google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 27 ஜனவரி, 2025

வேம்பு கரைசல் (Neemastra) தயாரிப்பு முறையும் பயன்பாடுகளும்...

 

முன்னுரை:

  • சாயன பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க பொருளாகவும் வேப்ப இலை திகழ்வதால் இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டை பிரதான பங்கு வகிக்கிறது. 
  • வேப்ப இலைகளில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் நோய் பூஞ்சைகளின் வளர்ச்சி தடை செய்வதாலும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டி அடிக்க பயன்படுத்த படுவதாலும் இதை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி நான் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேப்ப இலைகளில் உள்ள அஜடிரக்டின், நிம்பின், சலன்னின், மெளியான்றில் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் ஒரு விதமான பணிகளை மேற்கொள்வதால் இயற்கை விவசாயத்தில் வேப்ப இலை இன்றி அமையாதாக திகழ்கிறது. 

தேவையான இடுபொருட்கள்: 

1. 5 கிலோ வேப்ப இலை 

2. 10 லிட்டர் நாட்டு பசு கோமியம் 

3. இரண்டு கிலோ நாட்டு பசு சாணம் 

4. 200 லிட்டர் தண்ணீர்

5. 250 லிட்டர் கொள்ளளவு உடைய டிரம்

தயாரிக்கும் முறை: 

  • வேப்ப இலை மற்றும் அதன் உடன் கூடிய சிறு சிறு கிளைகளை அப்படியே அல்லது சிறிதாக நறுக்கி ட்ரம்மில் உள்ள 200 லிட்டர் தண்ணீரில் இடவேண்டும்.
  • பின்பு இதில் 10 லிட்டர் நாட்டு பசு கோமியத்தை ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அதில் ஊற்றி வலது புறமாக கலக்க வேண்டும். 
  • இந்தக் கலவையை நிழற்பாங்கான இடத்தில் துணி அல்லது கோணி பயன்படுத்தி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். 
  • சுமார் 48 மணி நேரம் கழித்து இந்த கலவையை எடுத்து நன்றாக வடிகட்டி பயிரில் தெளிக்கலாம். இதனை சுமார் மூன்று முதல் நான்கு மாதம் வரை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்: 

  • இலைபேன், அஸ்வினி, தத்துப்பூச்சி வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சு பூச்சிகள் இளம் பயிர்களை பாக்காத வண்ணம் பாதுகாக்கிறது.
  • பூச்சிகளின் முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.
  • இளம் புழுக்களின்   தோலுரித்தல் நிகழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.
  • இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.
  • பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • மேலும் இது பயிர்களுக்கு ஒரு சில ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


எள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை..

  • தமிழ்நாட்டில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் ரகங்கள்- TMV 3, TMV 4, TMV 7, VRI 3, VRI 4, YLM 66 மற்றும் ஒரு சில ரகங்கள் 
  • உகந்த பட்டம்- கோடை பருவம், ராபி மற்றும் காரிப்
  • விதை அளவு- எக்டருக்கு 5 கிலோ வரை 
  • விதை நேர்த்தி- Trichoderma  பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் அல்லது தேவையின் அடிப்படையில் இதர உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தலாம்.
  • மண் அமைப்பு- கட்டிகள் இல்லாத பொல பொலப்பான மண் விதைகள் முளைப்பதற்கு சாதகமாக திகழும். இல்லையெனில் முளைப்புத் திறனில் பின்னடைவு ஏற்படும்.
  • விதைப்பு- அனுபவம் மிக்க விவசாயிகள் மணல் கலக்காமல் விதைப்பு மேற்கொள்வார்கள். தேவையில்லை போதுமான அளவு மணல் கலந்து நன்கு கலக்கி பின்பு விதை தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் விதைகள் ஒரு இன்ச் ஆழத்தைத் தாண்டி செல்லக்கூடாது அவ்வாறு சென்றால் முளைப்பு திறன் பாதிக்கும் ஏனெனில் இது மிகவும் இலகுவான விதை அமைப்பு உடையது. 
  • ஊட்டச்சத்து மேலாண்மை- மண் பரிசோதனை அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட பொதுவான உர பரிந்துரை மக்கிய தொழு உரம் 12.5 டன், 35 கிலோ தழைச்சத்து, தலா 23 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ இட வேண்டும் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பிற்கு. 
  • மண் அமைப்பு பயிரின் வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் இதர உரங்களை பயன்படுத்தலாம். 
  • களை நிர்வாகம்- 25 முதல் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும் அப்பொழுது மிக நெருக்கமாக இருக்கும் செடிகளை கலைத்து விட வேண்டும்.
  • நீர் மேலாண்மை- நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. பயிரை நன்கு வதங்க விட்டு  வதங்க விட்டு பின்னர் நீர் கொடுக்க வேண்டும்.
  • பயிரின் மொத்த வாழ் நாட்களில் சராசரியாக 5 முதல் 6 முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. 
  • காய் பிடிப்பு தருணத்தில்  சல்பேட் இடுவதால் காய்களில் எண்ணெய் இருப்புத்திறன் சற்று மேம்படும் மேலும் இது மகசூலை அதிகரிக்கும்.
  • கிராமப்புறங்களில் ''பிடித்து எட்டு எள்'' என்பார்கள். இது எதனை குறிப்பிடுகிறது என்றால் அரை அடி உயரமுடைய தண்டு பகுதியில் சராசரியாக 8 காய்கள் இருக்க வேண்டும் என்பதுதான். 
  • அறுவடை- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும் தருணம். தண்டுப் பகுதியின் அடிப்புறத்தில் உள்ள காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்து மணிகளை பிரித்தெடுக்கலாம். 
  • அறுவடையை தாமதம் செய்தால் மணிகள் வெடித்து விதைகள் சிதறும் எனவே உரிய நேரத்தில் அறுவடை செய்வது மிக இன்றியமையாது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


எள் பயிருக்கு சல்பேட் உரம் இடுவதன் நன்மைகள்

முன்னுரை:

  • சமையல் பயன்பாட்டிற்காக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இதனால் சமையல் மற்றும் இதர பயன்பாட்டிற்காக சமையலை எண்ணெய் தேவையின் அளவு அதிகரித்த வண்ணமாக உள்ளது. 
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் வழி நிறைய உள்ளது அதன் அடிப்படையில் சல்பர் (Sulphur) நுண்ணூட்ட சத்து இடுவதால் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

எள் பயிரில் சல்பர் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • மற்ற பயிர்களை விட எள் அதிக அளவு சல்பர் ஊட்டச்சத்தை விரும்பி எடுத்துக் கொள்ளக் கூடியது. ஏனெனில் இதை பயன்படுத்தி குறிப்பிட்ட சில அமினோ அமிலங்கள், பல்வேறு நொதித்தல் நிகழ்வுகள் மற்றும் புரத உற்பத்தி நிகழ்வை மேற்கொள்கிறது. 
  • எள் பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையதால் குறைந்த அளவு ஆவியாதல் நிகழ்வை மேற்கொள்வதால் குறிப்பிட்ட அளவுகிரகித்துட்டச்சத்தமட்டுமே எடுத்துக் கொள்ள இயல்கிறது.
  • எனவே தேவையான அளவு சல்பர் ஊட்டச்சத்தை நாம் கொடுக்கும் பொழுது இதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது என பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த ஊட்டச்சத்து மண் தண்ணீர் உரம் மற்றும் காற்றில் இருந்து சிறிதளவு சல்பர் ஊட்டச்சத்தை சல்பேட் வடிவத்திலும் எடுத்துக் கொள்கிறது இருப்பினும் இது போதுமானதாக இல்லை. 

  • இவ்வாறு கிடைக்க பெறும் சல்ஃபர் ஊட்டச்சத்து அமினோ அமிலங்கள் உற்பத்திக்கு போதுமானதாக இல்லாததால் புரத உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் சல்பர் போதுமானதாக இல்லை.
  • போதுமான சல்பர் ஊட்டச்சத்து இதர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து, இரும்புச்சத்து மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

சல்பர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • இலையின் வளர்ச்சி மற்றும் பரப்பளவு சற்று குறைந்து காணப்படும். 
  • இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் விளிம்புகளில் இருந்து கருக ஆரம்பிக்கும்.
  • இதனால் பூக்களின் எண்ணிக்கை மற்றும் காய்ப்பு திறன் குறையும். 
  • ஒட்டு மொத்தத்தில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • எண்ணெய் அளவு சற்று குறைந்தே இருக்கும் தரத்திலும் சற்று பின்னடைவு காணப்படும். 

சல்பர் இடுவதன் நன்மைகள்:

  • நல்ல பயிர் வளர்ச்சி 
  • இலைகளின் எண்ணிக்கை மட்டும் இலை பரப்பளவு அதிகரித்து காணப்படும். 
  • கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • விதை பையின் நீளம் அதிகமாக இருப்பதால் அதிக விதை எண்ணிக்கை  காணப்படுகிறது. 
  • ஒட்டுமொத்தமாக மகசூல் அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிரித்தெடுக்கும் திறனும் அதிகமாக காணப்படும். 
  • போதுமான அளவு சல்பர் ஊட்டச்சத்து கொடுப்பதால் நன்மை செய்யக்கூடிய அமினோ அமிலங்கள் அதிகமாக உற்பத்தி செய்து எண்ணெயில் தரம் மேம்பட்டு காணப்படும்.

சல்பர் தேவைப்படும் அளவு: 

இயற்கை அல்லது இரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ சல்பர் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தால் அதிக விளைச்சல் காண இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நவரை பட்டத்தின் சிறப்புகள்:

  • தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நெல் சாகுபடிக்கு என உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த நவரை பட்டம்.
  • பருவ மழையில் பெய்யக்கூடிய மழை நீரை சேகரித்து வைத்து அடுத்த கோடை பருவத்தில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராகுவது தான் இந்த பருவம்.
  • ஆரம்ப நிலையில் நீர் ஆதாரம் இருந்தாலும் அதிக வெப்ப காலங்களில் நீர் தேவையை குறைக்க குறைந்த வாழ்நாள் உடைய நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்பயிர்கள்
  • அதாவது பயிர்கள் பூக்கும் தருணத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஆவியாதல் மற்றும் பயிர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் தேவையை குறைத்திட ஏதுவாக குறைந்த வாழ்நாள் உடைய ரகங்களை தேர்வு செய்தல் அவசியம். 
  • எனவே இந்த பட்டத்திற்கு அதிக வறட்சி மற்றும் வெப்பநிலையை தாங்கி வளரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். 
  • பொதுவாக இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களின் அறுவடை தருணத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
  • இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள் மிதமான உயரத்தில் இருப்பதால் காற்று மற்றும் மழை காரணமாக சாயும் அபாயம் இல்லை. 

சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை: 

  • தரமான ரகம் மற்றும் விதைகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • சான்றிதழ் பெற்ற ரகத்தை வாங்குவது சிறந்தது. 
  • பெறப்பட்ட விதைகளை காலை அல்லது மாலை வெப்பநிலை சிறிது நேரம் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்தலாம். 
  • நாற்றங்காலில் அதிக உரம் இடுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விடுவதால் பயிர்கள் நடவுக்கு பின்பு செழித்து வளரும். 
  • இந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் நடுத்தர சன்ன வகையை சார்ந்ததால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் அதிக எண்ணிக்கையில் தூர் கட்டும் திறனுடையது. ஆரம்ப நிலையில் தூர்கள் வெடிப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  • இந்த ரகங்கள் அதிக மகசூலை தர வல்லது என்பதால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்து சரிவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும். 
  • குறிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

உகந்த ரகங்கள்: 

  • ADT 36, ADT 37, ASD 16, IR 64, ASD 18, ADT 42, ADT 43 MDU 5 மற்றும் பல ரகங்கள் உள்ளது.
  • தங்களது பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பிரதானமான மற்றும் அதிக சந்தை மதிப்புடைய ரகங்களை ஆராய்ந்து பின்னர் சாகுபடி செய்யவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 9 ஜனவரி, 2025

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மை...

  • இலை உண்ணும் புழு அல்லது கருந்தலைப்புழு என்று அழைக்கப்படும் இந்த புழுவானது ஒருவகை பட்டாம்பூச்சி இனத்தின் இளம் பருவம் ஆகும். புழு பருவம் மட்டுமே சேதப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிரதானமாக தென்னை பயிரையும் தென்னை மரம் சாகுபடி இல்லாத இடங்களில் பரவலாக பனை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது.
  • தென்னை மரங்களில் வருடம் முழுவதும் இதன் தாக்குதல் பரவலாக காணப்பட்டாலும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது அதிக அளவில் இனப்பெருக்கம் அடைந்து மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். 
  • பருவமழை முடியும் தருவாயில் இருந்து வசந்த காலம் மற்றும் கோடை பருவத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திகழும் சாதகமான வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம் காரணமாக அதிக அளவு இனப்பெருக்கம் அடைந்து பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். 
  • இலங்கையில் தென்னை மரங்களில் முதன் முதலில் பதிப்பை ஏற்படுத்திய இந்தக் கருந்தலைப் புழுக்கள் ஆரம்ப காலத்தில் பனை மரத்தை உண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • பெரும்பான்மையான பனை வகை மரம் மற்றும் செடிகளை மாற்றுப் பயிராக கருந்தலைப் புழுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது இதில் அழகு தாவரம் மற்றும் பாக்கு மரங்களும் உட்பட. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

தாய் அந்தப் பூச்சிகள் இரவு நேரத்தில் இலையின் அடிப்பிறத்தில் முட்டைகளை இடுகிறது இந்த முட்டைகள் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு வெடித்து புழுக்களை வெளிவிடுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கருந்தலைப்புழுக்களின் இளம் புழுக்கள் சுமார் 40 முதல் 45 நாட்கள் பல தோல் உரித்தல் நிகழ்வின் மூலம் உயிர் வாழ்வதால் அதிக அளவு சேதத்தை ஏற்படுகிறது.இதன் மொத்த வாழ்நாள் சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும்.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலையின் அடிப்பகுதியில் பச்சயத்தை உண்ணுவதால் இலைகள் எரிந்தது போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி இலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும். 
  • தாக்குதல் தீவிரமடையும் போது பாதிப்படைந்த அடி இலைகள் காய்ந்து தொங்கும்.
  • தென்னங் குலைகள் விரைப்புத்தன்மை இல்லாமல் சற்று தொங்கும். மேலும் குரும்பை உதிர்தலும் காணப்படும்.
  • இலையின் அடி புறத்தில் எச்சங்களால் ஆன கூட்டின் உட்பகுதியில் புழுக்கள் காணப்படும். 
  • தீவிர நிலை தாக்குதலின் போது இலைகள் மட்டுமின்றி இலை காம்பு, பாலை மற்றும் காய்களிலும் பாதிப்பை காண இயலும்.
  • இதனால் இலைகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மரங்களின் உணவு உற்பத்தி திறன் குறைவதால் விளைச்சலில் இழப்பு ஏற்படுகிறது.தீவிரமாக பாதிப்படைந்த மரங்களில் சுமார் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது இந்த மகசூல் இழப்பீடு சுமார் மூன்று வருடம் வரை காணப்படும்.


கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாதிப்படைந்த இரண்டு முதல் மூன்று வெளி இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை அல்லது ஆரம்ப நிலை தாக்குதலின் போது  முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணி அட்டைகளை எக்டருக்கு 3000 வீதம் கட்டலாம்.
  • ஒட்டுண்ணி அட்டைகளை மரத்தின் வெளி இலைகளில் கட்டுவது சிறந்தது.
  • முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணிகளை தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 60 முதல் 90 நாட்களுக்கு பிறகு 75-80 சதவீதம் வரை புழுக்களை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.
  • ஜனவரி முதல் மே மாதம் வரை தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு ஏதுவாக ஏக்கருக்கு ஒரு எண் வீதம் விளக்கு பொறி பயன்படுத்தலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு கரைசல்களை இலை வழியாக தெளிக்கலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்வதை தவிர்த்து இயற்கை உரங்களை அடிப்படையாக வைத்து சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது. 
  • தாய் அந்து பூச்சியினால் சுரக்கப்படும் Tricosatrine மூலக்கூறு பொருளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தியும் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
  • சிறிய மரங்களை தாக்கும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் Bt தெளிப்பதாலும் இதன் பரவுதலை குறைக்கலாம். 
  • அல்லது Chlortraniliprole / Dichlorovos/ Quinalphose/ Malathion போன்ற ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். 
  • வேர் அல்லது தண்டு வழியாக ரசாயன மருந்துகளை கொடுப்பதால் சுமார் 6 மாதங்கள் வரை அதன் எச்சங்கள் மரத்தில் இருப்பதால் முடிந்த அளவு வேர் வழியாக கொடுப்பதை தவிர்க்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



புதன், 8 ஜனவரி, 2025

தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...
  • இயற்கையில் தென்னை மரங்கள் கடல் சார்ந்த பகுதிகளில் தோன்றி, அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்றதால்  தான் இதனை யாத்திரை செய்யும் கொட்டை எனவும் கூறுவார்கள்.
  • அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது கடல் சார்ந்த பகுதியில் திகழும் மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இதன் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது என்பது தெரிய வருகிறது. 
  • தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் தன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது அதில் வேர்களும் உட்பட. இதை அடிப்படையாக வைத்து தான் இதன் வேர் அமைப்பை அழியும் வேர்கள் மற்றும் அழியா வேர்கள் என வகை படுத்துகிறோம்.
  • இந்த அழியும் மற்றும் அழியா வேர்களின் செயல்பாடுகளும், புதுப்பிக்கும் விகிதமும் (Regenerative Capacity) தான் மரத்தின் ஆரோக்கியத்தையும் காய்ப்பு திறனையும் நிர்ணயிக்கிறது. 
  • தென்னை சாகுபடி செய்யப்படும் மண் அமைப்பு (மணல் பாங்கான இடம்) மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இந்த வேர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. மணல் பாங்கான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்களின் வேர்கள் ஆழமாகவும் மிக நீண்டு காணப்படுவதால் இவை அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் காய்ப்பு திறனுடன் காணப்படுகிறது. மேலும் இது போன்ற இடத்தில் வளர்க்கப்படும் மரத்தில் வேர்களின் புதுப்பிக்கும் திறன் அதிகம் காணப்படுகிறது எனவே இவை நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மை உடையது.
  • ஆனால் அதற்கு மாறாக சாகுபடி செய்யப்படும் இடங்களில் இவை அனைத்துமே கேள்விக்குறிதான். 
  • தென்னையில் வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. வேர் வளர்ச்சி அதிகப்படுத்தக்கூடிய இயற்கை மற்றும் இரசாயன உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வரும் பொழுது வாத நோயால் பாதிக்கப்பட்ட மரங்களைக் கூட மீட்டு விடலாம் என பல ஆய்வுகள் கூறுகிறது. 
  • ஏனெனில், போதுமான அளவு புதுப்பிக்கக்கூடிய அழியும் வேர்களை உற்பத்தி செய்ய தூண்டும் பொழுது இவை அதிக அளவு நீர் மட்டும் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கடத்துகிறது இது மரங்களுக்கு தாங்கி வளரும் சக்தியை தருகிறது. 
  • Phytoplasma நோய் கிருமிகள் இந்த அழியும் வேர்களை தாக்கி அதன் செயல்பாடுகளை இழக்க வைத்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்வதை படிப்படியாக குறைத்து மரங்களை பலவீனமாக்கி பின்னர் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • பல்வேறு ஆய்வுகளில் அடிமரம் எனப்படும் தண்டுப் பகுதியில் இந்த அழியும் மற்றும் அழியா வேர்களை புதுப்பிக்க இயலும் அதனால் வாடல் நோயால் தாக்கப்பட்ட மரங்களை மீட்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருபுறம் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதும் மற்றொருபுறம் புது ஊட்டச்சத்து வேர்களை உற்பத்தி செய்யவும் கடைசியாக நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூடிய நடவடிக்கை எடுத்தால் மரங்களை மீட்க சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. 
  • இது ஒருபுறம் இருக்க, வாஸ்குலார் கற்றையில் மட்டுமே வாழும் திறன் படைத்த இந்த Phytoplasma நோய் காரணி அந்தப் பகுதியை உண்டு வாழும் பூச்சியினால் மட்டுமே பரப்பப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வெகுவாக பரவுதலை கட்டுப்படுத்தலாம். 
  • வாடல் நோயால் தாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படாத மரங்களின் நீர் உறிஞ்சித் திறன் மற்றும் ஊட்டச்சத்து அளவை கணக்கிடும் பொழுது பாதிக்கப்படாத செடிகள் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அடிப்படையில் இருப்பதை காண முடிகிறது. எனவே பயிர்களின் ஆரோக்கியத்தன்மை மற்றும் இந்த ஊட்டச்சத்துக்கள் நோயை தாங்கி வளரும் தன்மையை மரத்திற்கு கொடுக்கிறது. 
  • நோய் காரணிகளின் இருப்பிடமாக திகழும் களைகள் குறிப்பாக ஒருவித்திலை களைகள் அதிக அளவு பைட்டோபிளாஸ்மா நோய்க் கிருமிக்கு அடைக்கலமாக திகழ்கிறது. எனவே தென்னந்தோப்பில் களை மேலாண்மை மிக இன்றியமையாத அகத்தி திகழ்கிறது.
  • அந்தந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகங்கள் வாடல் நோய் காரணியை தாங்கி வளரும் தன்மை உடையதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 6 ஜனவரி, 2025

நெல் பயிரில் பாக்டீரியா இலை கோடு நோய் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தும் முறை

  • நெல் சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்தில் குறிப்பிட்ட சில நோய் அல்லது பூச்சிகள் பிரதானமாக காணப்படும். பருவத்திற்கு ஏற்ப என்ன நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படலாம் என்பதை அறிந்திருந்தால் சாகுபடி செய்வது மிக எளிது.
  • நெல் சாகுபடியில் ஒரே விதமான அறிகுறிகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு காணப்படுவது நாம் அறிந்ததே எனவே அதன் அறிகுறிகளை வேறுபடுத்த தெரிந்து கொண்டால் சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.

பாக்டீரியா இலை கோடு நோய்:

  • இந்த நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக பாக்டீரியா இலை கருகல் நோய்
  • மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இலையின் நுனிப்பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் வெளிர் பழுப்பு நிற மாற்றம் காணப்படுவது பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி ஆகும்.
  • அதேபோன்று இலையின் விளிம்புகள் தெளிவான நிறம் மாற்றம் அதாவது பச்சை முதல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அதனை பொட்டாசியம் சத்து குறைபாடு எனலாம்.
  • இதேபோன்று அறிகுறிகளை தோற்று விக்கக் கூடியது தான் இந்த இலை கோடு நோய்.

நோயின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலையில் வெளிர் பச்சை நிற நீள் வட்டப் புள்ளிகள் சிறிதாக இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் அளவில் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படும். தற்போது பார்க்கும் பொழுது சிறு சிறு கோடுகள் போன்று காணப்படும்.
  • படிப்படியாக இந்த கோடுகள் வெளிர் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் தீவிரமடையும் பொழுது பழுப்பு நிறத்திலும் காணப்படும். 
  • அதிகாலை வேளையில் இந்த நீள் வட்ட புள்ளிகளில் இருந்து பாக்டீரியாக்கள் திரவம் சுரக்கப்படும். 
  • பின்பு நிலை முழுவதும் கருகும் அபாயம் ஏற்படும் இதனால் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் தொய்வு ஏற்படும்.

சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான அல்லது அதிக வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நோயால் தாக்கப்பட்ட வயலில் சாகுபடி செய்தல்
  • அதிக மழை, பனிப்பொழிவு, நீர் பாய்ச்சுதல் மற்றும் அதிக காற்று வீசும் தருணம்

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பருவத்திற்கு ஏற்றவாறு தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ரகத்திற்கு ஏற்றவாறு உரிய பயிர் இடைவெளியுடன் நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க பெறும். 
  • சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதனை விதை  நேர்த்தி  பயன்படுத்துவது மிக முக்கியம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து விதை நெல்லை தேர்வு செய்ய வேண்டும். 
  • விதை நெல்லை சுடு தண்ணீர் பயன்படுத்தி நேர்த்தி செய்தும் விதைக்கலாம். 
  • வயலில் அதிக சேர் இருக்க கூடாது அதே சமயம் அதிக அளவு தண்ணீரும் விட கூடாது எனவே காய்ச்சலும் பாய்ச்சலும் நீர் விடுவது சிறந்தது. 
  • ஏற்கனவே நெல் சாகுபடி செய்த வயதாக இருந்தால் முந்தைய பயிர்களின் கழிவு நன்கு மக்கும் வரை காத்திருந்து பயிர் செய்வது நல்லது.
  • கோடை பருவத்தில் வயலை ஆழமாக உளவு செய்து நோய் தாக்கும் கிருமிகளை அழிக்க முயற்சி செய்யலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
  • அதிக அளவு உரம் இதுவரை தவிர்க்கவும் இது மேலும் நோய் பரவுதல் ஊக்குவிக்கும்.
  • Xanthomonas வகையை சேர்ந்த இந்த பாக்டீரியா எளிதில் கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • நோய் தாக்குதலை தொடர்ச்சியாக ஆராய்ந்து ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கலாம். 

  • சாகுபடி செலவை குறைக்க Bacillus subtilis மற்றும் Pseudomonas கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதால் நோயை கட்டுக்குள் வைக்கலாம். அல்லது கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை இலை வழியாக தெளிக்கலாம்.
  • Copper oxychloride- 50% - 2-2.5 கி/ 10 liter தண்ணீருக்கு
  • Coper hydroxide-  10கி/ 10 liter தண்ணீருக்கு
  • Streptomycin sulphate + Tetracycline Hydrochloride 90:10 SP- 20 கி/10 liter தண்ணீருக்கு

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

செவ்வாய், 24 டிசம்பர், 2024

மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை

 இலை உருக்குலைவு (Malformation) நோய்:

  • மா பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படக்கூடிய ஒரு பிரதான நோயாக இந்த உருக்குலைவு நோய் நிகழ்கிறது.
  • பயிர்கள் நாற்றுகளில் அல்லது நிலத்தில் நட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் இதனை இலை உருக்குலைவு நோய் என்பார்கள். இதனால் பயிர் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு பயிர்கள் இறக்க நேரிடலாம்.
  • பூத்தலின் போது இருந்ததில் ஏற்படும் தருணத்தில் இதழை பூக்கள் உருக்குலைவு நோய் என்பவர்கள் இதனால் மகசூல் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை கூட இழப்பீடு ஏற்படலாம்.
  • இந்த நோய் முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை.

நோய் தொற்றுக்கான காரணங்கள்:

  • இது ஒரு பூஞ்சை தொற்றால் ஏற்படும் நோய் என்று கருதப்பட்டாலும் பல்வேறு இதர காரணிகளும் இந்த உருக்குலைவு நோய் தாக்குதலுக்கு சாதகமாக திகழ்கிறது.
  • மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மண் ஈரப்பதம், நிலையற்ற மழை பொழிவு, ஆரம்ப கால கட்டத்தில் மொட்டுகளை தாக்கும்  பேன், பாதிப்படைந்த பயிர்களில் இருந்து ஒட்டு கட்டுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்குகளில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த நோய் உருவாவதற்கும் பரவுவதற்கும் உதவி புரிகிறது. 

இலை உருக்குலைவின் அறிஅறிகுறிகள்:


1.இளம் கன்றுகளில் தளிர்களின் வளர்ச்சி குன்றி செதில் போன்ற அமைப்புடைய இலைகளை குருத்துப் பகுதியில் மிக நெருங்கிய அமைப்புடன் உருவாக்குகிறது.

2.இதனால் கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு நாளடைவில் இறக்க நேரிடலாம்.

3.மிகக் குறைந்த இடைவெளியில் அதிக தளிர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் இதனை சில நேரங்களில் தலைக்கொத்து நோய் எனவும் கூறுவார்கள்.

4.சில நேரங்களில் நுனிப்பகுதி தடித்து காணப்படலாம். 

5.இளம் கன்றுகளில்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருக்குலை அறிகுறி மீண்டும் காணப்படலாம். 

பூ உருக்குலைவின் அறிகுறிகள்:

1.பூக்கள் மிக நெருக்கமாகவும் சற்று பெரிதாகவும் பூங்கொத்துகளில்  காணப்படும்.

2.நாளடைவில் பூங்கொத்து கருப்பு நிறமாக மாறி உதிரும். 

3.இதனால் பூ உதிர்வு அல்லது பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். இதன் காரணமாக சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரம்ப காலத்தில் அதாவது நாற்றுகள் அல்லது நிலத்தில் நடவு செய்த சில மாதங்களில் அறிகுறிகள் தென்பட்டால் பாதித்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். 
  • இந்தச் செடிகளை கவாத்து செய்து மீள முயற்சிப்பது தவறான அணுகுமுறை. வளர்ந்த மரத்தில் இலை உருக்குலைவு நோய் தென்பட்டால் பாதித்த பகுதியை மட்டும் கவாத்து செய்து பராமரிக்கலாம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் வாஸ்குலார் திசுக்களை இந்த பூஞ்சைகள் சென்றடைவதால் ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளை தெளிக்க வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட இலை அல்லது பூங் கொத்துகளை அகற்றிவிட்டு இயற்கை அல்லது இரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து ஒட்டு கட்டுதலுக்கு வேர் அல்லது தாய் செடிகளை தேர்வு செய்யக்கூடாது.
  • வெளியில் இருந்து வேர் செடிகளை வாங்கும் பொழுது நேரடியாக பண்ணையை ஆய்வு செய்து தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பூக்கள் நன்கு பூக்க ஏதுவாக NAA 20ppm தெளிக்கலாம். முன்னெச்சரிக்கைக்காக இயற்கை அல்லது இரசாயன தெளிப்புகளும் மேற்கொள்ளலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

திங்கள், 23 டிசம்பர், 2024

நத்தைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

முன்னுரை:

  • மழைக்காலங்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றுதான். 
  • சாகுபடி செய்யும் வயல்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன தொடர்ச்சியான மண் ஈரப்பதம், பயிர்களின் இலைப் பகுதியில் காணப்படும் ஈரப்பதம், வயலில் அதிகம் குப்பை காணப்படுதல், வயலில் நீர் தேங்கி இருத்தல், மக்காத இலை மற்றும் சாணம் மண்ணில் காணப்படுதல் என பல காரணங்களை கூறலாம்.
  • மக்காத நிலையில் காணப்படும் பொருட்களை உண்ணுவதற்காக நத்தைகள் அதிகம் காணப்பட்டு மிக வேகமாக பெருக்கம் அடைந்து நாளடைவில் இலை மற்றும் பூக்களையும் பாதித்து சேதப்படுத்துகிறது.
  • நத்தைகள் மிக நீண்ட நாட்கள் வாழும் திறன் உடையதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் இல்லை பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • நத்தைகள் பொதுவாக மாலை நேரத்தில் அதிகம் செயல்படுவதால் மாலை வேளையில் கையால் சேகரித்து அழிப்பது சிறந்த முறையாக கருதப்படுகிறது. 
  • நன்கு புளித்த மோர் அல்லது தயிரை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதை நிலத்தில் ஆங்காங்கே தரை மட்டத்திற்கு மாலை நேரத்தில் புதைத்து வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இதில் இருக்கும் நத்தைகளை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். 
  • அதேபோன்று ஆல்கஹால் பயன்படுத்தியும் கவர்ச்சி பொறி தயார் செய்து நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • வயலில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 
  • வயலில் இருக்கும் குப்பைகளை  அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரித்தால் இதன் நடமாட்டம் படிப்படியாக குறையும். 
  • பறவைகள், எலிகள் கோழி போன்றவைகள் நத்தைகளை சேதப்படுத்தி இறக்கச் செய்வதால் இந்த வழிமுறையும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும். 
  • போதுமான காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை செடிகளுக்கு கிடைக்க பெற வழிவகை செய்யலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை கரைசல் தயார் செய்து தெளிக்கலாம் அல்லது 3G கரைசலும் தெளிக்கலாம் இவை நத்தைகளை விரட்ட உதவி புரியும். 
  • காப்பர் சல்பேட் போதுமான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் மணல் கலந்து வயலை சுற்றி இடுவதால் நத்தைகள் உடலில் காப்பர் வினைபுரிந்து அதனை விரட்ட உதவி புரியும். 
  • வயதில் கல் உப்பு அங்கங்கே வைத்தல் அல்லது பயிர்களை சுத்தி வைப்பதன் மூலம் நத்தைகளை விரட்ட இயலும். 
  • வயலில் பயிர் இல்லாத இடத்தில் அதிக முள் காணப்படும் பயிரின் கிளைகளை உடைத்து ஒரு சில இடங்களில் வைப்பதன் மூலம் நத்தைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதை தடுக்கவும் ஒரு சில நத்தைகள் இறக்கவும் இது உதவி புரியும்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி பொறிகள் தயார் செய்து வைப்பதன் மூலம் இதனை உண்டு நத்தைகள் இறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • அழுகிய பப்பாளி பழத்தை சிறிய கிண்ணத்தில் வைத்து  நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இதுபோன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. 
  • இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி டைக்ளோராவாஸ் எனும் மருந்தை தெளிக்கலாம்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Snaikill குருணையை வாங்கி கைப்பிடி அளவு வயலில் ஒரு சில இடங்களில் வைப்பதால் இதனை உண்டு மிக விரைவாக நத்தைகள் இறந்துவிடும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் தண்ணீர் வசதி இருக்கும் ஒரு சில  விவசாயிகள் வருகிற தை பட்டத்தில்(ஜனவரி - பிப்ரவரி) மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறு சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்வதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ரகம் தேர்வு செய்தல்: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு (ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர்) உட்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அதாவது விதை சான்றிதழில் துறையால் எந்த பருவத்திற்கு இந்த ரகம் சாகுபடிக்கு உகந்தது என கூறியிருப்பார்கள்.  எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரகத்தை தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.
  • சரியான பட்டம் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தால் அந்த ரகத்தை வாங்கி நாம் விதைப்பு மேற்கொண்டு ஏதேனும் பின் விளைவுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த ஒரு பதிலும் தர மாட்டார்கள். 
  • நாம் தேர்வு செய்துள்ள ரகத்தின் விதையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கடையில் மட்டும் தான் கண்டிப்பாக வாங்க வேண்டும். வாங்கும் போது ரகத்தின் பெயர், காலாவதி நாள், முளைப்பு திறன் எவ்வாறு உள்ளது, எந்த பருவத்திற்கு ஏற்றது என பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு வாங்க வேண்டும்.

முளைப்பு திறன் கண்டறிதல்:

வாங்கிய விதையை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக சிறிய பிளாஸ்டிக் தட்டில் மண்ணை எடுத்துக்கொண்டு சுமார் பத்து விதைகளை முளைப்புக்கு ஆட்படுத்த வேண்டும். முளைப்பு திறன் போதுமான அளவு இருந்தால் மட்டுமே வயலில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மேற்கொள்ளுதல்:

அதிக வெப்பநிலை நிலவுவதால் விதைகளை விதைத்து விட்டு பின்னர் நீர் விடுவதை தவிர்க்கவும். இன்று நீர் பாய்ச்சி விட்டு நாளை விதைப்பு மேற்கொள்வதால் அதிக மண் சூட்டினால் முளைப்பு திறனில் பின்னடைவு ஏற்படாமல் நன்றாக இருக்கும். மேலும் வயலில் அநேக விதைகள் முளைப்பு வரும் வரை போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி:

வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விடுவதால் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும்.

உரம் இடுதல்:

அதிக அளவில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பயிர்கள் அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி தாக்குதலை சமாளித்து வளரும் தன்மை பெறும். உதாரணத்திற்கு மண்புழு உரம், கடல்பாசி உரம், உயிர் உரங்கள், தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், இயற்கை தயாரிப்புகள் (பஞ்சகாவியம், மீன் அமிலம் மற்றும் பல).

நீர் மேலாண்மை:

  • கண்டிப்பாக போதுமான அளவு நீர் விட வேண்டும் ஏனெனில் நாம் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் எல்லாம் வீரிய ஒட்டு ரகம். எனவே அவற்றுக்கு அதிக அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். போதுமான அளவு நீர் கிடைக்கப் பெறவில்லை எனில் ஏற்படும் அழுத்தத்தால் செடிகளில் பக்க கிளைகள் சில நேரங்களில் உருவாகும். இது மட்டுமின்றி ஒரே செடியில் மூன்று முதல் நான்கு கதிர்கள் வெவ்வேறு கணுக்களில் பகுதிகளில் உருவாகும். சில நேரங்களில் மட்டுமே இவை அனைத்தும் மணிகள் பிடிக்கும். ஏனெனில் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • விதைத்த 50 முதல் 75 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் மிக முக்கிய தருணம் அந்த நேரத்தில் எந்தவித தொய்வு இன்றி போதுமான அளவு நீர் கொடுக்க வேண்டும்.
  • செடிகள் பூக்கும் தருணத்தில் குறைந்தால் அளவிலாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும் இல்லையெனில் மணி பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு மகசூல் குறையும் வாய்ப்புகள் உள்ளது. ரகத்தை பொறுத்து 55 முதல் 70 நாட்கள் வரை பூக்கும் தருணம் திகழும்.
  • பூக்கள் வெளிவர தொடங்கியது முதல் 10 நாட்கள் மகரந்த சேர்க்கை நடைபெறும் அப்போது கண்டிப்பாக மழை தேவைப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • ஜனவரி மாதம் இறுதி முதலே அதிக வெப்பநிலை திகழ வாய்ப்புள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் படை புழு தாக்குதல் அதிகம் தென்படும். அதை அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் செடிகளின் குருத்து பகுதியை முழுவதும் சேதப்படுத்தி விடும்.
  • அறுவடை சமயத்தில் பருவமழை இல்லாதவாறு விதைப்பு செய்ய வேண்டும். இது போன்ற பல சவால்கள் தைபட்டம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இவற்றைக் கருத்தில் கொண்ட சாகுபடி மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



வெள்ளி, 13 டிசம்பர், 2024

தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

 

நீர் மேலாண்மை

        தென்னை சாகுபடியில் நீர் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தரவும், மரங்கள் திடகாத்திரமாக இருக்கவும், வெப்பத்தை சமநிலை செய்திடவும் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் தேவையான நீரை கொடுத்து வருவதன் மூலம் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை காண இயலும்.  தமிழ்நாட்டில் பொதுவாக வெள்ள நீர் பாசனம், வட்டப்பாத்தி மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது.

வெள்ளநீர் பாசனமுறை

  • இம்முறை நீர் பாசனத்தால் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் காணப்படுவதால், வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லப்படுவதால் பயிர்களுக்கு கிடைக்காமல் சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிக தண்ணீர் விடுவதால் ஊட்டச்சத்து வேர்கள் அழுக நேரிடலாம்.
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக  அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தொற்று ஏற்படலாம்.
  • அதிக தண்ணீர் கொடுப்பதன் காரணமாக இளநீரின் சுவை சற்று குறைந்தும்  கொப்பரைத் தேங்காயின் எண்ணெய் அளவு குறைந்தும் காணப்படலாம்.

வட்டப்பாத்தி முறை

          மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆரத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் நீர் விடப்படுகிறது.  இம்முறையில் சுமார் 400 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது சுமார் 7 நாட்கள் வரை போதுமானதாகும்.  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மணற்பாங்கான மண்ணில் நீர் குறைவாகவும், குறைவான இடைவெளியிலும், களிமண் பூமியில் அதிக இடைவெளியிலும் நீர் பாய்ச்சலாம்.  வட்டப்பாத்தி முறையானது வெள்ளநீர் பாசனமுறையை விட சிறந்தது என்றாலும், உரங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரினால் அடித்து செல்லப்படலாம்.  மேலும், மண் மற்றும் நீர் மூலமாக பரவும் தீமை செய்யும் பூஞ்சைகள் இம்முறையில் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சொட்டு நீர் பாசனமுறை

        சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் விடுவதால் அதிக அளவு தண்ணீரை சேமிப்பதுடன் வறட்சி காலத்திலும் நல்ல பயன்பெறலாம்.  ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றக்கூடிய அமைப்புடைய குழாய்களை பயன்படுத்தி தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 40 முதல் 60 லிட்டர் வரை தண்ணீர் விட வேண்டும்.  கோடைப்பருவத்தில் இன்னும் சற்று அதிகமான நீர் தேவைப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் வட்டப்பாத்தியின் 35 முதல் 40 சதவிகித பரப்பளவை மட்டுமே நனைப்பதால் வேர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.  

நீரியில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனம் வழியாக பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 40 சதவிகிதம் வரை குறைத்து பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 11 டிசம்பர், 2024

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
  • தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.

  • அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
  • பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
  • காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை,  கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
  • மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
  • நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
  • சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
  • பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
  • தீவன பயிர்கள்
  • கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா,  மற்றும் இதர

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும். 

  • கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம். 
  • எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 10 டிசம்பர், 2024

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை  மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். 

  • பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல். 
  • அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
  • மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது. 
  • ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன்  எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
  • காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். 
  • பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
  • காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
  • இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
  • காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம். 
  • காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
  • அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு. 
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
  • அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது  இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம். 
  • சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு. 
  • இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை

  • பாக்கு சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முதலாவதாக திகழ்வது பழ அழுகல் நோய் அதனை தொடர்ந்து இந்த அடித்தண்டு அல்லது வேர் அழுகல் நோய் திகழ்கிறது. 
  • இந்த நோய் முதன்முதலாக பாக்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. பின்னர் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டது. இதன் தாக்குதலால் சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் பாக்கு மரங்கள் இறந்து விடுவதாகவும் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 25-30 சதவீதம் மரங்களைக் கூட இழக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


                   

  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சைகள் வேர்ப்பகுதியை தாக்கி அதனை சிதைத்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை தடை செய்வதால் அறிகுறிகள் காணப்படுகிறது. 
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்  ஒன்று தரைமட்டத்திற்கு மேல் மற்றும் தரைமட்டத்திற்கு கீழ் உள்ள அறிகுறிகள் என்ற முறையில்.
  • வேர் அமைப்பு பாதிக்கப்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படும், இதனால் வேர்கள் வளர்ச்சி இன்றி காய்ந்து அழுக நேரிடலாம் சில நேரங்களில் வேர்களில் துர்நாற்றம் காணப்படும்.
  • மரத்தின் அடி இலை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் முறிந்து தொங்கும்.
  • நாளடைவில் இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளில் காணப்படலாம். 
  • மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் காய்கள் நோய் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே உதிர ஆரம்பித்து விடும் இதை கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் பரவலாக வெளிர் பழுப்பு நிற மாற்றத்தை காண இயலும் இதிலிருந்து வெளியிடப்படும் திரவம் நாளடைவில் பிசின் போன்று காட்சியளிக்கும். 
  • தாக்குதல் தீவிரமடையும் பொழுது தொண்டை பகுதியில் ஒரு சில இலைகள் மட்டுமே காணப்படும் பலவீனமாக இருக்கக்கூடிய மரங்கள் முறிந்து கீழே விழுகலாம். 
  • தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பூஞ்சைகளின் வளர்ச்சி காளான் போன்று காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்க்கும் பொழுது அதிலும் நிறமாற்றம் காணும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னையில் பாக்கு ஊடு பயிராக சாகுபடி செய்யும் போது இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 
  • அடர் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • வளமான மண் அமைப்புடைய நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சைகள் மண்ணில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து தாக்குதலை ஏற்படுத்தும் மேலும் தாக்குதலின் அறிகுறிகள் பின் நாளில் மட்டுமே தெரிவதால் பயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது சற்று கடினம். 
  • பாதிப்படைந்த மரத்தை தனிமைப்படுத்த வேண்டும் அதாவது மரத்தைச் சுற்றி 30 சென்டிமீட்டர் அகலத்தில் ஆழமான குழி எடுத்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் மற்ற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
  • தீவிரமாக பாதித்த மரங்களை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • பயிர் கழிவுகள் எதுவும் இல்லாத அளவிற்கு நிலத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக உழவு செய்தல், ஊடு பயிர் செய்தல் மண்ணை கிளறுதல் போன்ற கிளறுதல் பூஞ்சைகள் எளிதில் பரவலாம் எனவே இதை தவிர்க்கவும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியம் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும். 
  • பருவ மழைக்கு முன்னும் பின்னும் Trichoderma harzianum மற்றும் Pesudomonas florescence வேர்ப்பகுதிகளுக்கு கொடுப்பதால் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடை செய்ய உதவி புரியும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் தகுந்த நேரத்தில் கொடுக்கலாம்.
    • Carbendazim + Mancozeb
    • Copper Oxychloride
    • Tridemorph
    • Hexaconazole
    • Root feeding- Propiconazole/ Hexaconazole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts