நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் மேலாண்மை...
|முன்னுரை:
- நெல் சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்திற்கு பிரதானமாக பயிர்களை தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகளை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செயல்படுவது சிறந்தது.
- அந்த வகையில் பாக்டீரியா இலை கருகல் நோய் சாகுபடியில் உள்ள பயிர்களை தாக்க பிரதானமான தருணம். இந்த நோய் தாக்குதலால் சுமார் 60% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பராமரிக்கும் விதம், ரகத்தின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்து மகசூல் இழப்பீடு ஏற்படும்.
நோய் தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்:
- மிதமான வெப்பம் மற்றும் அதிக காற்று ஈரப்பதம்
- அடர் நடவு அதனால் ஏற்படும் கதகதப்பு தன்மை
- முந்தைய பயிர் கழிவுகளை முழுமையாக அகற்றாமல் அல்லது மக்காமல் இருத்தல்
- தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு
- முறையற்ற களை மேலாண்மை
பரவும் விதம்:
- மழை அல்லது நீர்ப்பாசன மூலம் எளிதில் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
- காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகளை செய்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்:
- பொதுவாக 15 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு மிகவும் உகந்தது.
- தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலையின் விளிம்பு மற்றும் நுனியில் மஞ்சள் நிற மாற்றம் அடைவதை காண இயலும்.
- இந்த நிற மாற்றம் படிப்படியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும்.
- நாளடைவில் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு நிறம் மாற்றம் அடைந்து உதிர நேரிடும்.
- ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் பொழுது பெரும்பான்மையான இலைகளின் நுனி பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை பார்க்கும் பொழுது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு போன்று காணப்படும்.
- பாதிக்கப்பட்ட பகுதியை சற்று உற்று நோக்கும் போது இதிலிருந்து மிக மிக சிறிய அளவில் திரவம் வெளியேறுவதை காண இயலும் இதை அடிப்படையாக வைத்து இதனை பாக்டீரியா இலை கருகல் நோய் என தீர்மானிக்கலாம்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பாக்டீரியா நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- கரிப் பருவத்தில் நெல் நடவு மேற்கொள்ளும் பொழுது சற்று இடைவெளி அதிகமாக விட வேண்டும்.
- மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் பொழுது காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகள் எதுவும் செய்ய வேண்டாம்.
- தாக்குதலின் அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக அந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- இந்த நோய் பிரதானமாக நீர் மூலம் பரவுவதால் பாசன நீர் வழியாக ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் Bacillus subtilis திரவ உயிர் பூஞ்சானம் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என குறைந்தபட்சம் இரண்டு முறை கொடுப்பது நோய் பரவுதலை கட்டுப்படுத்த உதவி புரியும்.
- அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
- பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
- களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும் மற்றும் முந்தைய பயிர் கழிவுகள் நன்கு மக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையெனில் நடவுக்கு முன்னதாக 200 லிட்டர் WDC வயலில் விடலாம்.
- இயற்கை முறையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கலாம்.
- ரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பாக்டீரியாவை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை இலை வழியாக தெளிக்கலாம்.
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்துபயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக