google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 5 ஜூன், 2024

மரவள்ளி சாகுபடியில் இரும்பு சத்து பற்றாக்குறையும் அதன் மேலாண்மையும்

முன்னுரை:

சாகுபடியில் உள்ள மரவள்ளி/குச்சி கிழங்கு, கரும்பு, கருவேப்பிலை, உளுந்து மற்றும் பல பயிர்களில் நுண்ணூட்ட சத்து, குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு தென்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விவசாயிகளின் வயல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு இது தொடர்பாக விரிவான கட்டுரை கீழ்க்கண்டவாறு பதிவிடப்படுகிறது.

இரும்புச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள்: 

  • குன்றிய பயிர் வளர்ச்சி
  • குறிப்பாக நுனி இலைகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும் ஆனால் இலைகளில் உருமாற்றம் இருக்காது. 
  • நுனி/ தளிர் இலைகள் முழுவதுமாக மஞ்சள் நிறமாக மாறுதல். ஆனால் மாங்கனிசு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற மாற்றமடைந்து காணப்படும்.
  • இரும்பு பற்றாக்குறையின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளின் நடு நரம்பு மற்றும் இதர நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.
  • நாளடைவில் தளிர் இலைகள் தீவிர வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் இலை நரம்புகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.
  • இதற்கு அடுத்தப்படியாக இலையின் ஓரங்களில் இருந்து கருகல் தென்படும் தீவிரமடையும் பொழுது இலை முழுவதும் பரவுகிறது. மேலும் இலை காம்புகள் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் மாற்றம் அடையும்.
  • தடுப்பு நடவடிக்கை எடுக்காத வயல்களில் கருகல் அதிகரித்து மற்ற இலைகளுக்கு பரவுகிறது இதனால் கண்டிப்பாக மகசூல் இழப்பு ஏற்படும்.

ஏன் இரும்பு பற்றாக்குறை ஏற்படுகிறது: 

  • அதிக அளவு ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏற்பட்ட உப்பு படிதல் காரணமாக இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படும்.
  • பொதுவாகவே அமில தன்மை கொண்ட மண் மற்றும் களர் நிலங்களில் அதிக அளவு உப்பு மற்றும் கால்சியம் சத்து இருப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இது மட்டுமின்றி மண்ணில் அதிக அளவு மாங்கனிசு துத்தநாகம் மற்றும் காப்பர் ஊட்டச்சத்து இருப்பதாலும் இரும்புச்சத்து  பற்றாக்குறையின் அறிகுறிகள் ஏற்படும்.
  • பயிர்களில் போதுமான வேர் வளர்ச்சி இல்லாததாலும்
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் மற்றும் இறுக்கமான மண் அமைப்பு 
  • மண்ணின் அதிக கார அமிலத்தன்மை மற்றும் அதன் இறுக்கத்தினால் மண்ணில் உள்ள இரும்பு சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுவதால் 
  • அதிகமாக பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்து உரத்தை பயன்படுத்துவது குறிப்பாக டிஏபி (DAP). இது போன்று பல்வேறு காரணங்கள் உள்ளது. 

தற்போது இதை எவ்வாறு சரி செய்யலாம்: 

  • பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஏற்ப நிலத்தில் இருக்கக்கூடிய மண்ணை மாற்றியோ அல்லது புதிதாக மண்ணை சேர்த்து பயிரிடலாம். 
  • போதுமான அளவு மண் மற்றும் மர துகள்களை அவ்வப்போது பயன்படுத்துவதால் வெகுவாக உப்பு தன்மையை குறைக்க முயற்சிக்கலாம். 
  • உப்பு தண்ணீருக்கு பதிலாக நல்ல தண்ணீரை அல்லது மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சி ஊக்கப்படுத்துவதுடன் மண்ணில் உள்ள உப்பை குறைக்கலாம்.
  • பயிரிடும் போது மேட்டுப்பாத்திகளை தயார் செய்து நடவு மேற்கொள்வதால் உப்பு நீர் நேரடியாக வேர் வளர்ச்சியை பாதிப்பதை தவிர்க்கலாம்.
  • அதிகளவு நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதனை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • Chelated வடிவத்தில் இரும்பு சத்தை இலை வலியாக தெளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை 
  • ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஈயம் கரைசல் அல்லது வேஸ்ட் டி கம்போசர்(Waste decomposer) நீரில் விட வேண்டும். மாதம் ஒரு முறை என இரண்டு முறை. 
  • இது மண்ணின் கார அமிலத்தன்மையை குறைக்க உதவி புரிகிறது இதனால் இதர ஊட்டச்சத்துக்களும் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும் 
  • ரசாயன உரங்களை இடுவதற்கு முன்பதாக இதனை தொழு உரம் அல்லது மன் புழு உரம் பயன்படுத்தி 15 முதல் 30 நாட்கள் ஊட்டமேற்றி இடுவதால் ரசாயன உரங்கள் இடுவதால் இவை செடிகளுக்கு எளிதில் கிடைக்க பெறுவதுடன் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில்லை.
  • வடிகால் வசதி ஏற்படுத்தி உப்பு தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கலாம். 
  • இயற்கை வழி தயாரிப்பான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊற்றி விடலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.



செவ்வாய், 4 ஜூன், 2024

நிலக்கடலையில் இலை சுரங்க ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • எண்ணெய் வித்து பயிர்களின் அரசன் என்று அழைக்கப்படும் நிலக்கடலை தற்போது தமிழ்நாட்டில் பரவலாக விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களில் பணப்பயிராகவும், உணவு பயிராகவும் அதிக அளவு எண்ணெய் விளைவிக்கக்கூடிய பயிராகவும் நிலக்கடலை பார்க்கப்படுகிறது.
  • பொதுவாக வருடம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யும் நிலக்கடலையில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக இதன் மகசூல் மற்றும் உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருகிறது. 
  • அந்த வகையில் இலை சுரங்க ஈக்களின் தாக்குதல் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இதன் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதை நாம் கவனத்தோடு கையாள்வது சால சிறந்தது.
  • நிலக்கடலையை பாதிக்கக்கூடிய இந்த வகை இலை சுரங்க ஈக்கள் பயிறு வகை பயிர்களையும் தாக்கும் வல்லமை படைத்தது. ஆரம்ப நிலையில் கவனிக்கப்படவில்லை எனில் இதன் தாக்குதலால் சுமார் 50% மேல் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

முட்டை: 

தாய் அந்து பூச்சிகள் இலையின் கீழ் புறத்தில் மிகச் சிறிய முட்டைகளை கொத்தாக அதாவது 150 முதல் 200 எண்கள் இடுகிறது.

இளம் புழுக்கள்: 

முட்டையிலிருந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து இளம் புழுக்கள் வெளிவரும். வெளிர் பழுப்பு நிற பொருட்கள் 10 முதல் 15 நாட்கள் வரை இருக்கும். இதன் அளவு சுமார் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.

கூட்டுப் புழு: 

வெளி சிகப்பு முதல் பழுப்பு நிற கூட்டுப் புழு இலைகள் சுருட்டி அதனுடன் காணப்படும். இது ஆயுட்காலம் 5 முதல் 7 நாட்கள் ஆகும்.

தாய் அந்து பூச்சி:

  • பழுப்பு நிற தாய் அந்து பூச்சிகள் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சிறிதாக இருக்கும். இதன் வாழ்நாள் ஐந்து முதல் ஏழு நாட்களாகும்.
  • இலை சுரங்க ஈக்களின் மொத்த வாழ்நாள் சுமார் ஒரு மாத காலம் ஆகும். இதன் இளம் புழுக்கள் மற்றும் தாய் அந்து பூச்சி ஆகிய இரண்டும் பயிர்களை தாக்கும் திறன் படைத்தது.

தாக்குதலின் அறிகுறிகள்: 


  • பிரதானமாக பயிர்களின் ஆரம்ப நிலையில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.

  • பொதுவாக மானாவாரி பயிர்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. நாட்டு ரக நிலக்கடலையில் இதன் தாக்குதல் அதிகம் தென்படுவதில்லை.
  • இளம் புழுக்கள் இலைகளை துளைத்து உண்பதால் இலையின் இரு புறங்களிலும் வளைந்து நெளிந்த சுரங்கங்கள் காணப்படும்.
  • சுரங்கங்களின் மேல் பகுதி வெளிர் நிறத்திலும் அதன் உட்புறத்தில் புழுக்களால் உண்ணப்பட்ட பயிர் எச்சங்களும் காணப்படும். 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். நாளடைவில் இலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுருண்டு காணப்படும். 
  • இலைகள் முதிர்ச்சி அடையும் முன்னராகவே உதிரும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம் இது இலை சுரங்க ஈக்களுக்கு எதிராக எதிர்ப்பு திறன் கொண்டது.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் நிலக்கடலை சாகுபடி செய்வதை தவிர்த்து பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம். 
  • பயிரை ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
  • அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பங்கொட்டை இடலாம்.
  • இது மட்டுமின்றி தொழு உரம் பயன்படுத்தும் பொழுது அதனுடன் உயிர் பூச்சிக் கொல்லியான மெட்டாரைசியம் பயன்படுத்தி ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • வரப்பு பயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடுவதால் இலை சுரங்க ஈக்களின் தாக்குதலை எளிதில் கணிக்க இயலும். 
  • மஞ்சள் விட்டு பொறி ஏக்கருக்கு எட்டு வீதம் பயன்படுத்தலாம். வாய்ப்புகள் இருந்தால் விளக்கு பொறி பயன்படுத்தியும் தாய் அன்பு பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இது இளம் புழுக்களின் வளர்ச்சியை தடை செய்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துகிறது.
  • இந்த பூச்சி தாக்குதல் குறிப்பாக மானாவாரி பயிரில் அதிகம் தென்படுவதால் பயிர்களை வறட்சி நிலைக்கு விடாமல் பராமரிப்பதால் பூச்சி தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
  • பூச்சி தாக்கல் தீவிரம் அடையும் போது கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.(10 லிட்டர் தண்ணீருக்கு கீழ்க்கண்ட அளவை பயன்படுத்த வேண்டும்)
  • Lambda cychlothrin - 25 மில்லி
  • Fibronil - 25 மில்லி 
  • Imidacloprid - 10-15 மில்லி
  • Acephate+ imidacloprid - 25 கிராம்
  • Quinalphos - 25-40 மில்லி
  • Spinetoram -5-10 மில்லி
  • Cartap hydrochloride -10-15 கிராம் 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA




ஞாயிறு, 2 ஜூன், 2024

மர பயிர் சாகுபடியில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • நம் நாட்டில் உற்பத்தியாகும் மரச்சாமான்களுக்கு தேவையான மரங்கள் சுமார் 50% மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத மரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
  • ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்தியாவில் போதுமான அளவு மர சாகுபடி இருந்தும் அதில் உற்பத்தி செய்யப்படும் கட்டைகள் போதுமான சுற்றளவு மற்றும் வைரம் பாய்ந்த கட்டையாக இருப்பதில்லை. 
  • இதனால் சந்தை மதிப்பை பெற இயல முடியாமல் போகிறது. இதற்குப் பிரதான காரணம் சாகுபடியில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது.

  • கவனிக்கப்பட வேண்டியவை: 

  • குறைந்தபட்சம் இரண்டு அடி உயரம் முதல் ஆறு அடி உயரம் வரை உள்ள மரக்கன்றுகள் அல்லது மர நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் கன்றுகளின் தண்டுப் பகுதி .தடிமனாகவும், செழிப்பானதாகவும், வளைவு நெளிவு இல்லாமலும் இருக்க வேண்டும். சிறிய வளர்ப்பு பைகளில் பெரிய செடியாக இருப்பின் சற்று கவனமாக தேர்வு செய்யவும் இது போன்ற கன்றுகள் நிலத்தில் வைத்தால் மிக எளிதில் இறந்து விடுவோம். ஏனெனில் இதன் வேர்கள் வளர போதுமான இடம் இல்லாமல் வளைந்து நெளிந்து வளர்ப்பு பையில் இருப்பதால் திடீரென நிலத்தில் நடும் போது இதனால் வேகமாக வளர இயலாது.
  • மரங்கள் வேகமாகவும் தடிமனாகவும் வளர வேர் வளர்ச்சி மிகவும் இன்றி அமையாததாகும். ஆரம்ப காலத்தில் நல்ல வேர் வளர்ச்சி பெற தேர்வு செய்யப்படும் நிலம் 5 முதல் 6 அடி ஆழமானதாகவும் மண்கள் பொலபொலப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிலத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டியது மிக முக்கியம்.
  • தேர்வு செய்யப்பட்ட நிலத்தை சமன்படுத்தி, சட்டி கலப்பை பயன்படுத்தி ஒரு முறை உழவு செய்துவிட்டு பின்னர் இரண்டு முறை 5 கலப்பையை பயன்படுத்தி உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். வழக்கத்துக்கு மாறாக வரப்புகளை உயர படுத்துவது மிக மிக முக்கியம். அப்போதுதான் கிடைக்கப் பெறக்கூடிய மழையை சேமித்து பயிர்களுக்கு பயனுள்ளதாக இயலும் மேலும் நிலத்தடி நீரையும் மேம்படுத்தலாம்.
  • மர பயிர்களுக்கு ஏற்றவாறு நடவு குழியை தயார் செய்து அதில் மேற்புற மண் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கலந்து அடி உரமாக இட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம், VAM, டிரைக்கோடெர்மா சூடோமோனாஸ், மெட்டாரைஸியம், Humic குருணை முதலியவற்றை இடுவதால் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • தேர்வு செய்யப்பட்ட மரக்கன்றுகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து கழுத்துப்பகுதி மண்ணிற்கு கிடைமட்டமாக இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் இதற்கு முட்டுக் கொடுத்தல் அவசியம். நீர் இருப்பதின் அடிப்படையில் சொட்டுநீர் பாசனம் அல்லது வாய்க்கால் பாசனம் வழியாக நீர் விடலாம். 
  • மரக்கன்றுகள் வளர ஆரம்பித்த பிறகு பக்க கிளைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதாவது பக்க கிளைகள் தோன்றி விரல் தடிமன் வருவதற்கும் முன்னதாக கையால் அகற்றலாம். மரங்கள் நன்கு வளர்ந்த பிறகு மரக்கிளை நீக்கியை பயன்படுத்தி பக்கவாட்டுக் கிளைகளை அகற்ற வேண்டும். 
  • தண்ணீர் விடுதல், உரம் இடுதல், களை மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முதலியவற்றை தேவையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
  • எந்த ஒரு மர பயிர் வளர்ப்பிலும் நம் இலக்கு வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். மர பயிரின் ஆயுட்காலத்தை பொறுத்து 10 முதல் 18 வருடங்களுக்கு நன்றாக பராமரிக்க வேண்டும் குறிப்பாக போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு மரங்களுக்கு செயற்கையாக உரங்கள் மற்றும் தண்ணீர் கொடுக்காமல் நிறுத்த வேண்டும், இதனால் பயிர்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு கடினமாக வளரும்.
  • இதனால் தண்டுப் பகுதியில் உள்ள திசுக்கள் கடினமாக மாறி வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்ய உதவி வழிவகை செய்யும். வைரம் பாய்ந்த கட்டைகள் அல்லது மரங்கள் தான் அதன் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்கிறது.
  • இதைத் தவிர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒவ்வொரு மரப்பயிருக்கும் துல்லிய பண்ணைய முறையில் சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்களை வகுத்துள்ளார்கள் அதனையும் பின்பற்றி தரமான வைரம் பாய்ந்த மரக்கட்டைகளை உற்பத்தி செய்து லாபம் பெற அறிவுறுத்தப்படுகிறது. 

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 1 ஜூன், 2024

நெல் பயிர் அதிக தூர்கள் பிடிக்க என்ன செய்ய வேண்டும்

முன்னுரை:

  • நெல் பயிரின் மகசூல், பயிரில் தோன்றும் தூர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது.ஒரு நெல்பயிர் சராசரியாக 20 முதல் 25 தூர்களை வெளியிடுகிறது. இதில் 14 முதல் 15 தூண்கள் மட்டுமே வளமான நெல் கதிர்களை உருவாக்கும் திறன் படைத்தது.
  • இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நெல் கதிர்கள் நீளமானதாகவும் அடர்த்தியாகவும் இருப்பதுடன் நெல் மணிகளின் அளவும் பெரிதாக இருப்பதால் நல்ல மகசூல் பெற இயலும். நெல் பயிரில் அளவுக்கு அதிகமான தூர்கள் வெளி வெளிவருவதால் பெரும்பான்மையான தூர்கள் நெல் கதிர்களை உருவாக்குவதில்லை.

நிலம் தயார் செய்தல்: 

  • நிலத்தை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக 15 செ.மீ குறையாமல் உழவு செய்து காய விட வேண்டும். 
  • சென்ற பயிர்களின் மீதங்கள்/எச்சங்கள் ஆழமாக சென்று எளிதில் மக்குவதுடன் நோயை உற்பத்தி செய்யக்கூடிய பூஞ்சான மற்றும் பூச்சிகளின் உறக்க நிலைகளை அழிக்கலாம்.
  • பின்னர் இந்நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடவேண்டும். இதனுடன் தேவையான அடி உரங்களான தழைச்சத்து/அமோனியம் சல்பேட், மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் ஜிங்க் சல்பேட் ஆகியவை இடவேண்டும். அப்போதுதான் முந்தைய பயிர்கள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்கள் எளிதில் மக்குவதுடன் ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் எளிதில் செடிகளுக்கு கிடைக்க பெறும் முக்கியமாக தழைச்சத்து.
  • நெல் பயிர்கள் நன்கு தூர் பிடிக்க ஆரம்ப நிலையில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறும் தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தில் நீரை பாய்ச்சி இரண்டு நாட்கள் ஊறவைத்து பிறகு சேர் உழவு செய்யவும். சேர் உழவு அதிகம் ஆழம் செல்வதை தவிர்க்கவும். அதிகபட்சமாக 15 - 20 cm ஆழம் செல்லலாம்.

நடவு செய்தல்:

  • தயார் செய்த நிலத்தில் ஒருவாரம் கழித்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முன் நிலத்தை நன்கு சமன் செய்தல் அவசியம். மேலும் நடவு செய்யும்போது மிதமான நீர் மட்டும் நிலத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட நெல் ரகங்களைப் பொறுத்து குறிப்பிட்ட நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும். உதாரணத்திற்கு மேம்படுத்தப்பட்ட ரகங்களை 25 நாட்களுக்குள் கண்டிப்பாக நடவு செய்ய வேண்டும். நாட்டு ரகங்களை 40 நாட்கள் கழித்து கூட நடவு செய்யலாம். இது பயிர்களின் தூர் கட்டும் திறனை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
  • பயிர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் நாற்றுப் பண்ணையில் இருந்தால் அதிகமான வேர்கள் உருவாகி விடும். இந்த பயிர்களை நாம் பிடுங்கி நடவு செய்யும்பொழுது வேர்ப்பகுதியில் ஏற்படும் சேதத்தில் இருந்து மீண்டு வந்து தூர் கட்ட அதிக நாட்கள் தேவைப்படும்.
  • நடவு செய்வதற்கு முன்  நாற்றுகளில் குறைந்தது 3-4 இலைகள் நன்கு விரிவடைந்து இருக்க வேண்டும்.
  • நாட்டு ரகங்களை நடவு செய்யும்போது 5-8 பயிர்களையும் மேம்படுத்தப்பட்ட ரகங்களை நடவு செய்யும்போது 3-4  பயிர்கள் நடவு செய்தாலே போதும். நடவு செய்யும்போது பயிர்களின் வேர் நிலத்திற்கு கீழ்ப்புறமாகவும் நாற்றுகளின் கழுத்து நிலத்திற்கு கிடைமட்டமா இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
  • அதாவது பயிர்கள் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் ஆழத்திற்குள்ளேயே நடவு செய்ய வேண்டும். எவ்விதமான இரகமா இருந்தாலும் குறைந்தபட்ச இடைவெளியாக 15X15 cm பயன்படுத்துவது உகந்தது.

உர மேலாண்மை: 

  • அடி உரத்தில் போதுமான அளவு தழைச்சத்து இடவேண்டும். ஆனால் யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • புதிய வெள்ளை வேர்கள் உருவாவதை ஊக்குவிக்க நடவு மேற்கொண்ட ஐந்து நாட்களுக்குள் VAM ஏக்கருக்கு 4 கிலோ வீதம் இட வேண்டும். தேவைப்பட்டால் Humic குருணைகளையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

நீர் மேலாண்மை:

  • நடவு மேற்கொண்ட 18- 25 நாட்கள் வரை போதுமான எண்ணிக்கையில் தூர்கள் வெடிக்கும் வரை காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விட வேண்டும்.
  • ஆரம்ப நிலையில் நெல் வயலில் சராசரியாக 2 இன்ச் தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் அதிகபட்சமாக 4 இன்ச் தண்ணீருக்கு அதிகமாக வயலில் நீர் தேங்கியிருக்கக் கூடாது அவ்வாறு இருந்தால் வேர்களால் போதுமான அளவு ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள இயலாது.
  • மேலும் இது உறுதியற்ற தண்டு உற்பத்தி மற்றும் நோய் /பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது.

களை மேலாண்மை:

நெல் பயிரின் வளர்ச்சி நிலையில் அவ்வப்போது களைகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நெல் பயிருக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் இடவசதி கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டு வளர்ச்சி குன்றியும் தூர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் இயற்கை வழி திரவங்களை பயன்படுத்தி எடுக்க வேண்டும்.
  • மீறி தோன்றும் நோய் அல்லது பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதால் பயிர் வளர்ச்சியை சீர்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: 

  • மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் சரியாக பின்பற்றினால் கண்டிப்பாக பயிர்கள் நன்றாக தூர் பிடிக்கும்.
  • இருப்பினும் போதுமான வளர்ச்சி/தூர் பிடிப்பு இல்லை எனில் 10 லிட்டர் தண்ணீருக்கு Jivagro - 25-30 மில்லி, 19:19:19- 50-100 கிராம் மற்றும் ஜிங் -25 கிராம் ஆகியவற்றை கலந்து மாலை நேரத்தில் பயிரின் தூர் பகுதியில் நன்கு தெளிக்க வேண்டும். இதனை பயிரின் 25 நாட்களுக்கு முன் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவின் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



புதன், 29 மே, 2024

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணங்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்

முன்னுரை:

  • நிலத்தில் தொடர்ச்சியான நீர்த்தேக்கம் அல்லது ஈரப்பதம் இருந்தால் அந்த இடத்தில் பாசிகள் வளர்வதை நாம் காண இயலும். 
  • பாசிகளின் வளர்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும் இதனால் நன்மைகளும் உண்டு பல தீமைகளும் ஏற்படுகிறது.

  • நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசி, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து கொடுக்கிறது. இது மட்டும் இன்றி பயிர் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை உற்பத்தி செய்து தருவதுடன் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கிறது. 
  • இந்த நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது 25 சதவீதம் வரை ரசாயன உர தேவையை குறைக்கலாம்.
  • பொதுவாக நீரில் குறிப்பாக நிலத்தடி நீரில் பாசிகள் காணப்படும் இது இயற்கையாகவே சிதைந்து விடுவதால் இதன் வளர்ச்சி நம் காண்பதில்லை. 
  • இவ்வாறு இயற்கையாக நடக்கும் நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டு நாம் விடும் அதிகபட்ச உரத்தினால் பாசிகள் அபரிமிதமாக வளர்ந்து நெல் பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கிறது.

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணிகள்: 

  • தொடர்ச்சியாக நெல் பயில் நீர் தேங்கி இருப்பதால் இது பாசிகள் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. 
  • இதனால் நாஸ்டாக் மற்றும் சைனோ பாக்டீரியா அதிகளவு பெருக்கமடைந்து நெல் வயலில் காணப்படும் நீரில் பச்சை நிற பாய் போன்று சூழ்ந்து விடுகிறது. 
  • அதிக அளவு அடி உரம் மற்றும் நீர் மேல் இடும் ரசாயன உரங்களினால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக தோன்றி பயிர் வளர்ச்சியை தடை செய்கிறது.

பாசி வளர்ச்சியால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

  • நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பிடுங்கி நடுவதால் அதற்கு ஏற்படும் அழுத்தத்தினால் ஆரம்ப நிலையில் நல்ல வேர் பிடித்து செடிகள் பச்சை கட்ட குறைந்தபட்ச நாட்களை எடுத்துக் கொள்வோம்.
  • இந்த குறைந்தபட்ச நாட்களுக்கு முன்னதாக நாம் அளவுக்கு அதிகமாக ஈடும் ரசாயன உரங்களை பயன்படுத்தி பாசி வேகமாக வளர்ந்து விடுகிறது. 
  • இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி மற்றும் வளர்வதற்கான இடவசதி ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுவதால் பயிர்களால் வேகமாக வளர முடியாமல் குன்றி காணப்படும்.
  • இதனால் மற்ற பூச்சி மற்றும் பூஞ்சான நோய்களும் நெல் பயிரை எளிதில் தாக்குகிறது.
  • போதுமான வேர் வளர்ச்சி இல்லாத நெல் பயிர்கள் பாசி வளர்ச்சியினால் சரியாக சுவாசிக்க மற்றும் உணவு தயாரிக்க முடியாமல் எளிதில் தொய்வு அடைந்து இறந்து விடுகிறது. கிராமப்புறங்களில் இதனை பயிர் கரைகிறது என்பார்கள். 
  • பாசிகள் நெல் வயலுக்கு இடம் உரங்களை 80 சதவீதம் வரை எடுத்துக் கொள்வதால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும், இதன் அதிகமான வளர்ச்சியினால் மண்ணின் கார அமில தன்மை அதிகரித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. 
  • பாசியினால் வெளியிடப்படும் ரசாயன திரவத்தால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களும் தற்காலிகமாக செயல்படாமல் போகிறது. 
  • நெல் வயலில் மீன் வளர்க்கும் பொழுது இது மீன் வளர்ச்சியையும் பாதிக்கிறது. 
  • அதிகம் பாசி படர்ந்த நெல் வயலில் கை களை எடுக்கும் பொழுது இது மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

நெல் பயலில் பாசியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் பாசிகளின் உடலின் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்துவிடும். 
  • நெல் பயிருக்கு மாற்றாக வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • அல்லது ஒரு முறை நேரடி நெல் விதைப்பிலும் மற்றொரு முறை நஞ்சை தயார் செய்தும் நெல் பயிரிடலாம்.
  • நெல் வயலை மேடு பள்ளம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதால் குறிப்பிட்ட இடத்தில் நீர் தேங்கி பாசி வளர்வதை தவிர்க்கலாம்.
  • பயிர்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர் விட வேண்டும். 
  • உப்பு கலந்த நீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  • மழை பொழிவு காலங்களில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • கை களை எடுப்பதை நிறுத்திவிட்டு கோனோ வீடர் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் படிப்படியாக நெல் பயலில் பாசி வளர்வதை தவிர்க்கலாம். 
  • ரசாயன உரங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் தேவையான அளவு தேவையான நேரத்தில் மட்டும் கொடுக்க வேண்டும்.
  • பயிர்களுக்கு இழை வழியாக ஊட்டச்சத்து தெளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பாசி வளர்ச்சியை தடை செய்யலாம்.
  • பாசிகளின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 1-2 கிலோ வரை காப்பர் சல்பேட் இட வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


மிளகாயில் தவளை கண் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மிளகாய் ஒரு காய்கறி பயிராக இருந்தாலும் பெரும்பான்மையாக இது நறுமண பொருளாகவும் உணவுகளில் சுவையை மேம்படுத்தவும் மற்றும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால் இதனை Wonder Spice  என்பார்கள். 
  • உலக அளவில் இந்தியா மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது குறிப்பாக வைட்டமின் ஏ,பி, சி, இ, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர், சோடியம் மற்றும் பல நிறைந்துள்ளது. 
  • இந்தியாவில் வருடத்திற்கு சராசரியாக 4300 முதல் 4700 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசம் இதில் முதலிடம் வகிக்கிறது.

நோய் பூஞ்சை விபரம்:

  • இந்நோய் Cercospora எனப்படும் பூஞ்சனத்தால் ஏற்படுகிறது. 
  • மிதமான வெப்பநிலை, அதிகமான காற்று ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு காலங்கள் இதன் தாக்குதலுக்கு உகந்ததாகும். 
  • பிரதானமாக விதை மூலமாக பரவக்கூடியது. 
  • இருப்பினும் மண் மற்றும் பயிர் கழிவுகளில் சுமார் ஒரு வருடம் வரை உயிர் வாழும் திறன் உடையது.
  • காற்று, மழை, வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பூஞ்சானம் பரவுகிறது. 

நோயின் அறிகுறிகள்: 


  • பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை முடியும் தருணம் வரை இந்நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • இதன் அறிகுறிகள் இலையின் இருபுறத்திலும் காணப்படும். 
  • ஆரம்ப நிலையில் இலையில் சிறிய வட்ட வடிவிலான செம்பழுப்பு நிறப்பு புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனைச் சுற்றி வெளிர் பழுப்பு நிற வளையம் காணப்படும்.இதனை பார்ப்பதற்கு தவளையின் கண் போன்று காணப்படும். 
  • நாளடைவில் புள்ளிகள் சற்று பெரிதாகி அதன் நடுப்பகுதியில் இருக்கும் சாம்பல் நிற பகுதி காய்ந்து உதிர்வதால் இலைகளில் துளைகள் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாற்ற முடிந்து வாடி உதிர்வதால் காய் மற்றும் பழங்கள் வெப்பநிலைக்கு உட்படும்.
  • நோய் தீவிரமடையும் பொழுது இதன் அறிகுறி இதைக்காம்பு பூவிதல் மற்றும் தண்டு பகுதியில் நீள்வட்ட வடிவில் காணப்படும்.
  • பழங்களிலும் இதன் அறிகுறிகள் தென்படுவதால் மகசூல் இழப்பீடு மற்றும் தரம் குறைகிறது.
  • இதன் உச்சபட்ச அறிகுறியாக தண்டு அடி அழுகல் நோய் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்நோய் விதை மூலமாக பரவக்கூடியதால் தேர்வு செய்யப்படும் விதை சான்றிதழ் பெற்றதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்.
  • நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகத்தினை தேர்வு செய்யலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி இருப்பதால் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை குறைக்கலாம். 
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இல்லாமல் அமைய மேட்டுப்பாத்திகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் வழியாக பயிரிடலாம். 
  • வயலில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • தொடர்ச்சியாக ஒரே வயதில் மிளகாய் அல்லது குடைமிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • சாகுபடி செய்த பிறகு பயிரின் எச்சங்களை முழுமையாக நிலத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
  • தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்த வேண்டும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை காரணங்களால் செடிகள் ஈரப்பதமாக இருக்கும் பொழுது நிலத்திற்குள் நடந்து பண்ணைப் பணிகளை செய்யக்கூடாது இதன் மூலமும் நோய் பூஞ்சை பரவும்.
  • நாட்டு ரகங்களை பயிரிடும் பொழுது விதைகளை நேர்த்தி செய்து பயிரிட வேண்டும். 
  • நோயின் ஆரம்ப நிலையில் இயற்கை வழி பூஞ்சான கொல்லிகளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வேண்டும்.
  • Trichoderma viride, Trichoderma harzianum, Pseudomonas மற்றும் Bacillus subtilis போன்ற இயற்கை பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவி புரிகிறது.
  • இதனைத் தவிர இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஈயம் கரைசல், போன்றவற்றையும் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். 
  • Carbendazim - 2-4 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Carbendazim+Mancozeb - 2-3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 1 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  •  Chlorothaonil- 2 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி/1லிட்டர் தண்ணீருக்கு

  • Tebuconazole -1.5 மி/ 1 லிட்டர் தண்ணீருக்கு
  • Azoxystrobin+Tebuconazole -1.5 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Pyraclostrbin+Tebuconazole -1-2 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Mettiram+ pyraclostrbin - 3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

 
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



செவ்வாய், 28 மே, 2024

மரவள்ளியில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 3 ஹெக்டேர்  பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தற்போது சுமார் மூன்று முதல் ஆறு மாதம் வயதுடைய மரவள்ளி பயிர்கள் சாகுபடியில் உள்ளது. இதில் பரவலாக, வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய தேமல் நோய் பரவலாக காணப்படுகிறது. 
  • இதை மஞ்சள் தேமல் நோய் என்றும் கூறுவார்கள் அல்லது ஜெமினி வைரஸ் நோய் என்றும் கூறுவார்கள். பராமரிப்பு இல்லாத நிலங்களில் சுமார் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு தேமல் நோயினால் ஏற்படுகிறது. 

நோயின் அறிகுறிகள்:

  • நுனி இலைகளின் மேற்பரப்பில் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் வெள்ளை நிறமாக மாற்றமடைகிறது. 
  • இலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பகுதிகள் உருவாகி தேமல் போன்ற அறிகுறியை ஏற்படுத்துகிறது. 
  • பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் ஒழுங்கற்ற வடிவில் வளைந்து நெளிந்து காணப்படுகிறது.
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் போது நுனி இலைகள் வடிவம் இழந்து சுருங்கி உருமாறியும் தடித்தும் காணப்படுகிறது. 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி தடைபட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. 
  • தட்பவெப்ப சூழ்நிலை, பயிரின் எதிர்ப்பு திறன் மற்றும் வெள்ளை ஈக்களின் அளவை பொறுத்து மீண்டும் மீண்டும் நுனி இலைகள் வடிவம் இழந்து தேமல் அறிகுறிகளுடன் தோன்றலாம். 
  • இவை அனைத்தும் கண்டிப்பாக கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • கிழங்கு உற்பத்தியின் போது தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளில் கிழங்குகள் வெடிப்பதையும் காண இயலும்.

இந்நோய் எவ்வாறு பரவுகிறது:

  • பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்தல். 
  • ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலமாக பரவுகிறது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரோக்கியமான பயிர்களில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • தேர்வு செய்த விதை  குச்சிகளை நடவு செய்வதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • நடவு செய்யும்போது போதுமான பயிர் இடைவெளி அவசியம் இதனால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். 
  • பயிரின் ஆரம்ப நிலையிலோ அல்லது பிற்காலத்திலோ களைகள் இன்றி பராமரிக்க வேண்டும்.
  • குறிப்பாக சாகுபடி வயலுக்கு அருகில் அல்லது வரப்புகளில் அதிக களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

  • மரவள்ளி பயிருக்கு அருகில் எளிதில் வைரஸ் நோயால் பாதிக்கக்கூடிய மற்ற பயிர்களை சாகுபடி செய்ய கூடாது குறிப்பாக கொடி வகை காய்கறிகள்.
  • Monocrotophos, Cypermethrin, Quinalphos போன்ற பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்கவும். இந்த வகை மருந்துகளுக்கு வெள்ளை ஈக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
  • வயலை சுற்றி சூரியகாந்தி அல்லது பூச்செடிகளை நடலாம். (மஞ்சள்)
  • இயற்கை பூச்சி உண்ணிகளான குளவி மற்றும் வண்டுகளை வயல்களில் அதிகப்படுத்தவும்.
  • வேப்பங் கொட்டைச்சாறு 5%- ஐ 5 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அல்லது நித்திய கல்யாணி இலைச்சாறு அல்லது நொச்சி இலைச்சாறு 5% தெளிக்கலாம்.
  • இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான புகையிலை கசாயம், பத்திலை கரைசல் ஐந்திலை கரைசல், தேர்மோர் கரைசல், 3G கரைசல் மற்றும் பல உள்ளது இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வு செய்து வாரம் ஒரு முறை தெளித்து வரலாம். 
  • இயற்கை பூச்சிக் கொல்லிகளை ஐந்து முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளித்த வரவேண்டும். Verticillum lecanii மற்றும் Mettarhizum.
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
  • Afidopyropen – 2 ml/ lit
  • Diafenthiuron- 1g/ lit
  • Flonicamid – 2 ml/ lit
  • Imidacloprid + Spirotetramat – 1 ml/ lit.
  • Spiromesiefen –1 ml/lit.
  • Acetamaprid – 1 g/lit.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 27 மே, 2024

பயிர்களில் போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

முன்னுரை:

  • துத்தநாகம், இரும்பு, மாங்கனிசு, போரான், மாலிப்டினம், குளோரின் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைந்த அளவு பயிர்களுக்கு தேவைப்படுவதால் இதனை நுண்ணூட்ட சத்துக்கள் என்கிறோம்.
  • பேரூட்டச் சத்துக்கள் என்றால் என்ன அதன் பணிகள் என்னவென்று ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். நுண்ணூட்ட சத்துக்கள் மிக குறைந்த அளவு தேவைப்பட்டாலும் இவற்றின் குறைபாடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் மறைமுகமாக பேரூட்டச் சத்துக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் பணிகள்:

  • பயிர் வளர்ச்சிக்கு அடிப்படை செல்கள் வேகமாக வளர்ச்சி அடைவது. பயிரின் தளிர் பகுதி மற்றும் வேர் பகுதியில் இருக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் போரான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • செல்களின்/திசுக்களின் சுவர்களை கடினப்படுத்துவது இதன் பிரதான பணியாகும். 
  • பயிர்களில் புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் இதர அமிலங்களின் உருவாக்க மற்றும் செயல்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. இதன் மூலம் உருவாகக்கூடிய சத்துப் பொருட்களை செடிகளின் அனைத்து பாகத்திற்கும் கொண்டு சேர்க்கிறது. 
  • பயிர்களில் பூக்கள் உருவாதல், பூக்களில் ஆண் மற்றும் பெண் பாகங்கள் உருவாதல் மற்றும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு போரான் ஊட்டச்சத்து மிக அவசியம்.
  • பழங்கள் மற்றும் விதைகள் தரமாக பயிர்களில் உற்பத்தி செய்யப்படுவதற்கு போரான் இன்றியமையாததாகும்.
  • பயிர்களில் தளிர் மற்றும் வேறு வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  • பயிறு வகை பயிர்களில் வளிமண்டத்தில் உள்ள தழைச்சத்தை வேர்ப்பகுதியில் நிலைநிறுத்த உதவும் சைனோபாக்டீரியா போரான் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டுதான் வளர்கிறது. 

எப்போது போரான் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது:

  • மண்ணின் தன்மை அதாவது நம் நிலத்தின் மண் எந்த வகையான பாறைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதனை பொறுத்து இதில் உள்ள போரான் சத்து மாறுபடும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதாவது அமிலத்தன்மை கொண்ட மண்ணில் போரான் ஊட்டச்சத்து குறைவாகத்தான் இருக்கும். அமிலத்தன்மை கொண்ட மண்ணில் காணப்படும் இரும்பு மற்றும் தாமிரத்துடன் போரான் இணைந்து செடிகளுக்கு கிடைக்க வண்ணம் மாறிவிடுகிறது.
  • மண்ணின் அமைப்பு அதாவது மணல் பாங்கான பகுதிகளில் இந்த ஊட்டச்சத்தை குறைவாகத்தான் இருக்கும் ஏனெனில் இது எளிதில் நிலத்தை விட்டோ அல்லது நிலத்திற்கு அடியில் சென்று விடுகிறது. 
  • அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும் மக்கு எந்த அளவில் நம் மண்ணில் உள்ளதோ அந்த அளவில் போரான் சத்து செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
  • போரான் எளிதில் கரையக்கூடிய ஊட்டச்சத்து என்பதால் போதுமான ஈரப்பதம் மண்ணில் இருந்தால் மட்டுமே செடிகளுக்கு சென்றடையும்.
  • ஒட்டுமொத்த மண்ணின் வளம் மற்றும் அதில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பொறுத்து மண்ணில் இருக்கும் போரான் ஊட்டச்சத்து அளவு மாறுபடும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • பயிரின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து பின்னர் கருகுதல். 
  • தண்டுப் பகுதி தடிமனாகி வெடிப்பு காணப்படுதல். 
  • நுனி இலைகள் தடித்தல் மற்றும் கணு இடைவெளி குறைந்து இலைகள் மிக நெருக்கமாக காணப்படுதல். 
  • நுனி இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒழுங்கற்ற வடிவில் வெண்மை நிற புள்ளிகள் காணப்படுதல்.
  • இலை காம்புகள் வளைந்தும் சில நேரங்களில் அதில் அழுகல் நோயும் ஏற்படும். 
  • பழம் மற்றும் காய்கறிகளின் இதன் குறைபாட்டால் வெடிப்புகள் உருவாதல்.
  • பூ பிடித்தல் குறைந்து பூ உதிர்தல் அதிகரிக்கும். போரான் ஊட்டச்சத்து அதிக அளவு குறையும் பொழுது பூக்கள் காய்ந்து உதிரும். 
  • கோண வடிவ காய்கள் உருவாதல், இலை துணிகள் வளைதல், குரும்பை உதிர்தல், சிறிய பழம் அல்லது காய்கள் உருவாவதால் என பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • தென்னை- குரும்பை உதிர்தல், ஒல்லிகாய் உருவாதல், இலைகளின் நுனி வளைந்து காணப்படுதல் மற்றும் பருப்பு சரிவர பிடிக்காமல் இருக்கும்.
  • காய்கறி பயிர்கள் - பூக்கள் சரிவர போகாது, பூக்கள் விரியும் முன்னே கருகுதல், குறைந்த மகரந்த சேர்க்கை, செடிகளின் நுனி கருகுதல், காய் பிடிப்பு திறன் குறைதல், காய்கறி வெடிப்பு தோன்றுதல் மற்றும் பல.
  • திராட்சை -bசிறிய மற்றும் பெரிய காய்கள் கலந்து காணப்படுதல், புளிப்பு சுவை, பழங்களில் வெடிப்பு
  • வாழை - நுனி இலைகள் மஞ்சள் நிறமாதல், நுனி இலைகளின் விளிம்புகள் கருகுதல் மற்றும் இலைகள் உட்புறமாக சுருள்தல், பழங்களில் சுவை இன்மை மற்றும் பல.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
 


வியாழன், 23 மே, 2024

இயற்கை முறையில் கால்சியம் ஊட்டச்சத்தை பெரும் வழிமுறைகள்

முன்னுரை:

  • பயிரின் வளர்ச்சி மற்றும் பயிரின் பாகங்கள் திடமாக இருக்க கால்சியம் ஊட்டச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். பொதுவாக மண்ணின் கார அமிலத்தன்மை மண்ணில் இருக்கும் கால்சியம் ஊட்டச்சத்தை நிர்ணயிக்கிறது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 குறைவாக உள்ள அமைப்பில் கால்சியம் குறைபாடு காணப்படும். 
  • மண்ணில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் இருந்தாலும் கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு பயிர்களில் காணப்படும். அதே போன்று மண்ணில் அதிக அளவு பாஸ்பரஸ் இடும் பொழுது இது கால்சியத்துடன் வேதியல் வினைபுரிந்து கால்சியம் ஊட்டச்சத்தை செடிகளுக்கு கிடைக்காதவாறு செய்து விடுகிறது.

கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள்:

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • இளம் இலைகள் மற்றும் தளிர்கள் உட்புறமாக சுருண்டு காணப்படுதல். 
  • பூ மொட்டுக்கள் மற்றும் பூக்கள் வளர்ச்சி குறைதல். 
  • போதிய வேர் வளர்ச்சி அல்லது வேர் நுனி பகுதிகள் இறந்து காணப்படுதல்.
  • பயிரின் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் மற்றும் உட்புறமாக சுருங்குதல். 
  • இலை துணிகளில் கருகிய தோற்றம். 
  • காய் மற்றும் பழங்களில் அழுகல் காணப்படுதல்.
  • களர் அல்லது உவர் நிலங்களில் அதிகம் கால்சியம் சத்து இருக்கும்பொழுது மற்ற நுண்ணூட்ட சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது குறிப்பாக துத்தநாகம், இரும்பு மற்றும் தழைச்சத்து.

கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உரங்கள்:

ஜிப்சம்:

  • கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் நாம் அனைவரும் அறிந்த சிறந்த கால்சியம் மற்றும் சல்பர் சத்துகள் கொண்ட உரமாகும். 
  • பொதுவாக இது மண்ணின் கார அமில தன்மையை சரி செய்ய மற்றும் மண் இறுக்கத்தை போக்க இடப்படுகிறது. அதிக கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இதை விடுவதை தவிர்க்கவும்.
  • இதில் கால்சியம் 23 % மற்றும் சல்பர் 18 % நிறைந்துள்ளது. இந்த கால்சியம் கார்பனேட் மண்ணிலிருந்து எடுக்கப்படும் பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

முட்டை ஓடு:

  • இயற்கை விவசாயம் பயிர்களுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுப்பதில் முட்டை ஓடு மிக முக்கிய பங்கு வைக்கிறது. தேவையான அளவுக்கு முட்டை ஓட்டை சிறிதும் துண்டுகளாக நறுக்கி அல்லது பவுடர் வடிவில் தயார் செய்து பயிர்களுக்கு இலை வழியாகவும் வேர் பகுதியிலும் கொடுக்கலாம். 
  • இதனை சரியான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அளவுக்கு அதிகமாக இடும் போது இது மண்ணின் கார அமில தன்மையை மாற்றும் தன்மை உடையது. எனவே இதனை கார அமிலத்தன்மை குறைவாக உள்ள மண்ணில் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

மீன் அமிலம்: 

  • பல்வேறு வகையான அமிலங்கள் நிறைந்திருக்கும் இயற்கை வழி தயாரிப்பு திரவமான மீன் அமிலத்தில் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்திருக்க நாம் தயார் செய்யும் கரைசலை சுமார் ஆறு மாதம் வரை நொதிக்க விடும் பொழுது மீன் பாகத்தில் உள்ள எலும்புகள் சிதைந்து அதில் உள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைக்கப் பெறுகிறது. 
  • பொதுவாக மீன் அமிலம் 7 முதல் 10 நாட்களில் தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதில் பெரிய அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்காது வளர்ச்சி ஊக்கிகள் மட்டும் நிறைந்ததாக இருக்கும்.

வேளாண்மை சுண்ணாம்பு: 

  • மண்ணில் புதையுண்டு இருக்கும் சுண்ணாம்பு பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இயற்கை பொருள் தான் வேளாண்மை சுண்ணாம்பு. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் குறைந்த கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் அதன் தன்மையை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 
  • இதை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை வழி தயாரிப்பு பொருளாகும். மண் வளத்தை மேம்படுத்துவதால் இதர நுண்ணூட்ட சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

நீரில் கரையும் கால்சியம்: 

நீரில் கரையும் கால்சியம் என்பது முட்டை ஓடு மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்க கூடிய திரவமாகும். அதாவது முட்டையின் ஓட்டு பகுதியில் மிக அதிக அளவு கால்சியம் நிறைந்து இருப்பதால் இதை பிரித்து எடுத்து உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டது தான் இந்த நீரில் கரையும் கால்சியம்.

முட்டை எலுமிச்சை கரைசல்: 

  • ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு இலை வழியாக தெளிப்பதற்கு ஏதுவாக சுமார் 15 முதல் 20 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அது மூழ்கும் படி எலுமிச்சை சாற்றை ஊற்ற வேண்டும்.
  • இதனை மூடி வைத்து சுமார் பத்து நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான அமைப்பாக இருக்கும் இதனை நன்றாக பிழிந்து அதனுடன் 250 கிராம் நாட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் 20 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 
  • இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தை சுமார் ஒரு ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

எலும்பு உரம்: 


  • எலும்பு உரம் என்பது விலங்கினங்களின் எலும்புகளை பொடியாக்கி அல்லது துகள்களாக மாற்றி கிடைக்கப்பெறும் இயற்கை உரமாகும். இதில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தழைச்சத்து நிறைந்துள்ளது.
  • மண்ணின் தன்மை மற்றும் அமைப்பை சரி செய்வதுடன் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து தருவதால் இது சிறந்த பயனளிக்கிறது.
  • தொடர்ச்சியாக வளர்ச்சியிலும் விளைச்சலிலும் செயல்படக்கூடிய பயிர்களுக்கு இதனை கொடுப்பதால் மண்ணின் தன்மை மாறாமல் இருக்கும்.

இது போன்ற தகவல் மற்றும் வேளாண் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 16 மே, 2024

சில முக்கிய நிறுவனங்களில் கிடைக்க பெறும் நுண்ணூட்டக் கலவை

முன்னுரை:

  • பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் பல்வேறு வகையான உரங்களை உள்ளடக்கியதாக இந்த நுண்ணூட்டக் கலவை. 
  • மிகக்குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் இதன் குறைபாட்டால் பயிர்களில் ஏற்படும் விளைவுகள் பெரிதாக இருக்கும். மறைமுகமாக பயிர் வளர்ச்சியில் இருந்து மகசூல் வரைக்கும் இதன் பாதிப்பு இருக்கும். குறிப்பாக காய்கறிகள் மலர்கள் போன்ற குறைந்த வாழ்நாள் உடைய பயிர்களில் இதன் அறிகுறிகள் வெகுவாக தென்படுகிறது.
  • தனியார் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் சில முக்கிய நுண்ணூட்ட கலவையை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Rexolin (PR Agro Nutri Pvt. Ltd)

  • இதில் EDTA வடிவத்தில் நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளது.துத்தநாகம் 4.2%, இரும்பு 3.4%,  மாங்கனிசு 3.2%, போரான் 1.5%, மெக்னீசியம் 1.2%, மாலிப்டினம் 0.05% மற்றும் சிறிதளவு காப்பர் நிறைந்துள்ளது.
  • இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மிகவும் தரமான முறையில் விற்கப்படுவதால் இதன் விலை சற்று அதிகம்.
  • விலை அதிகமாக இருப்பதால் இலை வழியாக தெளிப்பதற்கும், சொட்டு நீர் வழியாக கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
  • சராசரியாக 10 லிட்டர் தண்ணீருக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் வரை பயன்படுத்தலாம்.
  • காய்கறிகள் மலர்கள் போன்ற குறுகிய கால பயிர்களுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இதனை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தேவையின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.
  • சொட்டுநீர் பாசன வழியாக பயிர்களுக்கு கொடுக்கும் போது ஏக்கருக்கு 250-400 கிராம் வரை பயன்படுத்தலாம்.

Surplus ( Tata rallies):

  • நானோ(Nano) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் நுண்ணூட்ட கலவை. 
  • இதில் துத்தநாகம் 5%, இரும்பு 2%, மாங்கனிசு 2% மற்றும் போரான் 0.5% ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் ஜெல்(Jel) வடிவில் இடம் பெற்றிருக்கிறது.
  • இதனால் ஊட்டச்சத்துக்கள் இழப்பீடு ஏற்படுவது மிகவும் குறைவு அது மட்டும் இன்றி இதன் விளையும் சற்று குறைவுதான்.
  • ஜெல் வடிவில் இருப்பதால் பயிர்கள் அதிக வெப்பநிலையினால் பயிர் வாடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்தை எடுத்துக் கொடுக்கிறது.
  • ஏக்கருக்கு 400 மில்லி வரை பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • பயிர்களில் காணப்படும் அழுத்தத்தை போக்கி மகசூலை 15 சதவீதம் மேம்படுத்துகிறது. இது சற்று அதிகமாக பயன்படுத்தினாலும் பயிர்களை பாதிப்பு தென்படுவதில்லை.

Tracel (Tata rallies):

  • பவுடர் வடிவில் கிடைக்கக்கூடிய இந்த நுண்ணூட்டக் கலவையில் துத்தநாகம் 5%,  இரும்பு 2%, மாங்கனிசு 2%,  போரான் 0.50%, காப்பர் 0.50% மற்றும் மாலிப்டினம் 0.05% நிறைந்துள்ளது. 
  • குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கக் கூடியது. ஏக்கருக்கு சுமார் 250 முதல் 500 கிராம் வரை இலை வழியாக தெளிக்கலாம். 
  • இது பொதுவாக பெரும்பான்மையான நோய் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம். 
  • இதை மற்ற நீரில் கரையும் உரங்களுடன் கலந்து தெளிக்காமல் இருப்பது சிறந்தது குறிப்பாக கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற உரங்களுடன்.
  • நுண்ணூட்டங்கள் குறைந்த அளவு இருந்தாலும் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் இரண்டு அல்லது மூன்று முறை.

Kiecite (IMT):

  • நுண்ணூட்ட உரங்களின் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் இது ஒரு முன்னணி நிறுவனமாகும்.
  • இதில் துத்தநாகம் 5%, இரும்பு 1%, மெக்னீசியம் 6%, மாங்கனிசு மற்றும் போரான் தலா 0.5 % உள்ளது.
  • பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் ஏக்கருக்கு 500 முதல் 700 கிராம் வரை.
  • பவுடர் மற்றும் திரவ வடிவில் கிடைக்கப்பெறுகிறது விலை சற்று குறைவுதான் ஆனால் அனைத்து இடங்களிலும் கிடைப்பது சற்று கடினம்தான்.

Agromin (Aeries agro):

  • பவுடர் திரவம் மற்றும் குருணை வடிவில் கிடைக்கப்பெறுகிறது. இதில் கோல்ட் மேக்ஸ் என பல வடிவங்களில் நுண்ணூட்டக் கலவை இருக்கிறது. 
  • குறைந்த விலையில் chelated வடிவில் கிடைக்கக் கூடியது. எனவே தாராளமாக பயன்படுத்தலாம். 
  • இதில் துத்தநாகம் 3%, மாங்கனிசு 1%,  காப்பர் 1%, போரான் 0.50%, சிறிதளவு காப்பர் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. 
  • இழை வழியாக ஏக்கருக்கு 250 கிராம் பயன்படுத்தலாம்.

இது போன்ற தகவல் மற்றும் மேலும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


Recent Posts

Popular Posts