google-site-verification: googled5cb964f606e7b2f.html கொடி காய்கறி பயிர்களில் பழ ஈ மேலாண்மை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 26 அக்டோபர், 2024

கொடி காய்கறி பயிர்களில் பழ ஈ மேலாண்மை...

முன்னுரை:

  • கொடி காய்கறி பயிர்களான பாகல், பீர்க்கன், புடல், சுரைக்காய், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களில் சேதத்தை விளைவித்து சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவது இந்த பழ ஈக்கள் தான்.
  • இந்தப் பழ ஈக்களின் தாக்குதல் கோடை பருவங்களில் அதிகம் தென்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களை பாதிக்கும் திறன் படைத்தது. இதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
  • காய்கறி பயிர்கள் மட்டுமின்றி பல்வேறு பழ வகை பயிர்களிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.  உதாரணத்திற்கு மா, பப்பாளி, கொய்யா.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக மருந்துகளை தெளித்தாலும் பூச்சி தாக்குதல் குறைவதில்லை. எனவே ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • முதிர்ந்த ஈக்கள் காய்களின் மீது மிக சிறிய துளை இட்டு சதைப் பகுதியில் சுமார் 6 முதல் 10 முட்டையை இடுகிறது. 
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த முட்டைகள் இளம் புழுக்களாக மாறும் இதுதான் காய்களில் சேதாரத்தை ஏற்படுத்தும்.
  • சுமார் ஒரு வாரம் கழித்து இந்த இளம் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி காய்கறிகளில் இருந்து கீழே விழுந்து தரையில் காணப்படும். 
  • சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு கூட்டுப் புழுவில் இருந்து முதிர்ந்த ஈக்கள் வெளிவந்து சுமார் ஒரு மாத காலம் வரை வாழும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:


  • பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் சிறிய புள்ளி போன்ற சொரசொரப்பான அமைப்பு காணப்படும். 
  • காய்கள் நன்கு முதிர்ச்சி அடையும் முன்னதாக உதிரும் நிலை ஏற்படலாம். 
  • காய்கள் அழுகுதல் சில நேரங்களில் தென்படும். 
  • பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அதனை உடைத்து பார்த்தால் அதன் உட்பகுதியில் புழுக்கள் இருப்பதை காணலாம். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சேதாரத்தை விளைவிக்கும் இளம் புழுக்கள் மற்றும் முட்டையிடும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சேதாரத்தை தவிர்க்கலாம் அதற்கான ஒருங்கிணைந்த முறையில் பார்ப்போம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் மேலும் உதிர்ந்த காய்களை உடனடியாக சேகரித்து வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
  • கூட்டுப் புழுக்களை அழிக்க ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வெப்பம் கொட்டை இடலாம் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் குருணை வடிவில் கிடைக்க பெறும் Chlorpyriphos மருந்தை மணலுடன் கலந்து பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளித்து பின்னர் நீர் பாய்ச்சுவதால் கூட்டுப்புழுவை அழிக்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • ஊடுபயிர் சாகுபடி செய்தல், வரப்பு பயிராக பீர்கன் சாகுபடி செய்தல், நச்சு தீனி தயாரிப்பு செய்து வைத்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், கருவாட்டு பொறி தயார் செய்து வைத்தல் போன்ற பல்வேறு பொறிகளை பயன்படுத்தி கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி என்பது ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்தி ஆண் ஈக்களை கவர்ந்து அழிப்பதாகும்.தரையில் இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்க Mettarhizum உயிர் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.

    • இயற்கை வழியில் தயார் செய்யப்படும் பூச்சி விரட்டி திரவங்கள் உதாரணத்திற்கு 3g கரைசல், புகையிலை கரைசல், பத்திலை கசாயம் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் அல்லது இயற்கை வழி உயிர் பூச்சி கொல்லிகளான Beaveria bassiana மற்றும் Bacillus thuringiensis கலந்து தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.

    • பழ ஈக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்த ஒரு சில ரசாயன மருந்துகள் உள்ளது அதனை தேர்வு செய்து தேவை இருப்பின் தெளிக்கலாம். 
    • Spinosad / Spirotetramet + imidacloprid / Deltamethrin/ Thiamethoaxam + Lambda cyclothrin / Fibronil + imidacloprid

    *மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு... https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    0 Comments:

    கருத்துரையிடுக

    Recent Posts

    Popular Posts