google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழையில் தண்டுகளை துளைக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 22 டிசம்பர், 2023

வாழையில் தண்டுகளை துளைக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள்

வாழையில் தண்டுகளை தாக்கும் கூன் வண்டு:

வாழை சாகுபடியில் முதன்மை வகித்து வரும் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கூன் வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. 10-90% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமை படைத்த இவ்வண்டானது எளிதில் அழிக்க முடியாதவை.

வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டை - தரைமட்டத்தில் உள்ள வாழை மட்டைகளில் தனிதனியாக இடப்படுகிறது. இதன் வாழ்நாள் 3-8 நாட்கள்
  • புழு - நல்ல சதைப்பற்றுடன் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் வெளிர் சிவப்பு நிற தலையுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு - பழுப்பு நிறத்தில் நார் போன்று இலையுறை/குப்பைகளில் தென்படும்.
  • வண்டு - கருமை நிறத்தில் நீண்ட வளைந்த மூக்குடன் காணப்படும். இதன் வாழ் நாள் 6-10 மாதம்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் செடிகள் (3-5 மாதம்) இதன் தாக்குதலுக்கு உகந்தது.
  • இவ்வண்டுகள் எளிதில் தாக்கக்கூடிய இரகங்களான பூவன், நேந்திரன், கதளி போன்ற இரகங்கள் பயிரிடுவதை தவிர்க்கலாம்.
  • இளம் புழுக்கள் இலையுறைகளில் வட்ட வடிவில் துளையிட்டு எச்சங்களை வெளிதள்ளும்.
  • மிகவும் சிறிய துளைகள் இலையுறைகளில் தென்படும்.
  • இளம் சிவப்பு முதல் பழுப்பு நிற திரவம் தரைமட்டத்தில் காணப்படும்.
  • கவனிப்பற்ற நிலையில் இவ்வண்டு தண்டுகளை உண்பதால் குன்றிய வளர்ச்சி, இலைகள் பழுப்பு நிறத்தில் மாற்றமடைதல், வாடல் மற்றும் குறைவான காய்பிடிப்பு திறனை காணலாம்.
  • பலத்த காற்று வீசினால் மரம் சாய்தல்
  • துளைகளை சுற்றி பழுப்பு நிறத்தில் இலையுறைகள் மாற்றமடைவதால் நோய் தாக்குதல் போன்று காட்சியளிக்கும்.
  • தீவிரமராக பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து வாடை வெளிவரும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை பயிரிடலாம்(Rasthali, Ney poovan, Dwarf banana, Playankonden, Karpuravalli)
  • வாழை கட்டையை நடவு செய்வதற்கு முன் வேர்கள் மற்றும் பட்டைகளை அகற்றி, நேர்த்தி செய்து நட வேண்டும்.
  • நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு பியூராடன் -20 கிராம் + வேப்பம் புண்ணாக்கு -500 கிராம் + Fibronil -20 கிராம் இடவும்
  • 45 நாட்களுக்கு ஒருமுறை பக்கங்களை அகற்றுவதுடன் களைகள் இன்றி வயலை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
  • நடவு செய்த 4-5 மாதங்களிலிருந்து பிரதி மாதமும் (7-ம் மாதம் வரை) Metarhizum anisopliae + Beaveria bassiana தண்டுகளில் ஊற்றுவதால் 70% வரை பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.
  • காய்ந்த இலைகளை அகற்றி அழித்தல் வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் இலையுறையில் குருனை மருந்தினை மணலில் கலந்து இடுவதால் தாக்குதலை குறைக்கலாம்
  • Celphos மாத்திரையை 2 எண்/ செடி வீதம் பயன்படுத்தலாம்.
  • Dichlorovos (அல்லது) Chlorpyriphose 2.5 ml/ லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் ஊற்றலாம். (அல்லது) தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் இலையுறையில் ஊசியில் செலுத்தலாம்.
  • தீவிரமாக தாக்கப்பட்ட (அல்லது) காய் அறுவடை செய்த பயிர்களை முழுமையாக அகற்றுதல் நல்லது.
  • இலையுறை கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம். (25-30/ ஏக்கர்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts