காய்கறி பயிர்களில் கோண வடிவ காய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கோண வடிவ காய்கள் தோன்ற காரணங்கள் :
1.
சீரற்ற மகரந்த சேர்க்கை |
- |
1. இளம் காய்கள் / பூக்கள் ஒழுங்கற்ற மகரந்த சேர்க்கையினால்
நுனிபகுதியிலிருந்து பழுப்பு நிறமாகி சுருங்கி கருகி பின்னர் உதிரும். 2. சீரற்ற / போதுமான மகரந்த சேர்க்கை இல்லாததால்
கருமுட்டை போதிய அளவு வளர்ச்சியின்றி ஒழுங்கற்ற / சிதைந்த வடிவில் காய்கள்/ பழங்களை
உருவாக்குகிறது. |
2.
போரான் சத்து குறைபாடு |
- |
1. மண்ணின் கார அமில தன்மை அதிகமாக இருப்பதால்
போதுமான போரான் சத்து செடிகளுக்கு கிடைக்காது. 2. இதனால் இலைகள் சற்று தடித்து ஒழுங்கற்ற
வடிவில் காணப்படும். 3. பழங்களில்/ காய்களில் வெடிப்புகள் தோன்றும். |
3.
கால்சியம் சத்து குறைபாடு |
- |
1. குறைந்த கணு இடைவெளி, குன்றிய செடி வளர்ச்சி,
இலைகள் கீழ்புறமாக சுருங்குதல் மற்றும் புதிய வெள்ளை வேர்களின் வளர்ச்சியின்றி காணப்படுதல் 2. நாளடைவில் காய்கள்/ பழங்களில் அழுகல்
ஏற்படும் (BER) |
4.
தட்பவெப்ப சூழ்நிலை |
- |
பூக்கும் தருணத்தில் அதிக வெப்பநிலை / அதிக
மழைப்பொழிவு மகரந்த சேர்க்கைக்கு சாதகமற்றதாக திகழ்வதால் குறைந்த பூ பிடித்தம் மற்றும்
ஒழுங்கற்ற காய்களை உருவாக்கும். |
5.
பூச்சி மற்றும் நோய் தாக்குதல் |
- |
பழ ஈ தாக்குவதால் பெரும்பான்மையாக இவ்வகையான
காய்கள் உருவாகிறது. இருப்பினும் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினாலும்
மறைமுகமாக காய்கள் பாதிக்கப்படுகிறது. |
6. சில இரகங்கள் இயற்கையாகவே மரபியல் காரணங்களினால்
சிதைந்த/ ஒழுங்கற்ற காய்களை தோற்றுவிக்கிறது. |
||
7. தவறான மருந்துகளை பூ பிடிக்கும் தருணத்தில்;
தெளிப்பதால்; பூக்களின் மகரந்த
சேர்க்கையில் மாறுதல் ஏற்பட்டு பழ உற்பத்தியில் சிதைவு ஏற்படுகிறது. 8. சிறிய காய்களில் காயங்கள் ஏற்படுவதால்
ஒழுங்கற்ற வளர்ச்சியை காணலாம். |
ஒருங்கிணைந்த மேலாண்மை :
- சான்றிதழ் பெறப்பட்ட இரகங்களை தேர்வு செய்தல்
- மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனி பெட்டிகளை ஆங்காங்கே 4-5 எண்கள் இடுதல் (அல்லது) கருவுறாக்கனி கிரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல்
- அதிக வெப்பநிலை/ மழை மகரந்த சேர்க்கையை பாதிப்பால் அதற்கேற்றவாறு நடவு செய்யும் பருவத்தை தேர்வு செய்தல்
- உயிர் உரங்கள், உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை மக்கிய தொழு உரத்துடன் ஊட்டமேற்றி அடியுரமாக இடுவதால் மண்ணின் தன்மை மற்றும் வளத்தினை மேம்படுத்தி இதர ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெற செய்தல்.
- மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச்சத்தை ஏக்கருக்கு 5-10 கிலோ வீதம் அடியுரமாக இடுதல்
- பூ பிடிக்கும் தருணத்தில் மருந்துகள் தெளிப்பதை தவிர்த்தல்
- போதுமான அளவு போரான் மற்றும்
கால்சியம் இடுதல் (ஏக்கருக்கு 2 கிலோ கால்சியம் சல்பேட் அடியுரம் இடுதல் மற்றும் நடவு
செய்த 30, 45 மற்றும் 60 நாட்களில் CaNo3/Cacl -ஐ
இலை வழியாகவும் தெளிக்கலாம்)
- சரியான இடைவெளியில் நீர் பாய்ச்சுதலை உறுதி செய்தல் அதுவும் பூ பிடிக்கும் தருணத்தில் செய்ய வேண்டும்.
- வயலை சுத்தமாக வைத்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் வைத்தல்.
- மண்ணின் கார அமில தன்மையை சரி செய்தல் அடியுரமாக அல்லது இலை வழியாக போரான் சத்தை கொடுக்கலாம்.
- செடியின் 15,30 மற்றும் 45 நாட்களில் கீழ்க்காணும் வளர்ச்சி ஊக்கியை தெளிக்கலாம்.
- NAA- 0.5 ml/ 10 lit water
- 13:00:45- 50 g/ 10 lit water
- பழ ஈக்களை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம். (ஊட்டச்சத்து மற்றும் பழ ஈக்களை கட்டுப்படுத்த ஏற்கனவே உழவன் நண்பன் குழுவில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை காணவும்)