மரவள்ளியில் சிலந்திப்பேனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|தமிழகத்தில் சுமார் 3.00 இலட்சம் எக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடியில் உள்ள மரவள்ளியில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சிவப்பு சிலந்தி பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. பல்வேறு வகையான சிவப்பு சிலந்தி பூச்சிகள் இருந்தாலும் Tetranchus urticae என்ற இனம் அதிக தாக்குதலை ஏற்படுத்தி 20-80% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வகை பூச்சியை இரண்டு புள்ளிகள் சிவப்பு சிலந்தி என அழைக்கப்படுகிறது.
உகந்த பயிர்கள்
இந்த வகை இனப் பூச்சிகள் சுமார் 200 பயிர்களை தாக்கக் கூடியது. அதில் சில முக்கியமான பயிர்கள் தக்காளி, கத்தரி, பூண்டு, பீட்ரூட், வெள்ளரி, வெண்டை, பப்பாளி, மரவள்ளி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தர்பூசணி, திராட்சை, நெல்லி, முத்துச்சோளம், கடலை, ரோஸ், சாமந்தி, கார்னேசள், பருத்தி மற்றும் இதர பயிர்கள்.
வாழ்க்கைச் சுழற்சி :
அறிகுறிகள்
பூச்சிகள் இலையின் அடிப்பாகத்தை துளைத்து தாவர செல் மற்றும் சாற்றை உறிஞ்சுவதால் இலையில் உள்ள பச்சையத்தின் அளவு குறைந்து வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது.
இலைகள் மட்டுமின்றி இளம்தண்டுகள் மற்றும் குருத்துகளையும் தாக்கும்.
இலையின் மேற்பரப்பில சிறு சிறு மஞ்சள் நிறத் திட்டுக்கள் காணப்படும்.
மஞ்சள் நிறத் திட்டுக்கள் இலைகள் முழுவதும் பரவுவதால் இலைகள் உருமாறியும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
தாக்குதல் தீவரமடையும் போது இலைகளில் சிலந்தி வலைகள் காணப்படும்.
நாளடைவில் இலைகள் இறந்து உதிர தொடங்குவதால் நுனிக் குருத்து மெழுவர்த்தி போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கும்.
மகசூல் குறைவதுடன் அடுத்த பருவத்திற்கு தேவையான விதைக்குச்சிகளின் தரமும் கேள்விக்குறியாகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
நோய்த்தொற்று இல்லாத விதை குச்சிகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக் கொண்ட ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
செடிகளில் காணப்படும் புழுதிகளை நீரைக் கொண்டு அகற்றவும். இல்லையெனில், பூச்சித் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
செஞ்சோளம் அல்லது முத்து சோளத்தை வயலைச் சுற்றி நடவு செய்வதால் பூச்சித் தாக்குதலை முன் கூட்டியே அறிய இயலும்.
போதுமான இடைவெளியில் நடுவதால் தாக்குதல் குறைக்கப்படும்.
குறைந்த வாழ்நாள் கொண்ட மலர் பயிர்கள் ஊடு பயிராக பயிரிடுவதால் பூச்சி விழுங்கிளான லேடி பேர்ட், கிரைசோபிட்ஸ் மற்றும் ஸ்டேதோரஸ் ஊக்குவித்து பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
தோட்டத்தை சுத்தமாகவும், களைகள் இல்லாமலும் பராமரிக்கப்படுவதால் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டு தாக்குதல் குறைக்கப்படும்.
வேப்பஎண்ணெய் 1-2 மி.லி/ 1 லி தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தௌிப்பதால் பூச்சித்தாக்குதல் தவிர்க்கப்படும்.
பசு கோமியம் மற்றும் தண்ணீர் 1:20 விகிதத்தில் தௌிப்பதால் பூச்சியின் ஆரம்ப கால தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
பூண்டு, மிளகாய் மற்றும் தண்ணீர் 1:5 விகிதத்தில் தௌிப்பதால் பூச்சியின் ஆரம்ப கால தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
பொரி பயிராக சாமந்தி நடவு செய்யவும்.
200 கி கொத்தமல்லி விதையை அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து தெளிப்பதால் பூச்சுவிரட்டியாக செயல்படும்.
20 கி மஞ்சள் தூள் + 200 மி.லி. கோமியம் 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சிறிது சோப்புக்கரைசலுடன் தெளிப்பதால் பூச்சிக்களைக் கட்டுப்படுத்தும்.
கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளை ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
Spiromesifen -3 ml/ lit water
Abamectin - 7 ml/ lit water
Hexythiazox - 1 ml/ lit water
Chlorfenapyr - 1 ml/ lit water
Fenpropathrin - 5 ml/ lit water
Spirotetramat - 1 ml/ lit water
Propargite - 1 ml/ lit water
Fenpyroximate - 3 ml/ lit water