google-site-verification: googled5cb964f606e7b2f.html சூரியகாந்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சூரியகாந்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான சூரியகாந்தி விதைகளில் இருந்து  கிடைக்கக்கூடிய எண்ணெய் குறைந்த கொழுப்புத் தன்மை உடையதால் இருதய நோயாளிக்கு உகந்ததாக திகழ்கிறது. 
  • சமீப காலங்களாக எண்ணெய் வித்து பயிர்களுக்கு *நல்ல விலை* கிடைப்பதால் விவசாயிகள் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றி அதிக மகசூல் பெற முடியும். 
  • சூரியகாந்தி மானாவரி பயிராக *கார்த்திகை* மற்றும் *ஆடிப்பட்டத்தில்* சாகுபடி செய்யப்படுகிறது. போதுமான தண்ணீர் வசதி இருந்தால் இதர பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.
  • *ரகம் தேர்வு செய்தல்* : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, 100 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடிய *COH 3* அல்லது *COH 4* தேர்வு செய்து விதைக்கலாம் அல்லது வணிக ரீதியாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் *Veda*, *Vanitha* (Kurnool seeds) , *Rising Sun* போன்ற தனியார் ரகங்களையும் தேர்வு செய்து விதைக்கலாம். 

  • *விதை அளவு* - ஏக்கருக்கு *இரண்டு* கிலோ
  • ஓரளவிற்கு அனைத்து வகையான மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. பொதுவான வடிகால் வசதி இருக்க வேண்டியது இன்றியமையாது. 

  • அதிக அளவிலான *தொழு உரம் உரத்தை அடி* *உரமாக* இடுவது அவசியம். இதனுடன் தேவையான அளவு ரசாயன உரங்களையும் கலந்து அடிஉரமாக இடவேண்டும். 
  • *பயிர் இடைவெளி* - வரிசைக்கும் வரிசைக்கும் 2 அடி செடிக்கும் செடிக்கும் ஒரு அடி பயிர் இடைவெளி அவசியம்.
  • மிதமான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது விதைகளை சுமார் ஒரு inch ஆழத்தில், குழிக்கு இரண்டு விதை என்ற முறையில் விதைக்க வேண்டும். 
  • சராசரியாக *பத்து* நாட்களில் முளைப்புத்திறன் தெரியும் அப்போது விடுபட்ட இடங்கள் அல்லது விதைகள் முளைக்காத இடத்தில் *தப்பு* *விதைகளை* விதைக்க வேண்டும்.

  • முளைத்து வரும் இரண்டு செடிகளில் ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்கி விடவும். 
  • வளர்ச்சி பருவம் அல்லது பூக்கும் தருணத்தில் அதிக மழை பெய்தால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். 
  • அதேபோன்று இரசாயன முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்துக்களை பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும் சற்று கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் நேரத்தில் வேர்கள் பாதித்து வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கும்.

  • சுமார் 25 நாட்கள் கழித்து களைகளை அகற்றிவிட்டு, தேவையான மேல் உரங்களை இட்டு நீர் பாய்ச்சவும். மானவரிமுறையில் சாகுபடி செய்யும் பொழுது ஈரப்பதம் இருக்கும் பொழுது உரம் இடவேண்டும். 
  • பூக்கள் வெளிவரும் தருணத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பஞ்சகாவியா / தேமோர் கரைசல் அல்லது போரான் தெளிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெற இயலும்.
  • ரகங்களைப் பொறுத்து அறுவடை சுமார் 95 நாள் முதல் சுமார் 140 நாட்கள் வரை தேவைப்படும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

https://chat.whatsapp.com/GgAqmbT0DaFChM01bY2M6u?s=cl&p=a&mlu=4&ilr=4

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts