மிளகாய் பயிரை தாக்கும் சிலந்திப்பேனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...
|மஞ்சள் முரணைச் சிலந்தி / அகண்ட சிலந்தி பேன் :
அவற்றில் மிகவும் சவாலான ஒன்றாக மஞ்சள் முரணைச் சிலந்தி அல்லது அகண்ட சிலந்தி பேன் திகழ்கிறது. சரியான பராமரிப்பு மற்றும் கவனிப்பற்ற பயிர்கள் 70-90% வரை பாதிப்படையும்.
பூச்சியின் விபரம் :
அறிகுறிகள் :
இலைகள், இலைமொட்டுகள், பூ மற்றும் காய்களின் உருவம் மாற்றம் அடைவதுடன் நிறமும் சற்று அடர் பச்சையில் காணப்படும்.
தளிர்கள் மற்றும் இலைகள் சற்று நீள்வடிவில் வளர்வதுடன் காம்புகளின் வளர்ச்சி சற்று அதிகமாக காணப்படுவதால் இதனை ”எலி வால்” அறிகுறி என்றழைக்கப்படுகிறது.
சிலந்திகள் இலையின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் கீழ்நோக்கு சுருண்டு பார்ப்பதற்கு கப்பலை தலைகீழாக கவிழ்க்கப்பட்டது போன்று தோன்றும்.
இலையின் அடிப்புறத்தில் மைய நரம்புகளுக்கு இடையில் பழுப்பு நிற பகுதிகள்/ திட்டுக்கள் தோன்றும்.
நாளடைவில் தளிர்கள் கருகுதல், பூ மற்றும் காய்ப்பிடிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
கன்று இடைவெளிகள் குறைந்து காணப்படுவதால், பக்கவாட்டு தளிர்கள் மொட்டுகளின் (Center shoots bond) உற்பத்தி அளவுக்கு அதிகமாக காணப்படும்.
இளம் சிலந்திகள் காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் காய்கள் நிறமாறி உதிர ஆரம்பிக்கும்.
இதன் சேதங்களானது களைக்கொல்லிகளின் தவறான பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுடன் ஒத்திருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அருகில் நடவு செய்வதை தவிர்க்கவும்.
பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம்.
பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டை குறைப்பதுடன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை மேற்கொள்ளுதல் அவசியம்.
ஒரே வயலில் மீண்டும் மீண்டும் மிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்கவும்.
இயற்கை பூச்சி விழுங்கிகளான ஆம்ப்லிசியஸ் மாண்ட்டோரென்சிஸ் மற்றும் நியோசியூலஸ் ருக்குபேரிஸ் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
பூண்டு சாறு +சோப்புத்தண்ணீர் சேர்த்து தெளிப்பதால் பரவுதல் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வகை பூச்சிகளை தாங்கி வளரக் கூடிய குண்டு இரக மிளகாய்களை பயிரிடலாம்.
சரியான நீர் மற்றும் உர மேலாண்மை சிலந்தி பேன்களின் இனப்பெருக்கத்தை குறைத்திட உதவிடும்.
இமிடோகுளோபிரிட் 10 கி/ கிலோ விதைகளுடன் விதை நேர்த்தி அல்லது சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 10 கி/ கிலோ விதைகளுடன் விதை நேர்த்தி செய்வதால் சாறு உறிஞ்சு பூச்சிகளின் தாக்குதல் மட்டுப்படுத்தப்படும்.
பூண்டு, மிளகாய், மண்ணெண்ணெய் கரைசல் (GCK) 0.5% +நிம்பிசிடின் 2.50 மி.லி. /லி தெளிப்பதால் 40% வரை தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
கீழ்க்கண்ட ஏதேனும் இரண்டை 10-15 நாட்கள் பயன்படுத்துவதால் பரவுதல் தடுக்கப்படுகிறது.
2. Bacillus aalbus – 2%
3.Beaureria bassiana – 0.4%
தக்காளி அல்லது சாமந்தி பொரி பயிராக பயிரிடலாம்.
கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
2.Vertimec – 0.5 ml/ lit. water
3.Spinosad – 0.25 ml/ lit. water
4.Spiromesifen – 2 ml/ lit. water
கோடை உழவு மேற்கொள்வதுடன் எக்டருக்கு 600 கி. வேப்பம்புண்ணாக்கு இடுவதால் தாக்குதலின் சதவீதம் குறைக்கப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக