google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 29 நவம்பர், 2024

சேப்பங்கிழங்கில் Phytophthora இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை அமையும் பொழுது இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படும். Phytophthora எனப்படும் பூஞ்சையினால் ஏற்படும் எந்த இலைக் கருகல் நோய் கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
  • மண் மற்றும் பாதிப்படைந்த கிழங்குகளில் மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் திறன் படைத்த இந்த பூஞ்சைகள், தண்ணீர் மண் கிழங்கு மற்றும் காற்றினால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 



  • பயிரின் நுனி அல்லது நடுப்பகுதியில் திகழும் இலையின் மேற்பரப்பில் அடர் பழுப்பு முதல் ஆலிவ் பச்சை நிறத்தில் புள்ளிகள் அல்லது புண்கள் காணப்படும். 
  • இந்த புள்ளிகளை சுற்றி வெளிர் மஞ்சள் நிறைய வளையம் காணப்படும். 
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இதிலிருந்து மஞ்சள் அல்லது வெளிர் சிகப்பு நிற திரவம் வெளியேறுவதை காண இயலும். 
  • சில நேரங்களில் இந்த புண்களை சுற்றி வெள்ளை நிற பூஞ்சைகள் காண இயலும். இந்த புண்களின் நடுப்பகுதி சிதைந்து உதிர்வதை காணலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிர்களில் 50 சதவீதம் இலைப்பரப்பை நாம் இலக்க நேரிடும். 
  • தீவிர தாக்குதலின் போது புண்கள் இலை காம்புகளில் காணப்படும். இதனால் பாதிப்படைந்த இடத்தில் சிதைந்து இலை ஒடிந்து தொங்கும்.
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களில் கிழங்குகளிலும் தாக்குதலை காண இயலும் இதனால் கிழங்கு அழுகல் அல்லது ரப்பர் போன்று மாறுதல் காணப்படும்.
  • இந்த நோய் தாக்குதலால் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகை அல்லாத இதர பயிர்களை சுழற்சி பயிராக பயிரிடுவது சிறந்தது. 
  • நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளை தேர்வு செய்தல் மிக அவசியம். அதற்கு எந்தப் பகுதியில் இந்த நோய் தாக்குதல் இல்லையோ அங்கிருந்து கிழங்குகளை பெற்று நடவு செய்யலாம். 
  • தேர்வு செய்த கிழங்குகளை இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து பின்பு விதைக்க வேண்டும். இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்திட Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தலாம் ரசாயன முறைக்கு Carbendazim+Mancozeb மருந்தை பயன்படுத்தலாம். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகத்தினை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது இந்த நோய் தாக்குதல் பெரிதளவு இல்லாததால் அதற்கு ஏற்றவாறு பருவத்தினை தேர்வு செய்து நடவு மேற்கொள்ளலாம்.

  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • வாய்க்கால் வழி நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம் ஏனெனில் இவை இரண்டுமே நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை அதிகப்படுத்தும். 
  • போதுமான இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் நல்ல காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் இதனால் நோய் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது.
  • பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் திசுக்களின் திட தன்மையை மேம்படுத்தவும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் கொடுக்க வேண்டும்.

  • வயலை சுற்றி இதர பயிர் குறிப்பாக சோளம் பயிரிடுவதால் நோய் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.

  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum என்ற உயிர் கட்டுப்பாட்டு காரணியை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும்.
  • ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.

  • Metalaxyl + Mancozeb
  • Copper oxychloride
  • Mettiram
  • Mancozeb
  • Fluxapyroxad + Pyroclostrobin
  • Fosetyl aluminium

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்... 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 28 நவம்பர், 2024

தென்னை டானிக் (Coconut Tonic) பயன்படுத்தும் முறையும் பயன்களும்...

தென்னை டானிக்:

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் ஊட்டத்து மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும். மண் வளம் மற்றும் பயிரின் வயதிற்கு ஏற்றவாறு தேவையான ஊட்டச்சத்துககளை தேவையான நேரத்தில் கொடுத்து வர வேண்டும். காய்க்கும் பருவம் அல்லது காய்ப்பில் உள்ள தென்னை மரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை ஒரு வருடம் கொடுக்கவில்லை எனில் அதனால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டை அடுத்து வரும் 2-3 வருடங்களுக்கு காண இயலும்.தென்னையில் குரும்பை உதிர்வு என்பது இயற்கையானதாகவே கருதப்படுகிறது. 
  • தென்னை மரத்தின் பாளையில் உற்பத்தி செய்யப்படும் பலநூறு பூக்கள் தென்னங்காயாக மாறுதல் அடைதல் என்பது இயற்கைக்கு மாறானது. இதனால் தென்னை மரங்கள் தனது சக்திக்கு/திறனுக்கு ஏற்றவாறு குரும்பைகளை தக்கவைத்துக் கொண்டு, இதர குரும்பைகளை உதிர செய்கிறது. உதிரக் கூடிய குரும்பைகளின் அளவை பொறுத்து இது இயற்கையானதா அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையா என்பதை கணிக்க இயலும். அதாவது சிறிய குரும்பைகள் உதிர்வதை அனுமதிக்கலாம். சற்று பெரிய குரும்பைகள் உதிர்வு என்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையே ஆகும்.
  • இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், தென்னை டானிக்கை உற்பத்தி செய்து தென்னை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் 2002-ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் இந்த தென்னை டானிக்கை ஆறு மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்கு இரண்டு முறை வேர் வழியாக செலுத்த வேண்டும்.தென்னை டானிக் என்பது தென்னை பயிருக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளையும் உள்ளடக்கியதாகும். இதில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டீனம் போன்ற ஊட்டச்சத்துக்களும், சாலிசிலிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளும் நிறைந்துள்ளது.

தென்னை டானிக் வேர்வழி செலுத்தும் முறை:



    தென்னை மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 2.5 முதல் 4 அடி தூரத்தில் 15-20 செ.மீ ஆழத்தில் உள்ள வெள்ளை அல்லது இளஞ்சிகப்பு நிற பென்சில் தடிமனுடைய ஊட்டச்சத்து வேர்களை தேர்வு செய்தல் வேண்டும்.தேர்வு செய்த வேரின் நுனி பகுதியை கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி எடுத்து விட்டு அதில் 200 மி.லி அளவுள்ள தென்னை டானிக் பாக்கெட்டினை இறுக்கமாக கட்டி விட வேண்டும்.அல்லது 40 மி.லி அளவு அடர் தென்னை டானிக் உடன் 160 மி.லி தண்ணீர் கலந்து மெல்லிய பாலிதின் பையில் நிரப்பி அதை வேரில் கட்டி விட வேண்டும்.தென்னை டானிக்கை வேர் வழியே உட்செலுத்தும் பொழுது மண்ணில் மிதமான ஈரப்பதமும், மரங்கள் அதிக நீர்த்தேவையுடனும் இருத்தல் வேண்டும்.தென்னை டானிக் அதிகபட்சமாக 48 மணி நேரத்தில் வேர்களால் முற்றிலுமாக உறிஞ்சிக்கொள்ளப்படும். ஒருவேளை டானிக் உறிஞ்சப்படவில்லை எனில் மாற்று வேரை தேர்வு செய்து கட்ட வேண்டும்.

பயன்கள்: 

  • இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரிக்கிறது.
  • இதனால் ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியின் திறன் அதிகரிக்கிறது.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது.
  • பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • குரும்பை உதிர்தல் குறையும்.
  • காய்கள் பெரிதாகி பருப்பு நல்ல எடை உடையதாக இருக்கும்.
  • விளைச்சல் 20 சதவீதம் அளவு அதிகமாகும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக இருக்காது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 27 நவம்பர், 2024

பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த முறையில் உரம் இடுதல்...

  • பொதுவாக பயிர் சாகுபடியில் இரண்டு வகையான முறையில் விவசாயிகள் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொள்கின்றனர். 
  • ஒன்று முழுக்க முழுக்க ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தல் மற்றொன்று முழுமையாக ரசாயன உரங்களை இடாமல் சாகுபடி செய்வது. தொடர்ச்சியாக இந்த இரண்டு முறையில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக பயிரின் சராசரி விளைச்சல்/ உற்பத்தி திறனை நம்மால் பெற இயலாது.
  • எனவேதான் ஒருங்கிணைந்த முறையில் உரம் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. 
  • மிகவும் பொதுவான முறையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியது ஐந்து தொழில்நுட்பங்கள். 

பயிறு வகை பயிர்களை பயிரிடுதல்...

  • நமது பகுதிகளில் பயிரிடப்படும் பயிர் வகை பயிர்களில் ஏதேனும் ஒன்றினை வருடம் ஒரு முறை தனிப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ கண்டிப்பாக பயிரிட வேண்டும். 
  • வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உடன் இணைந்து பயிர்களின் வேர்களில் நிலை நிறுத்துகிறது. 
  • இதனால் ஏக்கருக்கு சுமார் ஒரு மூட்டை யூரியா இட்டது போன்ற சத்து கிடைக்கும், மண் தன்மையை மாற்றுகிறது, மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களை பெருக்கத்தை தூண்டுகிறது, களை வளர்ச்சியை மட்டுப்படுத்துதல் என எண்ணற்ற பயனுள்ளது.

இயற்கை உரங்களை பயன்படுத்துதல்...

  • எந்த ஒரு பயிர் சாகுபடியாக இருந்தாலும் இயற்கை உரங்களை இடுவது அடிப்படை. 
  • இயற்கையாக கிடைக்கக்கூடிய கழிவுகள், பண்ணை கழிவுகள் , மக்குப் பொருட்கள், தொழு உரங்கள் என பல உள்ளது இவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 
  • இதனால் மண்ணின் கார அமிலத்தன்மை நிலை நிறுத்தப்படுதல், அனைத்து சத்துகளையும் கிடைக்க பெறுதல், மண் தன்மை மற்றும் அமைப்பு மாறுபடுதல், நீர் பிடிப்பு மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்துதல், மண் ஊட்டச்சத்து சுழற்சியை உறுதி செய்தல் என எண்ணற்ற பயன்கள் உள்ளது.

ரசாயன உரங்களை பயன்படுத்துதல்...

  • பெரும்பான்மையாக நாம் வீரிய ஒட்டு பயிர்களை பயிரிடுவதால், இதன் உணவு தேவை அதிகம் மேலும் வீரிய ஓட்டுக்களின் அடிப்படை முறையான பராமரிப்பு அதற்கேற்ற மகசூல் என்பதை ஆகும். 
  • நாட்டு ரகம் அல்லது வீரிய ஒட்டு ரகம் எதுவாக இருந்தாலும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை இயற்கை உரங்களால் முழுமையாக கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 
  • அதனாலதான் ரசாயன உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். 

உயிர் உரங்களை பயன்படுத்துதல்...

  • உயிர் உரங்கள் எந்தவித ஊட்டச்சத்துக் கொள்ளவும் பயிர்களுக்கு தருவதில்லை என்பது நாம் அறிந்ததே. 
  • இருப்பினும் மண்ணில் இருக்கக்கூடிய மற்றும் நாம் இடக்கூடிய ஊட்டச்சத்துக்களை வீணடிக்காமல் பயிர்களுக்கு எடுத்து தர மட்டுமே உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 
  • பாக்டீரியா, புஞ்சை மற்றும் பாசி வகை உயிர் உரங்களை பயன்படுத்துவதால் வளிமண்டல தழைச்சத்தை நிலை நிறுத்துதல், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்தல் மற்றும் நுண்ணூட்ட சத்தை கிடைக்க செய்தல் என்பது தான் இதன் அடிப்படை தொழில்நுட்பம்.

புண்ணாக்கு வகைகளை பயன்படுத்துதல்...

  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்தை கொடுப்பதற்கும் மண்வளத்தை நிலையாக பேணுவதற்கும் இது உதவுகிறது. 

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

தென்னையில் பென்சில் முனை சீர்குலைவிற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறைகளும்

     தென்னையில் பென்சில்முனை சீர்குலைவு என்பது  பல்வேறு காரணங்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் ஏற்படும் அறிகுறியாகும்.  இந்த வகை குறைபாடு 1970ஆண்டுகளிலிருந்து பல்வேறு நாடுகளில் பரவலாக காணப்பட்டு வந்தது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குறைபாட்டினால் பென்சில்முனை சீர்குலை பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே திகழ்கிறது.

    பென்சில்முனை சீர்குலைவிற்கான காரணங்கள்

  • நாட்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை குறிப்பாக மாங்கனீசு, துத்தநாகம், மெக்னீசியம், போரான், காப்பர், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன்.
  • பராமரிப்பற்ற வயதான மரங்கள் குறிப்பாக 60 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரங்கள். 
  • தொடர்ச்சியான வறட்சி/நீர்பற்றாக்குறை
  • நீண்ட நாட்களுக்கு வயலில் நீர் தேங்குதல்.
  • மண்ணில் உயிர் கரிம கார்பன் பற்றாக்குறை.
  • நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை.
  • சமச்சீர் அற்ற முறையில் இரசாயன உரம் இடுதல்.
  • முறையற்ற களை மேலாண்மை.
  • தீவிர பயிர் சாகுபடி முறையை மேற்கொள்ளுதல், உதாரணத்திற்கு அடர் நடவு, ஊடுபயிர் இடுதல், கலப்பு பயிரிடுதல் மற்றும் இதர.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் .

    தென்னை மரங்களில் பென்சில் முனை சீர்குலைவானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றிற்கு  மேற்பட்ட காரணிகள் ஒருங்கிணைந்து நீண்ட நாட்களுக்கு காணப்படுவதால் உருவாகிறது.

பென்சில்முனை சீர்குலைவின் அறிகுறிகள்

  • பாதிப்படைந்த மரங்களின் தண்டுப்பகுதி மேலே செல்ல  செல்ல தடிமன் குறைந்து நுனி சிறுத்தும் காணப்படுதல்.
  • கொண்டைப்பகுதியில் பதினைந்திற்கும் குறைவான ஓலைகள்/இலைகள்  மட்டுமே  காணப்படுதல்.
  • ஓலைகள் சிறுத்தும் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மாற்றமடைந்து காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்வடையும்.
  • மரங்கள் காய்ப்புகள் இன்றி அல்லது ஒருசில காய்களுடன் மட்டுமே காணப்படும்/
  • அதிகளவிலான குரும்பை உதிர்தல் மற்றும் ஒல்லிக்காய்கள் காணப்படுதல்.
  • தீவிர நிலையின் போது  தண்டுப்பகுதியின் நுனி முறிந்து செடிகள் இறந்து விடும். 

பென்சில்முனை சீர்குலைவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • முறையான களை மேலாண்மை.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி பராமரித்தல்.
  • முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல்.
  • பயிர்சாகுபடி முறைக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்களை கூடுதலாக இடுதல்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுதல்.
  • தென்னை நுண்ணூட்ட கலவையை மரத்திற்கு 500 கிராம் வீதம் வருடத்திற்கு இரண்டு முறை இட வேண்டும்.
  • கூடுதலாக மரம் ஒன்றுக்கு துத்தநாக சல்பேட் 225 கிராம், தாமிர சல்பேட் 225 கிராம், மாங்கனீசு சல்பேட் 225 கிராம், இரும்பு சல்பேட் 225 கிராம், போராக்ஸ் 225 கிராம், சோடியம் மாலிப்பிடேட் 10 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.      https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


செவ்வாய், 26 நவம்பர், 2024

பூசா டீ கம்போசர் (Pusa Decomposer) பயன்களும் பயன்படுத்தும் முறையும்

பூசா டீ கம்போசர் (Pusa Decomposer)...

1. வட இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்கள் அறுவடைக்குப் பிறகு நிலத்திலேயே இட்டு எரிக்கப்படுவதால் அதனால் ஏற்படும் மாசு மற்றும் புகை மூட்டம் பல்வேறு மாநிலங்களை பாதிப்படையை செய்கிறது அதில் நியூ டெல்லியும் ஒன்று.

2. பல்லாயிரம் கணக்கான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்கள் செப்டம்பர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறுவை செய்யப்பட்டு அதிக அளவில் எரிக்கப்படுவதால் இதனை தடுக்கவும் இந்தப் பொருட்களை நிலங்களிலேயே மக்க வைத்து நன்மை பெறவும் இந்த பூசாரி கம்போசர் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. மாத்திரை வடிவில் கிடைக்கும் இந்த டீ காம்போசரில் சுமார் ஏழு வகையான நன்மை செய்யும் பூஞ்சைகள் அடங்கியிருக்கும் இதன் பிரதான பணி பண்ணை கழிவுகளை விரைந்து மக்க வைப்பதாகும்.

4. மாத்திரை வடிவில் இருக்கும் இந்த  டீகம்போசர் நான்கு எண்கள் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள நெற்பயிர் கழிவுகளை மக்கச் செய்யும் திறன் படைத்தது.

5. மிகக் குறைந்த விலையில் தயாரித்து வெளியிடப்படும் இந்த புசா டீ கம்போசர் பல்வேறு வட மாநிலங்களில் கொடுக்கப்பட்ட ஆய்வு செய்யப்பட்டதில் மிக விரைந்து பயிர் கழிவுகளை மக்க செய்வதால் இதனை அனைத்து பண்ணை கழிவுகளுக்கும் மக்கச் செய்ய பயன்படுத்தலாம் என அறிமுகப்படுத்தப்பட்டது.

தயார் செய்து பயன்படுத்தும் முறை:

  • ஐந்து லிட்டர் தண்ணீரில்  சுமார் 150 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைக்க இந்த தண்ணீரை நன்கு ஆற விட வேண்டும்.
  • பின்னர் இதில் சுமார் 50 கிராம் ஏதேனும் ஒரு பயிர் வகையை அரைத்து பவுடராக தயார் செய்து இதில் கலந்து கொள்ள வேண்டும்.
  • இவை இரண்டும் அதாவது வெல்லம் மற்றும் தானிய பவுடர் பூஞ்சானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • இவை இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கலந்து கொண்டு அதில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தேவையான நான்கு பூசா டீ கம்போசர் மாத்திரைகளை கலந்து கொள்ள வேண்டும். இதனை நூல் சாக்கு பயன்படுத்தி மூடி வைக்க வேண்டும்.
  • நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த கலவையின் மேற்பரப்பில் அடர்த்தியான பூஞ்சை வளர்ச்சியை காண இயலும்.
  • நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் 5 லிட்டர் தண்ணீரில் 150 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து ஆற விட வேண்டும் பின்னர் இதனை ஏற்கனவே தயார் செய்த கலவையில் கலந்து விட வேண்டும்.
  • இதே வழிமுறையை அடுத்த இரண்டு நாட்கள் கழித்து என மொத்தம் நான்கு முறை செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யும் பொழுது சுமார் 25 லிட்டர் திரவம் நமக்கு 12 நாட்களில் கையில் இருக்கும்.
  • இந்த திரவத்தை 475 லிட்டர் தண்ணீருடன் கலந்து 500 லிட்டர் திரவமாக மாற்ற வேண்டும். இதனை வயலில் அல்லது தனிப்பட்ட முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மக்க கூடிய பண்ணை கழிவுகளில் தெளிக்க வேண்டும்.
  • இந்த முறையை பின்பற்றி பண்ணை கழிவுகளை மக்கச் செய்யும்பொழுது சுமார் ஒரு மாத காலத்தில் போதுமான அளவு மட்கி விடுவதால் அடுத்தடுத்த பயிர் சாகுபடி செய்ய எளிதாக இருக்கிறது.
  • பண்ணை கழிவுகளை எளிதில் மக்கச் செய்வதுடன் இதனால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள், நன்மை செய்யும் உயிர்கள், மண்வளம் ஆகியவை மேம்படுகிறது.

இதர முறையில் பயன்படுத்தும் வழிமுறை: 

  • மக்கக்கூடிய பண்ணை கழிவுகளான இலை தழைகள், கால்நடை கழிவுகள், கோழி எச்சங்கள் போன்றவற்றை மக்க வைக்க சிறுசிறு துண்டுகளாக வெட்டி நிழற் பாங்கான இடத்தில் சுமார் ஒரு அடி உயரத்தில் இட்டு அதில் பூசாரி கம்போசர் தெளிக்க வேண்டும். 
  • அதேபோன்று வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேவையான தண்ணீரில் பூசா டீ கம்போசர் தயார் செய்து வயலில் விடுவதால் எண்ணற்ற பலன் அடைய இயலும். 

நன்மைகள்: 

  • பண்ணை கழிவுகளை மிக எளிதில் மக்க வைத்து மீண்டும் உரமாக பயன்படுத்தலாம்.
  • இதனால் குறைந்த செலவில் மண்ணின் பலம் பெருகுகிறது ஏனெனில் இது அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் மண்ணிற்கு தர வல்லது. 
  • மண்ணின் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிடித்திருக்கும் திறன் மேம்படுகிறது. 
  • வயலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருக்கமடைகிறது.
  • வயலில் வேர் சம்பந்தமான நோய்கள் தாக்குவது குறைந்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகிறது.
  • உரத் தேவையினை குறைத்து சாகுபடி செலவை குறைக்கலாம். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 13 நவம்பர், 2024

பழ ஈக்களின் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்கும் பழ ஈக்களை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஈக்களின் செயல்திறன் பண்புகள் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி தெரிந்து கொண்டால் இதனை கட்டுப்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் சற்று விலக வாய்ப்புள்ளது. ஆண்டு முழுவதும் பழ ஈக்கள் பயிர்களை தாக்கினாலும் நாம் இருக்கும் தற்போதைய பருவம் மிகவும் உகந்தது. 

  • வடகிழக்கு பருவமழை காலத்தில் இதன் வாழ்க்கை சுழற்சி சற்று குறைவு அதாவது சராசரியாக 15 முதல் 18 நாட்கள். இதனால் அடுத்தடுத்த சந்ததிகளை கட்டுப்படுத்துவதில் நமக்கு பின்னடைவு ஏற்படும். 
  • ஆனால் கோடைகாலத்தில் இதன் வாழ்நாள் சற்று அதிகம் அதாவது ஒரு மாதம் வரை எனவே அதன் வாழ்க்கை படிநிலைகளை நாம் எளிதில் அழிக்க இயலும்.
  • பொதுவாக இந்த ஈக்கள் பயிர்களின் அடி இலைகளின் கீழ்  கீழ்புறத்திலும், வயலில் காணப்படும் குப்பைகள், களைகள், இதர பயிர்களின் இலைகளுக்கு கீழ்ப்புறமாக இருப்பதால் இவை எளிதில் நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை. 
  • அதிக மழை மற்றும் வெப்பம் இந்த ஈக்களுக்கு உகந்ததில்லை எனவே கதகதப்பு தன்மை இருக்கக்கூடிய இடங்களான பயிரின் அடி இலைகள் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு அதன் வாழ்க்கையை கழிக்கிறது. 
  • இதனால் மருந்து தெளித்தால் தாய் பூச்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, மேலும் ஈக்கள் அதன் நுண்ணுணர்வு சக்திகள் மூலம் மருந்து தெளிக்கும் போது அந்த வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு சென்று விடுகிறது.
  • ஈக்கள் முட்டைகளை இளம் காய்கள் அல்லது பழங்களின் தோளிலிருந்து சுமார் 5 மில்லி மீட்டர் ஆழத்தில் இடுவதால் நாம் தெளிக்க கூடிய ரசாயன அல்லது இயற்கை வழி திரவங்கள் பெரும்பாலும் முட்டைகளை அழிப்பதில்லை. 
  • முட்டைகள் இடப்பட்ட சில மணி நேரங்களில் வெடித்து புழுக்களாக மாறுவதால் முட்டைகளை அழிப்பதற்கு போதுமான கால அவகாசம் நமக்கு கிடைப்பதில்லை. 
  • இந்த பருவத்தில் ஈக்கள் மிக வேகமாக அதாவது அதிக முட்டை இடம் திறந்து கொண்டது சராசரியாக 25 முதல் 30 முட்டை ஒரு நேரத்தில் இடுவதால் புழுக்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படும்.
  • இளம் புழுக்கள் அதிக நாட்கள் உயிர் வாழும் திறன் உடையது சராசரியாக ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை. எனவே இதன் பாதிப்புகள் அதிகம் இருப்பதை நம்மால் தவிர்க்க இயலாது. 
  • புழுக்கள் பழம் அல்லது காய்களுக்கு உள்ளே சென்று சேதத்தை ஏற்படுத்துவதால் நாம் தெளிக்க கூடிய மருந்து அந்த அளவிற்கு ஆழமாக சென்று குழுக்களை அழிப்பது மிக கடினம். 
  • பெரும்பான்மையாக இதன் தாக்குதலின் அறிகுறிகளை நம்மால் கணிக்க இயலவில்லை. அதாவது புழுக்கள் காய்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதால் இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுகள் அந்த இடத்தில் ஏற்பட்டு வெளிப்புறத்தில் நோய் தாக்குதல் போன்ற அறிகுறி நமக்கு காணப்படும். 
  • இதனால் பல நேரங்களில் நாம் பூச்சிக் கொல்லிக்கு பதிலாக நோய் மருந்துகளை தெளித்து வருவதால் கட்டுப்படுத்துவதில் சற்று பின்னடைவு ஏற்படுகிறது.
  • நாம் பெரும்பான்மையாக பயிரின் மேற்பரப்பிலே கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்வதால் தரையில் இருக்கக்கூடிய கூட்டு புழுக்களை நாம் மறந்து விட்டோம். எனவே உரிய வழியை கூட்டுப் புழுக்களையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் புழுக்களில் இருந்து வெளிவரும் தாய் பூச்சிகள் அடுத்த 10 நாட்களில் முட்டையிட ஆரம்பித்து விடுகிறது. சராசரியாக தாய் அந்து போச்சு சுமார் ஆயிரம் முட்டைகள் வரை இடம் திறன் படைத்தது. 
  • முதிர்ந்த தாய் பூச்சிகள் அதிக வாழ்நாள் வரை வாழும் திறன் உடையது அதாவது 10 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூட.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் மேலாண்மை...

முன்னுரை: 

    பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் அனைத்து வயதுடைய மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளில் வளரும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது. பராமரிப்பின் அடிப்படையில் பாதிப்பு 15 முதல் 80 சதவீதம் வரை கூட ஏற்படும். குறிப்பாக பருவ மழைக்காலங்களில்.

நோய் காரணிகள்: 

    இந்த நோய் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படுவதில்லை பல்வேறு சூழ்நிலைகள் ஒருங்கிணைந்து இதனை ஏற்படுத்துவதால் ஆரம்ப நிலையிலேயே இதனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். 

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் அடி இலைகளின் நுனி மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறும். படிப்படியாக இலையின் நடுப்பகுதியிலும் அறிகுறிகளை காணலாம். 
  • நிறம் மாறுதல் அடுத்தடுத்து இலைகளுக்கு பரவ ஆரம்பிக்கும் பின்னர் பயிரின் மொத்த இலைகளுக்கும் பரவும். 
  • தீவிரமான நிலையில் நிற மாற்றம் அடைந்த இலைகள் நுனிப்பகுதியில் இருந்து கருக ஆரம்பிக்கும். 
  • அதிக அளவில் முதிர்ந்த மற்றும் இளம் காய்கள் உதிரும். உதிர்ந்த காய்கள் நிறமாற்றத்துடனும் அழுகல் நோய் போன்ற அறிகுறிகளுடனும் காணப்படும். 
  • பாதிப்படைந்த மரத்தின் வேர் பகுதியில் நிறம் மாற்றங்கள் காணப்படலாம். 
  • இதனால் பெரிய அளவில் பயிர் இழப்பீடு மற்றும் மகசூல் இழப்பீடு 80 சதவீதம் வரை காணப்படலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி வயலில் நீர் தேங்கி நிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • பாக்கு நாற்றுகளை வாங்கும் பொழுது மிக கவனமுடன் நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான ஊட்டச்சத்துக்களை கண்டிப்பாக கொடுத்து வர வேண்டும். 
  • ஊடுபயிராக வாழை பயிரிடுவதை தவிர்க்கலாம். 
  • மரம் ஒன்றிற்கு 10 முதல் 15 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 150-200 கிராம் தழைச்சத்து, 50 முதல் 100 கிராம் மணிச்சத்து மற்றும் 250 கிராம் சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் மேலே சொன்ன ஊட்டச்சத்துக்களை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பயன்படுத்தலாம்.
  • இது மட்டும் இன்றி இதர ஊட்டச்சத்துக்கள்  குறிப்பாக கால்சியம் மெக்னீசியம், மாங்கனிசு, இரும்பு மற்றும் துத்தநாகம் தேவையான அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • கோடை பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் கண்டிப்பாக அவசியம். 
  • பாதிப்படைந்த பயிர்களை கவனமாக சேகரித்து வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் போதுமான அளவு நிழல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இடை உழவு அல்லது ஊடு பயிர் செய்யும் பொழுது வேர் மற்றும் தண்டுப் பகுதிகள் பாதிக்காத வண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • இயற்கை இடு பொருட்களை அதிகம் பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது இதன் தாக்குதல் காணப்படுவது மிகவும் குறைவு.
  • மண்ணின் கார அமிலத்தன்மை நடுநிலைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • நோய் பரவுதல் கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். இதனை பருவமழை காலங்களில் தொடர்ச்சியான இடைவெளியில் பின்பற்றுவது சிறந்தது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 8 நவம்பர், 2024

மழைக்காலத்தில் ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

    தொடர்ச்சியான மழையினால்  ஏற்படும் மிகைப்படியான மண் ஈரப்பதம் காரணமாக சாகுபடியில் இருக்கும் பெரும்பான்மையான பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதை நம் குழுவில் உள்ள விவசாயிகளின் பதிவுகளை வைத்தே நாம் காண இயல்கிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். 

ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள்:

1. ஆக்சிஜன் பற்றாக்குறை: 

அதிகப்படியான மண் ஈரப்பதத்தினால் போதுமான காற்றோட்டம் இல்லாததால் வேர்கள் சுவாசிக்க இயலாமல் அழுத்தத்திற்கு உட்பட்டு அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் திறன் குறைவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இது தீவிரமடையும் பொழுது வேர்கள் படிப்படியாக இறக்கவும் நேரிடும். இதனால் பயிர்கள் முற்றிலும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை.

2. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத வண்ணம் மாறுதல்:

மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மண்ணில் காணப்படும் ஊட்டச்சத்துக்களில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதால் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறும் நிலை ஏற்படுகிறது.

3. ஊட்டச்சத்து இழப்பீடு ஏற்படுதல்:

தொடர்ச்சியான மழை மற்றும் மண் ஈரப்பதத்தினால் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய மேல் மண் ஒரு இடங்களில் இருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாலும், தண்ணீர் மண்ணின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது உடன் ஊட்டச்சத்துக்களையும் எடுத்து செல்வதால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் வீணாகிறது.

4. சல்லி வேர் உற்பத்தி தடை படுதல்:

ஏற்கனவே வேர்கள் சுவாசிக்க காற்று இல்லாத நிலையில் இருப்பதால் அதன் வளர்ச்சியையும், சல்லி வேர்கள் உருவாவதையும் பெரும்பான்மையாக தடை செய்வதால் ஊட்டச்சத்துக்களையும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சல்லி வேர்கள் உற்பத்தி தடைபட்டு அதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்படுகிறது.

5. பயிர்கள் உணவு உற்பத்தியை தடை செய்தல்:

மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் பயிர்களை ஏற்படும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள பயிர்கள் உணவு உற்பத்தி செய்வதை தடை செய்கிறது இதனால் குன்றிய பயிர் வளர்ச்சி, போதுமான பூக்கள் எடுக்காமல் இருத்தல், காய்ப்பு திறன் குறைதல் என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.

6. மண்ணின் கார அமிலத்தன்மை மாறுதல்:

தொடர்ச்சியான மண் ஈரப்பதத்தினால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பினால் மண்ணின் கார அமிலத்தன்மை மாற வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாற்றமடையும் பொழுது ஒரு சில ஊட்டச்சத்துக்கள் மிகப்படியாகவும் மற்ற ஊட்டச்சத்துக்கள் முற்றிலும் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணில் நிலை நிறுத்தப்படும் . இதன் காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் பயிர்களில் அதிகமாக காணப்படும்.

7. மண் இறுக்கம் அடைதல்:

தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது மண் இருக்கும் அடைவதால் வேறு வளர்ச்சி தடைப்படும் மேலும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு மண்ணிலிருந்து வேர்களுக்கு இடம் மாற முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறி காணப்படும்.

ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியாக குறிப்பிட்ட இடைவெளியில் கொடுத்து வர வேண்டும். பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நீங்கும் வரை.
  • பயிர்களில் பனித் தண்ணீர் அல்லது மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காணப்படும் பொழுது இலை வழி தெளிப்பு மேற்கொள்ளக் கூடாது.
  • ஊட்டச்சத்துக்களை தெளிக்கும் பொழுது உடன் ஒட்டுப் பசை சேர்த்துக் கொள்ள  வேண்டும்.
  • தெளித்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இருக்கக் கூடாது. ஒருவேளை மழை பெய்து விட்டால் நாம் தெளித்த ஊட்டச்சத்துக்கள் பயனளிக்காது.
  • இயற்கை முறையில்  சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்துக்காக மீன் அமிலம், பஞ்சகாவியம், ஈயம் கரைசல், கடல்பாசி உரங்கள், தேமோர் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • வேர் பகுதியில் பூஞ்சான தொற்று மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் வேம் அல்லது ஹுமிக் அமிலம் போன்றவற்றை வேர் பகுதியில் கொடுத்து  வர வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டு காரணமாக பயிர்களின் நோய் /பூச்சி எதிர்ப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத வண்ணம் பயிர்களை பாதுகாக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 6 நவம்பர், 2024

பயிர் சாகுபடியில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம்

1.மண்ணின் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்தை எடுத்து விளைச்சலை கொடுப்பதற்கும் மேலும் மண்ணை சார்ந்து வாழும் நன்மை செய்யும் உயிரினங்களுக்கு மண்ணில் இருக்க கூடிய சரிவிகித ஊட்டச்சத்து அடிப்படை ஆதாரமாக  திகழ்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 


2.வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுருங்கி வரும் சாகுபடி நிலப்பரப்பு என பல்வேறு காரணங்களால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலை நாம் விடுவிக்க கூடிய சூழ்நிலையில் தான் ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


3.இதனால் ஆரம்ப காலத்தில் பயிர்களில் நல்ல மகசூல் கிடைத்தது என்பது உண்மைதான் அதாவது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மகசூல் ஆனால் நாளடைவில் இது படிப்படியாக குறைந்து தான் வருகிறது.


4.மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு காரணங்களினால் தான் உர பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகின்றது என்பது என்னுடைய கருத்து ஆனாலும் உரங்களுக்கு என வழங்கப்படும் மானியத்தினால் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது உதாரணத்திற்கு யூரியா.... இதனாலும் கூட குறிப்பிட்ட சில உரங்கள் தொடர்ச்சியாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.


5.அளவுக்கு அதிகமான அதாவது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உரம் இடுதல் மண்ணின் தன்மை மாறுதல் அதாவது கார அமிலத் தன்மையில் மாற்றம்,  மண் வளம் குன்றுதல் அதாவது அதிக அளவு குறிப்பிட்ட சில சத்துக்களை கொடுப்பதால் இதர சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறுதல்,  மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்கள் அழிதல், நீர்நிலைகள் பாதிப்பு, பயிர்கள் மூலமாக ரசாயனங்கள் மனிதர்களுக்கு கால்நடைகளுக்கும் செல்வதால் எண்ணற்ற தீங்கு ஏற்படுகிறது.


6.இது மட்டும் இன்றி உரங்களிலிருந்து வெளியிடப்படும் நச்சுக்களால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதைத்தான் உண்மை


7.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் ஒருங்கிணைந்த முறையில் உரங்களை பயன்படுத்துதல் அல்லது முற்றிலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வழியில் சாகுபடி மேற்கொள்வது நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்த இயலும். 

ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் நாம் கடைபிடிக்க வேண்டியவை:

1.ரசாயன முறையில் பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து விட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறலாம்.


2.அவ்வாறு மாறும் பொழுது சரிவிகித ஊட்டச்சத்தை மண்ணில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் இல்லை எனில் மகசூல் இழப்பீடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 


3.இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்திற்காக தொழு உரம், மண்புழு உரம், கோழி எரு, பசுந்தாள் மற்றும் பசுந்தழை பயிர்கள், ஊடு பயிரிடுதல், கலப்பு பயிர் இடுதல், பயிர் சுழற்சி, வேளாண் மட்கு பொருட்கள், புண்ணாக்கு வகைகள், அமிர்த கரைசல், ஈயம் கரைசல், வேஸ்ட் டீ கம்போசர், உயிர் உரங்கள், ஜீவாமிர்தம், பஞ்சகாவியா, மீன் அமிலம் கடல்பாசி உரங்கள் என பல்வேறு வகையான இடுபொருட்கள் நமக்கு உள்ளது. 


4.நம் பகுதியில் திகழும் மண், தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தேவையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு இடு பொருட்களை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தும் பொழுது மண்ணின் ஊட்டச்சத்து வளம் குறையாமலும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆரோக்கியமான உணவும் கிடைக்க வழிவகை செய்யலாம்.


5.ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடியே மேற்கொள்ள நினைக்கும் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் குறைந்தபட்ச ரசாயன உரங்களையும், அதிக அளவு மற்றும் தொடர்ச்சியாக இயற்கை இடு பொருட்களையும் பயன்படுத்துவதால் மகசூல் குறையாமல் பயிர் சாகுபடி மேற்கொண்டு கொள்ளலாம்.


6.இதே வழிமுறைகளில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை யுக்திகளையும் கடைபிடிக்கலாம் சரியான திட்டமிடனும் செயல் திறனும் இருந்தால்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


நெல் பயிரில் முள் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

 

நெல் சாகுபடியில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொடர்ச்சியான நோய் மற்றும் பூச்சி தாக்குதல் என்பது தவிர்க்க இயலாது ஒன்று. தற்போது சாகுபடியில் இருக்கும் நெல் பயிரில் ஒரு சில இடங்களில் ஹிஸ்பா (Hispa) எனப்படும் முள் வண்டு இளம் பயிர்களில் பரவலாக காணப்படுகிறது. எனவே இதனைப் பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகும். 

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இளம் புழுக்கள் மற்றும் அந்து பூச்சிகள் ஆகிய இரண்டு நிலைகளும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திறன் உடையது.
  • இளம் பருவத்தில் இருக்கக்கூடிய நெல் பயிர்களின் தாள்களில் மூன்றில் இரண்டு பங்கில் தாக்குதலை காண இயலும். 
  • புழுக்கள் இலைகளை துளைத்தும் அந்து பூச்சிகள் நரம்புகளுக்கு இடையே காணப்படும் பட்சயத்தை சுரண்டி உண்ணுவதால் திட்டு திட்டாக வெள்ளை நிற கண்ணாடி போன்ற அமைப்பை காண இயலும். 
  • இலைகளின் மேற்பரப்பில் சதுர வடிவில் வெள்ளை திட்டுக்கள் கண்ணாடி ஜன்னல் போன்ற அமைப்புடன் காணப்படும்.இதன் அறிகுறிகளை பார்ப்பதற்கு இலை சுருட்டு புழு தாக்குதல் போன்றே காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்படும் போது அந்த இலைகள் வாடி உதிரும் நிலை ஏற்படலாம். 
  • தீவிர தாக்குதலின் போது வயலை பார்த்தால் தீயினால் எரிந்தது போன்ற காட்சி அளிக்கும். 
  • வண்டுகள் நேரடியாக பச்சயத்தை உண்ணுவதால் பயிர்களின் உணவு உற்பத்தி தீரன் குறைந்தும் எதனால் வளர்ச்சி மற்றும் மகசூட்டில் பின்னடைவு ஏற்படும். 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

    இலையின் நுனியில் காணப்படும் சிறு வெடிப்புகளில் தாய் அந்தப் பூச்சிகள் முட்டைகளை இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் காணப்படும். நீல நிற முதல் கருப்பு நிறத்தில் மிக சிறிய சதுர வடிவில் காணப்படும் தாய் அந்து பூச்சிகளின் உடல் பாகங்கள் முழுவதும் முட்களை காண இயலும் எனவேதான் இதனை முள் வண்டு என்று அழைக்கிறோம்.

தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

        பொதுவாக மழைக்காலத்தில் இந்த வண்டுகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும். அதிக அளவு தழைச்சத்து உரம் இடுதல், அடர் நடவு, தொடர்ச்சியான மழைப்பொழிவு, குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக களைகள் காணப்படுதல் வண்டு தாக்குதலை ஊக்குவிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பருவ மழை காலங்களில் நெல் சாகுபடி செய்யும் பொழுது போதுமான அளவு இடைவெளி விட்டு நடவு செய்யவும். 
  • தொழு உரத்தினை அடி உரமாக பயன்படுத்தும் பொழுது உயிர் உரங்கள் உடன் Mettarhizum ஏக்கருக்கு ஒரு கிலோ விதம் கலந்து இடவேண்டும். 
  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். களைகள் இருந்தால் கண்டிப்பாக வண்டு தாக்குதலை அதிகப்படுத்தும்.
  • தழைச்சத்து உரத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.
  • முந்தைய பயிர் நெல்லாக இருந்தால் அதன் கழிவுகளை நன்கு மட்க செய்து பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை மூன்றில் ஒரு பங்கு அகற்றி வயலில் இருந்து அப்புறப்படுத்தலாம். இதன் மூலம் இளம் புழு மற்றும் முட்டைகளை அழிக்க இயலும்.
  • பூச்சி சேகரிக்கும் வலைகளை பயன்படுத்தி அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • பொதுவாக வண்டுகளை  அழிக்க இயலாது எனவே பூச்சிவிரட்டி திரவங்கள் மூலம் விரட்டுவதால் இனப்பெருக்கத்தை வெகுவாக குறைக்கலாம். 
  • இயற்கை பூச்சி உண்ணிகளை அதிகப்படுத்துவதால் இதன் புழு மற்றும் முட்டைகளை அழிக்கலாம். உதாரணத்திற்கு நாவாய் பூச்சி
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை, கசாயம் கற்பூர கரைசல், வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், பத்திலை கசாயம், 3G கரிசல் போன்ற இடு பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம்.
  • அல்லது வாரம் ஒரு முறை Mettarhizum உயிர் பூச்சிக் கொல்லியை இலை வழியாக மாலை நேரத்தில் தெளித்து வரலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிக்கலாம். 
    • Lambda cychlothrin

    • Thiamethaxam 
    • Malathion
    • Quinalphos 
    • Fibronil+imidacloprid

        மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA




சனி, 26 அக்டோபர், 2024

கொடி காய்கறி பயிர்களில் பழ ஈ மேலாண்மை...

முன்னுரை:

  • கொடி காய்கறி பயிர்களான பாகல், பீர்க்கன், புடல், சுரைக்காய், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களில் சேதத்தை விளைவித்து சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவது இந்த பழ ஈக்கள் தான்.
  • இந்தப் பழ ஈக்களின் தாக்குதல் கோடை பருவங்களில் அதிகம் தென்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களை பாதிக்கும் திறன் படைத்தது. இதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
  • காய்கறி பயிர்கள் மட்டுமின்றி பல்வேறு பழ வகை பயிர்களிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.  உதாரணத்திற்கு மா, பப்பாளி, கொய்யா.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக மருந்துகளை தெளித்தாலும் பூச்சி தாக்குதல் குறைவதில்லை. எனவே ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • முதிர்ந்த ஈக்கள் காய்களின் மீது மிக சிறிய துளை இட்டு சதைப் பகுதியில் சுமார் 6 முதல் 10 முட்டையை இடுகிறது. 
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த முட்டைகள் இளம் புழுக்களாக மாறும் இதுதான் காய்களில் சேதாரத்தை ஏற்படுத்தும்.
  • சுமார் ஒரு வாரம் கழித்து இந்த இளம் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி காய்கறிகளில் இருந்து கீழே விழுந்து தரையில் காணப்படும். 
  • சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு கூட்டுப் புழுவில் இருந்து முதிர்ந்த ஈக்கள் வெளிவந்து சுமார் ஒரு மாத காலம் வரை வாழும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:


  • பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் சிறிய புள்ளி போன்ற சொரசொரப்பான அமைப்பு காணப்படும். 
  • காய்கள் நன்கு முதிர்ச்சி அடையும் முன்னதாக உதிரும் நிலை ஏற்படலாம். 
  • காய்கள் அழுகுதல் சில நேரங்களில் தென்படும். 
  • பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அதனை உடைத்து பார்த்தால் அதன் உட்பகுதியில் புழுக்கள் இருப்பதை காணலாம். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சேதாரத்தை விளைவிக்கும் இளம் புழுக்கள் மற்றும் முட்டையிடும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சேதாரத்தை தவிர்க்கலாம் அதற்கான ஒருங்கிணைந்த முறையில் பார்ப்போம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் மேலும் உதிர்ந்த காய்களை உடனடியாக சேகரித்து வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
  • கூட்டுப் புழுக்களை அழிக்க ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வெப்பம் கொட்டை இடலாம் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் குருணை வடிவில் கிடைக்க பெறும் Chlorpyriphos மருந்தை மணலுடன் கலந்து பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளித்து பின்னர் நீர் பாய்ச்சுவதால் கூட்டுப்புழுவை அழிக்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • ஊடுபயிர் சாகுபடி செய்தல், வரப்பு பயிராக பீர்கன் சாகுபடி செய்தல், நச்சு தீனி தயாரிப்பு செய்து வைத்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், கருவாட்டு பொறி தயார் செய்து வைத்தல் போன்ற பல்வேறு பொறிகளை பயன்படுத்தி கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி என்பது ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்தி ஆண் ஈக்களை கவர்ந்து அழிப்பதாகும்.தரையில் இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்க Mettarhizum உயிர் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.

    • இயற்கை வழியில் தயார் செய்யப்படும் பூச்சி விரட்டி திரவங்கள் உதாரணத்திற்கு 3g கரைசல், புகையிலை கரைசல், பத்திலை கசாயம் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் அல்லது இயற்கை வழி உயிர் பூச்சி கொல்லிகளான Beaveria bassiana மற்றும் Bacillus thuringiensis கலந்து தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.

    • பழ ஈக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்த ஒரு சில ரசாயன மருந்துகள் உள்ளது அதனை தேர்வு செய்து தேவை இருப்பின் தெளிக்கலாம். 
    • Spinosad / Spirotetramet + imidacloprid / Deltamethrin/ Thiamethoaxam + Lambda cyclothrin / Fibronil + imidacloprid

    *மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு... https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    புதன், 23 அக்டோபர், 2024

    நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் மேலாண்மை...

    முன்னுரை:

    • நெல் சாகுபடியில்  பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்திற்கு பிரதானமாக பயிர்களை தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகளை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செயல்படுவது சிறந்தது. 
    • அந்த வகையில் பாக்டீரியா இலை கருகல் நோய் சாகுபடியில் உள்ள பயிர்களை தாக்க பிரதானமான தருணம். இந்த நோய் தாக்குதலால் சுமார் 60% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பராமரிக்கும் விதம், ரகத்தின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்து மகசூல் இழப்பீடு ஏற்படும். 

    நோய் தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

    • மிதமான வெப்பம் மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
    • அடர் நடவு அதனால் ஏற்படும் கதகதப்பு தன்மை 
    • முந்தைய பயிர் கழிவுகளை முழுமையாக அகற்றாமல் அல்லது மக்காமல் இருத்தல் 
    • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு 
    • முறையற்ற களை மேலாண்மை 

    பரவும் விதம்:

    • மழை அல்லது நீர்ப்பாசன மூலம் எளிதில் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
    • காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகளை செய்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.

    தாக்குதலின் அறிகுறிகள்: 


    • பொதுவாக 15 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு மிகவும் உகந்தது.
    • தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலையின் விளிம்பு மற்றும் நுனியில் மஞ்சள் நிற மாற்றம் அடைவதை காண இயலும்.
    • இந்த நிற மாற்றம் படிப்படியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும். 
    • நாளடைவில் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு நிறம் மாற்றம் அடைந்து உதிர நேரிடும். 
    • ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் பொழுது பெரும்பான்மையான இலைகளின் நுனி பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை பார்க்கும் பொழுது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு  போன்று காணப்படும்.
    • பாதிக்கப்பட்ட பகுதியை சற்று உற்று நோக்கும் போது இதிலிருந்து மிக மிக சிறிய அளவில் திரவம் வெளியேறுவதை காண இயலும் இதை அடிப்படையாக வைத்து இதனை பாக்டீரியா இலை கருகல் நோய் என தீர்மானிக்கலாம்.

    கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

    • பாக்டீரியா நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • கரிப் பருவத்தில் நெல் நடவு மேற்கொள்ளும் பொழுது சற்று இடைவெளி அதிகமாக விட வேண்டும். 
    • மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் பொழுது காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகள் எதுவும் செய்ய வேண்டாம். 
    • தாக்குதலின் அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக அந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
    • இந்த நோய் பிரதானமாக நீர் மூலம் பரவுவதால் பாசன நீர் வழியாக ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் Bacillus subtilis திரவ உயிர் பூஞ்சானம் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என குறைந்தபட்சம் இரண்டு முறை கொடுப்பது நோய் பரவுதலை கட்டுப்படுத்த உதவி புரியும். 
    • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
    • பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
    • களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும் மற்றும் முந்தைய பயிர் கழிவுகள் நன்கு மக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையெனில் நடவுக்கு முன்னதாக 200 லிட்டர் WDC வயலில் விடலாம். 
    • இயற்கை முறையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கலாம். 
    • ரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பாக்டீரியாவை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை இலை வழியாக தெளிக்கலாம். 

    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்துபயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    வியாழன், 17 அக்டோபர், 2024

    மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை

    முன்னுரை: 

    • பருத்தி சாகுபடியில் ஊட்டச்சத்து வேளாண்மை என்பது மிக இன்றியமையாதது ஏனெனில் பருத்தி தொடர்ச்சியான வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூலை தரவல்லது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பெரும்பான்மையான மானாவரி முறையில் சாகுபடி செய்யப்படுவதால் மழை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானதாக மெக்னீசியம் சத்து கருதப்படுகிறது.
    • பொதுவாக மெக்னீசியம் சத்து குறைபாடு பயிர்களில் பெரிய அளவு மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதில்லை ஆனால் இங்கு மெக்னீசியம் சத்து நேரடியாக பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் பிரதான பங்கு வகிப்பதால் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

    பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

    • இலைகளுக்கு போதுமான பச்சையத்தை கொடுத்து அதிக உணவு உற்பத்தியை மேற்கொள்ள உதவுகிறது.
    • மெக்னீசியம் ஊட்டச்சத்து முறையான அளவு பயிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிர்களுக்கு பயனுள்ள வடிவில் மாறும்.
    • பருத்தியில் நார்ச்சத்தை அதிகப்படுத்துவதில் இதன் பணி அளப்பரியது. 
    • சீரான மற்றும் ஒருமித்த தருணத்தில் மகசூல் பெற உதவி புரிகிறது.
    • பயிர்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய மெக்னீசியம் தூண்டுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் போது செல் அழிவதை மீட்டு கொடுப்பதிலும், எதிர்ப்பு சக்தியையும் பயிர்களுக்கு தரக்கூடியது.
    • சரிவிகித முறையில் இதனை கொடுக்கும் பொழுது நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். 

    மெக்னீசியம் குறைபாட்டு அறிகுறிகள்:

    • மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக பயிரின் அடி இலைகளில் அதாவது முதிர்ந்த இலைகளில் தான் காணப்படுகிறது. 
    • அடி இலைகளில் உள்ள நரம்புகள் பச்சையானதாகவும் அதற்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறும்.
    • நாளடைவில் இந்த இலையின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு நிற சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
    • ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் பொழுது இந்த இலையின் பெரும்பான்மையான பகுதி சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.
    • இதனால் பயிரின் உணவு உற்பத்தி குறைந்து குன்றிய பயிர் வளர்ச்சி, சில நேரங்களில் வாடல் மற்றும் மகசூல் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படுகிறது. 

    மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:

    • பருத்தி பிரதானமாக மானாவாரியில் சாகுபடி செய்வதால் மண்ணில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல். 
    • அதிகமான மண் இறுக்கம், மணற்பாங்கான மண் மற்றும் சீரற்ற கார அமிலத்தன்மை நிலை உடைய மண்ணில் இதை பிரதானமாக காணப்படுகிறது. 
    • பயிர்களுக்கு அதிக அளவு தழைச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம்  ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது இது மெக்னீசியம் ஊட்டச்சத்து கிடைப்பதை தடை செய்கிறது. 
    • இது எல்லாம் தவிர தொடர்ச்சியான மண் ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவு திகழும் பொழுது மெக்னீஷியம் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவு தென்படுகிறது.

    மேலாண்மை யுக்திகள்:

    • கடைசி உழவின் போது போதுமான அளவு மக்கிய தொழு அல்லது மண்புழு உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து 24 மணி நேரம் கழித்து இடவேண்டும்.
    • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு இடுவதன் மூலம் மெக்னீசியம் கிடைப்பதை மேம்படுத்தலாம்.
    • மழைப் பருவத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி, ஊட்டச்சத்து மண்ணுக்கு அடியில் செல்வதை தடுக்க வேண்டும்.
    • முதல் மற்றும் இரண்டாவது களை எடுப்பின் போது சிஎம்எஸ் எனப்படும் உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை என இடலாம். 
    • இதர ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்கக் கூடாது குறிப்பாக தழைச்சத்து மற்றும் பொட்டாசியம். 
    • தேவையின் அடிப்படையில் நீரில் கரையக்கூடிய மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக அவ்வப்போது கொடுத்து வரலாம்.

    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    Recent Posts

    Popular Posts