google-site-verification: googled5cb964f606e7b2f.html தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு மேலாண்மை

1. சமீப காலமாக தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இந்த புழு தக்காளி பயிரில் பிரதானமாகவும், அப்போது கத்திரி தாக்கு திறன் உடையது. 

🦋பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

1. மாலை மற்றும் இரவு நேரத்தில் தாய் அந்து பூச்சிகள் இலையின் அடி புறத்தில் முட்டைகளை இடும்.

2. இந்த அந்து பூச்சிகள் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். 

3. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள், இலை, தண்டு மற்றும் காய்களில் சேதத்தை ஏற்படுத்தும். 

4. கூட்டுப் புழுக்கள் பெரும்பான்மையாக மண்ணில் காணப்படும்.

5. மிக வேகமாக இனப்பெருக்கம் அடைந்து புழுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாக இருக்கும்.

🍃தாக்குதலின் அறிகுறிகள்:

1. இளம் புழுக்கள், இலை சுரங்க ஈக்களின் தாக்குதலை போலவே இலைகளின் பச்சையத்தை சுரண்டி பாதிப்பை ஏற்படுத்தும். 

2. பாதித்த இலைகள் கருகி காட்சியளிக்கும். 

3. பயிர் வளர்ச்சி குன்றி மகசூலும் இழப்பீடும் ஏற்படும். 

4. சற்று முதிர்ந்த புழுக்கள் பெரும்பான்மையாக காயை துளைத்து உண்ணும்.

5. காய்களில் புழுக்கள் சாப்பிட்ட எச்சங்கள் காணப்படும் சில நேரங்களில் தண்டு பகுதியையும் துளைக்கும். 

6. காய்கள் உதிர்வு மற்றும் காய்களின் தரம் பாதிப்பதால் நேரடியாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

🍅கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

1. பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 

2. முன் எச்சரிக்கைக்காக பூச்சி விரட்டி திரவங்கள் அல்லது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வரலாம். 

3. ஏக்கருக்கு ஒரு எண் விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் எரிய விட வேண்டும். 

4. ஒரே வயலில் தொடர்ச்சியாக தக்காளி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

5. தரமான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.

6. இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 12-16 எண்கள் நிறுவி பராமரிக்க வேண்டும்.

7. தக்காளி மற்றும் கத்தரி அல்லது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது பக்கத்திலோ சாகுபடி செய்ய வேண்டும்.

8. போதுமான அளவு கால்சியம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது பயிர்கள் புழு தாக்குதலை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 

9. உயிரியல் முறையில் கட்டுப்படுத்த Bacillus மற்றும் Beauveria போன்றவற்றை தனித்தனியாக தெளிக்க வேண்டும்.

10. களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

11. ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். Emammectin/ indocaxrb/ Chlortraniliprole/ Tetraniprole / Cyantraniliprole / Flubendamide 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts