google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போஸர்) நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்


கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போஸர்) நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்: 

  • நாம் ஏற்கனவே வேஸ்ட் டீகம்போசர் அதாவது கழிவு சிதைப்பான் என்றால் என்ன அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும். அதன் பின்னர் உள்ள அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி விரிவாக பார்த்தோம் தற்பொழுது அதை பயன்படுத்தி எவ்வாறு நுண்ணூட்ட கலவை தயார் செய்வது என்று பார்ப்போம்.
  • இதன் அடிப்படையான விஷயம் என்னவென்றால் புரதம், நன்மை செய்யும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய வகைகள் அல்லது உணவுப் பொருட்களை கழிவு சிதைப்பான் உடன் கலந்து நொதிக்க விடுவதால் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு எளிதில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக பயன்களை நாம் பெற இயலும்.
  • 200 லிட்டர் கழிவு சிதைப்பான் நுண்ணூட்டக் கலவை தயாரிக்க சுமார் 190-200 லிட்டர் வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பல்வேறு பொருட்களை பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு தயார் செய்யப்படுகிறது.

தயாரிக்கும் முறை:

  • ஏதேனும் மூன்று எண்ணெய் வித்து பயிர்களின் விதைகள் தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது பகுதிகளில் கிடைக்கப்பெறும் விதைகளை எடுப்பது சால சிறந்தது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதுடன் விலையும் சற்று குறைவாக கிடைக்கும். உதாரணத்திற்கு நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் சோயா விதைகள்.
  • அதேபோன்று ஏதேனும் மூன்று பயிறு வகை பயிர்களின் விதைகளை தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை அல்லது கிடைக்க பெறும் விதைகள்.
  • நுண்ணூட்ட கலவையில் இரும்பு ஊட்டச்சத்தின் தேவையை நிவர்த்தி செய்ய நான்கு முதல் ஐந்து இரும்பு ஆணிகள் அல்லது சிறிதளவு இரும்பு குப்பைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தாமிர ஊட்டச்சத்தின் தேவையை நிவர்த்தி செய்ய தாமிர கம்பி (ஒயர்கள்) அல்லது செப்பு நாணயம் அல்லது செப்பு பாத்திரங்களின் சிதைந்த பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதேபோன்று துத்தநாக ஊட்டச்சத்திற்காக துத்தநாகத்தால் செய்யப்பட்ட பேட்டரி (மின்கலம்) இரண்டு அல்லது மூன்று எண்கள் பயன்படுத்தலாம்.
  • கைவசம் உள்ள அனைத்து விதைகளையும் நன்றாக அரைத்துக் கொண்டு அதனை 200 முதல் 250 லிட்டர் வேஸ்ட் டீகம்போசரில் கொட்டி நன்றாக கலக்கி விட வேண்டும்.
  • பின்னர் இரும்பு துகள்கள், தாமிர கம்பி மற்றும் துத்தநாக பேட்டரி ஆகியவற்றை வேஸ்ட் டீகம்போசரில் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து நன்றாக கலக்கி விட வேண்டும்.
  • கலவை தயார் செய்திருக்கும் டிரம்மை நிழற்பாங்கான இடத்தில் வைத்து அதனை பருத்தி துணியினால் இறுக்கமாக மூடி வைத்து தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை நன்றாக கலக்கி விட வேண்டும்.
  • சுமார் பத்து தினங்களில் வேஸ்ட் டீகம்போசர் நுண்ணூட்டக் கலவை தயாராகிவிடும்.

பயன்படுத்தும் முறை:

  • இதனை நீர்ப்பாசனம் வழியாக கொடுக்க ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீருடன் 50 லிட்டர் நுண்ணூட்ட கலவையை கலந்து மண்ணில் மிதமான ஈரப்பதம் இருக்கும் போது ஊற்றி விட வேண்டும்.
  • இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி கலந்தது மாலை வேளையில் தெளிக்கலாம்.

இதனை நாம் பயன்படுத்தும் நிலம் மற்றும் பயிர்களின் தன்மையை பொறுத்து இடு பொருட்களை மாற்றிக் கொள்ளலாம் அவ்வாறு மாற்றும் போது நொதிப்பதற்கான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். இது காய்கறி பயிர்கள் சாகுபடி செய்பவர்களுக்கும் மாடி தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

EM (திறன் மிகு நுண்ணுயிர்) கரைசல் தயாரிப்பு முதல் பயன்பாடு வரை

EM (திறன் மிகு நுண்ணுயிர்) கரைசல் தயாரிக்கும் முறை:

   ஈயம் கரைசல் என்பது பல்வேறு வகையான நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அடங்கிய திரவம் ஆகும். இதில் பிரதானமாக இருக்கக்கூடிய ஐந்து நுண்ணுயிரி வகைகள் Yeast, Photosynthetic bacteria, Actinomycetes, Lactic acid bacteria மற்றும் Fermenting fungi ஆகும். இதை நாம் இரண்டு வழிகளில் தயார் செய்யலாம்.

தயாரிக்கும் முறை 1: 

  • இது தாய் திரவத்தை பயன்படுத்தி ஈயம் கரைசல் தயார் செய்யும் முறையாகும். இதற்கு குளோரின் கலக்காத 20 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தாய் ஈயம் கரைசலை ஊற்ற வேண்டும். அதில் ஒன்று முதல் இரண்டு கிலோ நாட்டுச் சக்கரை கலந்து, அதனை மூடி நிழற்பாங்கான இடத்தில் சுமார் ஏழு நாட்களுக்கு வைத்திருத்தல் வேண்டும். 
  • தினமும் ஒரு முறை சுமார் ஐந்து வினாடி மூடியை திறந்து விட்டு பின்பு மூட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் காற்றுள்ள சூழ்நிலையில் வளரக்கூடிய நுண்ணுயிரிகளின் பெருக்கம் போதுமான அளவு இருக்கும். 

  • ஏழு நாட்களுக்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் திரவத்தின் மேல் வெள்ளை நிற பாலாடை போன்ற அமைப்பு காணப்படும் அதனை வைத்து ஈயம் கரைசல் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்யலாம்.

தயாரிக்கும் முறை 2: 

  • தலா 3 கிலோ நன்கு பழுத்த பப்பாளி, வாழைப்பழம் மற்றும் பரங்கி ஆகியவற்றை தோல் உரித்து கூல் போன்று தயாரித்து நன்றாக கலந்து வாளியில் எடுத்து கொள்ள வேண்டும். 
  • அதனுடன் மூன்று கிலோ நாட்டு சர்க்கரை மற்றும் 13 லிட்டர் தண்ணீர் கலந்து நிழற் பாங்கான இடத்தில் மூடி வைத்துவிட வேண்டும். 
  • ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இதன் மூடியை சில நொடிகள் திறந்து பின்பு மூட வேண்டும். இதேபோல் சுமார் ஐந்து முதல் ஆறு முறை பின்பற்ற வேண்டும். சுமார் 25 நாட்களுக்கு பிறகு கரைசல் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் முறை:

1. இலை வழியாக தெளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 150 முதல் 250 மில்லி ஈயம் கரைசல் பயன்படுத்தலாம்.

2. பாசன நீர் வழியாக கொடுப்பதற்கு 200 லிட்டர் தண்ணீரில் ஒன்று முதல் இரண்டு லிட்டர் ஈயம் கரைசல் கலந்து பயன்படுத்தலாம்.

இதன் நன்மைகள்:

  • பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்வதில் துணை புரிகிறது.
  • மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை செடிகள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றி கொடுக்கிறது.
  • மண்ணில் இருக்கக்கூடிய கழிவுகளை சிதைத்து மண்ணிற்கு நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்தித் தருகிறது.
  • இதனால் பயிர்களின் வேர் வளர்ச்சி சிறப்பாக காணப்படும்.
  • மண்ணில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை செயல்பட செய்கிறது.
  • பல்வேறு நோய், பூச்சி மற்றும் வைரஸ் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது.
  • மண்ணில் இருக்கக்கூடிய கன உலோகங்களை சிதைத்து மண்ணை தூய்மை படுத்துகிறது.
  • செடிகளுக்கு அதிக தழைச்சத்தை கிரகித்து கொடுப்பதுடன் இதனை ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
  • நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீரை தூய்மைப்படுத்துகிறது.
  • மொத்தத்தில் பயிர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்து அதிக மகசூல் பெற உறுதுணையாக இருக்கிறது.

ஈயம் கரைசலில் இருந்து நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்:

  • நமது வயலில் வளர்ந்த களைச் செடிகளை சேகரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுமார் 15 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு வாளியில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 
  • அதனுடன் தலா 100 மில்லி ஈயம் தாய் திரவம் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து வாளியை மூடி வைக்க வேண்டும். தினம் ஒரு முறை சில நொடிகள் வாளியை திறந்து விட்டு பின்பு மூடி விட வேண்டும். தொடர்ச்சியாக எட்டு நாட்களுக்கு எவ்வாறு செய்ய வேண்டும் ஒன்பதாவது நாளில் ஈயம் நுண்ணூட்ட கரைசல் தயாராகி விடும்.

ஈயம் Bokashi கரைசல் தயாரித்தல்:

  • தலா ஒரு கிலோ தொழு உரம், நெல் பதர் சாம்பல், கடலை புண்ணாக்கு, தேவையான அளவு தவிடு, 100 மில்லி தாய் ஈயம் கரைசல் மற்றும் 100 கிராம் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தேவையான அளவு நீர் கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். 
  • இதனை வாளியில் வைத்து தினமும் ஒரு முறை முடியை திறந்து மூட வேண்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு Bokashi தயாராகிவிடும். இதனை ஏக்கருக்கு 5 கிலோ விதம் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

கத்தரியில் சாம்பல் கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தரி பயிரில் அதன் மொத்த சாகுபடி செலவில் சுமார் 50 % தொகை குருத்து மற்றும் காய் துளைப்பான், சாம்பல் கூன் வண்டு ஆகிய இரண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு செலவிடப்படுகிறது. 
  • குருத்து மற்றும் காய் துளைப்பானை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். அதனை விரிவாக படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பார்க்கவும்.

https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2023/12/blog-post.html

  • சாம்பல் கூன் வண்டு பாதிப்பினால் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி இது வேர்களை இடையூறு செய்வதால் ஆரம்ப காலத்தில் பயிர்கள் இறந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
  • இதனால் பயிர் இழப்பீடும் ஏற்படுகிறது. இது வருடம் முழுவதும் பயிர்களை தாக்கும் வல்லமை கொண்டது.

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • முட்டை - முதிர்ந்த வண்டுகளால் வெளி மஞ்சள் நிற முட்டைகள் மண்ணில் ஆழமாக சுமார் 100 வரை இடப்படுகிறது.இதன் வாழ்நாள் 8-11 நாட்கள்.
  • இளம் புழு - வெளிர் மஞ்சள் நிறத்தில் மண்ணில் காணப்படும். இதன் வாழ் நாள் 5-40 நாட்கள் வரை காணப்படும்.
  • கூட்டு புழு - மண்ணில் சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காணப்படும்.
  • முதிர்ந்த வண்டு - வண்டுகள் சாம்பல் முதல் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் இறக்கை பகுதியில் நான்கு கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முதிர்ந்த வண்டு மற்றும் இளம் புழுக்கள் ஆகிய இரண்டு பருவமும் பயிர்களை தாக்கும் திறன் கொண்டது.
  • வண்டுகள் பயிர்களின் இலைகளை உண்டு அதன் விளிம்புகளில் அரை வட்ட வடிவில் அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
  • இளம் புழுக்கள் வேரின் நுனி பகுதியை கத்தரிப்பதால் பயிர்கள் ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துக் கொள்ள முடியாமல் வாடி இறந்து விடுகிறது. வாடிய தருணத்தில் இருக்கும் பயிர்களை கையில் எடுத்தால் எளிதில் நிலத்திலிருந்து வந்துவிடும்.
  • சில நேரங்களில் வேரின் மேற்பரப்பில் சுரண்டி உண்பதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • இளம் புழுக்களின் தாக்குதல் பயிர்கள் பூ பிடிக்கும் தருணத்தில் அதிகம் தென்படும். மற்ற பருவத்தை விட கோடை பருவத்தில் சற்று குறைவாகத்தான் இதன் தாக்குதல் தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு சுமார் 150 முதல் 200 கிலோ வரை வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடுவதால் வண்டுகளின் இளம் புழுக்கள் வேரை தாக்குவதில் இருந்து ஓரளவிற்கு விடுபடலாம். 
  • பூக்கள் பூக்கும் தருணத்தில் அதாவது நடவு செய்த சுமார் 45 லிருந்து 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணை கிளறி விட வேண்டும்.
  • செடிகளில் வண்டுகளின் பாதிப்பு தெரியும் போது அதனை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • அடி உரம் இடும்போது நன்கு மக்கிய தொழு உரத்துடன் உயிரியல் நூற்புழு கொல்லியான Heterorhabditis அல்லது Steinernima மற்றும் Metarhizium ஒன்று முதல் இரண்டு கிலோ பயன்படுத்தி ஊட்டமேற்றி பின்பு இட வேண்டும்.
  • இதே உயிரியல் திரவத்தை செடிகளின் 40 முதல் 90 நாட்கள் வரை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணில் மிதமான ஈரப்பதம் இருக்கும் போது வேர் பகுதியில் உற்ற வேண்டும்.
  • தொடர்ச்சியாக கத்தரி சாகுபடி செய்யும் வயலில் நிலப் போர்வை பயன்படுத்தி பயிர் செய்வதால் இளம் புழுக்களின் தாக்குதல் குறைந்து காணப்படுகிறது.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் அடி உரமாக ஏக்கருக்கு 10 கிலோ விதம் Carbofuran அல்லது Fibronil மருந்தை குருணை வடிவில் இடலாம்.
  • இலை பகுதிகளில் சாம்பல் கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிக்கலாம்.
  • இயற்கை வழி திரவங்களான 3G கரைசல், அக்னி அஸ்திரம், ஐந்திலை கரைசல், பிரம்மாஸ்திரம் போன்ற வாடை மிகுந்த திரவங்களை தெளிப்பதால் வண்டுகளை விரட்டலாம்.
  • இதை பயன்படுத்தும் போது தொடர்ச்சியாக ஐந்து முதல் ஏழு நாட்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.

  • ரசாயன மருந்துகள் பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இரண்டரை சுழற்சி முறையில் தெளிக்க பயன்படுத்தலாம்.
  • Ethion+Cypermethrin- 15-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Fenvalarate - 15-20 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Chlorpyriphos+ Cypermethrin- 25-40 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Lambda cyhlothrin - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Phenthoate - 15-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


செவ்வாய், 23 ஏப்ரல், 2024

மண் வளத்தை பாதுகாக்கும் வேஸ்ட் டீகம்போசர் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை

முன்னுரை:

  • மண் நமது பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வேர்கள் சுவாசிக்க காற்று, தேவையான தண்ணீர் மற்றும் பயிர்களின் வேர்கள் இறுக்கமாக பிடித்து வளர உதவி புரிகிறது.

  • வளமான மண் வளமான பயிரை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளமான மண் பயிர்களுக்கு தேவையான சராசரி கார அமிலத்தன்மை, ஊட்டச்சத்துக்கள், காற்றோட்ட வசதி, கரிம கார்பன்கள், நன்மை செய்யக்கூடும் நுண்ணுயிரிகளை கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் மண்ணிற்கு கிடைக்க வேஸ்ட் டீகம்போசர் (Waste Decomposer)பயன்படுத்தினால் சாத்தியமாகும்.

வேஸ்ட் டீகம்போசர் (Waste Decomposer) என்றால் என்ன...

  • வேஸ்ட் டீகம்போசர் என்பது நாட்டு பசு மாட்டு சாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல்வேறு வகை நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை கொண்ட கலவையாகும். இது National Center for Organic Farming என்ற மத்திய நிறுவனத்தால் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது மக்கக்கூடிய வேளாண் கழிவு/ உரங்களை மக்க வைத்தல், உயிர் உரமாகவும் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லியாகவும் செயல்படுகிறது.
  • 30 கிராம் எடை உடைய வேஸ்ட் டீகம்போசரின் விலை சுமார் 100 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் 10000 டன் எடையுடைய குப்பைகளை மக்கச் செய்யலாம்.

இதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்...

1. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்மில் தண்ணீர் நிரப்பி கொள்ளவும். அதில் இரண்டு கிலோ நாட்டு வெல்லம் கரைத்து வைத்திருந்த நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

2. இதில் வேஸ்ட் டீகம்போசர் 30 கிராம் ஐ கைப்படாமல் எடுத்து டிரம்மில் உள்ள நீரில் கலந்து நன்கு கலக்கி விடவும். கையில் எடுத்து பயன்படுத்தினால் அதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பாதிப்படையும்.

3. இதை துணியை வைத்து மூடி இறுக்கி கட்டி நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.

4. இதனை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் குச்சியை  பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும். சுமார் ஏழு தினங்களுக்கு பிறகு வேஸ்ட் டீகம்போசர்  தயாராகிவிடும். இதன் மேல் இருக்கும் வெள்ளை நிற நுரை மற்றும் அதன் நறுமணத்தை வைத்து தயார் நிலையில் உள்ளதை கண்டுபிடித்து விடலாம்.

இதை பயன்படுத்தும் விதம் மற்றும் நன்மைகள்:

மக்க வைத்தல்:

நிழற்பாங்கான இடத்தில் மக்கக்கூடிய பண்ணை கழிவுகள் அல்லது வேளாண் கழிவுகளை சுமார் 20 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்பி அதன் மேல் தயார் செய்த டீகம்போசரை நன்றாக தெளிக்க வேண்டும். இன்று மீண்டும் 20 சென்டிமீட்டர் உயரத்திற்கு மட்டும் குப்பைகள்/கழிவுகளை பரப்பி விட்டு அதன் மேல் டீகம்போசரை நன்றாக தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று அடுக்கு வரை குப்பைகளை இதுபோன்று பரப்பி விட்டு வாரம் ஒரு முறை நன்றாக கிளறி விட வேண்டும். தேவை இருப்பின் அவ்வப்போது கரைசலை தெளித்துக் கொள்ளலாம். சராசரியாக 60% வரை ஈரப்பதம் குப்பைகளில் இருக்க வேண்டும். சுமார் 40 முதல் 45 நாட்களில் குப்பைகள் நன்கு மக்கி விடும் பின்பு இதனை பயன்படுத்தலாம்.

உரமாகவும் மற்றும் மண் மண் வளத்தை மீட்கவும் பயன்படுத்துதல்:

  • தயார் செய்த வேஸ்ட் டீகம்போசரை ஏக்கருக்கு 200 லிட்டர் வரை என அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • இதை பயன்படுத்தினால் சுமார் 21 நாட்களுக்கு ரசாயன உரங்களை மண்ணிற்கு கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

  • இது மண் மற்றும் மண்ணில் காணும் மக்கக்கூடிய பொருட்களை சிதைத்து மண்ணின் கார அமில தன்மையை சரி செய்கிறது. இதனால் அநேக ஊட்டச்சத்துக்கள் செடிகள் எடுத்துக் கொள்ளும் வடிவில் விரைவில் மாற்றம் அடைந்து செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • இதனை 15 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம் தேவையின் அடிப்படையில்.

  • ஆறு மாதங்களுக்கு வேஸ்ட் டீகம்போசரை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் ஒரு ஏக்கரில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மண் புழுக்களை மண்ணில் உருவாக்க இயலும்.
  • இதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதிக உரம் மற்றும் பூஞ்சான கொல்லி பயன்பாட்டினால் மண்ணிற்கு ஏற்பட்ட தீங்குகள் 90% வரை நீங்க பெறும்.

விதை நேர்த்தியாக பயன்படுத்துதல்:

இதை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் அதிக முளைப்பு திறன் மற்றும் ஒருமித்த நேரத்தில் விதைகள் முளைப்பதை 98 சதவீத வரை அடைய முடிகிறது.

பயிர் பாதுகாப்பிற்கு பயன்படுத்துதல்:

  • பயிர்களில் காணப்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வைரஸ் தாக்குதலையும் எதிர்த்து உதவி புரிகிறது.
  • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இதனை முறையாக பயன்படுத்தினால் சுமார் 15 சதவீதம் வரை மகசூல் அதிகரிப்பை நாம் காண இயலும்.
  • 10 லிட்டர் தண்ணீருக்கு 50 முதல் 100 மில்லி வரை பயன்படுத்தலாம் பத்து நாட்கள் இடைவெளியில்.

இதன் பயன்பாட்டில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • நம்பகத் தன்மையுடைய நிறுவனம் அல்லது விவசாயிகளிடமிருந்து(இரண்டாம் நிலை கரைசல்) டீகம்போசரை பெற வேண்டும்.
  • நீர் வழியாக கொடுக்கும் பொழுது போது போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்க வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட நிலத்தில் குறைந்தபட்ச அளவிலாவது ஈரப்பதம் தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இலை வழியாக தெளிக்கும் போது கண்டிப்பாக மாலை வேலையில் மட்டும் தான் தெளிக்க வேண்டும். பயிரின் தன்மை மற்றும் சூழ்நிலையை பொறுத்து தெளிக்கும் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் அன்றாட விவசாய பணி தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்....
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

தக்காளியில் இலை சுருட்டு வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இலை சுருட்டு நோய் என்று விவசாயிகளால் அழைக்கப்படும் இந்த நோய் வைரஸ் பாதிப்பினால் ஏற்படக் கூடியதாகும். இதனை மஞ்சள் இலை சுருட்டு நோய் என்றும் கூறுவார்கள்.
  • கோடை பருவத்தில் தக்காளி பயிரை தாக்கும் பல்வேறு வகை சார்ந்த பூச்சிகளின் மிகவும் முக்கியமானதாக வெள்ளை ஈக்கள் கருதப்படுகிறது. 
  • வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சாரை உறிஞ்சுவதால் பல்வேறு அறிகுறிகள் தென்படுகிறது அதனுடன் இலை சுருட்டு வைரஸ் நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு விரைந்து கடத்துகிறது.

வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளின் நிறங்கள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் பச்சை நிறமாக மாற்றம் அடைதல்.
  • இலை விளிம்புகள் வெளி மஞ்சள் நிறமாக மாறுதல். இலைகள் தடித்தும், இலை நரம்புகளுக்கு இடையே பச்சை மற்றும் மஞ்சள் நிற மாறுதலும் காணப்படும்.
  • இலைகளின் வளர்ச்சி குன்றி இலை சிறிதாக காணப்படுதல்.
  • ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மேல்புறம் சுருண்டு காணப்படும்.
  • இளம் பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் செடிகள் அதிக பக்க கிளைகளுடன் புதர் போன்று காணப்படும்.
  • இதனால் பூ பிடித்தல் மிகவும் குறைந்தும் பூக்கள் உதிர்வதையும் காண இயலும். காய்களின் எண்ணிக்கை குறைவதுடன் அதன் அளவு  சிறிதாக காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • ஒரு சில தனியார் நிறுவன ரகங்கள் வெள்ளை ஈக்களை தாங்கி வளரும் தன்மை உடையது அதை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • வெள்ளை நிற நிலப் போர்வையை பயன்படுத்தி சாகுபடி செய்வதால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.
  • கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

  • வழக்கத்திற்கு மாறாக பயிர் இடைவெளியை சற்று அதிகப்படுத்த வேண்டும் அப்போதுதான் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.
  • தக்காளி நாற்றுகள் வாங்கும் போது வைரஸ் தாக்குதல் இல்லை என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.

  • ஏக்கருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறியை செடிகளின் கிடை மட்டத்திற்கு கட்டுவதால் வெள்ளை ஈக்களை வெகுவாக கவர்ந்து அழிக்கலாம்.
  • வெள்ளை ஈக்கள் பாதிக்காத கீரை வகைகள், பயிறு வகைகள் மற்றும் கொடி வகை காய்கறிகள் போன்றவற்றை ஊடு பயிராகவும் வரப்பு பயிராகவும் பயிரிடலாம்.
  • நிலத்தைச் சுற்றி அல்லது வயலை சுற்றி பச்சை நிற வலையை பயன்படுத்தி தடுப்புகள் ஏற்படுத்தலாம்.
  • ஒருவேளை செடிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு விட்டால் அந்த செடிகளை கண்டிப்பாக நிலத்திலிருந்து அகற்ற வேண்டும்.
  • பூச்சி தாக்குதலுக்கு முன்னதாக மீன் அமிலம் தெளித்தல், வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்தல், வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்துதல், தேர்மோர் கரைசல்,3G கரைசல் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.
  • வெள்ளை ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்திட இணைப்பில் கண்டுள்ள கட்டுரையில் உள்ள ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.

https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2023/12/blog-post_14.html


புதன், 17 ஏப்ரல், 2024

காய்கறி பயிர்களில் நூற் புழு தாக்குதலும் அதன் மேலாண்மையும்

நூற் புழுக்கள் எவ்வாறு இருக்கும்:

  • நூற் புழுக்கள் மண்புழு போன்ற உடலமைப்பை கொண்டது. இது மண், தண்ணீர், செடிகள், நுண்ணுயிர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றில் வாழும். இதன் பெரும்பான்மையான ரகங்கள்/வகைகள் கண்ணுக்குத் தெரியாது.
  • பயிர்களை தாக்கக்கூடிய நூற் புழுக்கள் மண் புழுவை போன்று உருண்டை வடிவிலும் அதன் இரு முனைகளும் கூர்மையாகவும் இருக்கும். இதன் நீளம் சுமார் 1-3 மில்லி மீட்டர் வரை இருக்கும்.
  • மற்ற விலங்குகளைப் போன்று இதற்கும் பெரும்பான்மையான உடல் உறுப்புகள் உண்டு ஆனால் சுவாச மற்றும் ரத்த ஓட்ட உறுப்புகள் இருக்காது.
  • பெரும்பான்மையான புழுக்களின் முன் பகுதி/ முகப்பு பகுதியில் ஊசி போன்ற அமைப்பை கொண்டிருக்கும். இதை பயன்படுத்தி தான் பயிர்களை தாக்குகிறது.

  • இதில் ஆண் மற்றும் பெண் புழுக்கள் இரண்டும் காணப்படும். ஆண் புழுக்களின் துணை இன்றி பெண் புழுக்கள் இனப்பெருக்கம் அடையும் தன்மை கொண்டது.
  • நூற் புழுக்களின் ரகம் மற்றும் அது வசிக்கும் சூழ்நிலையை பொறுத்து ஒரு பெண் புழு 200 முதல் 800 முட்டைகளை இடும். இதனால் சராசரியாக முப்பது நாட்கள் வரை இருக்கும் அதுவும் வகையைப் பொருத்தது.

நூற் புழுக்கள் செடிகளை எவ்வாறு தாக்குகிறது:

  • நூற் புழுக்கள் பயிர்களை இரண்டு வகையாக தாக்குகிறது. அதை பற்றிய விரிவாக பார்ப்போம்.
  • வேரின் மேற்பரப்பில் தாக்குதல்:
  • நூற் புழுக்கள் அதன் முகத்து பகுதியில் கொண்டிருக்கும் ஊசி போன்ற அமைப்பை வைத்து வேர் பகுதியை துளைத்து ஒருவித நொதியை செலுத்தி அங்கு இருக்கும் ஊட்டச்சத்துக்களை சிதைத்து சத்துக்களை உறுஞ்சி கொண்டு வாழ்கிறது.
  • இதில் காணப்படும் சிலவகை நூற் புழுக்கள் செடிகளின் இலைப்பகுதி, பூ மற்றும் காய் பகுதிகளையும் உண்டு வாழும். அதனை Foliar நூற் புழுக்கள் என்று கூறுவார்கள்.
  • ஆனால் பயிர்களின் வேர் பகுதியை நாம் ஆய்வு படுத்தினால் அதில் நூற் புழுக்கள் இருக்காது இது மண்ணில் தான் வாழும். எனவே நாம் மண்ணை பரிசோதித்தால் இதனை கண்டுபிடித்து விடலாம்.
  • வேர்களின் உட்பகுதியை தாக்குதல்:
  • இந்த வகை நூற் புழுக்கள் வேர் பகுதியை துளைத்த உள்ளே சென்று அங்கேயே தங்கிவிடும். இதனால் வேர்ப்பகுதியில் சிறு சிறு முடிச்சுகள் மற்றும் வேர்களில் வெடிப்பும் காண இயலும். சில வகை நூற் புழுக்கள் ஒரே இடத்திலும் மற்றவை அங்கும் இங்கும் வேரில் சென்று ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும்.

தாக்குதலின் அறிகுறிகள்:  

  • வேர்களில் வேர் முடிச்சுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படும்.(அனைத்து வகை நூற் புழுக்களுக்கும் பொருந்தாது)
  • தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து வேர் முடிச்சிகளின் எண்ணிக்கை மற்றும் அளவு காணப்படும்.
  • புதிய வெள்ளை வேர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து அல்லது சில நேரங்களில் புதிதாக உருவாகாமல் இருக்கும்.
  • கிழங்கு வகை பயிர்களை தாக்கும்போது கிழங்குகள் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட வேர்கள் சிறிய மற்றும் பெரிய வேர் முடிச்சுகளால் நாளடைவில் சிதைந்து விடும்.

  • வேர்கள் பழுப்பு முதல் காவி நிறத்தில் மாறி பின்னர் செடிகள் வாடி இறந்து விடும்.
  • தரை மட்டத்திற்கு மேல் உள்ள செடியின் பாகங்கள் பார்ப்பதற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போன்று தோன்றும்.
  • ஆரம்ப நிலை அறிகுறியாக பயிர் வளர்ச்சி குன்றியும் இலைகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
  • இளம் இலைகளின் ஓரங்கள் வெளிர் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
  • முதிர்ந்த இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிறத்தில் கருகி காணப்படும்.
  • பூக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் காய் பிடிப்பு திறன் குறைந்து காணப்படும்.
  • மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் அதன் தரமும் குறையும்.
  • தீவிரமாக தாக்கப்படும் போது செடிகள் இறந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • நூற் புழுவினால் பாதிக்கப்படாத விதைகள்/கன்றுகள்/நாற்றுகள் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • நூற் குழுவிற்கு புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்ட பயிர்கள் அல்லது இரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • நூற் புழுவால் பாதிக்கப்பட்ட வயலில் விதைகள், செடிகள் அல்லது மரங்களை நடும் முன் நிலத்தில் டிரைகோடெர்மா ஹர்சியானம் மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றைத் தெளித்து நிலத்தை நேர்த்தி செய்யலாம்.
  • கோடை பருவத்தில் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக அதாவது குறைந்தபட்சம் 20 சென்டிமீட்டர் ஆழத்தில் உழவு செய்வதால் மண்ணில் காணப்படும் நூற் புழுக்களின் பல்வேறு வாழ்க்கை படிநிலைகள் வெப்பத்தினால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • பாதிக்கப்பட்ட வயலில் இருந்து மண்/ நீர்/ செடிகள் வேறு வயலுக்கு செல்லா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் மற்ற வயலுக்கும் பரவிவிடும்.
  • நூற் புழுக்கள் பாதிக்காத/தாங்கி வளரக்கூடிய பயிர்களான வெங்காயம், எள், சோளம், பயிறு வகைகள் மற்றும் கீரை வகை பயிர்களை தேர்வு செய்து பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
  • கடைசி உழவின் போது ஏக்கர் ஒன்றிற்கு 3-6 கிலோ கார்போயூரான் + 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு (அ) புங்கம் புண்ணாக்கு இட்டு உழுதல் அவசியம்.
  • இயற்கை விவசாயத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 8 டன்கள் மற்றும் தலா 2 கிலோ சூடோமோனஸ் புளூரெசன்ஸ் + டிரைகோடெர்மா ஹர்சியானம் + Paecilomyces lilacinous மற்றும் போச்சோனியா  கலந்து அடியுரமாக பயன்படுத்தலாம்.
  • நிலத்தின் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியாக இருக்க வேண்டும் அதற்கு போதுமான அளவு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறும். 
  • மேலும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கப்பெறும் இதனால் செடிகள் நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு தன்மையை பெறும்.
  • நூற் புழுக்கள் தாக்குவதற்கு முன்னதாக சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் 5 கி/ லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 5 மி.லி./ லிட்டர் தண்ணீரில் கலந்து 30 நாட்களுக்கு ஒருமுறை தௌிக்க வேண்டும்.
  • மேற்கண்ட உயிர் பூச்சிக்கொல்லிகளை சொட்டு நீர் பாசனம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
  • தாவரங்களில் / செடிகளில் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிற இலைகள் காணப்படும் போது 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் டிரைகோடெர்மா ஹர்சியானம்,  Paecilomyces lilacinus மற்றும் போச்சோனியா கலந்து மாலை வேலையில் செடிகளின் வேர் பகுதி முழுவதும் நனையும் படி ஊற்றி விடவும்.
  • மேலே கூறியவற்றை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை என பின்பற்ற வேண்டும்.
  • மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தலா ஒரு லிட்டர் Paecilomyces lilacinous மற்றும் போச்சோனியா வாய்க்கால் வழியாக அல்லது சொட்டுநீர் பாசனத்தில் கொடுக்கலாம்.
  • நன்மை பயக்கும் நூற்புழுக்களான ஸ்பெல்ணெர்னேமா மற்றும் ஹெட்டெரோஸ்டிடிஸ் போன்ற சில வகையான நூற்புழுக்களை வயலில் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • Neoseiulus spp போன்ற வேட்டையாடும் பூச்சிகளை கவருவதால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • Fluopyrum - 2.5 ml/ lit - என்ற அளவில் வேரில் ஊற்றி ஆறு மாதங்கள் வரை மண்ணை கிளறாமல் இருப்பதால் நூற் புழுக்களை அழிக்கலாம்.
  • வேம்பு மற்றும் பூண்டு சாறுகளை வேரில் ஊற்றுவதாலும் நூற் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • சாமந்தி அல்லது கடுகு போன்ற பயிர்களை ஊடு பயிர் அல்லது வரப்பு ஓரங்களில் வளர்ப்பதால் இவை நூற் புழுக்களை கவர்ந்து பயிர்களில் ஏற்படுத்தும் தாக்குதலை குறைக்கும்.

இது போன்ற விவசாயம் சார்ந்த தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

திங்கள், 15 ஏப்ரல், 2024

லட்சத்தில் லாபம் தரும் எலுமிச்சை சாகுபடி

எவ்வாறு சாகுபடிக்கு உகந்தது:

  • நல்ல மகசூல் மற்றும் தகுந்த விலை கிடைக்கிறது.
  • வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது.
  • அதிக சுண்ணாம்பு மண்ணை தவிர அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மையுடையது.
  • மிகவும் குறைவான தண்ணீர் இருந்தால் போதும்.
  • மிகவும் வறட்சியான சூழ்நிலையையும் தாங்கி வளரும்.
  • மிகவும் குறைவான இடுபொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவினம்.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இதில் மிகவும் குறைவு.
  • கால்நடை, குரங்குகள் அல்லது மற்ற விலங்கினங்கள் செடிகள் அல்லது மகசூலை சேதம் செய்வதில்லை.

எந்த ரகம் சாகுபடி செய்யலாம்:

  • தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டு ரகங்கள்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒன்று நாட்டு ரகமான பெரியகுளம் 1 மற்றொன்று ஓட்டு ரகம் பாலாஜி ஆகும்.
  • பெரியகுளம் 1: திருநெல்வேலி மாவட்டம் கடயம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ரகம் வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது. வருடத்திற்கு சுமார் 3500- 4000 பழங்கள் கிடைக்கும். பழத்தின் எடை சராசரியாக 40-45 கிராம் இருக்கும். இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் மெல்லியதாகவும் காணப்படும். நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. பராமரிப்பது மிகவும் எளிது.
  • பாலாஜி: இது ஆந்திர மாநிலத்தால் வெளியிடப்பட்ட ரகம். இதன் இலைகள் கரும் பச்சை நிறத்தில் நாட்டு ரகத்தை விட இலைகள் சற்று பெரிதாகவும் மொத்தமாகவும் இருக்கும். வருடத்திற்கு சுமார் 2500 முதல் 3000 காய்கள் கிடைக்கும் ஒரு பழத்தின் சராசரி எடை 50 கிராம் இருக்கும். எளிதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படும். பராமரிப்பு மற்றும் உர செலவு அதிகம்.

எவ்வாறு நடவு செய்ய வேண்டும்:

  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து இரண்டு அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை நடவுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தயார் செய்து அதில் நன்கு மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, உயிர் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் ஆகியவற்றை இட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பயிர் இடைவெளி- 6 X 6 மீட்டர் (ஏக்கருக்கு 110 கன்றுகள்)

நீர் மற்றும் உர மேலாண்மை:

  • மண்ணின் தன்மையை பொறுத்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் விடலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தான் நீர் விட வேண்டும்.
  • சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவதால் கூடுதல் பலன்கள் உண்டு.
  • நாம் விடும் நீர் நேரடியாக தண்டுப் பகுதியை தொடக்கூடாது அவ்வாறு நெருங்கினால் பூஞ்சான நோய்கள் தாக்குதல் காணப்படும்.

  • வருடத்திற்கு நான்கு முறை உரம் இட வேண்டும். இயற்கை முறையில் உரம் இடுவது சிறந்தது. கண்டிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இட வேண்டும் குறிப்பாக காப்பர், இரும்பு, போரான், மாங்கனிசு மற்றும் துத்தநாக சத்துக்கள்.
  • விரிவான உர மேலாண்மை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

களை மேலாண்மை மற்றும் ஊடு பயிரிடுதல்:

  • முதல் ஐந்து வருடங்களுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் நீர் இருப்பதின் அடிப்படையில். இடையில் உழவு செய்தால் வேர்கள் பாதிக்காத வண்ணம் செய்ய வேண்டும்.
  • களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தவே கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் செடிகளின் காய்ப்பு திறனை பெரிய அளவில் குறைத்து விடும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்:

  • சொறி நோய், die back எனப்படும் கருகல், வைரஸ் நோய்கள்,அஸ்வினி, மாவு பூச்சி, சில்லிட் இலை சுரங்க புழுக்கள், வேர்ப்புழு மற்றும் சில நோய் மற்றும் பூச்சிகள் தாக்கும் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.
  • எலுமிச்சையில் காணப்படும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் கட்டுப்படுத்தும் முறையை நாம் ஏற்கனவே நமது whatsapp குழு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவாத்து செய்தல்:

  • மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிளைகளை மட்டும் வெட்டி அகற்றலாம் அதைத்தவிர எவ்வித கவாத்து பணியும் செய்யக்கூடாது.

மகசூல் மற்றும் லாபம்:

  • சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு செடிகள் முழு திறனில் காய் பிடிக்கும். செடிகளை நன்கு பராமரித்தால் செடி ஒன்றிற்கு சராசரியாக 4000 பழங்களை அறுவடை செய்யலாம்.
  • நன்றாக பராமரித்தால் எளிதாக வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ஒரு ஏக்கரில் இருந்து லாபம் எடுக்கலாம்.

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

பயிர்கள் வறட்சியை தாங்கி வளர உதவும் பிபிஎப்எம்(PPFMs) திரவ நுண்ணுயிர் உரம்

பிபிஎப்எம் (PPFMs) என்றால் என்ன...?

  • பிபிஎப்எம் என்பதை ஆங்கிலத்தில் Pink Pigmented Facultative Methylotrophs என்பார்கள்.
  • தமிழில் கூற வேண்டுமென்றால் இளம் சிகப்பு நிற மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியாக்களை கொண்ட நுண்ணுயிர் திரவம் என்று கூறுவார்கள்.
  • நுண்ணுயிர்கள் என்பது கண்ணுக்கு புலப்படாத மிகச் சிறிய உயிரினங்கள். உதாரணத்திற்கு பூஞ்சானங்கள், பாக்டீரியாக்கள், நுண் பாசிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இதில் அடங்கும். இதில் நன்மை செய்யும் மற்றும் தீங்கு செய்யும் ஆகிய இரண்டும் அடங்கும்.
  • பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் பயிர்களின் வேர் பகுதியில் பயிர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து பயிர்களுக்கு நன்மை பயக்கும் என கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வேர் மண்டல நுண்ணுயிர்கள் என்கிறோம் அதனை ஆங்கிலத்தில் Rhizosphere என்பார்கள்.
  • அதேபோன்று சில வகை பாக்டீரியாக்கள் பயிர்களின் இலைப் பகுதிகளில் பயிர்களின் உதவியால் வாழும் தன்மை படைத்தது பயிர்களின் அந்த இலை பகுதியை ஆங்கிலத்தில் Phyllosphere பகுதி என்று கூறுவார்கள்.
  • இந்த பாக்டீரியாக்கள் இளம் சிகப்பு நிறத்தில் இருப்பதால் இதற்கு Pink Pigmented என்ற பெயரையும் கூடுதலாக அழைக்கிறோம்.

இதன் பணிகள்:

  • பயிர்களின் இலைப் பகுதியில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் பயிர்களின் வளர்ச்சியின் போது வெளியேறும் கரிம வாயுக்கள், மெத்தனால் மற்றும் ஆல்கஹாலை எடுத்துக் கொண்டு உயிர் வாழ்கிறது. 
  • இது கார்பன் ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிரிகளுக்கு கொடுக்கிறது. எனவே தான் இந்த வகை பாக்டீரியாக்களை நாம் மெத்தைலோட்ரோபிக் (Methylotropic) பாக்டீரியா என்று கூறுகிறோம்.
  • பதிலுக்கு இந்த வகை பாக்டீரியாக்கள் பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான ஆக்ஸிஜன்(Auxin), ஜிப்ரலின்(Gibberellin) சைட்டோகைகின்(Cytokinin) ஆகியவற்றை கொடுக்கிறது.

பயன்கள்:

  • இதை விதைகளின் முளைப்பு திறன் மற்றும் ஒருமித்த தருணத்தில் விதைகள் முளைப்பதை மேம்படுத்துகிறது.
  • பயிர்களின் வேர், தண்டு மற்றும் இலை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  • பயிர்கள் அதிக வறட்சி, அதிக வெப்பநிலை, மிகவும் குறைந்த வெப்பநிலை போன்ற பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளை தாங்கி வளர உதவி புரிகிறது.

  • பூ பிடித்தலை அதிகப்படுத்தி பூ உதிர்வை குறைக்கிறது. விளை பொருட்களின் தரம், எடை, சுவை, நிறம் முதலியவற்றை மேம்படுத்துகிறது.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் பெறுகிறது.
  • ஒட்டுமொத்தமாக பயிர்களின் மகசூலை 10 - 20% அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் விதம்:

  • விதை/நாற்று நேர்த்தி - தேவையான அளவு
  • இலை வழியாக தெளித்தல் - ஏக்கருக்கு 150 முதல் 200 மில்லி
  • நீர் வழியாக கொடுத்தல் - ஏக்கருக்கு 500 மில்லி
  • பயிர்களின் தன்மை மற்றும் வாழ்நாள் பொறுத்து 40 முதல் 50 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தலாம்.

இது போன்ற பயனுள்ள தகவல் மற்றும் பயிர் சாகுபடி தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


மாவு பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

முன்னுரை:

  • தொடர்ச்சியாக நிலவும் மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக நாளுக்கு நாள் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. அதில் விவசாயிகளுக்கு மிகவும் சவாலாக இருப்பதில் மாவு பூச்சி தாக்குதலும் ஒன்று.
  • மாவு பூச்சி என்பது ஒரு வகை சாறு உறிஞ்சும் பூச்சி. அதாவது மனிதர்களை கடிக்கும் கொசுக்களை போன்று வாய் பாகங்களை கொண்டிருக்கும். 
  • இதன் வாய் பகுதியில் இருக்கும் ஊசி போன்ற அமைப்பை  செடிகளில் செலுத்தி சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தும்.

பூச்சியின் உடல் அமைப்பு:

  • இது முட்டை வடிவில் சுமார் 4 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். இதன் உடம்பு மேல் சிறிய உரோமங்கள் காணப்படும். அதன் மேல் வெள்ளை நிற மெழுகு போன்ற அமைப்பு சூழ்ந்திருக்கும்.
  • இதனால்தான் நாம் தெளிக்கும் எந்த ஒரு வகை மருந்துகளும் நேரடியாக பூச்சிகளை தாக்குவதில்லை. ஏனெனில் உடம்பு மேல் இருக்கும் போர்வை போன்ற வெள்ளை நிற மெழுகு நாம் அடிக்கும் மருந்துகளால் கரைவதில்லை அதனால் மருந்துகள் பூச்சிகளை சென்றடைவதில்லை.

தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:

  • மிதமான வெப்பநிலையில் இருந்து அதிக வெப்ப நிலைக்கு சூழ்நிலை மாறும் போது இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • செடிகளில் தளிர் வளர்ச்சியின் போது அதிகம் காணப்படும்.

எந்தெந்த பயிர்களை இது தாக்கும்:

  • ஆரம்பத்தில் ஒரு சில பயிர்களை மட்டும் உண்டு வாழ்ந்த மாவு பூச்சிகள் தற்போது காய்கறி பயிர்கள், பழ பயிர்கள், தானிய வகைகள், சிறுதானிய பயிர்கள்,  அலங்கார தாவரங்கள், மலர் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள், பயிர் வகை பயிர்கள் மர பயிர்கள் மற்றும் பல்வேறு வகையான களைகளையும் உண்டு வாழ்கிறது.
  • சொல்ல வேண்டும் என்றால் இது தாக்காத பயிர்களை தான் நாம் கணக்கிடுவது எளிது.

மாவு பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • மாவு பூச்சியில் பல்வேறு வகைகள் உள்ளன உதாரணத்திற்கு மா மாவு பூச்சி, எலுமிச்சை மாவு பூச்சி, பருத்தி மாவு பூச்சி, நீண்ட வால் மாவு பூச்சி, அன்னாசி மாவு பூச்சி, கரும்பு மாவு பூச்சி என பல்வேறு பெயர்களில் எண்ணற்ற இனங்கள் இதில் காணப்படுகிறது.
  • முட்டை: முதிர்ந்த பெண் மாவு பூச்சிகள் பை போன்ற அமைப்பு கொண்ட உருவத்தில் சுமார் 500 முதல் 600 வெள்ளை முட்டைகளை செடிகளின் குருத்துப் பகுதி, இலை பின் புறம், தண்டு, கிளை மற்றும் தண்டு பட்டை பகுதியில் இடுகிறது. சில நேரங்களில் மண்ணிலும் வேர் பகுதியிலும் இடம்.
  • இளம் பூச்சி: சுமார் நான்கில் இருந்து எட்டு நாட்கள் ஆன முட்டைகள் வெடித்து அதில் இருந்து வரும் இளம் புழுக்களை நிம்ஸ் என்பார்கள். இது வெள்ளை முதல் இளஞ்சிகப்பு நிறத்திலும் காணப்படும். முட்டையில் இரந்து வெளிவரும்  பெரும்பான்மையான இளம் புழுக்கள் பெண்ணாக இருப்பதால் இதன் இனப்பெருக்கம் அதிவேகமாக இருக்கும்.
  • இந்தப் புழுக்கள் வேகமாக நகர்ந்து வேறு இடங்களுக்கு செல்லும். இதன் வாழ்நாள் சுமார் 20 லிருந்து 25 நாட்கள்.
  • கூட்டுப் புழு மற்றும் முதிர்ந்த புழுக்கள்: சுமார் இரண்டு முதல் மூன்று நாட்கள் கூட்டிட்டு புழுவாக இருந்து பின்னர் முதிர்ந்த புழுக்களாக மாறும். வருடத்திற்கு சுமார் 12-13 தலைமுறைகளை நாம் காண இயலும்.
தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்படும் பயிர்களின் தன்மையைப் பொறுத்து அறிகுறிகள் சற்று வேறுபடும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பொதுவான ஒன்றாகும்.
  • இளம் மற்றும் முதிர்ந்த புழுக்கள் செடிகளின் பல்வேறு பகுதிகளில் சாற்றை உறிஞ்சும்.

  • இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இது சாறு உறிஞ்சும் இடத்தில் அதிக எண்ணிக்கையில் குழுக்களாக புழுக்கள் இருப்பதை காணலாம்.
  • ஒரு சில பயிர்களில் இலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சுவதால் இதன் மூலம் சுரக்கப்படும் தேன் கீழ் இருக்கும் இலையின் மேற்பரப்பில் படலமாய் படர்கிறது.
  • இதனால் இலையின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி காணலாம். இது இலைகளின் உற்பத்தி திறனை பாதித்து மேலும் செடி வளர்ச்சியை தடை செய்கிறது.
  • இந்தத் தேன் போன்ற திரவங்களை சுவைக்க எறும்புகளும் செடிகளை வந்தடைகிறது.
  • மேலும் இந்த எறும்புகள் புழுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று தாக்குதலின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் எறும்புகள் பல்வேறு வகையான இயற்கை எதிரிகளிடமிருந்து மாவு பூச்சியை பாதுகாக்கிறது.
  • பயிர்களின் அனைத்து பகுதிகளையும் தாக்கி செடிகளை சோர்வடையச் செய்து உற்பத்தியை 100 சதவீதம் வரை கூட தடை செய்கிறது.
  • ஒரு சில பயிர்களில் இது தீங்கு விளைவிக்கக் கூடிய திரவங்களைச் செடிகளுக்கு அனுப்பி விரைவில் அதனை இறக்கச் செய்கிறது.
  • மேலும் விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

வியாழன், 4 ஏப்ரல், 2024

நெல் சாகுபடி - கால அட்டவணை (சராசரியாக 120 நாட்கள்)

இரகம் தேர்வு செய்தல்

•தங்களது பகுதிகளில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் இரகம்

இதனால் சாகுபடி தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் தீவிரம் குறைவாக காணப்படும்.

விளை பொருட்களை எளிதில் விற்பனை செய்ய இயலும் மற்றும் நல்ல விலை கிடைக்கும்.

விதை தேர்வு

இரகத்தினை பொறுத்து மாறுப்படும்.

உதராணத்திற்கு - மேம்படுத்தப்பட்ட இரகம் வீரிய ஒட்டு இரகம் (10-15 கிலோ/ஏக்கருக்கு)நடுத்தர மற்றும் அதிக வாழ்நாள் இரகம் (30-40 கிலோ) பாரம்பரிய இரகம் (50-60 கிலோ)

தேர்வு செய்யப்பட்ட இரகங்களில் கிடைக்கப் பெறும்  Foundation Seeds எனப்படும் ஆதார விதை 1 அல்லது ஆதார விதை 2 பயன்படுத்துவது சிறந்தது.

ஏனெனில் இதில் அதிக முளைப்பு திறன், ஒருமித்த பயிர் வளர்ச்சி, இனத்தூய்மை மற்றும் பல நன்மைகள் உள்ளது. இதன் விதைகள் வெள்ளை அட்டையால் அங்கீகாரம் செய்திருக்கும்.

ஆதார விதைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில்   சான்றளிக்கப்பட்ட விதைகளை (Certified seeds) பயன்படுத்தலாம் இது நீல நிற அட்டையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

விதை நேர்த்தி

•பெறப்பட்ட விதைகளை மிதமான காலை/மாலை வெப்பநிலையில் சுமார் 10-15 நிமிடம் உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதனை தேவையான அளவு நீரில் கொட்டி மிதக்கும் தரமற்ற விதைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தரமான விதைகளை சாக்கு/கோணி பையில் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 6 முதல் 8 மணி நேரம் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வைத்திருக்கும் போது முளைப்பு திறன் காணப்படும்.

விதை நேர்த்தி செய்ய விரும்பினால் நெல்லின் அளவை பொறுத்து தேவையான அளவு அரிசி கஞ்சியுடன் ஏக்கருக்கு தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து சுமார் 15-30 நிமிடம் வரை உலர வைத்து பின்பு விதைக்கலாம்.

மேற்கண்ட முறையை நெல் விதைகளை முளைப்பு விடுவதற்கு முன்பும் பின்பற்றலாம் அவ்வாறு இருப்பின் நேர்த்தி செய்த விதைகளை சுமார் 8-12 மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம்.

இராசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு 1 கிலோ நெல் விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் என்ற வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்

•நல்ல மண் வசதி மற்றும் நீர் பிடிப்பு திறனுடைய இடத்தை தேர்வு செய்து நாற்றங்கால் பண்ணை அமைக்கலாம்.

1 ஏக்கர் சாகுபடிக்கு சுமார் 7-8 சென்ட் நிலப்பரப்பு, நாற்றங்கால் அமைக்க தேவை.

நாற்றங்கால் பகுதிக்கு தேவையான அடி உரங்களான தொழு உரம் 200-250 கிலோ, 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5-7 கிலோ DAP, 1 கிலோ கடல் பாசி/ஹியூமிக் குருணை மற்றும் 300 கிராம் VAM ஆகியவற்றை இட்டு தேவையான அளவு நீர் பாய்ச்சி நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும்.

இதில் தேவையான அளவு நீளம் மற்றும் 1.5 மீட்டர் அகலமுடைய சேற்று மேட்டு பாத்தி (நிலத்திலிருந்து சுமார் 1inch உயரத்திற்கு) அமைக்க வேண்டும்.

இதில் தயார் செய்து முளைப்பு வந்திருக்கும் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். இதில்; 5 மில்லி மீட்டர் உயரத்திற்கு நீர் பாய்ச்சி அதனை காய்ந்த வைக்கோல் அல்லது துணிகள் பயன்படுத்தி மூடி வைப்பதால் நல்ல முளைப்பு திறன் காணப்படும் மற்றும் வெயில் தாக்கத்தினால் நாற்றுகள் கருகாது.

நாற்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியாக நீரின் அளவை அதிகப்படுத்தவும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்

 

வேர்களில் புழு அல்லது பேன்: வளர்ச்சியின்மை, திட்டு திட்டாக மஞ்சள் நிறமாக மாறுதல், நாற்றுகள் இறத்தல் - 1 கிலோ Fibronil குருணை இடவும்.

வேர் அழுகல் இலைப்புள்ளி /குலைநோய்: சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா ஆகியவற்றை இலை வழியாகவும் நீர் மூலமாகவும் கொடுக்கலாம்.

புழுக்கள் மற்றும் சாறுண்ணி பூச்சிகள்: வேப்ப எண்ணெய்/வேப்பங்கொட்டைவிதை கரைசல்/பிவேரியா/ வெர்டிசீலியம் தெளிக்கலாம்.

களை கட்டுப்பாடு:

விதைப்புக்கு முன் அல்லது விதைத்த 3 நாட்களுக்குள் களை கொல்லி பயன்படுத்தலாம்.

முடிந்த வரை இராசாயணக் களைகொல்லி பயன்படுத்தாமல் அவ்வப்பொழுது நாற்றுகளில் காணப்படும் களைகளை கையால் அகற்றவும்.

நடவு வயல் தயார் செய்தல்

•நிலத்தை 2 முறை எதிர்எதிர் திசையில் உழவு செய்யவும்.

பசுந்தாள் உரம் மடக்கி உழுதிருந்தால் தொழு உரம் அளவை பாதியாக குறைத்து கொள்ளலாம்.

அடி உரம்: மக்கிய தொழு உரம் 4 டன்/ஏக்கர் அல்லது 2 டன் மண்புழு உரம்/கம்போஸ்ட் உடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம்பாஸ்போபாக்டீரியா மற்றும் 4 கிலோ VAM ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 15 நாட்கள் ஊட்டமேற்றி இடவும்.

தேவையின் அடிப்படையில் இதனுடன் உயிர் உரம்/பூச்சி/பூஞ்சான கொல்லியை பயன்படுத்தலாம்.

நிலத்திற்கு நீர்பாய்ச்சி சேர் உழவு செய்து மட்டம் செய்ய வேண்டும்.

•40-50 கிலோ தழைச்சத்து, 110-130 கிலோ மணிச்சத்து, 20-25 கிலோ சாம்பல் சத்து, நுண்ணூட்ட கலவை 5-10 கிலோஜிங்க் சல்பேட் 10 கிலோ ஆகியவற்றை அடி உரமாக இட வேண்டும்.

தழைச்சத்துமணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை 18:46:00 (DAP), 20:20:00:13 (Factomphos), Rock Phosphate அல்லது ஏதேனும் கலப்பு உரம் பயன்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதில் எந்தெந்த உரங்களை எவ்வளவு இடலாம் என்று தங்களது பகுதிகளில் கிடைக்கப்பெறும் உரத்தினை பொறுத்து தேர்வு செய்யவும்.

0 நாள்

ரகத்தினை பொறுத்து 18-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை (சரியான தருணம் 4 இலை உடைய பயிர்கள்) பிடிங்கி தயார் நிலையில் வைக்கவும்.

1-ம் நாள்

ரகத்தினை பொறுத்து 3-8 பயிர்கள் நடவு வயலில் சுமார் 1.5 inch ஆழத்தில் நடவு செய்யவும். இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி நில அமைப்பு, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் ரகத்தை பொறுத்து 15-20 cm இடைவெளி இடவும்.

3-5 ம் நாள்

•களைகள் முளைப்பதற்கு முன்னால் தெளிக்க கூடிய களை கொல்லிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்

1.Pertilachlor 37% - 600மி /ஏக்கருக்கு

2.Butachlor       - 500 கிராம் /ஏக்கருக்கு

3. Pertilachlor     - 600மி /ஏக்கருக்கு +

                  Metsulfuron methyl + Chlorimuron ethyl    8 கிராம்/ஏக்கருக்கு

4.Bensulfuron Methly +Pertilachlor 4 கிலோ/ஏக்கருக்கு

மேற்கண்ட களை கொல்லிகள் தவிர பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகிறது. பயன்படுத்து முன் நமது வயலின் தன்மைதட்பவெப்ப சூழ்நிலை மற்றும் களைகளை பொறுத்து தேர்வு செய்து பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

7-8 ம் நாள்

நடவு செய்யப்பட்ட வயலில்  இறந்த செடிகள்/விடுப்பட்ட இடம் /இதர சேதங்களால் ஏற்பட்ட பயிர் இழப்பீட்டை  பூர்த்தி செய்ய இடை நடவு மேற்கொள்ளவும்.

15-20 ம் நாள்

மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றும் போது செடிகளில் போதுமான தூர்கள் கண்டிப்பாக காணப்படும்.

தவறும் பட்சத்தில் நிலத்தை காயவிட்டு 10 லி தண்ணீருக்கு கீழ்க்கண்ட மருந்துகளை கலந்து தெளிக்க வேண்டும். (Profenophos/Quinalphos 25ml + jivagro/Paushak-25ml+ALL 19-30 gram)

20-25 ம் நாள் (தூர்கள் வெடிக்கும் தருணம்)

•களைகள் ஏதேனும் தென்பட்டால் கை களை எடுக்கலாம் அல்லது கோனோ வீடர் பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.

நடவு செய்த 3 முதல் 5 நாட்களில் களை கொல்லிகள் பயன்படுத்தவில்லை என்றால் கீழ்க்கண்ட களை கொல்லிகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

1.Bispyribac sodium 100-150கிலோ/ஏக்கருக்கு

2.Florpyrauxifen benzyl+ Cyhalofop butyl500 மி/ஏக்கருக்கு

3.Triafamone + Ethoxysulfurol - 60-80கிராம்/ஏக்கருக்கு

30-35 ம் நாள்

25 கிலோ தழைச்சத்து, 15-25 கிலோ மணிச்சத்து மற்றும் 15-20 கிலோ சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.

இத்தருணத்தில் குருத்து பூச்சி, இலை சுருட்டு புழுஆணைக் கொம்பன் மற்றும் தாள் பூச்சி அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த Cartap hydrochloride /Fibronil /Flubendiamide /Chlorantraniliprole ஏதேனும் ஒன்றை தேவையான அளவு பயன்படுத்தவும்.

நோய்யை பொறுத்த வரை இலைப்புள்ளி> குலை நோய் மற்றும் கருகல் நோய் தென்பட வாய்ப்புள்ளது. Carbendazim/Azoxystrobin+Mancozeb/tricyclazole/Tebuconazole+Tricylostrobin நோயினை பொறுத்து ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

40-45 ம் நாள் (கருதுகள் தொண்டையில் இருக்கும் தருணம்)

குருத்து மற்றும் தாள் பூச்சிகளின் தாய் அந்து பூச்சிகள் அதிகம் வயலில் இருக்கும் தருணத்தில் விளக்கு பொறி மற்றும் மஞ்சள் ஒட்டு அட்டைகளை  பயன்படுத்தலாம். அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 4 கிலோ Fibronil அல்லது Cartap hydrochloride SG குருணை இடவும்.

45-50 ம் நாள்

•பயிர்கள் போதுமான அளவு வளர்ந்து பூக்கள் வரும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கி மற்றும் தேவையான நோய்/பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் ஒருமித்த பூ பிடித்தல் மற்றும் கதிர்கள் வருவதை காணலாம்.

55-65 ம் நாள் (மணிகள் பால் பிடிக்கும் தருணம்)

25 கிலோ தழைச்சத்து> 10-20 கிலோ சாம்பல் சத்து மற்றும் தேவையான அளவு சல்பேட்

இத்தருணத்தில் கீழ்க்கண்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் காணப்படும்.

1. தண்டு துளைப்பான் – Cartap hydrochloride -150-250 கிராம்/ஏக்கர்

2. புகையான்            - Pymetrazine 80-100 கிராம்/ஏக்கர்

3. கதிர் நாவாய் பூச்சி     - Malathion 300-400 மிலி/ஏக்கர்

4. பாக்டீரியா இலைக்கருகல் – Stroptomycin -10 கிராம்/ஏக்கர்

5. மஞ்சள் கரிப்பூட்டை     - Propiconozole 100 மிலி/ஏக்கர்

80-90  ம் நாள்

செடிகளில் உள்ள கதிர்கள் முதிர்ச்சி அடையும் தருணம்.

75-85 ம் நாள்

பயிர் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் பணிகள்.



இது போன்ற தகவல் மற்றும் மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

Recent Posts

Popular Posts