மா மரத்தில் இலை வலைப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|மாமரத்தில் இலை வலைப் பூச்சி:
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
முட்டை-நுனி இலைகளில் இடப்படுகிறது. இதன் வாழ்நாள் ஒரு வாரம் ஆகும்.
இளம் புழுக்கள் -வெளிர் பழுப்பு நிறத்தில், உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிற கோடுகள் காணப்படும்.
கூட்டு புழுக்கள் - இலை வலைகளில் அல்லது மண்ணில் காணப்படும். இதன் வாழ்நாள் 5-15 நாட்கள்
பட்டாம்பூச்சி - பழுப்பு நிறத்தில் முன் இறக்கையில் கோடுகள் காணப்படும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் ஆரம்பத்தில் நுனி இலைகளில் திசுக்களை உண்பதால் சல்லடை போன்று காட்சியளிக்கும்.
- பின்னர் இளம் தளிர்கள் மற்றும் இலைகளை இணைத்து வலை போன்று மாற்றும்.
- தளிர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இலைகளை உண்ணுவதால் நரம்புகள் மட்டும் காணப்படும்.
- நாளடைவில் இலைகள் உலர்ந்து பழுப்பு நிறமாக மாறி உதிரும்.
- பராமரிப்பு இல்லாத தோட்டத்தில் சுமார் 25-80% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- மரங்களுக்கு இடையில் போதுமான அளவு இடைவெளி இட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட நுனி இலைகளை சேகரித்து அழித்தல்
- அல்லது இலை வலைகளை அகற்றும் கருவியை பயன்படுத்தி வலைகளை அகற்றலாம்.
- கோடை காலங்களில் மரங்களின் இடைவெளியில் உழுதல்/ பயிரிடுவதால் கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
- அல்லது மரம்/ செடிகளை சுற்றியுள்ள மண்ணை கிளறி விட வேண்டும்.
- இதற்கு எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை ((Kesar, Alphonsa போன்ற) பயிரிடலாம்.
- Beauverina bassiana உயிர் பூஞ்சாணத்தை தெளிப்பதாலும் இதன் தாக்குதலை குறைக்கலாம்.
- பருத்திகரை பூச்சி, தரை வண்டு மற்றும் குளவி போன்றவை வயலில் ஊக்கப்படுத்த வேண்டும்.
- கீழ்க்கண்ட பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்க பயன்படுத்தலாம்.
- Lambda cyhalothrin - 1 ml/lit water
- Quinalphos - 2 ml / lit water
- Novaluron + Emamectin - 4 ml/ lit water
மேலும் சந்தேகங்களுக்கு கீழ்காணும் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக