google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜூலை 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 1 ஜூலை, 2025

பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை சாம்பல்

பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை  சாம்பல்...

  • PDM என்பது Potash Derived from Molasses என்பதாகும். 
  • சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் Molasses ஐ பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யப்படும் பொழுது அதிக அளவிலான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. 
  • இந்த கழிவு நீர் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பதால் இதனை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சாம்பல் உற்பத்தி செய்யப்படுகிறது. 
  • இந்த சாம்பலில் போதுமான அளவு பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் இதனை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். 
  • சுமார் 14.5% பொட்டாசியம் சத்து நிறைந்த இந்த சாம்பல் ரசாயன உரங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. 
  • இந்த சாம்பலை இயற்கை விவசாயத்தில் உரமாக பயன்படுத்த மத்திய அரசும் சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குகிறது.
  • பொட்டாசியம் ஊட்டச்சத்து தவிர சிறிதளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்தும் இதில் அடங்கியுள்ளது. 
  • இதன் சராசரி ஈரப்பதம் அளவு சுமார் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருக்கும்.

இதன் நன்மைகள்:

  • மறுசுழற்சி காரணமாக சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உப பொருட்களாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவது வெகுவாக தடுக்கப்படுகிறது. 
  • ரசாயன உரத்திற்கு மாற்றாக திகழ்வதால் மண் தன்மை மேம்படுவதுடன், நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மேம்படும். 
  • இதை பயன்படுத்துவதால் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும். 
  • பொதுவாக பொட்டாசியம் உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டின் இறக்குமதி செலவினம் குறையும்.
  • பயிர்களில் பூ பிடிப்பு மற்றும் காய்ப்பு திறன் மேம்படுவதால் உயிர் விளைச்சல் பெறலாம். 
  • இதன் சராசரி விலை  கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 ஆகும். 
  • மண் தன்மை மற்றும் பயிருக்கு ஏற்றவாறு ஏக்கருக்கு சுமார் 200 முதல் 250 கிலோ பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வாழை சாகுடியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறி மற்றும் சரி செய்யும் வழிமுறை

    வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களில் கால்சியமும் ஒன்று. வாழை பயிர் அதிகளவு விரும்பி எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக தழைச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் திகழ்கிறது. எனவே வாழை பயிரில் கால்சியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது:

  • போதுமான அளவு கால்சியம் சத்து கொடுக்காமல் இருத்தல் 
  • மண்ணின் அமிலத்தன்மை 
  • அதிகளவு தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் இடுதல் 
  • மிகைப்படியான மண் ஈரப்பதம்
  • தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன 

பற்றாக்குறை அறிகுறிகள்:





  • கால்சியம் ஊட்டச்சத்து பயிரில் அதிகம் கடந்து செல்லாததால் நுனி பகுதியில் இதன் பற்றாக்குறை அறிகுறி காணப்படும். 
  • இளம் இலைகள் போதுமான வளர்ச்சி இன்றி காணப்படும் இதனால் இலைகள் சிறிதாக இருக்கும். 
  • குருத்து கிளைகள் சரியாக பிரியாமல் ஒழுங்கற்று காட்சியளிக்கும் சில நேரங்களில் குச்சி போன்று காணப்படும்.
  • இலை விளிம்புகள் பலவீனம்  இல்லாமலும், சுருண்டு ஒழுங்கற்று காணப்படும். 
  • இலைகள், இலை காம்புகள் மற்றும் இலை நரம்பு பகுதி எளிதில் உடைந்து விடும்.
  • காய்கள் சிறுத்து காணப்படும். எளிதில் வெடிப்புகள் தோன்றும்.

மேலாண்மை முறைகள்:

  • மண்ணின் கார அமிலத்தன்மை கால்சியம் ஊட்டச்சத்து கிடைப்பதற்கு முக்கிய பங்கு வைக்கிறது. 6-7.5 உகந்தது. 
  • தேவையின் அடிப்படையில் சுண்ணாம்பு கரைசல் தயார் செய்து விடலாம்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து இடவும். 
  • இலை வழி ஊட்டத்திற்கு கால்சியம் நைட்ரேட் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் தெளிக்கலாம். சொட்டுநீர் பாசனம் வழியாக விடுவதற்கு 200 மீட்டர் தண்ணீர் மூன்று கிலோ கலந்து விடலாம். 
  • போதுமான அளவு மக்கிய தொழு உரம் இடுதல், முறையான நீர்ப்பாசனம் மற்றும் சமச்சீர் உர நிர்வாகம் கால்சியம் ஊட்டச்சத்தை கிடைப்பதை உறுதி செய்யும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts