google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 15 அக்டோபர், 2025

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

  • தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பருவ மழை காலங்களில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் நோய் போன்ற காட்சி அளிக்கும் பூஞ்சை - பாசி வளர்ச்சியை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 
  • லிச்சென் (Lichen) என்பது பூஞ்சை மற்றும் பாசிகள் இணைந்து வளரும் அமைப்பாகும். இந்த உயிரினம் அடர் காடுகளில் மரத்தின் தண்டு பகுதி, பாறைகள், மண் மற்றும் இதர பொருட்களில் வளர்வதை நாம் காண இயலும்.
  • இதில் காணப்படும் பூஞ்சை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து வளரும். பாசிகள் இதில் வளர்ந்து கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு கொடுத்து வாழும்.
  • பல நூறு வகையான லிச்சென்கள் உள்ளன அவற்றில் குறிப்பிட்ட சில வகை குடும்பத்தில் காணப்படும் பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் மட்டுமே இந்தியாவில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன Graphina, Leptogium, Lecanora, Pyxine, Myriotrema, Porina. லிச்சென்கள் பல்வேறு நிறம் மற்றும் வடிவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லிச்சென் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • அளவுக்கு அதிகமான நிழல்
  • போதிய காற்றோட்டம் இன்மை 
  • அடர் நடவு 
  • பராமரிப்பு இல்லாத தோப்புகள்

லிச்சென் வளர்ச்சி காரணமாக ஏற்படும் பாதிப்புகள்:

  • லிச்சென்கள் நேரடியாக மரங்களை பாதிப்பதில்லை ஏனெனில் இதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தென்னை மரங்களை கிடைப்பதில்லை. 
  • நேரடியாக பயிர்களை பாதிக்காவிட்டாலும் கவனிக்கப்படவில்லை எனில் இந்த பூஞ்சை பாசி வளர்ச்சி படிப்படியாக பரவி மரத்தின் இலை பகுதியை தாக்கினால் பயிர் வளர்ச்சி தடைபடுவதுடன் மகசூல் இழப்பீடும் ஏற்படும். 
  • மேலும் இது இதர பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • மரங்களுக்கு உரிய நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும். 
  • ஒன்று அல்லது இரண்டு ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் போதிய வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் மரத்தின் தண்டு பகுதிக்கு கிடைக்கும்.
  • பாதிக்கப்பட்ட தோப்புகளில் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
  • ஆரம்ப நிலை வளர்ச்சியின் பொழுது தண்ணீரைப் பீச்சி அடித்து இதனை அப்புறப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சை பாசிகளை கண்டிப்பாக சுரண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • சுரண்டி எடுத்த பிறகு இந்த பகுதியில் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு உடன் ஓட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் இந்த தெளிப்பை இரண்டாவது முறை தெளிக்க வேண்டும். 
  • பிறகு தண்டு பகுதியில் சுண்ணாம்பு பூச வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    பருவமழை காலங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவே திகழ்கின்ற மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மழை, நீர்த்தேக்கம், காற்று, தொடர்ச்சியான மண் ஈரப்பதம் ஆகியவை பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதற்கு உதாரணமே"தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்" என்ற பழமொழி ஆகும்.

தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சால சிறந்தது. 

  • வடிகால் வசதியை சீரமைத்து நீர் தேங்குவதை தவிர்க்கவும். 
  • தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் அதாவது கழுத்துப் பகுதியில் கண்டிப்பாக நீர் தேங்கா கூடாது. 
  • எனவே அடித்தண்டு பகுதியில் மிதமான அளவில் மண் அணைப்பது உகந்தது. 
  • தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி மற்றும் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்படலாம் இதன் மூலம் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • வட்டப்பாதையில் மூடாக்கு அமைத்து கிடைக்கப்பெறும் நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். 
  • மூடாக்கிற்கு காய்ந்த மட்டைகள், தூளாக்கப்பட்டு மக்க வைத்த மட்டை தூள்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் அரிப்பை தடுக்கலாம். 
  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம். இது நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும். 
  • பருவமழை காலங்களில் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் ரசாயன உரங்கள் எளிதில் கரைந்து வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் ஆழமாக செல்லலாம். 
  • அல்லது அதிக மழைப்பொழிவு காரணமாக வயலில் இருந்து வெளியே அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளன. 
  • ரசாயன உரம் இட முன் பருவ அல்லது பின் பருவ மழை காலங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் நமக்கு தேவையான மண் ஈரப்பதம் இருக்கும் 
  • பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்தலாம் இது மண்ணில் பல்கி பெருகும். 
  • பருவமழை முடிந்த பிறகு மண்ணின் கார அமிலத்தன்மையை ஆய்வு செய்து அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அதிக மழை பெய்தால் ஊட்டச்சத்துக்கள் கரைந்து வெளியேறும் இதனால் அமில காரத் தன்மையில் கண்டிப்பாக மாற்றம் காணப்படலாம். 
  • இளம் தென்னங்கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும். 
  • பருவமழை காலங்களில் மரத்திற்கு அருகாமையில் ஆழமாக உழவு செய்வதை தவிர்க்கலாம். இது வேர்களை காயப்படுத்தும் இதனால் நோய் தாக்குதல் மிக எளிதில் ஏற்படலாம். 
  • மேலும் இதன் காரணமாக வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் சூழல் குறையும். இது போன்ற நேரங்களில் அதிக காற்று அடித்தால் மரங்கள் சாய் வாய்ப்புள்ளது. 
  • தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் காணப்பட்டால் பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை காண இயலும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு சுண்ணாம்பு அடித்து விடவும். 
  • காய்ந்த நிலையில் இருக்கும் அடி இலைகளை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி வெட்டி அப்புறப்படுத்தலாம். 
  • மரத்தின் கொண்டைப் பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் மற்றும் குரும்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தலாம். ஏனெனில் இது குருத்துப் பகுதியில் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்தலாம்.
  • தோப்பில் காணப்படும் மட்டைகளை சேகரித்து வரப்பில் அடுக்கி வைக்க வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகள் நிலத்தில் அழுகினால் நோய் மற்றும் வண்டு தாக்குதல் வர வாய்ப்புள்ளது. 
  • ஆனா வரி தோப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை வெட்டி மழை நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். 
  • வானிலை அறிக்கையை பின்பற்றி அதற்கு ஏற்றவாறு அறுவடை பணியை செய்ய வேண்டும். அதிக காற்று அல்லது மழை பெய்யக்கூடும் என கருதப்படும் நேரத்தில் மரம் ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • மரங்களுக்கு காப்பீடு செய்து வைப்பது மிக மிக சிறந்தது.
  • வட்டப்பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடைக்க பெறும் மழை நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும்.
  • தஞ்சாவூர் வாடல், வேர் வாடல் மற்றும் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன் அறிகுறிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

திங்கள், 13 அக்டோபர், 2025

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

    தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அதாவது மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம்,  அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் மேக மூட்டமான சூழ்நிலை தென்னையில் குருத்தழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. 

    பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த குருத்தழுகல் நோய் இளம் வயது கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத மரங்களை வெகுவாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். நோய் தாக்குதலால் பயிர்கள் இறந்து விடுவதை விட, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.

    நோய் தாக்குதலால் இளம் கன்றுகள் இறப்பதும், காய்ப்பில் உள்ள மரத்தில் ஏற்படும் நோய் தொற்றால் அதிக அளவு காய்கள் உதிர்வதை காண இயலும். பருவமழை காலங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் அழுகல் ஏற்படுவதால் இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறி வெளுத்து காணப்படும்.
  • நாளடைவில் இந்த இலைகள் கருகியது போன்ற காட்சியளிக்கும்.
  • பாதிப்படைந்த குருத்து இலைகளை  இழுத்தால் கையோடு வந்துவிடும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் சிதைந்து நிறம் மாறி இளம் சிகப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். 
  • பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் தொடர்ச்சியாக அழுகுவதால் படிப்படியாக அடுத்தடுத்த இலைகள் மேல்புறத்தில் இருந்து அழுகி இறந்துவிடும். 
  • தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி சாய்ந்து விடும்.  

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக நோயின் தாக்குதல் தென்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வர வேண்டும்.
  • குறிப்பாக நோய் தாக்குதல் பிரதானமாக காணப்படும் காலமான ஜூலை முதல் நவம்பர் வரை.
  • போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இலை, பன்னாடை, மட்டை அல்லது மரத்தின் இதரப் பகுதிகள் வயலில் ஆங்காங்கே இட்டு அழுகுவதை தவிர்க்க வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாரம் ஒரு முறை Bacillus மற்றும் pseudomonas தலா 10 கிராம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை கலந்து குருத்துப் பகுதியில் நன்கு தெளிக்கவும்.
  • முழுமையாக பாதிப்படைந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட குருத்து இலைகளில் வயலில் இடக்கூடாது. இது மேலும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்.
  • நோய் தாக்குதல் காரணமாக குருத்துப் பகுதியில் காண்டாமிருக வண்டு அல்லது சிகப்பு கூன் வண்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • நோய் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து இரசாயன மருந்தை வேர் வழியாக செலுத்தி நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வாழை பயிருக்கு என்ன உரம் எப்போது இடலாம்...

வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொன்டு அதற்கேற்றவாறு மகசூலை கொடுக்கவல்லது. வாழை பயிர் கிடைக்கப்பெறும் சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்சியை துரிதப்படுத்தி அதிக அளவு மகசூலை தரும். மண்ணின் தன்மை மற்றும் வளத்திற்கு ஏற்றவாறு மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித முறையில் ஊட்டச்சத்து இடுவது மகசூலை மேம்படுத்துவதுடன் மண் வளத்தை பாதுகாக்கும்.

வாழை பயிர் அதிக அளவு எடுத்துக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வரிசையில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், போரான், மாங்கனிசு மற்றும் இதர ஊட்டச்சத்துகள் திகழ்கின்றன.

  • நடவு செய்யும்பொழுது குழி ஒன்றிற்கு நன்கு மட்கிய தொழுஉரம் 10 கிலோ மற்றும் 250 கிராம் வேப்பம்புன்னாக்கு ஆகியவற்றை மேல்மண்னுடன் கலந்து இடவேண்டும்.
  • கண்டிப்பாக மட்காத தொழு உரத்தை(குப்பை) பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மட்காத குப்பை வேர்வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • ஊடுபயிர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் கடைசி உழவின் போது அடிஉரமாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மட்கிய தொழுஉரம் இடவேண்டும்.
  • நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு இரசாயன உரங்கள் இடக்கூடாது. இந்த நேரத்தில் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிழங்கிலிருந்து கிடைக்கும்.
  • போதிய வேர்வளர்ச்சி காணப்படும் 3 ம் மாதத்திலிருந்து இரசாயன உரம் இடலாம்.
  • வருடத்திற்கு ஒரு மரத்திற்கு சராசரியாக 180-210 கிராம் தழைச்சத்து (இலைக்காக சாகுபடி செய்யப்படும் இடத்தில் தேவையின் அடிப்படையில் சன்று கூடுதலாக கொடுக்கலாம்), மணிச்சத்து 40-50 கிராம் மற்றும் பொட்டாசியம் சத்து 600-800 கிராம் இடவேண்டும்.
  • இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னிசியம் , சல்பர் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 100-150 கிராம், 30-50 கிராம் மற்றும் 15-20 கிராம் முறையே இட வேண்டும்.
  • நுண்ணுட்டச்சத்துக்களை தேவையின் அடிப்படையில்  கண்டிப்பாக இட வேண்டும்.

உரங்கள் (கிராம் /மரம்)

3 ம் மாதம்

5 ம் மாதம்

7 ம் மாதம்

யுரியா

100

200

150

சூப்பர் பாஸ்பேட்

200

100

-

மூரிஏட் ஆப் பொட்டாஷ்

250

350

350

டி.எ.பி

50

-

-

(ஒரு வருடத்திறகு ஒரு மரத்திற்கு தேவையான உத்தேச அளவு)

  • உரமிடும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரங்களுடன் தேவையான அளவு தொழுஉரம் கலந்து இட்டு தண்டு பகுதியிலிருந்து சுமார் 2 அடி தள்ளி இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். 
  • 2,4 மற்றும் 6ம்  மாதங்களில் உயிர் உரங்கள் அல்லது கடல்பாசி உரங்கள் அல்லது ஹீயுமிக் அமிலத்தை வேர் வழியாக கொடுப்பதன் மூலம் மண்ணிலிருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு ஏற்ற வடிவில் கிடைக்க உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

சனி, 11 அக்டோபர், 2025

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல் - Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை:

   பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி என்பது மிக லாபகரமான விவசாய தொழிலாக திகழ்கிறது. ஏனெனில் இதில் நிலப்பரப்பு மட்டுமில்லாமல் செங்குத்தாக பயிர்களை சாகுபடி செய்கிறோம் மேலும் இதில் அதிக வெப்பநிலை திகழ்வதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது. 

 உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் 30 முதல் 50% கூடுதல் மகசூல் பெற இயலும். இங்கு உயர் தொழில்நுட்பம் என்பது தட்பவெட்ப சூழலை தேவைக்கேற்ப மாற்றுதல், சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், உயர் அடர் நடவு, Fogger, என் நிலப் போர்வை மற்றும் பல்வேறு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 

பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • அதிக வெப்பநிலை 
  • மிதமானது முதல் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு 
  • போதிய காற்றோட்டமின்மை 
  • உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக இடுபொருள் இடுதல் (உரங்கள்)
  • மஞ்சள் நிற பூக்களின் நிறம் (பேன் எளிதில் கவரும்

பேன் தாக்குதலின் அறிகுறிகள்: 
இலைகள்:

  • இலைகளின் அடிப்புரத்தில் இருந்து சாற்றை உறிஞ்சும். 
  • இதனால் இலை மேற்பரப்பில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 
  • தீவிர தாக்குதல் என்பது இலைகள் உருக்குலைந்து, இலை விளிம்புகள் கருகி காட்சியளிக்கும்.

பூக்கள்: 

  • மஞ்சள் நிற பூக்களை நோக்கி பேன்கள் எளிதில் சென்று தாக்கும். 
  • பூ இதழ்களில் சாற்றை உறிஞ்சும் இதனால் இதழ்களில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும்.
  • மேலும் மகரந்த பகுதிகளை சேதமடைய செய்வதால் காய் பிடிப்பு திறன் குறையும்.

காய்கள்:

  • பேன்கள் காய்களில் சாற்றை முயற்சி செய்வதால் வெளிர் நிற தழும்புகள் காய்களின் மேல் பரப்பில் காணப்படும். 
  • இது மட்டும் இன்றி பல்வேறு வகையான வைரஸ் நோய் தொற்றை இந்த வகை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • அடி உரம் இடும் பொழுது வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடவும். 
  • போதுமான பயிர் இடைவெளி அவசியம் 
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க காலை மற்றும் மாலை நேரத்தில் பசுமை குடிலின் இரு புறத்தில் உள்ள Side wall/Curtain wall பகுதியில் உள்ள பாலிதீன் சீட்டை சுருட்டி வைக்கவும். 
  • அந்தப் பகுதி வழியாக பூச்சிகள் உள் நுழைவதை தடுக்கும் வலை கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
  • அதிக வெப்பநிலையை குறைக்க Foggers பொருத்தலாம். அல்லது பசுமை குடிலின் மேல் பகுதியில் தெளிப்பு நீர் நிறுவி அதை உபயோகிக்கலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் போன்ற ஏதேனும் பூச்சி விரட்டி திரவத்தை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • தேவையின் அடிப்படையில் உயிரியல் பூச்சிக்கொல்லி திரவமான Verticillium lecanii மற்றும் Beauveria bassiana கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் தவிர்க்கலாம். 
  • 1000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பசுமை குடிலுக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறி பயன்படுத்த வேண்டும்.
  • மிக கவனமாக இரசாயனம் மருந்துகளை தேர்வு செய்து தெளிக்க வேண்டும். உதாரணத்திற்கு Fibronil/Thiamethoxam/Spinosad/imidacloprid/Flonicamid/Cyantraniliprole.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன்பெற...

வெள்ளி, 10 அக்டோபர், 2025

மக்காச்சோள பயிரில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதன் மேலாண்மை...

முன்னுரை:

 மக்காச்சோளம் குறைந்த நாட்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு விளைச்சல் தரக்கூடிய ஒரு பயிராக திகழ்கிறது. தற்சமயம் சாகுபடியில் உள்ள பயிரில் ஒரு சில இடங்களில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகிறது. 

  பயிரில் போதுமான அளவு பச்சையத்தை உற்பத்தி செய்து பயிருக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் உணவை கிரகித்து ஆற்றலை பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பவும் வேலையை செய்கிறது.

மெக்னீசியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது 
  • போதுமான அளவு மெக்னீசியம் இடாமல் இருத்தல் 
  • அளவுக்கு அதிகமான பொட்டாசியம், கால்சியம் மற்றும் தழைச்சத்து இடுதல். இது மெக்னீசியம் பயிர்களுக்கு கிடைப்பதை தடை செய்கிறது
  • அதிக அமிலத்தன்மை மற்றும் மணல் பாங்கான மண்ணில் மெக்னீசியம் குறைபாடு காணப்படும்.
  • தொடர்ச்சியான மழை, அதிகமான மண் ஈரப்பதம் போன்ற காரணங்கள் சத்துக்கள் எளிதில் களைந்து மண்ணுக்கு அடியில் செல்லலாம் அல்லது பயிர்களால் சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். 

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • ஆரம்பகால அறிகுறியாக பயிரின் அடி இலைகளில் வெளிர் பச்சை நிற கோடுகள் காணப்படும். 
  • நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது இலை நரம்புகளும் வெளிர் பச்சை நிறமாக மாறும்.
  • இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிரின் உணவு உற்பத்தி திறன் குறைந்து குன்றிய வளர்ச்சி காணப்படும். 
  • நாள்பட்ட மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை கண்டிப்பாக மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • பயிர் சுழற்சி மிக அவசியம். இல்லை எனில் ஒரே விதமான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து  பயிர்களால் எடுத்துக்கொள்ளப்படுவதால் மண் வளம் குறையும்.
  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அளிக்க வேண்டும். 
  • எனவே மண்ணை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் போதுமான அளவு தொழு உரம் மற்றும் ரசாயன உரம் இடவேண்டும்.
  • அளவுக்கு அதிகமான தழைச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீர் தேக்கம் அல்லது தொடர்ச்சியான மண் ஈரப்பதம் பயிர் வளர்ச்சியை பாதிக்கும்.
  • மழை காலங்களில் தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அல்லது இடைவெளி தெளிப்பு சால சிறந்தது. 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் ஊட்டச்சத்தை மீன் அமிலம், எலும்பு உரம், கடல்பாசி உரம் மற்றும் முட்டை எலுமிச்சை கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி கொடுக்கலாம்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் சல்பேட், பாலி சல்பேட், கீர்த்தி சி எம் எஸ் போன்ற உரங்கள் கிடைக்கப்பெறுகிறது இதனை இடலாம். 
  • உடனடி தீர்வுக்கு நீரில் கரையும் வடிவில் மெக்னீசியம் ஊட்டச்சத்தை பெற்று அதை இலை வழியாக தெளித்து வரலாம்.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன் பெற...

