கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கி எப்போது பயன்படுத்தப்பட வேண்டும்
ஜனவரி 11, 2024
In மற்றவைகள் |
|
கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு:
பரங்கி, பூசணி, வெள்ளரி, பீர்கன், சுரை, புடலை, முலாம்பழம், பாகல், தர்பூசணி மற்றும் பல்வேறு காய்கறி பயிர்கள் சுரை குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
சமையல் பயன்பாடு இன்றி அவற்றின் காய்கறி மற்றும் விதைகளின் பயன்பாடுகள் எண்ணற்றது.
பூக்கும் தன்மை:
- இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் தட்ப வெப்ப சூழ்நிலையைப் பொருத்து விதைத்த 35-45 நாட்களுக்கு பிறகு பூ பிடிக்க ஆரம்பிக்கும்.
- பூக்களின் பாலினம், சுற்றுச்சூழல், மரபணு மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் (ஹார்மோன்) காரணத்தினால் வேறுபடுகிறது.
- பொதுவாக பெண் பூக்கள் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம், வெப்பநிலையின் தீவரம் பொருத்து செடிகளில் உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி விகிதத்தில் (எத்திலின், ஆக்சிஜன் மற்றும் இதர) மாற்றம் ஏற்படுத்தி பூக்களின் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
கீழ்க்கண்ட காரணங்கள் பூவின் பாலினத்தை நிர்ணயிக்கிறது
- நீர்ப் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதம்/ வறட்சி
- ஊட்டச்சத்து விகிதம்
- நடவு பருவம்
- மழையளவு/ தட்ப வெப்பநிலை
- மரபணு காரணங்கள்
- வளர்ச்சி ஊக்கிகளின் விகிதம்
பெண் பூக்கள் எப்போது அதிகமாக பூக்கும்:
- குறைந்த வெப்பநிலை, அதிக மண் ஈரப்பதம்
- உயிர் உரங்கள், சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் பயன்பாடு
- வளர்ச்சி ஊக்கி தெளிக்கும் அளவு
- ஆண் பூக்கள் செடியின் நான்கு முதல் ஆறாவது கணுக்களில் தோன்றுகிறது. பின்னர் 6-8வது கணுக்களில் பெண் பூக்கள் தோன்றுகின்றது. இது போன்று மாறி மாறி பூக்கள் தோன்றுவதால் மகசூல் குறைவாக காணப்படும்.
- பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழ்கண்ட வளர்ச்சி ஊக்கினை தெளிக்கலாம்.
- தர்பூசணி - GA3 1 ml / lit water
- முலாம்பழம் - GA3 1 ml / lit water
- வெள்ளரி - Etheral-0.5 ml / lit water
- பூசணி/ பரங்கி - Etheral -0.3 ml / lit water
- புடலை - Etheral- 1-2 ml / lit water அளவு
0 Comments:
கருத்துரையிடுக