google-site-verification: googled5cb964f606e7b2f.html வெண்டையில் Cercospora இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 22 ஜனவரி, 2024

வெண்டையில் Cercospora இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • வெண்டையில் cercospora இலைப்புள்ளி நோயானது இரண்டு விதமான பூஞ்சனாங்களால் ஏற்படுகிறது.
  • தாக்குதலின் அறிகுறிகள் அதை ஏற்படுத்தும் பூஞ்சான வகை, தாக்குதலின் தீவிரம் மற்றும் செடியின் வயதை பொறுத்து மாறுபடும்.
  • முதல் வகை பூஞ்சானத்தால் ஏற்படும் அறிகுறி: சிறிய ஒழுங்கற்ற வடிவில் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இந்த புள்ளிகளை சுற்றி சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற வளையத்தை காண முடியும்.
  • கோண வடிவ புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி போன்று காணப்படுவது மற்றொரு வகை பூஞ்சானதால் ஏற்படும் அறிகுறி.
  • பொதுவாக செடியின் அடிபுரத்தில் காணப்படும் இலைகளின் கீழ்ப்புறத்தில் அறிகுறிகள் தென்படும்.
  • நாளடைவில் இது இலையின் மேற்பரப்பிற்கு பரவுவதுடன் செடிகளின் நுனி இலையிலும் அறிகுறிகள் காணப்படும்.
  • இதனால் குன்றிய செடி வளர்ச்சி, இலை சுருண்டு காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்தல் மற்றும் மகசூல் பாதிப்பு என பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.

நோய் எவ்வாறு பரவுகிறது:

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு.
  • அடர் நடவு மேற்கொள்ளுதல் எளிதில் பரவுகிறது.
  • நுண்ணீர் பாசன தெளிப்பான் பயன்படுத்தி நீர் விடுவதால் எளிதில் பரவுகிறது.
  • காலை வேளையில் நாம் வயலில் இறங்கி வேலை செய்வதால் நோய் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • இந்த வகை பூஞ்சானம் மண் மற்றும் பண்ணை கழிவு/பயிர் எச்சங்களில் மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய திறன் படைத்தது.
  • இன் நோய் தாக்குதல் தென்படும் தருணத்தில் தொடர்ந்து ஒரே வயலில் வெண்டை சாகுபடி செய்வதை தவிர்க்கவும்
  • இந்த வகை பூஞ்சானங்களுக்கு எதிராக எதிர்ப்பு திறன் மற்றும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்ட ரகங்கள் அல்லது வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.
  • பயிர்களை மிக நெருக்கமாக நடவு செய்வதால் இது பூஞ்சானங்களுக்கு தேவையான சீதோசன நிலையை உருவாக்கி தருகிறது. எனவே போதுமான அளவுக்கு பயிர் இடைவெளி கொண்டு நடவு செய்யவும்.
  • வயலில் காணப்படும் களைகள், குப்பைகள் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து உதிரக்கூடிய இலை, காய்கள் முதலியவற்றில் பூஞ்சானங்கள் நீடித்திருப்பதால் இவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • இல்லையெனில் இது அடுத்தடுத்த செடிகளுக்கு பரவுதுடன் அடுத்த பயிர்களையும் பாதிக்கும் வல்லமை படைத்தது.
  • வாய்க்கால் மூலம் நீர்பாச்சுதல் மற்றும் தெளிப்பு நீர் பயன்படுத்தி நீர் பாய்ச்சுவதால் பயிர் இடைவெளியில் பூஞ்சான வளர்ச்சிக்கு தேவையான சாதகமான தட்பவெட்ப நிலை நிலவுவதால் இது எளிதில் பெருகி பரவுகிறது. எனவே சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
  • இந்த வகை பூஞ்சானங்கள் தாக்காத பயிர்களான வெங்காயம் மற்றும் கொடி காய்கறி பயிர்களை பயிரிடுவதால் இதன் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • ஏக்கருக்கு ஒரு மூட்டை எள்ளு புண்ணாக்கு இடுவதால் நோய் பரவுதல் தடுக்கலாம்.
  • எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை  0.15 சதவீதம் தெளிப்பதால் இவ்வகை பூஞ்சனா வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
  • அல்லது கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
  • Mancozeb - 2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Carbendazim+Mancozeb -2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Zineb- 2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Propiconazole - 1 மி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Difenconazole- 1 மி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Cymoxil+Mancozeb - 1-2 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

undefined 202 undefined

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts