google-site-verification: googled5cb964f606e7b2f.html வருமானம் தரும் மகோகனி மரம் வளர்ப்பு ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 5 ஜனவரி, 2024

வருமானம் தரும் மகோகனி மரம் வளர்ப்பு

மகோகனி மரம் வளர்ப்பின் பயன்கள்:

  • சில மலைப்பகுதிகளை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாகுபடிக்கு உகந்தது.
  • அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் தண்ணீர் தேங்குவதை தாங்கி வளரக் கூடியது.
  • தரிசு நிலத்தை பயிர் சாகுபடிக்கு கொண்டு வருதல், குறைந்த பராமரிப்பு மற்றும் முதலீட்டில் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு
  • ஊடுபயிர் செய்து கூடுதல் வரமானம் பெறலாம்.
  • மரத்தின் நிறம், ஆயுள் மற்றும் வலிமை காரணமாக மிகுந்த சந்தை தேவைகள்.
  • குறைந்தபட்ச தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவு.
  • மரம் - படகுகள், தளவாடங்கள், இசைக்கருவிகள், சிலைகள் மற்றும் அலங்கார பொருட்கள்  தயாரிக்கப்பயன்படுகிறது.
  • விதைகள் -  டானிக் மருந்துகள் தயாரித்திடவும்
  • இலைகள் - நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய் சிகிச்சையிலும் பயன்படுகிறது.
  • பூச்சி விரட்டிகள் தயாரித்திடவும் பயன்படுகிறது.
  • சோப்பு, பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலைகளிலும் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுகிறது.

செலவினம் விபரம்  : (1 ஏக்கருக்கு)

1.

நிலம் தயார் செய்தல் (உழவு மற்றும் சமன் செய்தல்)

7500/-

2.

நுண்ணீர் பாசனம் நிறுவுதல்

42500/-

3.

செடிகளின் விலை (ரூ.50-250 எண்கள்)

12500/-

4.

குழி எடுத்தல், தொழு உரம் மற்றும் நடவு செய்தல்

15000/-

5.

நீர் பாய்ச்சுதல் மற்றும் களைகள் மேலாண்மை

10000/-

6

பக்க கிளைகள் அகற்றுதல்

8000/-

7

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

5000/-

8

இதர செலவினம்

10000/-

 

கூடுதல்

110500/-

 

2-ம் வருடம் முதல் செலவினம்

25000/-

வருமானம்   : (12-15 ம் வருடம்)

1.

மரத்தின் சராசரி உயரம்

70-80 அடி

2.

தண்டின் சுற்றளவு

1.5 -2 அடி

3.

கட்டையின் அடர்த்தி

18-22 சதுர அடி

4.

ஒரு சதுர அடியின் அன்றைய விலை

750/-

5.

ஒரு மரத்தின் வருமானம்

15000/-

6

ஒரு ஏக்கரில் வருமானம் (250 மரங்கள்)

3750000/-

7

மொத்த செலவினம் (ஒரு ஏக்கருக்கு)

485500/-

8

நிகர இலாபம்

3264500/-

சவால்கள் :

Ø அதிக காற்றினால் மரம் சாயும் வாய்ப்புகள் உள்ளன.

Ø ஆழமற்ற மற்றும் கடினமான மண்ணில் வளரம் மரங்கள் அதிக பக்க கிளைகளை தோற்றுவிக்கும்.

Ø நெருக்கமாக நடவு செய்தால் மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தண்டின் தடிமன் குறையும்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts