google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 8 ஜனவரி, 2024

செண்டு மல்லியில் நுனிக் கிள்ளுதலின் பயன்கள்

ஏன் செய்ய வேண்டும்:-

  • துளிர் முனையில் அக்சின் எனப்படும் வளர்ச்சி ஊக்கியின் அளவு அதிகமாக இருப்பதால் செடிகள் போதுமான அளவு பக்க கிளைகள் விடமால் நேராக மேல் நோக்கி வளர்கிறது.
  • பக்கவாட்டு மொட்டுகள் நுனி மொட்டை விட வளர்ச்சி ஊக்கினால் அதிக செயல்திறன் கொண்டவை. 
  • இருப்பினும் பக்கவாட்டு மொட்டுகளை விட, தளிர்முனைகள் அதிக அளவு ஆக்சின் கொண்டுள்ளதால் பக்கவாட்டு மொட்டுகளால் வளர முடியாமல் போகிறது.

  • நுனியை கிள்ளுவதால் தளிர் முனையில் உள்ள ஆக்சின் நீக்கப்படுவதால் பக்கவாட்டு மொட்டுகளில் உள்ள ஆக்சின் செயல்பட்டு அதிக கிளைகளை வெளி தள்ளும்.

எப்போது எப்படி செய்ய வேண்டும்:-

  • நடவு செய்த 30-40 நாட்கள் ஆன அல்லது 30 cm உயரம் உள்ள செடிகளின் நுனி குருத்து மற்றும் மொட்டுகளை கிள்ளி எடுத்தல் வேண்டும்.

  • பின்பு GA3 150 ppm அல்லது  NAA 150ppm தெளிக்க வேண்டும்.

பயன்கள் :-

  • மேம்படுத்தப்பட்ட செல்பிரிவு, செல் அளவு மற்றும் ஒளிச்சேர்க்கை.
  • அதிக எண்ணிக்கையிலான முதன்மை மற்றும் இரண்டாம் பக்க கிளைகள்.
  • நல்ல தண்டு தடிமன்.
  • அதிக எண்ணிக்கையிலான இலைகள் மற்றும் இலைப்பரப்பளவு.
  • போதுமான செடியின் உயரம்.
  • அதிக எண்ணிக்கையில் பூக்கள் மற்றும் பூவின் அளவு.
  • 25-50% முதல் கூடுதல்மகசூல் கிடைக்கபெறும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

சனி, 6 ஜனவரி, 2024

மக்காச்சோளத்தில் குருத்து அழுகலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மக்காசோளத்தில் பாக்டீரியா தண்டு அழுகல்:

 தமிழ்நாட்டில் மானாவரி மற்றும் நீர் பாய்ச்சல் முறையில் மக்காசோளம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

 ஒரு சில இடங்களில் தட்ப வெப்பம் மற்றும் இதர காரணங்களினால் பாக்டீரியா தண்டு அழுகல் காணப்படுகிறது. கவனிப்பற்ற வயல்களில் 98% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

நோய் தோன்றுவதற்கான காரணங்கள்:

  • வெப்பநிலை சராசரியாக 32-35*C நிலவுதல்
  • அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் அடிக்கடி மழைப்பொழிவு
  • வெயில் நேரத்தில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் நீர்பாய்ச்சுதல்
  • செடிகளின் குருத்துகளில் உரமிடுதல்/ மருந்துகள்/ நீர் தேங்குதல்
  • ஏரி அல்லது ஆற்று நீரை பயன்படுத்துவதாலும் இந்நோய் வரலாம்.
  • ஒரே வயலில் சோளம், கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை தொடர்ச்சியாக சாகுபடி செய்வதாலும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நுனி தண்டு மற்றும் இலை உறைகளில் வெளிர் பழுப்பு நிறமாற்றத்தை ஆரம்ப நிலையில் காணலாம்.
  • நாளடைவில் தண்டுகளின் நடுப்பகுதி மற்றும் அடுத்தடுத்த இலை உறைகளுக்கு பரவும்.
  • தீவிரமடைபோது குருத்துகள் மற்றும் இலைக்காம்பு/ உறை அழுகி காணலாம்.
  • அழுகிய பகுதியிலிருந்து துர்நாற்றம் வெளிவரும்.
  • தண்டின் நுனிப்பகுதியை இழுத்தால் எளிதில் கையில் வந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டுகளை பிளந்து பார்த்தால் சற்று நிறமாற்றம் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • தொடர்ந்து பயிர்களை கண்காணித்தல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகத்தை தேர்வு செய்து பயிரிடுதல்.
  • தெளிப்பு நீர் அல்லது வெயில் நேரங்களில் நீர்ப் பாய்ச்சுதலை தவிர்த்தல்.
  • அதிக தழைச்சத்து உரத்தை தவிர்த்து நுண்ணூட்டச்சத்தை அதிகப்படுத்துதல்
  • மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்தினை அதிகமாக இடுதல். (தலா 80-100கி / 1ஏக்கர்)
  • இந்த வகை பூஞ்சாணம் மண்ணில் அதிக நாட்கள் இருப்பதால் Bacilus மற்றும் Pseudomonas உயிர் பூஞ்சாணம் கொண்டு ஊட்டமேற்றி தொழு உரமிட வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் மற்றும் கால்சியம் ஹைப்போ குளோரைடு ஏக்கருக்கு 10 கிலோ மண்ணில் இட வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு - 2.5-3 கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • அல்லது Streptomycin - 0.2 கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு - 1கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

பாக்கில் குருத்து / மொட்டு அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பாக்கில் குருத்து/மொட்டு அழுகல் :

 Phytopthora எனப்படும் பூஞ்சாணத்தால் ஏற்படும் மொட்டு அழுகல் நோய் நவம்பர் முதல் டிசம்பர் மற்றும் தொடர்ச்சியான மழைப்பொழிவு இருக்கும் தருணத்தில் காணப்படுகிறது. 

 அதிக மழைப்பொழிவு மற்றும் காற்றின் ஈரப்பதம் இந்நோய் தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது. இதனால் 50-100% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் செடிகளும் இறக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி/அடி இலைகள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும்.
  • நாளடைவில் இந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறும்.
  • வெளி இலைகளிலில் இருந்து மேல்நோக்கி அடுத்தடுத்த இலைகளுக்கும் இந்த நோய் தாக்குதல் பரவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை பிடுங்கினால் எளிதில் கையில் வந்துவிடும்.
  • தண்டிலிருந்து வெளிவரும் இடத்தில் இலைகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
  • இலைகள் மற்றும் மொட்டுகள் அழுகுவதால் செடிகள் இறக்க நேரிடும்.
  • தீவிரமாக பாதிக்கப்படும் மரங்களின் பூங்கொத்துகளும் பாதிக்கப்பட கூடும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • வயலை களைகள் மற்றும் குப்பைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி அப்புறப்படுத்தவும்.
  • மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின்பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.
  • Trichoderma viride உயிரியல் நோய் எதிர்ப்பு காரணியை நோய் தாக்குதலுக்கு முன் பயன்படுத்துவதால் 65% வரை தாக்குதலை தவிர்க்கலாம்.
  • உயிரியல் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான Trichoderma, Pseudomonas மற்றும்  Bacillus தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் புதிய வேர் வளர்ச்சி மற்றும் குருத்துகளில் இருந்து புதிய இலைகள் காணலாம்.
  • மருதாணி இலை சாறுகளை தெளிப்பதால் நோய் தாக்குதல் பரவுவதை தடுக்கலாம்.
  • கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு பூஞ்சாண கொல்லியை பருவ மழைக்கு முன் அல்லது பின் தெளிக்கவும்.

  • Dimethomorph     - 1g /lit water
  • Fosetyl Aluminium - 2.5g /lit water
  • Metalaxyl     - 2g /lit water

  • கீழ்க்கண்ட கலவையில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் வேரில் ஊற்றவும்.
  • Fibronil - 2.5ml+COC – 2.5g
  • Chlorpyriphose - 3-5 ml +COC -2.5g
  • Chlorpyriphose- 3-5 ml + Fosetyl Aluminium – 2.5g
  • Fibronil -2.5 ml + Metalaxyl – 2.5g
மேலும் தகவலுக்கு கீழ் கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்....



வெள்ளி, 5 ஜனவரி, 2024

நிலக்கடலை விதை நேர்த்தியில் கவனிக்கப்பட வேண்டியவை

கடலையில் விதை நேர்த்தி:

  • புதிதாக சாகுபடிக்கு கொண்டுவரப்பட்ட நிலம்/ குறைந்த மண் வளம்/ தொடர்ச்சியாக பயிரிடப்படும் வயல்களில் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் விதைப்புக்கு 20-30 நிமிடங்களுக்கு முன்னதாக 1 லிட்டர் அரிசி கஞ்சியில் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் டிரைக்கோடெர்மா கலந்து விதை கடலையில் கலந்து சற்று நிழலில் உலர வைத்து விதைப்பதால் தழைச்சத்து நிலை நிறுத்துதல், போதுமான மணிச்சத்தை செடிகளுக்கு கிடைக்கப்பெறுதல் மற்றும் பல்வேறு நோய் தாக்குதலை கட்டுப்டுத்துகிறது.
  • மண் மூலமாகவும், விதை மூலமாகவும் பரவும் நோய் தாக்குதல் அதிகம் உள்ள நிலத்தில் 200 கிராம் கார்பென்டாசிம் + மான்கோசெப் மருந்தினை ஒரு ஏக்கருக்கான விதையுடன் நன்கு கலந்து சற்று நிழலில் உலர வைத்து நடவு செய்வதால் கடலையில் தோன்றும் வேர் அழுகல், கழுத்து அழுகல், இலைப்புள்ளி நோய் மற்றும் பல்வேறு நோய்த் தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
  • அல்லது டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் டிரைக்கோடெர்மா ஹார்சியானம் தலா 5 கிராம்ஃ ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் நேர்த்தி செய்து விதைக்கலாம்.
  • வேர் கரையான், சாறு உறுஞ்சி பூச்சிகள் மற்றும் வெள்ளை/ சானி புழு தாக்குதல் காணப்படும் வயல்களுக்கு விதைகளை இமிடாக்ளோபிரிட் 2 மில்லி மற்றும் குளோர்பைரிபாஸ் 5 மி.லி. என்ற அளவில் ஒரு கிலோ விதை பருப்புகளுக்கு நேர்த்தி செய்து சிறிது நேரம் கழித்து விதைக்கலாம்.
  • ஒரு சில கடலை இரகங்கள் அறுவடை செய்து 150 நாட்கள் வரை உறக்கத்தில் இருக்கும் தன்மை பெற்றவை. அது போன்ற இரகங்களுக்கு 5 மிலி. Ethrel-ஐ ஒரு லிட்டர் தண்ணீரிலி; கலந்து விதைகள் மீது தெளித்து சிறிது நேரம் கழித்து விதைக்கவும்.
  • அல்லது விதை ப்ரைமிங் செய்யலாம். இம்முறையில் ஈரமான மணலில் தேவையான விதைக்கடலையை 24 மணி நேரம் ஊற வைத்து நடுவதால் நல்ல முளைப்பு திறன் முதல் ஒருமித்த வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பது முதலிய நன்மைகளை பெறலாம்.

வருமானம் தரும் மகோகனி மரம் வளர்ப்பு

மகோகனி மரம் வளர்ப்பின் பயன்கள்:

  • சில மலைப்பகுதிகளை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாகுபடிக்கு உகந்தது.
  • அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் தண்ணீர் தேங்குவதை தாங்கி வளரக் கூடியது.
  • தரிசு நிலத்தை பயிர் சாகுபடிக்கு கொண்டு வருதல், குறைந்த பராமரிப்பு மற்றும் முதலீட்டில் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு
  • ஊடுபயிர் செய்து கூடுதல் வரமானம் பெறலாம்.
  • மரத்தின் நிறம், ஆயுள் மற்றும் வலிமை காரணமாக மிகுந்த சந்தை தேவைகள்.
  • குறைந்தபட்ச தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவு.
  • மரம் - படகுகள், தளவாடங்கள், இசைக்கருவிகள், சிலைகள் மற்றும் அலங்கார பொருட்கள்  தயாரிக்கப்பயன்படுகிறது.
  • விதைகள் -  டானிக் மருந்துகள் தயாரித்திடவும்
  • இலைகள் - நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய் சிகிச்சையிலும் பயன்படுகிறது.
  • பூச்சி விரட்டிகள் தயாரித்திடவும் பயன்படுகிறது.
  • சோப்பு, பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலைகளிலும் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுகிறது.

செலவினம் விபரம்  : (1 ஏக்கருக்கு)

1.

நிலம் தயார் செய்தல் (உழவு மற்றும் சமன் செய்தல்)

7500/-

2.

நுண்ணீர் பாசனம் நிறுவுதல்

42500/-

3.

செடிகளின் விலை (ரூ.50-250 எண்கள்)

12500/-

4.

குழி எடுத்தல், தொழு உரம் மற்றும் நடவு செய்தல்

15000/-

5.

நீர் பாய்ச்சுதல் மற்றும் களைகள் மேலாண்மை

10000/-

6

பக்க கிளைகள் அகற்றுதல்

8000/-

7

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

5000/-

8

இதர செலவினம்

10000/-

 

கூடுதல்

110500/-

 

2-ம் வருடம் முதல் செலவினம்

25000/-

வருமானம்   : (12-15 ம் வருடம்)

1.

மரத்தின் சராசரி உயரம்

70-80 அடி

2.

தண்டின் சுற்றளவு

1.5 -2 அடி

3.

கட்டையின் அடர்த்தி

18-22 சதுர அடி

4.

ஒரு சதுர அடியின் அன்றைய விலை

750/-

5.

ஒரு மரத்தின் வருமானம்

15000/-

6

ஒரு ஏக்கரில் வருமானம் (250 மரங்கள்)

3750000/-

7

மொத்த செலவினம் (ஒரு ஏக்கருக்கு)

485500/-

8

நிகர இலாபம்

3264500/-

சவால்கள் :

Ø அதிக காற்றினால் மரம் சாயும் வாய்ப்புகள் உள்ளன.

Ø ஆழமற்ற மற்றும் கடினமான மண்ணில் வளரம் மரங்கள் அதிக பக்க கிளைகளை தோற்றுவிக்கும்.

Ø நெருக்கமாக நடவு செய்தால் மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தண்டின் தடிமன் குறையும்.

வியாழன், 4 ஜனவரி, 2024

வெண்டையில் மஞ்சள் இலை/தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்ற பிரதான பயிர்களின் வரிசையில் முக்கியமான பயிராகும்.
  • வெண்டை இந்தியளவில் அதிகம் சாகுபடி செய்யப்படுவதுடன் நுகர்வோர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.பல்வேறு வகையான நோய்கள் வெண்டை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை மதிப்படையை செய்தாலும் சில நோய்கள் மட்டுமே விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 
  • அது போன்று ஒருவகை நோயான மஞ்சள் தேமல் நோயை பற்றி நாம் இன்று விரிவாக காண உள்ளோம். இந்த தேமல் நோயினை எதிர்கொள்ள தேவையான  முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றாமல் உள்ள வயல்களில் சுமார் 80 சதவீதம் கூட மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்த வைரஸ் நோயானது வெயில் காலங்களில் அதிகம் காணப்பட்டாலும் சில வருடங்களாக அனைத்து பருவத்திலும் செடிகளை தாக்குவதுடன் வரன்முறை இல்லாமல் பயிர்களின் ஆரம்ப காலம் முதல் அறுவடை காலம் வரை இந்த நோய் பாதிப்பை நாம் காண இயலும்.சாறு உறிஞ்சும் பூச்சான வெள்ளை ஈக்கள் மூலமாக இந்த நோய் பரவுகிறது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.
  • நுனி இலைகளின் நடு மற்றும் பக்க நரம்புகள் மஞ்சள் நிறமாக மாறுதல் அடையும்.
  • பின்பு நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள இலை பச்சையங்களும் மஞ்சள் நிறமாக மாறும்.
  • இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் திட்டுத்திட்டாக காணப்படுவதால் இதனை மொசைக் நோய்  என்பார்கள்.
  • இதனால் செடிகளின் உணவு உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் முழுமையாக மஞ்சள் நிறத்திலும் இலைகள் சுருண்டும் காணப்படும்.
  • புதிய தளிர், பூக்கள் மற்றும் காய் உற்பத்தி மிகக் குறைவாகவே காணப்படும் சில நேரங்களில் காய்கள் ஒழுங்கற்ற வடிவில் தோன்றும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாம் அனைவரும் அறிந்ததே வைரஸ் நோய்களை சரி செய்ய இயலாது ஆனால் வைரஸ் செடிகளை தாக்காமல்  அல்லது பரவாமல் பார்த்துக்கொள்ள இயலும்.
  • முடிந்தவரை வெயில் காலங்களில் வெண்டை சாகுபடியை தவிர்ப்பது நல்லது.
  • சாகுபடி செய்யும் பட்சத்தில் இந்நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட வீரிய ஒட்டு ரகங்களை வாங்கி பயன்படுத்தலாம்.
  • கோடை காலங்களில் விதைக்கும் போது அடி உரமாக வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  • வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமான பயிர் இடைவெளி விடுவதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் போது வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி நோய் பரவாமல் இருக்க இது உதவி புரியும்.
  • செடிகளின் ஆரம்ப நிலையிலிருந்து ஏக்கருக்கு 10 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறியை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
  • தழைச்சத்து அதிகம் இடுவதை தவிர்த்து மற்ற இயற்கை உரங்கள்  மற்றும் நுண்ணூட்ட உரங்களை போதுமான அளவு  பயன்படுத்த வேண்டும். இது செடிகளுக்கு போதுமான அளவு எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடியது.
  • வயலை சுற்றி சாமந்தி, சூரியகாந்தி,செவ்வந்தி போன்ற மஞ்சள் நிற பூக்கும் செடிகளை நடுவதால் வெள்ளை ஈக்களை கவருவதுடன் நன்மை செய்யும் பூச்சிகளையும் வயலில் அதிகப்படுத்துகிறது.
  • வயலை சுற்றி சாமந்தி, சூரியகாந்தி,chrysanthemm, போன்ற மஞ்சள் நிற பூக்கும் செடிகளை நடுவதால் வெள்ளை ஈக்களை கவருவதுடன் நன்மை செய்யும் பூச்சிகளையும் வயலில் அதிகப்படுத்துகிறது.
  • கோடை காலங்களில் கண்டிப்பாக நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்த வேண்டும். அதாவது எப்போதுமே மண்ணின் அடி ஈரம் இருக்குமாறு நீர் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் போதுமான வெப்பம் செடிகளை தாக்காமல் இருக்கும் இதனால் வெள்ளை ஈக்களின் தொல்லையும் குறையும்.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் கீழ்க்கண்ட இயற்கை முறை பூச்சி  விரட்டுகளில் ஏதேனும் இரண்டினை தேர்வு செய்து சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும்.

    • வேப்ப எண்ணெய்- 3-5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • வேப்பங்கொட்டை விதை கரைசல்- 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • 3G கரைசல்- 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • Beauveria - 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • நன்கு புளித்த தயிரை 10 லிட்டர் தண்ணீர் 50 கிராம் கலந்து தெளிக்கலாம்

  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தவும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளையே அப்புறப்படுத்துவது நல்லது

  • பயிர்கள் மிக நெருக்கமாக இருத்தல் மற்றும் அதிக களைகள் வயலில் இருப்பதால் வெள்ளை ஈக்கள் எளிதில் பெருக்கம் அடைந்து தாக்குதலை தீவிரப்படுத்தும் எனவே களைகளை அவ்வப்போது அகற்றுவது சிறந்தது.
  • கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள கீழே காணும் லிங்கை சொடுக்கவும்.


புதன், 3 ஜனவரி, 2024

நிலக்கடலையில் விதைத்தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

கடலையில் விதைத்தேர்வு :

  • நடவு செய்யப்படும் பருவம், தங்களது பகுதியில் நிலவும் மண் தன்மை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உள்ளூர் அல்லது உயர் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை தாங்கி வளரக்கூடிய அல்லது எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  • தேர்வு செய்த இரகங்களை வேளாண்மை துறை அல்லது அறிவியல் ஆராய்ச்சி நிலையம் அல்லது வேளாண் கல்லூரி அல்லது பல்கலைக் கழங்களிலிருந்து பெறப்பட வேண்டும். 
  • ஏனெனில் இந்த விதைகள் சான்றிதழ் பெறப்பட்டதால் இரகத்தின் உறுதி மற்றும் முளைப்புத்திறனில் நம்பகத்தன்மை இருக்கும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் அப்பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகளால் சாகுபடி செய்யக்கூடிய ரகமாக  இருக்கும் பட்சத்தில் எளிதில் விற்பனை செய்திடவும் மேலும் அதில் ஏற்படும் சந்தேகங்களை மற்ற விவசாயிகளிடம் கலந்து யோசிக்கவும் இயலும்.
  • ஒருவேளை தேர்வு செய்யப்பட்ட இரகத்தின் விதைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது எனில், அறுவடை செய்து 45-150 நாட்கள் மட்டுமே ஆனதா என உறுதி செய்ய வேண்டும்.
  • 45 நாட்களுக்கு குறைவான விதை நிலக்கடலையில் ஒருமித்த முளைப்பு மற்றும் அதிகப்படியான முளைப்பு திறனை எதிர்பார்க்க இயலாது.
  • அதே போன்று 150 நாட்களுக்கு மேற்பட்ட விதை நிலக்கடலையை தேர்வு செய்யும்போது முளைப்பு திறன் மிகவும் குறைவாக காணப்படும்.
  • பெறப்பட்ட விதைக்கடலை முளைப்பு திறனுக்கு உட்படுத்த வேண்டும். இவை குறைந்தது 90% முளைப்புத் திறன் இருக்க வேண்டும். இல்லையெனில் விதையின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
  • 200 கிலோ விதைக்கடலையை உடைத்தால் அதிலிருந்து நல்ல விதை பருப்பு சுமார் 50-80 கிலோ வரை மட்டுமே பெற முடியும்.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைக்கடலைகள் 7.2 மி.மி விட்டமுள்ள சல்லடைக் கொண்டு சலித்து நல்ல பருமனான நோய் தாக்காத பெரிய விதைகளையே விதைக்க பயன்படுத்த வேண்டும்.
  • இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலையை உடைக்கும் போது எப்போது உடைக்கப்பட்டது என்ற விபரம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்
  • பெறப்பட்ட விதை கடலை நடவுக்கு 3-4 நாட்களுக்கு முன்னதாக உடைத்து விதைக்கடலையை பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
  • இதனை சல்லடை கொண்டு சலிக்கும்போது ஒரு கிலோ விதைபருப்பிலிருந்து 80-100 கிராம் விதைகள் நீக்கப்படும்.
  • உடைந்துபோன, சுருங்கிய, வற்றிபோன மற்றும் நோய் தாக்கிய பருப்புகளை நீக்கி விடவேண்டும்.
  • நாம் தேர்வு செய்யும் ரகத்தினை பொறுத்து அதற்கு பயன்படுத்தும் களைக்கொல்லிகளை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ரகத்திற்கும் ஒரே மாதிரியான களைக்கொல்லியை அதை அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பசுந்தாள் உரப்பயிர்களின் நன்மைகளும் சாகுபடி முறையும்

பசுந்தாள் உரப்பயிர்கள்:
சணப்பை:

➢ விதையளவு -25-35 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -13-15 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 50-60 கிலோ/ எக்டர்.

தக்கைப்பூண்டு/சித்தகத்தி:

➢ விதையளவு -50 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -10-15 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 75 கிலோ/ எக்டர்.

காராமணி:

➢ விதையளவு -35-40 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 140-150 கிலோ/ எக்டர்.

நரிப்பயிறு:

➢ விதையளவு -10-15 கிலோ/ எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -6-7 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 57-65 கிலோ/ எக்டர்.

கொளுஞ்சி:

➢ விதையளவு -20-25 கிலோ /எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 70-110 கிலோ/ எக்டர்.

கொத்தவரை:

➢ விதையளவு -40 கிலோ/எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 25-40 கிலோ/எக்டர்.

பச்சைப்பயிறு:

➢ விதையளவு -30 கிலோ /எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -3-4 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 38-50 கிலோ/எக்டர்.

உளுந்து:

➢ விதையளவு -25-30 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -3.5-4 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 30-35 கிலோ/ எக்டர்.

எவ்வாறு பயிரிடுதல் வேண்டும்:

  • மண்ணின் தன்மையை பொருத்து 2-3 முறை உழவு செய்து பின்னர் பருவ மழையின்போது விதைகளை தெளிக்க வேண்டும்.
  • பெரும்பான்மையான பசுந்தாள் உரப்பயிர்கள் 6-8 வாரத்தில் மடக்கி உழுதிட தயாராகிவிடும்.
  • இல்லையெனில் வயலில் ஒரு சில பூக்கள் தெரியும் போது உடனடியாக மடக்கி உழுதிட வேண்டும்.
  • உழவு செய்த பிறகு சுமார் ஒரு மாத காலம் மண்ணை கிளராமல் இருந்தால் பசுந்தாள் பயிர்கள் மட்க ஏதுவாக இருக்கும்.
  • விதைக்கும் போது பொதுவான விதை அளவை விட 25-30மூ கூடுதல் விதையை விதைப்பது உகந்தது.

மேலும் விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கோள்ளப்படுகிறது. 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

செவ்வாய், 2 ஜனவரி, 2024

நிலக்கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நிலக்கடலையில் 'டிக்கா" இலைப்புள்ளி நோய்:

  • இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 70 முதல் 80 இலட்சம் ஹெக்கடர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • பல்வேறு நோய்கள், பூச்சிகள் மற்றும் வைரஸ் தாக்குதல் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நோய் மற்றும் பூச்சிகள் தீவிர் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • 'டிக்கா" இலைப்புள்ளி நோயினால் 50% மேல் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:

  • சாதகமான /தொடர்சியான காற்றின் ஈரப்பதம் நிலவுதல்
  • குறைந்த வெப்பநிலை நிலவும் போது (20 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக)
  • அதிகப்படியான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து இடுவதாலும்
  • மெக்னீசியம் சத்து குறைபாடு

நோயின் அறிகுறிகள்:

ஆரம்பகால இலைப்புள்ளி:

  • சிறிய கருப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படுவதால் இலையின் அடிப்புறத்தில் வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் காணப்டும்.
  • கருப்பு நிற புள்ளிகள் மஞ்சள் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • இதன் அளவு சுமார் 1-10mm


தாமதமான இலைப்புள்ளி:

  • சிறிய கருமை நிற புள்ளிகள் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும்.
  • இதன் அளவு 3-8mm
  • இலைப்புள்ளி நோயானது விதைப்பு மேற்கொண்ட 30-45 நாட்களில் அதிகமாக தென்படும்.
  • இலைப்புள்ளிகளினால் உணவு உற்பத்திக்கு தேவையான இலைப் பரப்பளவு குறைந்து காணப்படும்.
  • செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • நாளடைவில் இலை உதிர்தல் ஏற்படும்.
  • புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய காயங்கள் போன்று காணப்படும்.
  • இலைப்புள்ளிகள் தண்டு, விழுது மற்றும் காய்களிலும் காணப்படும்.

கட்டுபடுத்தும் முறைகள்:

  • கோடைகாலங்களில் ஆழமான உழுது செய்வதால் மண்ணில் புதைந்து காணப்படும். பூஞ்சாணங்களை அழிக்கலாம்.
  • அடி உரத்துடன் (மக்கிய தொழு உரம்) ட்ரைகோடெர்மா மற்றும் வெர்டிசிலியம் தலா 2-5 கிலோ கலந்து ஊட்டமேற்றி இடுவதால் பெரும்பாலான நோய்களை கட்டுக்குள் வைக்கலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதை தவிர்க்கவும். எனெனில் இப்பூஞ்சானம் சுமார் 3 வருடங்கள் வரை நிலத்தில் உறக்க நிலையில் காணப்படும்.
  • எதிர்ப்புதிறன் கொண்ட இரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • Carbendazim+ Mancozeb அல்லது வெர்டிசிலியம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ளலாம்.
  • ஊடுபயிராக உளுந்துஃ தட்டைப்பயிறு பயிரிடுவதால் இந்நோய் தாக்குதலை குறைக்கலாம்.
  • பருவத்தில் நடவு மேற்கொள்வதால் நோய் தாக்குதலின் தீவிரத்தை மட்டுபடுத்தலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி விடுவதால் செடிகளுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கப்பெற்று இப்பூஞ்சான தாக்குதல் மற்றம் பரவுதலை கட்டுபடுத்தலாம்.
  • சரியான முறையில் நீர்ப்பாய்ச்சல் அதாவது காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விட வேண்டும். 
  • களைகள் இன்றி பராமரித்தல் அவசியம்.
  • முந்தைய பயிர்களின் எச்சங்கள்/ குப்பைகளை உழவு செய்வதற்கு முன் கண்டிப்பாக அகற்ற வேண்டும்
  • காலை நேரங்களில் வயலில் நடப்பதை அல்லது உரமிடுதல் போன்ற பணிகளை தவிர்க்க வேண்டுமு; ஏனெனில் இது பூஞ்சாணங்களின் பரவுதலுக்கு உதவி புரியம்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போத வேப்ப எண்ணெய் (அ) வேப்ப இலைக் கரைசல் தெளிக்கலாம் (அல்லது) டிரைகோடெர்மா மற்றும் வெர்டிசியம் 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
  • https://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_prac_agri_groundnut_diseases.html
  • கீழ்கண்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் தெளிக்கவும்.

  • Carbendazim+Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Metiram+Pyraclostrobin - 50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole+Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole - 25 மில்லி கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Chlorothalonil - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


Recent Posts

Popular Posts