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்

    வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பூச்சி நோய் தாக்குதல்,  ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்,  நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை,  பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது. 

    இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:

  • வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும். 
  • இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
  • இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும். 
  • அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும். 
  • இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
  • இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை. 
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும். 
  • இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும். 

பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல். 
  • பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல். 
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும். 
  • அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
  • பராமரிப்பு குறைபாடு 
  • போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்: 

  • சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது. 
  • போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
  • உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
  • வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
  • நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
  • சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

கத்தரி பயிரில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    தற்சமயம் சாகுபடிகள் உள்ள கத்தரி பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக இலை உண்ணும் வண்டு,  பூ வண்டு, கொப்புள வண்டு, அஸ்வினி, குருத்து மற்றும் காய் புழு, தத்துப்பூச்சி மற்றும் தேமல் வைரஸ் நோய் காணப்படுகிறது. 

    தற்சமயம் கத்தரி மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு சராசரி விலை கிடைப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைந்த செலவில் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் வைரஸ் தாக்குதலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலைகளில் பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இலைகள் சிதைந்து ஒழுங்கற்ற வடிவிலும், பார்ப்பதற்கு தோல் போன்று காணப்படும். 
  • குருத்துப் பகுதியில் இருந்து வெளியேறும் இளம் இலைகள் சிறுத்து காணப்படும். 
  • இதனால் பயிர்களில் பச்சையத்தின் அளவு குறைந்து, பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • இந்த தேமல் நச்சுயிரி நோய் அஸ்வினி மூலம் பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • தங்களது பகுதிக்கு ஏற்ற உகந்த ரகத்தினை தேர்வு செய்தல் அல்லது நோய் தொற்று இல்லாத நாட்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • தேமல் நோயால் பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் மீண்டும் கத்தரி நடவு செய்யாமல் இருக்கலாம்.
  • இந்த வைரஸ் தொற்று கத்தரி, உருளை, வெள்ளரி போன்ற சில பயிர்களில் பிரதானமாக காணப்போவதால், சாகுபடி பயலுக்கு அருகாமையில் இந்த பயிர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.
  • வயலை களைகள் இன்றி பராமரிக்க வேண்டும். ஏனெனில் சார் உறிஞ்சும் பூச்சான அஸ்வினி களை செடியில் இருந்து கொண்டு நோயை பரப்பும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கசாயம், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம் போன்ற இயற்கை வழியில் தயாரித்த இடுபொருட்களை தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.
  • உயிரியல் முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை Verticillium lecanii திரவத்தை இலை வழியாக தெளித்து வரலாம்.
  • ரசாயன முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி Imidacloprid கலந்து தெளிக்க வேண்டும். அல்லது Fibronil/ Thiamethoxam/ Flonicamid போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்படும் அளவில் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


நெல் சாகுபடியில் பாக்டீரியா கதிர் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நெல் சாகுபடியில் தற்போது நிலவு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக நெல் கதிர் அல்லது மணிகளில் நிற மாற்றம் காணப்படுகிறது. இது பாக்டீரியா நோய் தொற்றால் ஏற்படும் ஒரு விதமான அறிகுறி ஆகும். இதனை பாக்டீரியா கதிர் கருகல் நோய் என கூறலாம். இதைப் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

    நெல் பயிரில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இரண்டு விதமான பாக்டீரியா நோய்கள் காணப்படுகிறது. அதில் ஒன்று பாக்டீரியா இலை கருகல் மற்றொன்று பாக்டீரியா கதிர் கருகல் நோயாகும்.

  • பாக்டீரியா இலை கருகல் நோய் Xanthomonas எனப்படும் பாக்டீரியா நோய் தொற்று காரணமாகவும், கதிர் கருகல் Burkholderia எனப்படும் பாக்டீரியா காரணமாகவும் ஏற்படுகிறது. 
  • பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி- இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் இருந்து பச்சை முதல் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும் பின்பு இந்த பகுதி கருகியது போன்ற காட்சி அளிக்கும். 

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான பகல் வெப்பநிலை 

  • பகல் மற்றும் இரவு நேரத்தில் காற்று ஈரப்பதம் அதிகமாக காணப்படுதல் 
  • நெருங்கிய பயிர் நடவு 
  • அதிக அளவிலான தழைச்சத்து உர பயன்பாடு 
  • மேக மூட்டமான சூழ்நிலை மற்றும் பயிர்கள் நிழற்பாங்கான இடத்தில் வளருதல்.

பாக்டீரியா கதிர் கருகல் நோயின் அறிகுறிகள்:

  • தானியங்களில் மிதமான பழுப்பு நிற மாற்றம் காணப்படும். 
  • ஆரம்பத்தில் வயலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும். 
  • பின்பு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக பரவும். 
  • நெல் மணியில் நிற மாற்றம் காணப்படுவதால், இதில் பல்வேறு பூஞ்சைகள் இரண்டாம் நிலை நோய் தொற்றாக காணப்படும். 
  • நோய் தொற்று காரணமாக கதிர்கள் அனைத்தும் கருப்பு நிறமாக காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கதிர்களில் உள்ள நெல் மணிகள் முழுமையாக பால் பிடிக்காமல் இருப்பதால், நெல் கதிர் செங்குத்தாகவே நிற்கும்.
  • நெல் மணியில் கதிர் நாவாய் பூச்சி சாற்றை உறிஞ்சுவதாலும் நிறமாற்றம் காணப்படும். ஆனால் அவற்றை நெல் கதிரில் உள்ள ஏதேனும் ஒரு சில மணிகளில் மட்டுமே நிறமாற்றம் காணப்படும். 
  • மேலும் கதிர் நாவாய் பூச்சி தாக்கிய வயலில் அதிக அளவு வெண்ணிற நெல் பணிகள் காணப்படும்.
  • சரியாக கவனிக்கப்படவில்லை எனில் இந்த நோய் தொற்று காரணமாக சுமார் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
  • இந்த நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து பயன்படுத்தப்படும் நெல்லின் முளைப்பு திறன் மிக மிக குறைவாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறை: 

  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது நோயை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து விதைகளை தேர்வு செய்யாமல் தரமான விதையை தேர்வு செய்ய வேண்டும். 
  • பருவத்திற்கு ஏற்றவாறு போதுமான அளவு பயிர் இடைவெளி அவசியம். 
  • குறிப்பாக பருவ மழை மற்றும் பனிப்பொழிவு காலங்களில் சற்று கூடுதலாக இடைவெளி விடுவது சால சிறந்தது. 
  • நெல் வயலில் இதர பயிர்களின் நிழல் நிழல் விழுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக பொட்டாசியம் சத்து இடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். 

  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • நெல் கதிர் வெளிவரும் நேரத்தில் நோய் தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வர வேண்டும்.
  • நெல் கதிர்கள் வெளிவரும்  பேசில்லஸ் சப்டிலிஸ் உயிரியல் திரவத்தை வாரம் ஒரு முறை தெளித்து வருவது மிக சிறந்தது.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் காப்பர் ஹைட்ராக்சைடு நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தெளிக்கலாம்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட வயலில் நோயை கட்டுப்படுத்துவது சற்று கடினமாகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

புதன், 23 ஜூலை, 2025

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது

  • மண் வளம் என்பது நீடித்த பயிர் வளர்ச்சி மற்றும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதாகும். மேலும் பயிர் வளர்ச்சிக்கு உகந்த பௌதீக, ரசாயன மற்றும் உயிரியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும்.
  • அளவுக்கு அதிகமான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மறந்து பயன்பாட்டால் மண் வளம் குன்றி வருகிறது. இதனால் மண்ணின் தன்மை, ஊட்டச்சத்து மற்றும் நீர் பிடிப்பு திறன், கார அமிலத்தன்மை, நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் காரணிகள் பாதிப்படைந்து மண்வளம் குன்றி வருகிறது.
  • அமிலத்தன்மை கொண்ட மண் என்பது அமிலத்தன்மை 5.5 க்கு குறைவாக உடைய மண் ஆகும். இந்த மண்ணில் நாம் சாகுபடி செய்யும் பொழுது ஏற்படும் சவால்களைப்பற்றி விரிவாக பார்ப்போம். 

அமிலத்தன்மை உடைய மண்ணில் ஏற்படும் சவால்கள்:

  • நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மற்றும் பெருக்கும் படிப்படியாக குறைந்து தீமை செய்யும் அதாவது நோய் தாக்குதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஓங்கி காணப்படும். 
  • இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் குறைவதால், ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மணிச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம்.
  • அதிக அமிலத்தன்மை காரணமாக மண்ணில் உள்ள அலுமினியம் மற்றும் மாங்கனிசு சத்துக்கள் கரைந்து விடுவதால் தேவைக்கும் அதிகமான இந்த ஊட்டச்சத்துக்கள் வேர்ப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக வேர் வளர்ச்சி குன்றி ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
  • மண் இறுக்கத்தன்மை மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத நில அமைப்பில் குன்றிய வேர்  மற்றும் பயிர் வளர்ச்சி, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவதால் பயிர் மற்றும் இதர கழிவுகளை மக்கச் செய்வது தொய்வு ஏற்படுகிறது. இதனால் மண்ணின் தன்மை பாதிப்படைவதுடன் மண் அரிமானம் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஊட்டச்சத்து மிகுந்த மேல் மண்ணை இலக்க நேரிடும். 
  • இதன் காரணமாக பயிர்கள் பல்வேறு விதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதால் மகசூல் ஏற்படும் அபாயம் உள்ளது. 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • மண்ணின் அமிலத்தன்மையை உயர்த்தி நடு நிலைத் தன்மைக்கு கொண்டு வர போதுமான அளவு சுண்ணாம்பு இடலாம்.
  • அதிக அளவு இயற்கை இடுபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் மண் தன்மை மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
  • மண் இறுக்கத்தன்மையை போக்க மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்க பசுந்தாள் உர பயிர்கள் அல்லது பல தானிய பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்யலாம். 
  • ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் குறிப்பாக அமிலத்தன்மை உடைய உரங்களை. 
  • அதிக அளவிலான மண்புழு உரம்/ தொழு உரம்/கடற்பாசி உரங்களை விடுவதன் மூலம் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பிரிந்து பயிர்களுக்கு கிடைக்க உதவி புரியும். மேலும் இது மண்ணின் இறுக்க  தன்மையை சரி செய்து வேறு வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
  • அமிலத்தன்மையை தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். 
  • வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

  • பயிர்களின் தேவையை அறிந்து அல்லது நோய் அல்லது பூச்சிகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை வாங்குவதற்கு முன்னதாக நாம் வாங்கும் கடை அரசின் மூலம் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • நல்ல நிறுவனத்தின் பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
  • பொருட்களை வாங்கும் பொழுது அதன் தரம், காலாவதி நாள் மற்றும் லேபிள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி உக்கிகளை தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீரில் கலந்து மாலை அல்லது காலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • மாலை அல்லது காலை வேளையில் தெளிப்பதன் மூலம் மருந்துகள் அதிக வெப்பநிலை காரணமாக ஆவியாகி வீணாவதை தடுக்கலாம். 
  • மேலும் இந்த நேரத்தில் இலை துளைகளின் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுவதால் மருந்துகள் எளிதில் இலைகளால் எடுத்துக் கொள்ளப்படும்.
  • மருந்துகளை தெளிப்பவர்கள் முக கவசம் மற்றும் இதர உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், காற்று வீசும் திசையில் சென்று தெளிக்க வேண்டும். 
  • தெளிக்கும் பொழுது வரிசை வரிசையாக சென்று இருபுறமும் உள்ள பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் மருந்துகள் முழுமையாக பயிர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தலாம். 
  • மருந்து அல்லது வளர்ச்சி ஊக்கி தெளிக்க உரிய தெளிப்பான் தேர்வு செய்து, மருந்துகள் இலையின் மேற்புறம் அல்லது அடிப்புரத்தில் பனித்துளி மாதிரி படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெளிக்கும் பொழுது  மருந்தின் செயல்பாடு மேம்படும்.
  • நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணிகள் பெரும்பான்மையாக இலைகளின் அடிபுரத்தில் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • தெளிப்பு மேற்கொண்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் மருந்துகள் நன்றாக செயல்படும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தக்காளியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மேலாண்மை

விளக்கம்:

  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் இந்த அறிகுறி பூ முனை அழுகல் நோய் என அழைக்கப்படுகிறது. 
  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 
  • குறிப்பாக கோடை பருவத்தில் பல்வேறு காரணங்களால் பயிர்களுக்கு  கால்சியம் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கப் பெறாமல் இருப்பதால் இந்த பூனை அழுகல் நோய் ஏற்படுகிறது. 

கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்: 

  • அதிக வெப்பநிலை 
  • நீர் பற்றாக்குறை, நீண்டகால வறட்சிக்கு பிறகு கிடைக்கப்பெறும் அதிக நீர்
  • அளவுக்கு அதிகமா தழைச்சத்து உரம் இடுதல் 
  • முறையற்ற வடிகால் மேலாண்மை 
  • மண்ணின்  அமிலத்தன்மை
  • மேற்கண்ட பல்வேறு காரணங்களால் போதுமான கால்சியம் சத்து மண்ணில் இருந்தாலும் பயிர்களால் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள இயலாமல் அல்லது போதுமான அளவு பயிரின் குருத்துப் பகுதி மற்றும் காய்களுக்கு சென்றடைவதில்லை   இதன் காரணமாக பூ முனை அழுகல் நோய் ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்: 

  • காய்களின் அடி புறத்தில் நீர்த்த புள்ளிகள் காணப்படும். 
  • நாளடைவில் இதை விரிவடைந்து காய்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு பரவும்.
  • பார்ப்பதற்கு அதிக வெப்பநிலை காரணமாக தோன்றிய அறிகுறி போன்று தெரியும்.

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து அடி உரமாக கொடுக்கப்பட வேண்டும். 
  • கோடை பருவத்தில் போதுமான அளவு நீர் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும் 
  • அப்போதுதான் எளிதில் கால்சியம் பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்டிப்பாக அறிகுறி தெரியும். 
  • பயிர்களை அதிக வறட்சிக்கு உட்படுத்தாமல் நீர் கொடுக்க வேண்டும்.
  • கோடை பருவத்தில் கண்டிப்பாக இலை வழியாக கால்சியம் ஊட்டச்சத்தை தெளித்து வர வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து இட வேண்டும்.
  • தோல் தடிமனாக உள்ள தக்காளி ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
  • அதிக அமிலத்தன்மை உடைய மண்ணில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதனை சரி செய்ய வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம்

    ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது கிடைக்கக்கூடிய அனைத்து பூச்சி கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதாகும். இது உயிரியல், வேதியல், இயற்பியல் மற்றும் பயிர் சார்ந்த கலாச்சார மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். இதில் மஞ்சள் ஒட்டு பொறியின் பயன்பாடு அளப்பரியது.

  • பயிர்களை தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துவது சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகும். உதாரணத்திற்கு வெள்ளை ஈக்கள், தத்துப்பூச்சி, இலை
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கும் இந்த மஞ்சள் ஒட்டும் பொறி பயன்படுத்தப்படுகிறது.
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயன்படுத்துவதன் அடிப்படை என்னவென்றால் இந்த வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம் மஞ்சள் நிறங்களை மிக நேர்த்தியாக கவர்ந்து வரும்.
  • மேலும் சாறு உறிஞ்சு பூச்சிகளின் உடலமைப்பு மற்றும் காற்று வீசும்  திசையில் பறப்பதால் மிக எளிதாக இந்த அட்டைகளில் ஒட்டி  அங்கேயே இறந்து விடுவதால் இதன் இனப்பெருக்கம் வெகுவாக குறைகிறது. 
  • மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் நாமே பண்ணையில் மஞ்சள் ஒட்டு பொறி தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் பூச்சி தாக்குதல் இல்லாமல் பயிரை பாதுகாப்பதுடன் வெகுவாக உற்பத்தி செலவு குறைக்கலாம். 
  • மேலும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களில் இதனை பயன்படுத்தி வெள்ளை ஈக்கள், பச்சை பூச்சி, தத்துப்பூச்சி மேலும் பல பூச்சிகளும் இதில் கவர்ந்து அழிக்கப்படுகிறது. 
  • இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களின் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. 
  • செலவின்றி தயாரித்து இதன் இருபுறத்திலும் மஞ்சள் நிறம் மற்றும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுத்தி காற்று வீசும் திசையில் பயிர்களின் கிடை மட்டத்திற்கு இணையாக கட்ட வேண்டும். 
  • சாறு உறிஞ்சும்  பூச்சிகள் பயிர்களின் மிக மென்மையான பகுதியை பெரும்பாலும் பாதிப்பதால் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டும் பொறியை பயன்படுத்துவதில் எந்தவித பயணம் அளிப்பதில்லை.
  • மஞ்சள் ஒட்டு பொறியில் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் தன்மையை பொறுத்து அடுத்தடுத்து கட்டுப்படுத்தும் முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தேவையின் அடிப்படையில் இந்த பொறியை மாற்றி வைப்பது சிறந்தது.
  • இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி செலவை குறைத்து பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: 

மஞ்சள் ஒட்டு பொறியின் பலனை முழுமையாக பெற கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.


  • அட்டையின் இருபுறமும் ஒட்டும் தன்மை இருக்க வேண்டும். 
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயிர்களின் உயரத்தில் இருந்து சுமார் 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரத்தில் நிறுவ வேண்டும். 
  • இவ்வாறு நிறுவப்படும் அட்டைகளை பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். 
  • அட்டைகளை கிடை மட்டமாக நிறுவ வேண்டும். இதன் மூலம் அதிக காற்று வீசும் போது அட்டைகள் வளையாமல் இருக்கும் மேலும் அதிக பூச்சிகளை கவரலாம்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை அட்டையில் இருக்கக்கூடிய பூச்சிகளை சுத்தம் செய்து மீண்டும் ஒட்டு பசை தடவ வேண்டும். 
  • இதன் மூலம் மஞ்சள் ஒட்டு பொறியின் முழு செயல் திறனை பெற இயலும் மேலும் அட்டையில் ஒட்டி இருக்கும் இறந்த பூச்சிகளினால் பூஞ்சை அல்லது பாக்டீரியா நோய் தொற்று பயிர்களுக்கு வருவதை  தவிர்க்கலாம். 
  • அட்டைகளை காற்று வீசும் திசைக்கு இணையாக கட்ட வேண்டும். அவ்வாறு நிறுவும் பொழுது பூச்சிகள் காற்று வீசும் திசைக்கு இணைந்து பறக்கும் போது எளிதில் இதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


Recent Posts

Popular Posts