எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான சூரியகாந்தி விதைகளில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய் குறைந்த கொழுப்புத் தன்மை உடையதால் இருதய நோயாளிக்கு உகந்ததாக திகழ்கிறது.
சமீப காலங்களாக எண்ணெய் வித்து பயிர்களுக்கு *நல்ல விலை* கிடைப்பதால் விவசாயிகள் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றி அதிக மகசூல் பெற முடியும்.
சூரியகாந்தி மானாவரி பயிராக *கார்த்திகை* மற்றும் *ஆடிப்பட்டத்தில்* சாகுபடி செய்யப்படுகிறது. போதுமான தண்ணீர் வசதி இருந்தால் இதர பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
*ரகம் தேர்வு செய்தல்* : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, 100 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடிய *COH 3* அல்லது *COH 4* தேர்வு செய்து விதைக்கலாம் அல்லது வணிக ரீதியாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் *Veda*, *Vanitha* (Kurnool seeds) , *Rising Sun* போன்ற தனியார் ரகங்களையும் தேர்வு செய்து விதைக்கலாம்.
*விதை அளவு* - ஏக்கருக்கு *இரண்டு* கிலோ
ஓரளவிற்கு அனைத்து வகையான மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. பொதுவான வடிகால் வசதி இருக்க வேண்டியது இன்றியமையாது.
அதிக அளவிலான *தொழு உரம் உரத்தை அடி* *உரமாக* இடுவது அவசியம். இதனுடன் தேவையான அளவு ரசாயன உரங்களையும் கலந்து அடிஉரமாக இடவேண்டும்.
*பயிர் இடைவெளி* - வரிசைக்கும் வரிசைக்கும் 2 அடி செடிக்கும் செடிக்கும் ஒரு அடி பயிர் இடைவெளி அவசியம்.
மிதமான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது விதைகளை சுமார் ஒரு inch ஆழத்தில், குழிக்கு இரண்டு விதை என்ற முறையில் விதைக்க வேண்டும்.
சராசரியாக *பத்து* நாட்களில் முளைப்புத்திறன் தெரியும் அப்போது விடுபட்ட இடங்கள் அல்லது விதைகள் முளைக்காத இடத்தில் *தப்பு* *விதைகளை* விதைக்க வேண்டும்.
முளைத்து வரும் இரண்டு செடிகளில் ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்கி விடவும்.
வளர்ச்சி பருவம் அல்லது பூக்கும் தருணத்தில் அதிக மழை பெய்தால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும்.
அதேபோன்று இரசாயன முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்துக்களை பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும் சற்று கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் நேரத்தில் வேர்கள் பாதித்து வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கும்.
சுமார் 25 நாட்கள் கழித்து களைகளை அகற்றிவிட்டு, தேவையான மேல் உரங்களை இட்டு நீர் பாய்ச்சவும். மானவரிமுறையில் சாகுபடி செய்யும் பொழுது ஈரப்பதம் இருக்கும் பொழுது உரம் இடவேண்டும்.
பூக்கள் வெளிவரும் தருணத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பஞ்சகாவியா / தேமோர் கரைசல் அல்லது போரான் தெளிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெற இயலும்.
ரகங்களைப் பொறுத்து அறுவடை சுமார் 95 நாள் முதல் சுமார் 140 நாட்கள் வரை தேவைப்படும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக