google-site-verification: googled5cb964f606e7b2f.html நுண் கீரைகளும் (Micro Greens) அதன் சாகுபடி தொழில்நுட்பமும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 5 ஜூன், 2024

நுண் கீரைகளும் (Micro Greens) அதன் சாகுபடி தொழில்நுட்பமும்

நுண் கீரைகள்: 

  • ஆங்கிலத்தில் மைக்ரோ கிரீன்ஸ் (Micro Greens) எனப்படும் நுண்/தளிர் கீரைகள் என்பது நன்கு வளர்ந்த கீரைகளுக்கும் முளைக்கட்டிய பயிர்களின் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம்/நாட்கள் ஆகும்.
  • இதில் பயிரின் இலைகள், தண்டு பகுதி மற்றும் வேர் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கீரையாக நாம் பயன்படுத்துகிறோம். இதன் இலை மற்றும் தண்டுப் பகுதி ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பகுதிகளாக பார்க்கப்படுகிறது.
  • சுமார் 7 முதல் 10 சென்டிமீட்டர் வளர்ச்சி உடைய மைக்ரோ கிரீன்ஸ் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும்.அதாவது நாம் தேர்வு செய்த பயிரை பொறுத்து விதைகள் முளைத்த ஏழு முதல் அதிகபட்சமாக 15 நாட்களில் கீரைகளை அறுவடை செய்து பயன்படுத்துவதாகும்.
  • தானியங்கள், பயிறு வகைகள், கீரைகள், காய்கறி விதைகள் மற்றும் நாம் உண்ண கூடிய இதர பயிர் வகைகளையும் இவ்வாறு வளர்த்து நாம் பயன்படுத்தலாம்.

இதன் ஊட்டச்சத்து பண்புகள்:

  • பல்வேறு ஆய்வுகளில் மைக்ரோ கிரீன்ஸ் சாதாரணமாக விளைவித்து உண்ணக்கூடிய காய்கறி பயிர்களை விட சுமார் ஐந்து மடங்கு வைட்டமின் மற்றும் கரோட்டினாய்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்கள் இதை தொடர்ந்து உண்பதால் மிக எளிதாக தேவையான ஊட்டச்சத்தை பெறலாம். இதனால் பல்வேறு நாள்பட்ட வியாதிகள், இருதயம் சம்பந்தமான நோய்கள், அல்சைமர் நோய்கள், நீரிழிவு நோய், பல்வேறு வகையான புற்று நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் நீங்க இது உதவி புரியும்.

இதன் முக்கியத்துவம்: 

  • குறைந்த முதலீடு அதிக லாபம்.
  • வளர்ப்பது மிகவும் எளிது. உயர் தொழில்நுட்பம் தேவையில்லை.
  • குறைந்த நாட்களில் அறுவடை செய்யக் கூடியது.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லை எனவே இரசாயன மருந்து பயன்பாடு இல்லை. 
  • முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள். 
  • எனவே அதிக அளவு ஊட்டச்சத்து மிகுந்தது.

சாகுபடி தொழில்நுட்பம்:

  • இதை சாகுபடி செய்வதற்கு தரமான விதைகளை தேர்வு செய்து அவற்றை ஆழமற்ற தட்டில் மண் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தி சாகுபடி செய்யலாம். 
  • தேர்வு செய்யப்படும் தட்டு ஆழம் அற்றதாகவும் போதுமான வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். 
  • விதைகளை தட்டில் நடவு செய்து அதனை மிதமான வெப்பநிலை மற்றும் ஒளி கிடைக்கக்கூடிய இடத்தில் தினமும் சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 
  • அதிக ஒளி ஊடுருவும் இடத்தில் சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரம் நுண் கீரைகள் இருந்தால் மட்டுமே போதும்.
  • நாம் தேர்வு செய்யும் பயிரை பொறுத்து 7 முதல் 15 நாட்கள் கழித்து இதனை அறுவடை செய்து பயன்படுத்தலாம். 
  • செலவு இன்றி எளிதாக சாகுபடி செய்யலாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னவென்றால் தரமான தண்ணீர் மற்றும் விதை, மிதமான வெப்பநிலை மற்றும் ஒளி. 
  • அறுவடை செய்த நுண் கீரைகளை அப்படியே சமைத்து சாப்பிடலாம் அல்லது மதிப்பு கூட்டல் செய்து பயன்படுத்தலாம். 
  • ரூபாய் 10,000 இருந்தாலே இதன் உற்பத்தியை தொடங்கி விடலாம்.

ஏற்படும் சவால்கள்:

  • மக்களுக்கு இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவு படுத்தி விட்டு தான் பின்னர் உற்பத்தி செய்ய வேண்டும்.
  • நுண் கீரைகள் மிகக் குறைந்த அளவே நீர்ச்சத்துக் கொண்டதால் அதனை எளிதில் இழந்து துவண்டு விடும். 
  • எனவே இதனை கெடாமல் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பது மிக சவாலானது.மதிப்பு கூட்டல் மிகவும் புதிதானது எனவே அதை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • இதை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாததால் இதை விற்பனை செய்வதில் சற்று சுனக்கம் ஏற்படலாம்.
  • மற்ற உணவுகளுடன் சேர்த்து பச்சையாகவும் உண்ணலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



undefined 202 undefined

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts