நெல் பயிரில் முள் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|நெல் சாகுபடியில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொடர்ச்சியான நோய் மற்றும் பூச்சி தாக்குதல் என்பது தவிர்க்க இயலாது ஒன்று. தற்போது சாகுபடியில் இருக்கும் நெல் பயிரில் ஒரு சில இடங்களில் ஹிஸ்பா (Hispa) எனப்படும் முள் வண்டு இளம் பயிர்களில் பரவலாக காணப்படுகிறது. எனவே இதனைப் பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் மற்றும் அந்து பூச்சிகள் ஆகிய இரண்டு நிலைகளும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திறன் உடையது.
- இளம் பருவத்தில் இருக்கக்கூடிய நெல் பயிர்களின் தாள்களில் மூன்றில் இரண்டு பங்கில் தாக்குதலை காண இயலும்.
- புழுக்கள் இலைகளை துளைத்தும் அந்து பூச்சிகள் நரம்புகளுக்கு இடையே காணப்படும் பட்சயத்தை சுரண்டி உண்ணுவதால் திட்டு திட்டாக வெள்ளை நிற கண்ணாடி போன்ற அமைப்பை காண இயலும்.
- இலைகளின் மேற்பரப்பில் சதுர வடிவில் வெள்ளை திட்டுக்கள் கண்ணாடி ஜன்னல் போன்ற அமைப்புடன் காணப்படும்.இதன் அறிகுறிகளை பார்ப்பதற்கு இலை சுருட்டு புழு தாக்குதல் போன்றே காணப்படும்.
- தீவிரமாக பாதிக்கப்படும் போது அந்த இலைகள் வாடி உதிரும் நிலை ஏற்படலாம்.
- தீவிர தாக்குதலின் போது வயலை பார்த்தால் தீயினால் எரிந்தது போன்ற காட்சி அளிக்கும்.
- வண்டுகள் நேரடியாக பச்சயத்தை உண்ணுவதால் பயிர்களின் உணவு உற்பத்தி தீரன் குறைந்தும் எதனால் வளர்ச்சி மற்றும் மகசூட்டில் பின்னடைவு ஏற்படும்.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்:
பொதுவாக மழைக்காலத்தில் இந்த வண்டுகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும். அதிக அளவு தழைச்சத்து உரம் இடுதல், அடர் நடவு, தொடர்ச்சியான மழைப்பொழிவு, குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக களைகள் காணப்படுதல் வண்டு தாக்குதலை ஊக்குவிக்கும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பருவ மழை காலங்களில் நெல் சாகுபடி செய்யும் பொழுது போதுமான அளவு இடைவெளி விட்டு நடவு செய்யவும்.
- தொழு உரத்தினை அடி உரமாக பயன்படுத்தும் பொழுது உயிர் உரங்கள் உடன் Mettarhizum ஏக்கருக்கு ஒரு கிலோ விதம் கலந்து இடவேண்டும்.
- வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். களைகள் இருந்தால் கண்டிப்பாக வண்டு தாக்குதலை அதிகப்படுத்தும்.
- தழைச்சத்து உரத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.
- முந்தைய பயிர் நெல்லாக இருந்தால் அதன் கழிவுகளை நன்கு மட்க செய்து பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை மூன்றில் ஒரு பங்கு அகற்றி வயலில் இருந்து அப்புறப்படுத்தலாம். இதன் மூலம் இளம் புழு மற்றும் முட்டைகளை அழிக்க இயலும்.
- பூச்சி சேகரிக்கும் வலைகளை பயன்படுத்தி அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- பொதுவாக வண்டுகளை அழிக்க இயலாது எனவே பூச்சிவிரட்டி திரவங்கள் மூலம் விரட்டுவதால் இனப்பெருக்கத்தை வெகுவாக குறைக்கலாம்.
- இயற்கை பூச்சி உண்ணிகளை அதிகப்படுத்துவதால் இதன் புழு மற்றும் முட்டைகளை அழிக்கலாம். உதாரணத்திற்கு நாவாய் பூச்சி
- ஆரம்ப நிலை தாக்குதலின் போது இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை, கசாயம் கற்பூர கரைசல், வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், பத்திலை கசாயம், 3G கரிசல் போன்ற இடு பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம்.
- அல்லது வாரம் ஒரு முறை Mettarhizum உயிர் பூச்சிக் கொல்லியை இலை வழியாக மாலை நேரத்தில் தெளித்து வரலாம்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிக்கலாம்.
- Lambda cychlothrin
- Thiamethaxam
- Malathion
- Quinalphos
- Fibronil+imidacloprid
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக