நிலக்கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|நிலக்கடலையில் 'டிக்கா" இலைப்புள்ளி நோய்:
- இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 70 முதல் 80 இலட்சம் ஹெக்கடர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- பல்வேறு நோய்கள், பூச்சிகள் மற்றும் வைரஸ் தாக்குதல் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நோய் மற்றும் பூச்சிகள் தீவிர் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- 'டிக்கா" இலைப்புள்ளி நோயினால் 50% மேல் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
- இலைப்புள்ளி மற்றும் துரு நோய் இணைந்து தாக்குவதால் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
- https://ijcmas.com/9-4-2020/R.%20K.%20Sharma,%20et%20al.pdf
நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:
- சாதகமான /தொடர்சியான காற்றின் ஈரப்பதம் நிலவுதல்
- குறைந்த வெப்பநிலை நிலவும் போது (20 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக)
- அதிகப்படியான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து இடுவதாலும்
- மெக்னீசியம் சத்து குறைபாடு
- அதிகப்படியான பனி பெய்தல்
- https://www.agriplexindia.com/blogs/featured/tikka-disease-in-groundnut
நோயின் அறிகுறிகள்:
ஆரம்பகால இலைப்புள்ளி:
- சிறிய கருப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படுவதால் இலையின் அடிப்புறத்தில் வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் காணப்டும்.
- கருப்பு நிற புள்ளிகள் மஞ்சள் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்.
- இதன் அளவு சுமார் 1-10mm
தாமதமான இலைப்புள்ளி:
- சிறிய கருமை நிற புள்ளிகள் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும்.
- இதன் அளவு 3-8mm
- இலைப்புள்ளி நோயானது விதைப்பு மேற்கொண்ட 30-45 நாட்களில் அதிகமாக தென்படும்.
- இலைப்புள்ளிகளினால் உணவு உற்பத்திக்கு தேவையான இலைப் பரப்பளவு குறைந்து காணப்படும்.
- செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- நாளடைவில் இலை உதிர்தல் ஏற்படும்.
- புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய காயங்கள் போன்று காணப்படும்.
- இலைப்புள்ளிகள் தண்டு, விழுது மற்றும் காய்களிலும் காணப்படும்.
- தண்டுகளில் இலைப்புள்ளி தோன்றுவதால் செடிகள் சாய்ந்து இறந்து விடும்.
- http://ecoursesonline.iasri.res.in/Courses/Diseases%20of%20Field%20Crops%20and%20Their%20Management/PATH%20272/Data%20Files/lecture09/001.html
கட்டுபடுத்தும் முறைகள்:
- கோடைகாலங்களில் ஆழமான உழுது செய்வதால் மண்ணில் புதைந்து காணப்படும். பூஞ்சாணங்களை அழிக்கலாம்.
- அடி உரத்துடன் (மக்கிய தொழு உரம்) ட்ரைகோடெர்மா மற்றும் வெர்டிசிலியம் தலா 2-5 கிலோ கலந்து ஊட்டமேற்றி இடுவதால் பெரும்பாலான நோய்களை கட்டுக்குள் வைக்கலாம்.
- தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதை தவிர்க்கவும். எனெனில் இப்பூஞ்சானம் சுமார் 3 வருடங்கள் வரை நிலத்தில் உறக்க நிலையில் காணப்படும்.
- எதிர்ப்புதிறன் கொண்ட இரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- Carbendazim+ Mancozeb அல்லது வெர்டிசிலியம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ளலாம்.
- பயிர் சுழற்சி மேற்கொள்ளுதல் அவசியம் (கம்பு, மக்காச்சோளம், காய்கறிகள், சோளம் இதர).
- https://www.agriplexindia.com/blogs/featured/tikka-disease-in-groundnut
- ஊடுபயிராக உளுந்துஃ தட்டைப்பயிறு பயிரிடுவதால் இந்நோய் தாக்குதலை குறைக்கலாம்.
- பருவத்தில் நடவு மேற்கொள்வதால் நோய் தாக்குதலின் தீவிரத்தை மட்டுபடுத்தலாம்.
- போதுமான பயிர் இடைவெளி விடுவதால் செடிகளுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கப்பெற்று இப்பூஞ்சான தாக்குதல் மற்றம் பரவுதலை கட்டுபடுத்தலாம்.
- சரியான முறையில் நீர்ப்பாய்ச்சல் அதாவது காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விட வேண்டும்.
- களைகள் இன்றி பராமரித்தல் அவசியம்.
- முந்தைய பயிர்களின் எச்சங்கள்/ குப்பைகளை உழவு செய்வதற்கு முன் கண்டிப்பாக அகற்ற வேண்டும்
- காலை நேரங்களில் வயலில் நடப்பதை அல்லது உரமிடுதல் போன்ற பணிகளை தவிர்க்க வேண்டுமு; ஏனெனில் இது பூஞ்சாணங்களின் பரவுதலுக்கு உதவி புரியம்.
- ஆரம்ப நிலை தாக்குதலின் போத வேப்ப எண்ணெய் (அ) வேப்ப இலைக் கரைசல் தெளிக்கலாம் (அல்லது) டிரைகோடெர்மா மற்றும் வெர்டிசியம் 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
- https://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_prac_agri_groundnut_diseases.html
- கீழ்கண்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் தெளிக்கவும்.
- Carbendazim+Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Metiram+Pyraclostrobin - 50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Tebuconazole+Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Tebuconazole - 25 மில்லி கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Hexaconazole - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Chlorothalonil - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக