google-site-verification: googled5cb964f606e7b2f.html மர பயிர் சாகுபடியில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 2 ஜூன், 2024

மர பயிர் சாகுபடியில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • நம் நாட்டில் உற்பத்தியாகும் மரச்சாமான்களுக்கு தேவையான மரங்கள் சுமார் 50% மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத மரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
  • ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்தியாவில் போதுமான அளவு மர சாகுபடி இருந்தும் அதில் உற்பத்தி செய்யப்படும் கட்டைகள் போதுமான சுற்றளவு மற்றும் வைரம் பாய்ந்த கட்டையாக இருப்பதில்லை. 
  • இதனால் சந்தை மதிப்பை பெற இயல முடியாமல் போகிறது. இதற்குப் பிரதான காரணம் சாகுபடியில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது.

  • கவனிக்கப்பட வேண்டியவை: 

  • குறைந்தபட்சம் இரண்டு அடி உயரம் முதல் ஆறு அடி உயரம் வரை உள்ள மரக்கன்றுகள் அல்லது மர நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் கன்றுகளின் தண்டுப் பகுதி .தடிமனாகவும், செழிப்பானதாகவும், வளைவு நெளிவு இல்லாமலும் இருக்க வேண்டும். சிறிய வளர்ப்பு பைகளில் பெரிய செடியாக இருப்பின் சற்று கவனமாக தேர்வு செய்யவும் இது போன்ற கன்றுகள் நிலத்தில் வைத்தால் மிக எளிதில் இறந்து விடுவோம். ஏனெனில் இதன் வேர்கள் வளர போதுமான இடம் இல்லாமல் வளைந்து நெளிந்து வளர்ப்பு பையில் இருப்பதால் திடீரென நிலத்தில் நடும் போது இதனால் வேகமாக வளர இயலாது.
  • மரங்கள் வேகமாகவும் தடிமனாகவும் வளர வேர் வளர்ச்சி மிகவும் இன்றி அமையாததாகும். ஆரம்ப காலத்தில் நல்ல வேர் வளர்ச்சி பெற தேர்வு செய்யப்படும் நிலம் 5 முதல் 6 அடி ஆழமானதாகவும் மண்கள் பொலபொலப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிலத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டியது மிக முக்கியம்.
  • தேர்வு செய்யப்பட்ட நிலத்தை சமன்படுத்தி, சட்டி கலப்பை பயன்படுத்தி ஒரு முறை உழவு செய்துவிட்டு பின்னர் இரண்டு முறை 5 கலப்பையை பயன்படுத்தி உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். வழக்கத்துக்கு மாறாக வரப்புகளை உயர படுத்துவது மிக மிக முக்கியம். அப்போதுதான் கிடைக்கப் பெறக்கூடிய மழையை சேமித்து பயிர்களுக்கு பயனுள்ளதாக இயலும் மேலும் நிலத்தடி நீரையும் மேம்படுத்தலாம்.
  • மர பயிர்களுக்கு ஏற்றவாறு நடவு குழியை தயார் செய்து அதில் மேற்புற மண் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கலந்து அடி உரமாக இட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம், VAM, டிரைக்கோடெர்மா சூடோமோனாஸ், மெட்டாரைஸியம், Humic குருணை முதலியவற்றை இடுவதால் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • தேர்வு செய்யப்பட்ட மரக்கன்றுகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து கழுத்துப்பகுதி மண்ணிற்கு கிடைமட்டமாக இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் இதற்கு முட்டுக் கொடுத்தல் அவசியம். நீர் இருப்பதின் அடிப்படையில் சொட்டுநீர் பாசனம் அல்லது வாய்க்கால் பாசனம் வழியாக நீர் விடலாம். 
  • மரக்கன்றுகள் வளர ஆரம்பித்த பிறகு பக்க கிளைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதாவது பக்க கிளைகள் தோன்றி விரல் தடிமன் வருவதற்கும் முன்னதாக கையால் அகற்றலாம். மரங்கள் நன்கு வளர்ந்த பிறகு மரக்கிளை நீக்கியை பயன்படுத்தி பக்கவாட்டுக் கிளைகளை அகற்ற வேண்டும். 
  • தண்ணீர் விடுதல், உரம் இடுதல், களை மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முதலியவற்றை தேவையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
  • எந்த ஒரு மர பயிர் வளர்ப்பிலும் நம் இலக்கு வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். மர பயிரின் ஆயுட்காலத்தை பொறுத்து 10 முதல் 18 வருடங்களுக்கு நன்றாக பராமரிக்க வேண்டும் குறிப்பாக போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு மரங்களுக்கு செயற்கையாக உரங்கள் மற்றும் தண்ணீர் கொடுக்காமல் நிறுத்த வேண்டும், இதனால் பயிர்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு கடினமாக வளரும்.
  • இதனால் தண்டுப் பகுதியில் உள்ள திசுக்கள் கடினமாக மாறி வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்ய உதவி வழிவகை செய்யும். வைரம் பாய்ந்த கட்டைகள் அல்லது மரங்கள் தான் அதன் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்கிறது.
  • இதைத் தவிர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒவ்வொரு மரப்பயிருக்கும் துல்லிய பண்ணைய முறையில் சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்களை வகுத்துள்ளார்கள் அதனையும் பின்பற்றி தரமான வைரம் பாய்ந்த மரக்கட்டைகளை உற்பத்தி செய்து லாபம் பெற அறிவுறுத்தப்படுகிறது. 

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts