google-site-verification: googled5cb964f606e7b2f.html செண்டு மல்லியில் நுனிக் கிள்ளுதலின் பயன்கள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 8 ஜனவரி, 2024

செண்டு மல்லியில் நுனிக் கிள்ளுதலின் பயன்கள்

ஏன் செய்ய வேண்டும்:-

  • துளிர் முனையில் அக்சின் எனப்படும் வளர்ச்சி ஊக்கியின் அளவு அதிகமாக இருப்பதால் செடிகள் போதுமான அளவு பக்க கிளைகள் விடமால் நேராக மேல் நோக்கி வளர்கிறது.
  • பக்கவாட்டு மொட்டுகள் நுனி மொட்டை விட வளர்ச்சி ஊக்கினால் அதிக செயல்திறன் கொண்டவை. 
  • இருப்பினும் பக்கவாட்டு மொட்டுகளை விட, தளிர்முனைகள் அதிக அளவு ஆக்சின் கொண்டுள்ளதால் பக்கவாட்டு மொட்டுகளால் வளர முடியாமல் போகிறது.

  • நுனியை கிள்ளுவதால் தளிர் முனையில் உள்ள ஆக்சின் நீக்கப்படுவதால் பக்கவாட்டு மொட்டுகளில் உள்ள ஆக்சின் செயல்பட்டு அதிக கிளைகளை வெளி தள்ளும்.

எப்போது எப்படி செய்ய வேண்டும்:-

  • நடவு செய்த 30-40 நாட்கள் ஆன அல்லது 30 cm உயரம் உள்ள செடிகளின் நுனி குருத்து மற்றும் மொட்டுகளை கிள்ளி எடுத்தல் வேண்டும்.

  • பின்பு GA3 150 ppm அல்லது  NAA 150ppm தெளிக்க வேண்டும்.

பயன்கள் :-

  • மேம்படுத்தப்பட்ட செல்பிரிவு, செல் அளவு மற்றும் ஒளிச்சேர்க்கை.
  • அதிக எண்ணிக்கையிலான முதன்மை மற்றும் இரண்டாம் பக்க கிளைகள்.
  • நல்ல தண்டு தடிமன்.
  • அதிக எண்ணிக்கையிலான இலைகள் மற்றும் இலைப்பரப்பளவு.
  • போதுமான செடியின் உயரம்.
  • அதிக எண்ணிக்கையில் பூக்கள் மற்றும் பூவின் அளவு.
  • 25-50% முதல் கூடுதல்மகசூல் கிடைக்கபெறும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts