாக்குதலின் போது புண்கள் இலை காம்புகளில் காணப்படும். இதனால் பாதிப்படைந்த இடத்தில் சிதைந்து இலை ஒடிந்து தொங்கும்.
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களில் கிழங்குகளிலும் தாக்குதலை காண இயலும் இதனால் கிழங்கு அழுகல் அல்லது ரப்பர் போன்று மாறுதல் காணப்படும்.
  • இந்த நோய் தாக்குதலால் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகை அல்லாத இதர பயிர்களை சுழற்சி பயிராக பயிரிடுவது சிறந்தது. 
  • நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளை தேர்வு செய்தல் மிக அவசியம். அதற்கு எந்தப் பகுதியில் இந்த நோய் தாக்குதல் இல்லையோ அங்கிருந்து கிழங்குகளை பெற்று நடவு செய்யலாம். 
  • தேர்வு செய்த கிழங்குகளை இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து பின்பு விதைக்க வேண்டும். இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்திட Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தலாம் ரசாயன முறைக்கு Carbendazim+Mancozeb மருந்தை பயன்படுத்தலாம். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகத்தினை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது இந்த நோய் தாக்குதல் பெரிதளவு இல்லாததால் அதற்கு ஏற்றவாறு பருவத்தினை தேர்வு செய்து நடவு மேற்கொள்ளலாம்.

  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • வாய்க்கால் வழி நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம் ஏனெனில் இவை இரண்டுமே நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை அதிகப்படுத்தும். 
  • போதுமான இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் நல்ல காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் இதனால் நோய் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது.
  • பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் திசுக்களின் திட தன்மையை மேம்படுத்தவும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் கொடுக்க வேண்டும்.

  • வயலை சுற்றி இதர பயிர் குறிப்பாக சோளம் பயிரிடுவதால் நோய் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.

  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum என்ற உயிர் கட்டுப்பாட்டு காரணியை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும்.
  • ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.

  • Metalaxyl + Mancozeb
  • Copper oxychloride
  • Mettiram
  • Mancozeb
  • Fluxapyroxad + Pyroclostrobin
  • Fosetyl aluminium

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்... 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 13 நவம்பர், 2024

பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் மேலாண்மை...

முன்னுரை: 

    பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் அனைத்து வயதுடைய மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளில் வளரும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது. பராமரிப்பின் அடிப்படையில் பாதிப்பு 15 முதல் 80 சதவீதம் வரை கூட ஏற்படும். குறிப்பாக பருவ மழைக்காலங்களில்.

நோய் காரணிகள்: 

    இந்த நோய் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படுவதில்லை பல்வேறு சூழ்நிலைகள் ஒருங்கிணைந்து இதனை ஏற்படுத்துவதால் ஆரம்ப நிலையிலேயே இதனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். 

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் அடி இலைகளின் நுனி மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறும். படிப்படியாக இலையின் நடுப்பகுதியிலும் அறிகுறிகளை காணலாம். 
  • நிறம் மாறுதல் அடுத்தடுத்து இலைகளுக்கு பரவ ஆரம்பிக்கும் பின்னர் பயிரின் மொத்த இலைகளுக்கும் பரவும். 
  • தீவிரமான நிலையில் நிற மாற்றம் அடைந்த இலைகள் நுனிப்பகுதியில் இருந்து கருக ஆரம்பிக்கும். 
  • அதிக அளவில் முதிர்ந்த மற்றும் இளம் காய்கள் உதிரும். உதிர்ந்த காய்கள் நிறமாற்றத்துடனும் அழுகல் நோய் போன்ற அறிகுறிகளுடனும் காணப்படும். 
  • பாதிப்படைந்த மரத்தின் வேர் பகுதியில் நிறம் மாற்றங்கள் காணப்படலாம். 
  • இதனால் பெரிய அளவில் பயிர் இழப்பீடு மற்றும் மகசூல் இழப்பீடு 80 சதவீதம் வரை காணப்படலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி வயலில் நீர் தேங்கி நிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • பாக்கு நாற்றுகளை வாங்கும் பொழுது மிக கவனமுடன் நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான ஊட்டச்சத்துக்களை கண்டிப்பாக கொடுத்து வர வேண்டும். 
  • ஊடுபயிராக வாழை பயிரிடுவதை தவிர்க்கலாம். 
  • மரம் ஒன்றிற்கு 10 முதல் 15 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 150-200 கிராம் தழைச்சத்து, 50 முதல் 100 கிராம் மணிச்சத்து மற்றும் 250 கிராம் சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் மேலே சொன்ன ஊட்டச்சத்துக்களை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பயன்படுத்தலாம்.
  • இது மட்டும் இன்றி இதர ஊட்டச்சத்துக்கள்  குறிப்பாக கால்சியம் மெக்னீசியம், மாங்கனிசு, இரும்பு மற்றும் துத்தநாகம் தேவையான அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • கோடை பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் கண்டிப்பாக அவசியம். 
  • பாதிப்படைந்த பயிர்களை கவனமாக சேகரித்து வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் போதுமான அளவு நிழல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இடை உழவு அல்லது ஊடு பயிர் செய்யும் பொழுது வேர் மற்றும் தண்டுப் பகுதிகள் பாதிக்காத வண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • இயற்கை இடு பொருட்களை அதிகம் பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது இதன் தாக்குதல் காணப்படுவது மிகவும் குறைவு.
  • மண்ணின் கார அமிலத்தன்மை நடுநிலைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • நோய் பரவுதல் கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். இதனை பருவமழை காலங்களில் தொடர்ச்சியான இடைவெளியில் பின்பற்றுவது சிறந்தது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 23 அக்டோபர், 2024

நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் மேலாண்மை...

முன்னுரை:

  • நெல் சாகுபடியில்  பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்திற்கு பிரதானமாக பயிர்களை தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகளை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செயல்படுவது சிறந்தது. 
  • அந்த வகையில் பாக்டீரியா இலை கருகல் நோய் சாகுபடியில் உள்ள பயிர்களை தாக்க பிரதானமான தருணம். இந்த நோய் தாக்குதலால் சுமார் 60% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பராமரிக்கும் விதம், ரகத்தின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்து மகசூல் இழப்பீடு ஏற்படும். 

நோய் தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

  • மிதமான வெப்பம் மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு அதனால் ஏற்படும் கதகதப்பு தன்மை 
  • முந்தைய பயிர் கழிவுகளை முழுமையாக அகற்றாமல் அல்லது மக்காமல் இருத்தல் 
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு 
  • முறையற்ற களை மேலாண்மை 

பரவும் விதம்:

  • மழை அல்லது நீர்ப்பாசன மூலம் எளிதில் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
  • காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகளை செய்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 


  • பொதுவாக 15 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு மிகவும் உகந்தது.
  • தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலையின் விளிம்பு மற்றும் நுனியில் மஞ்சள் நிற மாற்றம் அடைவதை காண இயலும்.
  • இந்த நிற மாற்றம் படிப்படியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும். 
  • நாளடைவில் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு நிறம் மாற்றம் அடைந்து உதிர நேரிடும். 
  • ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் பொழுது பெரும்பான்மையான இலைகளின் நுனி பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை பார்க்கும் பொழுது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு  போன்று காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பகுதியை சற்று உற்று நோக்கும் போது இதிலிருந்து மிக மிக சிறிய அளவில் திரவம் வெளியேறுவதை காண இயலும் இதை அடிப்படையாக வைத்து இதனை பாக்டீரியா இலை கருகல் நோய் என தீர்மானிக்கலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாக்டீரியா நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • கரிப் பருவத்தில் நெல் நடவு மேற்கொள்ளும் பொழுது சற்று இடைவெளி அதிகமாக விட வேண்டும். 
  • மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் பொழுது காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகள் எதுவும் செய்ய வேண்டாம். 
  • தாக்குதலின் அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக அந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • இந்த நோய் பிரதானமாக நீர் மூலம் பரவுவதால் பாசன நீர் வழியாக ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் Bacillus subtilis திரவ உயிர் பூஞ்சானம் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என குறைந்தபட்சம் இரண்டு முறை கொடுப்பது நோய் பரவுதலை கட்டுப்படுத்த உதவி புரியும். 
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
  • களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும் மற்றும் முந்தைய பயிர் கழிவுகள் நன்கு மக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையெனில் நடவுக்கு முன்னதாக 200 லிட்டர் WDC வயலில் விடலாம். 
  • இயற்கை முறையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கலாம். 
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பாக்டீரியாவை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை இலை வழியாக தெளிக்கலாம். 

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்துபயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கத்தரியில் ஃபோமோப்சிஸ்(Phomopsis) கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நாம் பிரதானமாக சாகுபடி செய்யும் கத்தரி பயிரில் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகிறது. அதில் மிகவும் முக்கியமான பூஞ்சான நோயான ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. உலகம் முழுவதும் காணப்படும் இந்த நோய் சுமார் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இந்த நோய் பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கும் என்பதால் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு. 
  • அதிக காற்று ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை. 
  • பிரதானமாக மழைப்பொழிவு மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

நாற்றங்கால் அறிகுறிகள்

  • இந்த நோய் விதை மூலம் பரவும் என்பதால் விதை முளைக்கும் போதே அறிகுறிகளை ஏற்படுத்தும். 
  • இந்த Phomopsis நோய் நாற்றுகளின் தண்டுப் பகுதியை பாதிப்பதால் தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
  • இதனால் தரைக்கு மேலே உள்ள பகுதியில் நாற்றுகள் முறிந்து இறக்கும்.  
  • அதேபோன்று நாற்றுகளின் இலையில் சிறிய புள்ளிகள் தோன்றும். இது நாளடைவில் பெருக்கமடைந்து இலைகள் உதிரும்.

வயலில் காணப்படும் அறிகுறிகள்:

  • சிறிய கருப்பு முதல் பழுப்பு நிற பள்ளத்துடன் கூடிய புள்ளிகள் காய்களில் காணப்படும். 
  • இது நாளடைவில் பெருக்குமடைந்து புள்ளிகளின் ஓரங்கள் சற்று அழுகியது போன்று காணப்படும். 
  • இதனால் காய்கள் சுருக்கமாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் தோன்றலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் நீள் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். 
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட காய் அல்லது இலைகளில் கருப்பு நிற பூஞ்சானத்தை காண இயலும்.
  • கடைசி நிலையாக காய்களில் அழுகல் தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த பூஞ்சான நோய் விதை மூலம் பரவும் அபாயம் உள்ளதால், தரமான விதைகளை தேர்வு செய்து அதனை 50 டிகிரி வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் 15 முதல் 25 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
  • அல்லது Trichoderma மற்றும் Pseudomonas பயன்படுத்தி விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சை பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மற்றும் மண்ணில் சுமார் ஒரு வருடம் கூட உயிர் வாழும் திறன் உடையதால், பயிர் கழிவுகளை முழுமையாக வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது. 
  • இந்த தாங்கி வளரக்கூடிய ரகங்கள் அல்லது வீரிய விட்டு ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்தால் மகசூல் குறைவதை தவிர்க்கலாம்.
  • பயிரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உருவாகும் பூஞ்சைகளால், அந்த இடத்தில் வளவளப்பாக இருப்பதால் மருந்து தெளிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்துகள் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று விடும். 
  • உயிர் பூஞ்சை கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தும் பொழுது குறைவான அளவு மருந்துடன் ஒட்டுப் பசை சேர்த்து செடி முழுவதும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
  • நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Carbendazim
  • Carbendazim + Mancozeb
  • Copper Oxychloride
  • Propiconazole
  • Carboxin + Thiram
  • Metalaxyl + Mancozeb
  • Zineb

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

Recent Posts

Popular Posts