google-site-verification: googled5cb964f606e7b2f.html நத்தைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 23 டிசம்பர், 2024

நத்தைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

முன்னுரை:

  • மழைக்காலங்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றுதான். 
  • சாகுபடி செய்யும் வயல்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன தொடர்ச்சியான மண் ஈரப்பதம், பயிர்களின் இலைப் பகுதியில் காணப்படும் ஈரப்பதம், வயலில் அதிகம் குப்பை காணப்படுதல், வயலில் நீர் தேங்கி இருத்தல், மக்காத இலை மற்றும் சாணம் மண்ணில் காணப்படுதல் என பல காரணங்களை கூறலாம்.
  • மக்காத நிலையில் காணப்படும் பொருட்களை உண்ணுவதற்காக நத்தைகள் அதிகம் காணப்பட்டு மிக வேகமாக பெருக்கம் அடைந்து நாளடைவில் இலை மற்றும் பூக்களையும் பாதித்து சேதப்படுத்துகிறது.
  • நத்தைகள் மிக நீண்ட நாட்கள் வாழும் திறன் உடையதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் இல்லை பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • நத்தைகள் பொதுவாக மாலை நேரத்தில் அதிகம் செயல்படுவதால் மாலை வேளையில் கையால் சேகரித்து அழிப்பது சிறந்த முறையாக கருதப்படுகிறது. 
  • நன்கு புளித்த மோர் அல்லது தயிரை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதை நிலத்தில் ஆங்காங்கே தரை மட்டத்திற்கு மாலை நேரத்தில் புதைத்து வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இதில் இருக்கும் நத்தைகளை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். 
  • அதேபோன்று ஆல்கஹால் பயன்படுத்தியும் கவர்ச்சி பொறி தயார் செய்து நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • வயலில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 
  • வயலில் இருக்கும் குப்பைகளை  அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரித்தால் இதன் நடமாட்டம் படிப்படியாக குறையும். 
  • பறவைகள், எலிகள் கோழி போன்றவைகள் நத்தைகளை சேதப்படுத்தி இறக்கச் செய்வதால் இந்த வழிமுறையும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும். 
  • போதுமான காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை செடிகளுக்கு கிடைக்க பெற வழிவகை செய்யலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை கரைசல் தயார் செய்து தெளிக்கலாம் அல்லது 3G கரைசலும் தெளிக்கலாம் இவை நத்தைகளை விரட்ட உதவி புரியும். 
  • காப்பர் சல்பேட் போதுமான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் மணல் கலந்து வயலை சுற்றி இடுவதால் நத்தைகள் உடலில் காப்பர் வினைபுரிந்து அதனை விரட்ட உதவி புரியும். 
  • வயதில் கல் உப்பு அங்கங்கே வைத்தல் அல்லது பயிர்களை சுத்தி வைப்பதன் மூலம் நத்தைகளை விரட்ட இயலும். 
  • வயலில் பயிர் இல்லாத இடத்தில் அதிக முள் காணப்படும் பயிரின் கிளைகளை உடைத்து ஒரு சில இடங்களில் வைப்பதன் மூலம் நத்தைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதை தடுக்கவும் ஒரு சில நத்தைகள் இறக்கவும் இது உதவி புரியும்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி பொறிகள் தயார் செய்து வைப்பதன் மூலம் இதனை உண்டு நத்தைகள் இறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • அழுகிய பப்பாளி பழத்தை சிறிய கிண்ணத்தில் வைத்து  நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இதுபோன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. 
  • இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி டைக்ளோராவாஸ் எனும் மருந்தை தெளிக்கலாம்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Snaikill குருணையை வாங்கி கைப்பிடி அளவு வயலில் ஒரு சில இடங்களில் வைப்பதால் இதனை உண்டு மிக விரைவாக நத்தைகள் இறந்துவிடும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts