google-site-verification: googled5cb964f606e7b2f.html வெண்டையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 26 டிசம்பர், 2023

வெண்டையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வெண்டை பயிரில் சாம்பல் நோய்:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறி பயிர்களில் வெண்டை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல்வேறு நோய்கள் வெண்டை பயிரைத் தாக்கினாலும் அவற்றில் சாவலானதாகவும், தீவிர மகசூல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சாம்பல் நோய் திகழ்கிறது. 
  • பல்வேறு ஆய்வு அறிக்கைகளில் இந்நோயினால் 70-80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.

நோய் காரணங்கள்:

  • இரகத்தின் தரம்
  • பயிரின் வயது மற்றும் பராமரிப்பு முறைகள்
  • தட்ப வெப்ப சூழ்நிலைகள்
  • வயதான செடிகளை விட இளம் செடிகள் பாதிப்புக்கு உகந்தது.
  • செப்டம்பர் முதல் ஜனவரி மாத காலங்கள் மற்றும் குறைந்த இரவு வெப்பநிலை பாதிப்புக்கு ஏற்ற பருவம்.
  • காற்றின் ஈரப்பத அளவு, செடிகளின் இடைவெளி, இலைப்பரப்பளவு, மற்றும் காற்றோட்டம் முதலியன நோய்த் தாக்குதலை நிர்ணயிக்கிறது.

அறிகுறிகள்:

  • வெள்ளை முதல் சாம்பல் நிற புள்ளிகள் அல்லது திட்டுகள் போன்ற வளர்ச்சி இலையின் இரு பகுதியிலும் காணப்படும்.
  • இது ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும், பின்னர் சற்று மஞ்சள் முதல் பழுப்பு நிறத்திலும் தீவிரமடைந்து கருமை நிறத்தில் தோற்றமளிக்கும்.
  • இந்நோயானது இளம் தண்டு, மொட்டு, பூக்கள் மற்றும் சிறிய காய்களையும் தாக்குகிறது.
  • பாதிக்கப்பட்ட மொட்டுகள் விரிவடையாமல் அல்லது முன்னுக்கு பின்னாக விரிவடைந்து காய் பிடிக்கும் திறனை இழக்கிறது.
  • தீவிரமராக பாதிக்கப்பட்ட இலைகள் இளம் பழுப்பு நிறத்தில் மாற்றமடைந்து பின்னர் உதிரும்.
  • இலை உதிர்வதால் உணவு தயாரித்தல் குறைந்து பயிர்களில் 50% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. கவனிப்பற்ற பயிர்கள் 80% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
  • நோய்கள் பாதிக்கப்படும் இளம் காய்கள் உருவம் சிதைந்து சந்தை மதிப்பை இழக்கிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட அரசு / தனியார் நிறுவனங்ளில் இரகங்கள் பல உள்ளன. அவற்றை தேர்வு செய்து பயிரிடுதல் நல்லது.
  • பருவத்திற்கு ஏற்றவாறு பயிர் இடைவெளி, உரமிடுதல், களைகளை அகற்றுதல் மற்றும் பயிர் சுழற்சி மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
  • தழைச்சத்து உர பயன்பாட்டை பருவத்திற்கு ஏற்றவாறு திட்டமிடுதல்.
  • குளிர் பருவங்களில் தெளிப்பு நீர் பயன்பாட்டை தவிர்த்தல்.
  • காலை வேளைகளில் நீர் பாய்ச்சுவதால் இலைகளில் உள்ள ஈரப்பதம் மாலை நேரத்திற்குள் காய்ந்து விடும். இல்லையெனில் இலை பூஞ்சாண வளர்ச்சிக்கு உதவும்.
  • ஆரம்ப கால நோய் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இலைகளை மட்டும் அகற்றுதல் உகந்தது.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அறவே அகற்றி அப்புறபடுத்துதல் சிறந்தது.
  • டிரைக்கோடெர்மா விரிடி (அல்லது) சூடோமோனஸ் புளுரசன்ஸ் - 4 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் நோய் தாக்குதலின் பரவுதல் வீதம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படுகிறது.
  • நன்கு புளித்த மோர் 2-5 மி.லி/ லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிப்பதால் நோய் பரவுதல் தவிர்க்கப்படுகிறது.
  • ஒரு சில ஆய்வுகளில் சமையல் சோடாவடன் சமையல் எண்ணெய் கலந்து தெளிப்பதாலும் பரவுதல் தடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
  • சென்னா இலை/ விதை கரைசல் 1% (அல்லது) வேப்ப எண்ணெய் இலை கரைசல் 3% முதலியனவும் தெளிக்கலாம்.
  • தாக்குதல் தீவிரமடையம் போது கீழ்க்கண்ட பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்று/ இரண்டு சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • Dinocap                      -               1 ml/ lit. water
  • Propiconazole            -               1 ml/ lit. water
  • Hexaconazole             -               1 ml/ lit. water
  • Tridemorph                 -               0.5-1 g/ lit. water
  • Wettable sulphur        -               3 g/ lit. water
  • Propineb                    -               2.5 g/ lit. water
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts