google-site-verification: googled5cb964f606e7b2f.html தற்சமயம் மா சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 11 பிப்ரவரி, 2026

தற்சமயம் மா சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

தற்சமயம் சாகுபடியில் உள்ள மா மரங்களில் சுமார் 40 சதவீதம் (பகுதிக்கு ஏற்ப மாறுபடும்) வரை பூக்கள் எடுத்துள்ளதை நாம் அறிவோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

💧நீர் மேலாண்மை:

1. மிக காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விட வேண்டும். 

2. அதிக நீர்ப்பாசனம் இளம் இலைகளை ஊக்குவிக்கும் இதனால் பூ பிடிக்கும் திறன் குறையும்.

3. பெரும்பான்மையான மரங்கள் காய் பிடிக்கும் தொடங்கும் தொடங்கும் தருணத்தில் நீர் விடலாம்.

4. அதிக வெப்பநிலை காரணமாக மரங்கள் சோர்வடையும் நேரத்தில் சிறிதளவு நீர் பாய்ச்சலாம். 

5. அளவுக்கு அதிகமான நீர் பற்றாக்குறை ஏற்பட்டால்  மகரந்த சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

6. நீண்ட இடைவெளிக்கு பிறகு திடீரென அளவுக்கு அதிகமாக  நீர் பாய்ச்சினால் பூக்கள்  உதிர வாய்ப்புகள் உள்ளது. 

🥭ஊட்டச்சத்து மேலாண்மை:

1. தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது மிக மிக குறைவாக கொடுக்கலாம்.

2. அதிக தழைச்சத்துக் கொடுத்தால் சுமார் 40% வரை பூக்கள் உருவாவதை குறைக்கும்.

3. கால்சியம் மற்றும் போரான் ஊட்டச்சத்துக்களை இழை வழியாக தெளிக்கலாம்.

4. இவை இரண்டும் பூக்களின் ஆரோக்கியத்தை   உறுதிப்படுத்தும். 

5. இதனால் பூ மற்றும் காய்  உதிர்வு குறையும், மகரந்த சேர்க்கை அடைந்த  பூக்கள் காயாக மாறும். 

🌺பூப்பிடித்தலை ஊக்குவித்தல்:

1. பூ பிடித்தலை ஊக்குவிக்க இயற்கையாகவே பயிரில் வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தியாகும்.

2. மா போன்ற அதிக பூக்கும் திறன் உடைய மரங்களில்  இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி ஊக்கி போதுமானதாக இருக்காது. 

3. இந்த தருணத்தில் நாம் இடைவெளியாக தேவையான வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டும்.

4. இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் பஞ்சகவ்யா அல்லது தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். 

5. இரசாயன முறையில் தெளிக்க NAA பத்து லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி + போரான் + ஒட்டும் திரவம் ஆகியவற்றை கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

6. Cytocyme அல்லது Homobrassinolide அல்லது  கடல்பாசி உரம் அல்லது humic அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும்   தெளிக்கலாம்.

🥭காய் பிடிப்பு திறனை மேம்படுத்துதல்:

1. தேனீக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க ரசாயன மருந்துகள் தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

2. வயலில் களைகள் இருந்தால்  அதை அழிக்க ரசாயன மருந்துகள் எதுவும் தெளிக்க வேண்டாம். 

3. களைச் செடிகளில் பூக்கள் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் தேனீக்களின் வருகை  அதிகரிக்கும்.

4. ஏக்கருக்கு நான்கு எண் தேனீ பெட்டிகள் ஆங்காங்கே வைக்க வேண்டும். 

5. போரான் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்க வேண்டும்.

6. மேலும் பூச்சி நோய் கட்டுப்பாடு மிக அவசியம். 

🪰பூச்சி மேலாண்மை: 

1. தற்சமயம் தத்துப்பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இவை  பூங்கொத்துகளில் சாற்றை உறிஞ்சுவதால் கருகல் ஏற்படுகிறது.

3. மேலும்  கரும்பூஞ்சன நோய் தொற்றும் ஏற்படும்.

4. மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட பூங்கொத்துகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 

5. தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி விரட்டி திரவம் அல்லது உயிரில்  பூச்சிக்கொல்லியை பயன்படுத்தலாம்.

6. இதர புழு பூச்சிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்.

🌳நோய் மேலாண்மை:

1. பூங்கொத்து உருக்குலைவு மற்றும் பூங்கொத்து கருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

2. இந்த இரண்டு நோய்க்குமே மிக தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதியை அப்புறப்படுத்திவிட்டு சூடோமோனஸ் தெளிக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு  இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts