google-site-verification: googled5cb964f606e7b2f.html பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் மேலாண்மை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 13 நவம்பர், 2024

பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் மேலாண்மை...

முன்னுரை: 

    பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் அனைத்து வயதுடைய மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளில் வளரும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது. பராமரிப்பின் அடிப்படையில் பாதிப்பு 15 முதல் 80 சதவீதம் வரை கூட ஏற்படும். குறிப்பாக பருவ மழைக்காலங்களில்.

நோய் காரணிகள்: 

    இந்த நோய் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படுவதில்லை பல்வேறு சூழ்நிலைகள் ஒருங்கிணைந்து இதனை ஏற்படுத்துவதால் ஆரம்ப நிலையிலேயே இதனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். 

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் அடி இலைகளின் நுனி மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறும். படிப்படியாக இலையின் நடுப்பகுதியிலும் அறிகுறிகளை காணலாம். 
  • நிறம் மாறுதல் அடுத்தடுத்து இலைகளுக்கு பரவ ஆரம்பிக்கும் பின்னர் பயிரின் மொத்த இலைகளுக்கும் பரவும். 
  • தீவிரமான நிலையில் நிற மாற்றம் அடைந்த இலைகள் நுனிப்பகுதியில் இருந்து கருக ஆரம்பிக்கும். 
  • அதிக அளவில் முதிர்ந்த மற்றும் இளம் காய்கள் உதிரும். உதிர்ந்த காய்கள் நிறமாற்றத்துடனும் அழுகல் நோய் போன்ற அறிகுறிகளுடனும் காணப்படும். 
  • பாதிப்படைந்த மரத்தின் வேர் பகுதியில் நிறம் மாற்றங்கள் காணப்படலாம். 
  • இதனால் பெரிய அளவில் பயிர் இழப்பீடு மற்றும் மகசூல் இழப்பீடு 80 சதவீதம் வரை காணப்படலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி வயலில் நீர் தேங்கி நிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • பாக்கு நாற்றுகளை வாங்கும் பொழுது மிக கவனமுடன் நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான ஊட்டச்சத்துக்களை கண்டிப்பாக கொடுத்து வர வேண்டும். 
  • ஊடுபயிராக வாழை பயிரிடுவதை தவிர்க்கலாம். 
  • மரம் ஒன்றிற்கு 10 முதல் 15 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 150-200 கிராம் தழைச்சத்து, 50 முதல் 100 கிராம் மணிச்சத்து மற்றும் 250 கிராம் சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் மேலே சொன்ன ஊட்டச்சத்துக்களை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பயன்படுத்தலாம்.
  • இது மட்டும் இன்றி இதர ஊட்டச்சத்துக்கள்  குறிப்பாக கால்சியம் மெக்னீசியம், மாங்கனிசு, இரும்பு மற்றும் துத்தநாகம் தேவையான அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • கோடை பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் கண்டிப்பாக அவசியம். 
  • பாதிப்படைந்த பயிர்களை கவனமாக சேகரித்து வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் போதுமான அளவு நிழல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இடை உழவு அல்லது ஊடு பயிர் செய்யும் பொழுது வேர் மற்றும் தண்டுப் பகுதிகள் பாதிக்காத வண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • இயற்கை இடு பொருட்களை அதிகம் பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது இதன் தாக்குதல் காணப்படுவது மிகவும் குறைவு.
  • மண்ணின் கார அமிலத்தன்மை நடுநிலைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • நோய் பரவுதல் கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். இதனை பருவமழை காலங்களில் தொடர்ச்சியான இடைவெளியில் பின்பற்றுவது சிறந்தது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts