google-site-verification: googled5cb964f606e7b2f.html பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 22 அக்டோபர், 2025

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரானது இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் பழப்பயிரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. வாழை மரங்கள் மென்மையான வேர் அமைப்புடையதாக திகழ்வதால் பருவமழை காலங்களில் தொடர் மழை அல்லது அதிக காற்று காரணமாக மரங்கள் சாய நேரிடலாம். குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மரங்கள் சாய்வதை சற்று குறைக்கலாம்.

  • வடிகால் வசதியை மேம்படுத்தி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். 
  • வாழைக் கன்றுகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதன் மூலம் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொண்டு அதிக காற்று நேரத்தில் சாயாமல் இருக்க உதவி புரியும்.
  • மேட்டுப்பாத்தியில் நடவு செய்திருந்தால் அதன் உயரத்தை சற்று அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எளிதில் நீர் ஓடி வழிந்து விடும். 
  • நோய் அல்லது பூச்சி தாக்கல் பாதிக்கப்பட்ட அடி இலைகளில் ஒன்று அல்லது இரண்டினை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மேல் இலைகளை அப்புறப்படுத்தவே தவிர்க்க வேண்டும். 
  • கன்றுகளின் உச்சிப் பகுதியில் உள்ள இலைகளை சற்று கிழித்து விடலாம் இது காற்று எளிதில் நுழைந்து வர உதவி புரியும். இதனால் பயிர்கள் சாய்வதை தவிர்க்கலாம். 
  • தார் தள்ளிய  மரங்களுக்கு கண்டிப்பாக மூங்கில் கலிகளை பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் காய்ந்த இலை அல்லது தண்டு பகுதி வயலில் அழுகுவதை தவிர்க்க வேண்டும். 
  • தற்சமயம் திகழும் தட்பவெப்ப சூழ்நிலை வேர் அழுகல், வாடல் நோய், தண்டு அழுகல் நோய், மஞ்சள் மற்றும் கருப்பு இலை புள்ளி நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது கிடைக்கப்பெறும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூஞ்சான  மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்த வேண்டும். 
  • இது பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தடுக்க உதவி புரியும் மேலும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும். 
  • கண்டிப்பாக தற்போது மண்ணைக் கிளறி ரசாயன அல்லது இயற்கை உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ரசாயன உரங்கள் இடுவதால் மிக எளிதில் கரைந்து வயலை விட்டு வெளியேறலாம் அல்லது மண்ணில் ஆழமாக சென்று பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலத்தடி நீருடன் கலக்கும். 
  • மண்ணைக் கிளறுவதால் வேர்களின் பிடிப்பு திறன் சற்று குறையும். இந்த மரங்கள் அதிக காற்று வீசும் போது எளிதில் சாயலாம். 
  • மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உதாரணத்திற்கு வரப்புகளை உயர்த்துதல், மூடாக்கு இடுதல் மற்றும் இதர. 
  • இதை அனைத்தும் பின்பற்றிய பிறகும் அதிக காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தால் உடனடியாக தங்களது பகுதி தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • இதன் மூலம் சாய்ந்த மரங்களுக்கு இழப்பீடு பெற வாய்ப்புள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மண்ணில் அமோனியம் சல்பேட் இடலாம். இது ஊட்டச்சத்து ஆகவும், நோய் பரவலை தடுக்கவும், காற்றில் உள்ள வெப்பநிலையை எடுத்து பயிர்களுக்கு கொடுக்கும் உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy?mode=wwc


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts