முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முந்திரியில் தேயிலை கொசு:
முந்திரியை தாக்கக்கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளில் மிக முக்கியமானதாக தேயிலை கொசு கருதப்படுகிறது. ஏனெனில் இதனால் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் மூன்று வகையான கொசுக்கள் தேயிலையை தாக்கினாலும் தென்னிந்தியாவில் ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி என்ற கொசு தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பூச்சியின் விவரம்:
முட்டை:
சிறிய முட்டைகள் தளிர்கள், இலைகள், பூ கொத்துகளின் தண்டுகள் மற்றும் இலைக் காம்புகளில் தனித்தனியாக அல்லது இரண்டு முதல் ஐந்து குழுக்களாக காணப்படும்.
இளம் புழுக்கள்:
8-10 நாட்களுக்கு பிறகு வெளிவரும் இளம் புழுக்கள் தளிர்கள் மற்றும் இளம் பழங்களை உண்டு செழிப்பாக வளர்கிறது.
https://www.eagri.org/eagri50/ENTO331/lecture18/cashew_002.html
வளர்ந்த பூச்சிகள்:
வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் கருப்பு தலையுடனும், முதுகுப் பகுதியில் குமில் போன்ற அமைப்பும் காணப்படும். இதன் மொத்த வாழ்நாள் 24- 30 நாட்களாகும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இது சாற்றை உறிஞ்சும் பகுதியில் வெளிர் நிற புண்கள் காணப்படும். நாளடைவில் இது வெளிர் கருப்பு நிறத்தில் மாறும்.
- இலைக் காம்பு மற்றும் இளம் காய்/பழங்களில் இருந்து காவி நிற திரவம் வெளிவரும்.
- நாளடைவில் தளிர் மற்றும் இலைகளில் உள்ள புண்கள் பெரிதாகி, ஒன்றிணைந்து கருகி காணப்படும்.
- பூ மற்றும் பூங்கொத்துகளில் ஏற்படும் தாக்குதலால் கருகி பின் கருகல் நோய் போன்று காணப்படும்.
- பழம் மற்றும் கொட்டைகளில் ஏற்படும் தாக்குதலால் முதிர்ச்சி அடையும் முன்பே உதிரும்.
- https://cashew.icar.gov.in/wp-content/uploads/2020/10/TMB-cashew-eng.pdf
கட்டுப்படுத்தும் முறைகள்:
- இந்த கொசுக்கள் விரும்பி உண்ணக்கூடிய பயிர்களான கொய்யா, பருத்தி, மகோகனி, வேப்பமரம், முருங்கை, மிளகு, நாவல் மற்றும் திராட்சை போன்ற பயிர்கள் முந்திரி செடிகளுக்கு அருகாமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வளரக்கூடிய களைச் செடிகளை அவ்வப்போது சுத்தம் செய்து ஊடு பயிர் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு
- https://researchjournal.co.in/online/RKE/RKE%2012(2)/12_1-3.pdf
- தீவிரமாக தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.
- எதிர்ப்பு திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
- இவ்வகை கொசுக்களுக்கு எதிராக தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட Beauveria bassiana எனப்படும் உயிர் பூச்சிக்கொல்லியை அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் தெளிக்கலாம்.
- சிலந்தி, எறும்பு மற்றும் பருத்தி கறை பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரிப்பதால் இவ்வகை கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.
- புங்கம் விதை சாறு அல்லது புங்கம் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தெளிப்பதால் கொசுக்களை எளிதில் விரட்டுவது உடன் அழிக்கவும் செய்யலாம்.
- கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
- Lambda cyhalothrin- 1.2 ml per lit water
- Beta cyfluthrin+ Imidacloprid - 1 ml per litre water
- Buprofezin - 3 ml per lit water
- Thiamethoxam - 1 g per litre water
- Triazophose - 1 ml per lit water
- Deltamethrin -1.5 ml per lit water
- https://researchjournal.co.in/online/RKE/RKE%2012(2)/12_1-3.pdf