google-site-verification: googled5cb964f606e7b2f.html கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கி எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 11 ஜனவரி, 2024

கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கி எப்போது பயன்படுத்தப்பட வேண்டும்

கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு: 

பரங்கி, பூசணி, வெள்ளரி, பீர்கன், சுரை, புடலை, முலாம்பழம், பாகல், தர்பூசணி மற்றும் பல்வேறு காய்கறி பயிர்கள் சுரை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். 

சமையல் பயன்பாடு இன்றி அவற்றின் காய்கறி மற்றும் விதைகளின் பயன்பாடுகள் எண்ணற்றது.

பூக்கும் தன்மை:

  • இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் தட்ப வெப்ப சூழ்நிலையைப் பொருத்து விதைத்த 35-45 நாட்களுக்கு பிறகு பூ பிடிக்க ஆரம்பிக்கும். 
  • பூக்களின் பாலினம், சுற்றுச்சூழல், மரபணு மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் (ஹார்மோன்) காரணத்தினால் வேறுபடுகிறது. 
  • பொதுவாக பெண் பூக்கள் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம், வெப்பநிலையின் தீவரம் பொருத்து செடிகளில் உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி விகிதத்தில் (எத்திலின், ஆக்சிஜன் மற்றும் இதர) மாற்றம் ஏற்படுத்தி பூக்களின் பாலினத்தை நிர்ணயிக்கிறது.

கீழ்க்கண்ட காரணங்கள் பூவின் பாலினத்தை நிர்ணயிக்கிறது

  • நீர்ப் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதம்/ வறட்சி
  • ஊட்டச்சத்து விகிதம்
  • நடவு பருவம்
  • மழையளவு/ தட்ப வெப்பநிலை
  • மரபணு காரணங்கள்
  • வளர்ச்சி ஊக்கிகளின் விகிதம்

பெண் பூக்கள் எப்போது அதிகமாக பூக்கும்:

  • குறைந்த வெப்பநிலை, அதிக மண் ஈரப்பதம்
  • உயிர் உரங்கள், சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் பயன்பாடு
  • வளர்ச்சி ஊக்கி தெளிக்கும் அளவு
  • ஆண் பூக்கள் செடியின் நான்கு முதல் ஆறாவது கணுக்களில் தோன்றுகிறது. பின்னர் 6-8வது கணுக்களில் பெண் பூக்கள் தோன்றுகின்றது. இது போன்று மாறி மாறி பூக்கள் தோன்றுவதால் மகசூல் குறைவாக காணப்படும்.
  • பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழ்கண்ட வளர்ச்சி ஊக்கினை தெளிக்கலாம்.
  • தர்பூசணி - GA3 1 ml / lit  water 
  • முலாம்பழம் - GA3 1 ml / lit  water  
  • வெள்ளரி -  Etheral-0.5 ml / lit  water  
  • பூசணி/ பரங்கி - Etheral -0.3 ml / lit  water 
  • புடலை  - Etheral- 1-2 ml / lit  water அளவு


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts