google-site-verification: googled5cb964f606e7b2f.html மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 24 டிசம்பர், 2024

மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை

 இலை உருக்குலைவு (Malformation) நோய்:

  • மா பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படக்கூடிய ஒரு பிரதான நோயாக இந்த உருக்குலைவு நோய் நிகழ்கிறது.
  • பயிர்கள் நாற்றுகளில் அல்லது நிலத்தில் நட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் இதனை இலை உருக்குலைவு நோய் என்பார்கள். இதனால் பயிர் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு பயிர்கள் இறக்க நேரிடலாம்.
  • பூத்தலின் போது இருந்ததில் ஏற்படும் தருணத்தில் இதழை பூக்கள் உருக்குலைவு நோய் என்பவர்கள் இதனால் மகசூல் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை கூட இழப்பீடு ஏற்படலாம்.
  • இந்த நோய் முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை.

நோய் தொற்றுக்கான காரணங்கள்:

  • இது ஒரு பூஞ்சை தொற்றால் ஏற்படும் நோய் என்று கருதப்பட்டாலும் பல்வேறு இதர காரணிகளும் இந்த உருக்குலைவு நோய் தாக்குதலுக்கு சாதகமாக திகழ்கிறது.
  • மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மண் ஈரப்பதம், நிலையற்ற மழை பொழிவு, ஆரம்ப கால கட்டத்தில் மொட்டுகளை தாக்கும்  பேன், பாதிப்படைந்த பயிர்களில் இருந்து ஒட்டு கட்டுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்குகளில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த நோய் உருவாவதற்கும் பரவுவதற்கும் உதவி புரிகிறது. 

இலை உருக்குலைவின் அறிஅறிகுறிகள்:


1.இளம் கன்றுகளில் தளிர்களின் வளர்ச்சி குன்றி செதில் போன்ற அமைப்புடைய இலைகளை குருத்துப் பகுதியில் மிக நெருங்கிய அமைப்புடன் உருவாக்குகிறது.

2.இதனால் கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு நாளடைவில் இறக்க நேரிடலாம்.

3.மிகக் குறைந்த இடைவெளியில் அதிக தளிர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் இதனை சில நேரங்களில் தலைக்கொத்து நோய் எனவும் கூறுவார்கள்.

4.சில நேரங்களில் நுனிப்பகுதி தடித்து காணப்படலாம். 

5.இளம் கன்றுகளில்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருக்குலை அறிகுறி மீண்டும் காணப்படலாம். 

பூ உருக்குலைவின் அறிகுறிகள்:

1.பூக்கள் மிக நெருக்கமாகவும் சற்று பெரிதாகவும் பூங்கொத்துகளில்  காணப்படும்.

2.நாளடைவில் பூங்கொத்து கருப்பு நிறமாக மாறி உதிரும். 

3.இதனால் பூ உதிர்வு அல்லது பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். இதன் காரணமாக சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரம்ப காலத்தில் அதாவது நாற்றுகள் அல்லது நிலத்தில் நடவு செய்த சில மாதங்களில் அறிகுறிகள் தென்பட்டால் பாதித்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். 
  • இந்தச் செடிகளை கவாத்து செய்து மீள முயற்சிப்பது தவறான அணுகுமுறை. வளர்ந்த மரத்தில் இலை உருக்குலைவு நோய் தென்பட்டால் பாதித்த பகுதியை மட்டும் கவாத்து செய்து பராமரிக்கலாம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் வாஸ்குலார் திசுக்களை இந்த பூஞ்சைகள் சென்றடைவதால் ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளை தெளிக்க வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட இலை அல்லது பூங் கொத்துகளை அகற்றிவிட்டு இயற்கை அல்லது இரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து ஒட்டு கட்டுதலுக்கு வேர் அல்லது தாய் செடிகளை தேர்வு செய்யக்கூடாது.
  • வெளியில் இருந்து வேர் செடிகளை வாங்கும் பொழுது நேரடியாக பண்ணையை ஆய்வு செய்து தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பூக்கள் நன்கு பூக்க ஏதுவாக NAA 20ppm தெளிக்கலாம். முன்னெச்சரிக்கைக்காக இயற்கை அல்லது இரசாயன தெளிப்புகளும் மேற்கொள்ளலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts