google-site-verification: googled5cb964f606e7b2f.html பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை

  • பாக்கு சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முதலாவதாக திகழ்வது பழ அழுகல் நோய் அதனை தொடர்ந்து இந்த அடித்தண்டு அல்லது வேர் அழுகல் நோய் திகழ்கிறது. 
  • இந்த நோய் முதன்முதலாக பாக்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. பின்னர் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டது. இதன் தாக்குதலால் சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் பாக்கு மரங்கள் இறந்து விடுவதாகவும் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 25-30 சதவீதம் மரங்களைக் கூட இழக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


                   

  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சைகள் வேர்ப்பகுதியை தாக்கி அதனை சிதைத்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை தடை செய்வதால் அறிகுறிகள் காணப்படுகிறது. 
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்  ஒன்று தரைமட்டத்திற்கு மேல் மற்றும் தரைமட்டத்திற்கு கீழ் உள்ள அறிகுறிகள் என்ற முறையில்.
  • வேர் அமைப்பு பாதிக்கப்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படும், இதனால் வேர்கள் வளர்ச்சி இன்றி காய்ந்து அழுக நேரிடலாம் சில நேரங்களில் வேர்களில் துர்நாற்றம் காணப்படும்.
  • மரத்தின் அடி இலை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் முறிந்து தொங்கும்.
  • நாளடைவில் இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளில் காணப்படலாம். 
  • மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் காய்கள் நோய் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே உதிர ஆரம்பித்து விடும் இதை கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் பரவலாக வெளிர் பழுப்பு நிற மாற்றத்தை காண இயலும் இதிலிருந்து வெளியிடப்படும் திரவம் நாளடைவில் பிசின் போன்று காட்சியளிக்கும். 
  • தாக்குதல் தீவிரமடையும் பொழுது தொண்டை பகுதியில் ஒரு சில இலைகள் மட்டுமே காணப்படும் பலவீனமாக இருக்கக்கூடிய மரங்கள் முறிந்து கீழே விழுகலாம். 
  • தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பூஞ்சைகளின் வளர்ச்சி காளான் போன்று காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்க்கும் பொழுது அதிலும் நிறமாற்றம் காணும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னையில் பாக்கு ஊடு பயிராக சாகுபடி செய்யும் போது இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 
  • அடர் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • வளமான மண் அமைப்புடைய நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சைகள் மண்ணில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து தாக்குதலை ஏற்படுத்தும் மேலும் தாக்குதலின் அறிகுறிகள் பின் நாளில் மட்டுமே தெரிவதால் பயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது சற்று கடினம். 
  • பாதிப்படைந்த மரத்தை தனிமைப்படுத்த வேண்டும் அதாவது மரத்தைச் சுற்றி 30 சென்டிமீட்டர் அகலத்தில் ஆழமான குழி எடுத்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் மற்ற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
  • தீவிரமாக பாதித்த மரங்களை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • பயிர் கழிவுகள் எதுவும் இல்லாத அளவிற்கு நிலத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக உழவு செய்தல், ஊடு பயிர் செய்தல் மண்ணை கிளறுதல் போன்ற கிளறுதல் பூஞ்சைகள் எளிதில் பரவலாம் எனவே இதை தவிர்க்கவும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியம் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும். 
  • பருவ மழைக்கு முன்னும் பின்னும் Trichoderma harzianum மற்றும் Pesudomonas florescence வேர்ப்பகுதிகளுக்கு கொடுப்பதால் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடை செய்ய உதவி புரியும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் தகுந்த நேரத்தில் கொடுக்கலாம்.
    • Carbendazim + Mancozeb
    • Copper Oxychloride
    • Tridemorph
    • Hexaconazole
    • Root feeding- Propiconazole/ Hexaconazole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts