தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...
|தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...
- தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பருவ மழை காலங்களில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் நோய் போன்ற காட்சி அளிக்கும் பூஞ்சை - பாசி வளர்ச்சியை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
- லிச்சென் (Lichen) என்பது பூஞ்சை மற்றும் பாசிகள் இணைந்து வளரும் அமைப்பாகும். இந்த உயிரினம் அடர் காடுகளில் மரத்தின் தண்டு பகுதி, பாறைகள், மண் மற்றும் இதர பொருட்களில் வளர்வதை நாம் காண இயலும்.
- இதில் காணப்படும் பூஞ்சை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து வளரும். பாசிகள் இதில் வளர்ந்து கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு கொடுத்து வாழும்.
- பல நூறு வகையான லிச்சென்கள் உள்ளன அவற்றில் குறிப்பிட்ட சில வகை குடும்பத்தில் காணப்படும் பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் மட்டுமே இந்தியாவில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன Graphina, Leptogium, Lecanora, Pyxine, Myriotrema, Porina. லிச்சென்கள் பல்வேறு நிறம் மற்றும் வடிவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லிச்சென் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலை:
- தொடர்ச்சியான மழை
- அதிக காற்று ஈரப்பதம்
- அளவுக்கு அதிகமான நிழல்
- போதிய காற்றோட்டம் இன்மை
- அடர் நடவு
- பராமரிப்பு இல்லாத தோப்புகள்
லிச்சென் வளர்ச்சி காரணமாக ஏற்படும் பாதிப்புகள்:
- லிச்சென்கள் நேரடியாக மரங்களை பாதிப்பதில்லை ஏனெனில் இதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தென்னை மரங்களை கிடைப்பதில்லை.
- நேரடியாக பயிர்களை பாதிக்காவிட்டாலும் கவனிக்கப்படவில்லை எனில் இந்த பூஞ்சை பாசி வளர்ச்சி படிப்படியாக பரவி மரத்தின் இலை பகுதியை தாக்கினால் பயிர் வளர்ச்சி தடைபடுவதுடன் மகசூல் இழப்பீடும் ஏற்படும்.
- மேலும் இது இதர பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- மரங்களுக்கு உரிய நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
- ஒன்று அல்லது இரண்டு ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் போதிய வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் மரத்தின் தண்டு பகுதிக்கு கிடைக்கும்.
- பாதிக்கப்பட்ட தோப்புகளில் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
- ஆரம்ப நிலை வளர்ச்சியின் பொழுது தண்ணீரைப் பீச்சி அடித்து இதனை அப்புறப்படுத்தலாம்.
- இந்த பூஞ்சை பாசிகளை கண்டிப்பாக சுரண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
- சுரண்டி எடுத்த பிறகு இந்த பகுதியில் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு உடன் ஓட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.
- தேவையின் அடிப்படையில் இந்த தெளிப்பை இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
- பிறகு தண்டு பகுதியில் சுண்ணாம்பு பூச வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy