google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜூலை 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 23 ஜூலை, 2025

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது

  • மண் வளம் என்பது நீடித்த பயிர் வளர்ச்சி மற்றும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதாகும். மேலும் பயிர் வளர்ச்சிக்கு உகந்த பௌதீக, ரசாயன மற்றும் உயிரியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும்.
  • அளவுக்கு அதிகமான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மறந்து பயன்பாட்டால் மண் வளம் குன்றி வருகிறது. இதனால் மண்ணின் தன்மை, ஊட்டச்சத்து மற்றும் நீர் பிடிப்பு திறன், கார அமிலத்தன்மை, நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் காரணிகள் பாதிப்படைந்து மண்வளம் குன்றி வருகிறது.
  • அமிலத்தன்மை கொண்ட மண் என்பது அமிலத்தன்மை 5.5 க்கு குறைவாக உடைய மண் ஆகும். இந்த மண்ணில் நாம் சாகுபடி செய்யும் பொழுது ஏற்படும் சவால்களைப்பற்றி விரிவாக பார்ப்போம். 

அமிலத்தன்மை உடைய மண்ணில் ஏற்படும் சவால்கள்:

  • நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மற்றும் பெருக்கும் படிப்படியாக குறைந்து தீமை செய்யும் அதாவது நோய் தாக்குதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஓங்கி காணப்படும். 
  • இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் குறைவதால், ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மணிச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம்.
  • அதிக அமிலத்தன்மை காரணமாக மண்ணில் உள்ள அலுமினியம் மற்றும் மாங்கனிசு சத்துக்கள் கரைந்து விடுவதால் தேவைக்கும் அதிகமான இந்த ஊட்டச்சத்துக்கள் வேர்ப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக வேர் வளர்ச்சி குன்றி ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
  • மண் இறுக்கத்தன்மை மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத நில அமைப்பில் குன்றிய வேர்  மற்றும் பயிர் வளர்ச்சி, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவதால் பயிர் மற்றும் இதர கழிவுகளை மக்கச் செய்வது தொய்வு ஏற்படுகிறது. இதனால் மண்ணின் தன்மை பாதிப்படைவதுடன் மண் அரிமானம் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஊட்டச்சத்து மிகுந்த மேல் மண்ணை இலக்க நேரிடும். 
  • இதன் காரணமாக பயிர்கள் பல்வேறு விதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதால் மகசூல் ஏற்படும் அபாயம் உள்ளது. 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • மண்ணின் அமிலத்தன்மையை உயர்த்தி நடு நிலைத் தன்மைக்கு கொண்டு வர போதுமான அளவு சுண்ணாம்பு இடலாம்.
  • அதிக அளவு இயற்கை இடுபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் மண் தன்மை மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
  • மண் இறுக்கத்தன்மையை போக்க மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்க பசுந்தாள் உர பயிர்கள் அல்லது பல தானிய பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்யலாம். 
  • ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் குறிப்பாக அமிலத்தன்மை உடைய உரங்களை. 
  • அதிக அளவிலான மண்புழு உரம்/ தொழு உரம்/கடற்பாசி உரங்களை விடுவதன் மூலம் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பிரிந்து பயிர்களுக்கு கிடைக்க உதவி புரியும். மேலும் இது மண்ணின் இறுக்க  தன்மையை சரி செய்து வேறு வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
  • அமிலத்தன்மையை தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். 
  • வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

  • பயிர்களின் தேவையை அறிந்து அல்லது நோய் அல்லது பூச்சிகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை வாங்குவதற்கு முன்னதாக நாம் வாங்கும் கடை அரசின் மூலம் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • நல்ல நிறுவனத்தின் பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
  • பொருட்களை வாங்கும் பொழுது அதன் தரம், காலாவதி நாள் மற்றும் லேபிள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி உக்கிகளை தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீரில் கலந்து மாலை அல்லது காலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • மாலை அல்லது காலை வேளையில் தெளிப்பதன் மூலம் மருந்துகள் அதிக வெப்பநிலை காரணமாக ஆவியாகி வீணாவதை தடுக்கலாம். 
  • மேலும் இந்த நேரத்தில் இலை துளைகளின் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுவதால் மருந்துகள் எளிதில் இலைகளால் எடுத்துக் கொள்ளப்படும்.
  • மருந்துகளை தெளிப்பவர்கள் முக கவசம் மற்றும் இதர உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், காற்று வீசும் திசையில் சென்று தெளிக்க வேண்டும். 
  • தெளிக்கும் பொழுது வரிசை வரிசையாக சென்று இருபுறமும் உள்ள பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் மருந்துகள் முழுமையாக பயிர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தலாம். 
  • மருந்து அல்லது வளர்ச்சி ஊக்கி தெளிக்க உரிய தெளிப்பான் தேர்வு செய்து, மருந்துகள் இலையின் மேற்புறம் அல்லது அடிப்புரத்தில் பனித்துளி மாதிரி படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெளிக்கும் பொழுது  மருந்தின் செயல்பாடு மேம்படும்.
  • நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணிகள் பெரும்பான்மையாக இலைகளின் அடிபுரத்தில் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • தெளிப்பு மேற்கொண்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் மருந்துகள் நன்றாக செயல்படும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தக்காளியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மேலாண்மை

விளக்கம்:

  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் இந்த அறிகுறி பூ முனை அழுகல் நோய் என அழைக்கப்படுகிறது. 
  • கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 
  • குறிப்பாக கோடை பருவத்தில் பல்வேறு காரணங்களால் பயிர்களுக்கு  கால்சியம் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கப் பெறாமல் இருப்பதால் இந்த பூனை அழுகல் நோய் ஏற்படுகிறது. 

கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்: 

  • அதிக வெப்பநிலை 
  • நீர் பற்றாக்குறை, நீண்டகால வறட்சிக்கு பிறகு கிடைக்கப்பெறும் அதிக நீர்
  • அளவுக்கு அதிகமா தழைச்சத்து உரம் இடுதல் 
  • முறையற்ற வடிகால் மேலாண்மை 
  • மண்ணின்  அமிலத்தன்மை
  • மேற்கண்ட பல்வேறு காரணங்களால் போதுமான கால்சியம் சத்து மண்ணில் இருந்தாலும் பயிர்களால் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள இயலாமல் அல்லது போதுமான அளவு பயிரின் குருத்துப் பகுதி மற்றும் காய்களுக்கு சென்றடைவதில்லை   இதன் காரணமாக பூ முனை அழுகல் நோய் ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்: 

  • காய்களின் அடி புறத்தில் நீர்த்த புள்ளிகள் காணப்படும். 
  • நாளடைவில் இதை விரிவடைந்து காய்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு பரவும்.
  • பார்ப்பதற்கு அதிக வெப்பநிலை காரணமாக தோன்றிய அறிகுறி போன்று தெரியும்.

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து அடி உரமாக கொடுக்கப்பட வேண்டும். 
  • கோடை பருவத்தில் போதுமான அளவு நீர் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும் 
  • அப்போதுதான் எளிதில் கால்சியம் பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்டிப்பாக அறிகுறி தெரியும். 
  • பயிர்களை அதிக வறட்சிக்கு உட்படுத்தாமல் நீர் கொடுக்க வேண்டும்.
  • கோடை பருவத்தில் கண்டிப்பாக இலை வழியாக கால்சியம் ஊட்டச்சத்தை தெளித்து வர வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து இட வேண்டும்.
  • தோல் தடிமனாக உள்ள தக்காளி ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
  • அதிக அமிலத்தன்மை உடைய மண்ணில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதனை சரி செய்ய வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம்

    ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது கிடைக்கக்கூடிய அனைத்து பூச்சி கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதாகும். இது உயிரியல், வேதியல், இயற்பியல் மற்றும் பயிர் சார்ந்த கலாச்சார மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். இதில் மஞ்சள் ஒட்டு பொறியின் பயன்பாடு அளப்பரியது.

  • பயிர்களை தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துவது சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகும். உதாரணத்திற்கு வெள்ளை ஈக்கள், தத்துப்பூச்சி, இலை
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கும் இந்த மஞ்சள் ஒட்டும் பொறி பயன்படுத்தப்படுகிறது.
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயன்படுத்துவதன் அடிப்படை என்னவென்றால் இந்த வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம் மஞ்சள் நிறங்களை மிக நேர்த்தியாக கவர்ந்து வரும்.
  • மேலும் சாறு உறிஞ்சு பூச்சிகளின் உடலமைப்பு மற்றும் காற்று வீசும்  திசையில் பறப்பதால் மிக எளிதாக இந்த அட்டைகளில் ஒட்டி  அங்கேயே இறந்து விடுவதால் இதன் இனப்பெருக்கம் வெகுவாக குறைகிறது. 
  • மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் நாமே பண்ணையில் மஞ்சள் ஒட்டு பொறி தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் பூச்சி தாக்குதல் இல்லாமல் பயிரை பாதுகாப்பதுடன் வெகுவாக உற்பத்தி செலவு குறைக்கலாம். 
  • மேலும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களில் இதனை பயன்படுத்தி வெள்ளை ஈக்கள், பச்சை பூச்சி, தத்துப்பூச்சி மேலும் பல பூச்சிகளும் இதில் கவர்ந்து அழிக்கப்படுகிறது. 
  • இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களின் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. 
  • செலவின்றி தயாரித்து இதன் இருபுறத்திலும் மஞ்சள் நிறம் மற்றும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுத்தி காற்று வீசும் திசையில் பயிர்களின் கிடை மட்டத்திற்கு இணையாக கட்ட வேண்டும். 
  • சாறு உறிஞ்சும்  பூச்சிகள் பயிர்களின் மிக மென்மையான பகுதியை பெரும்பாலும் பாதிப்பதால் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டும் பொறியை பயன்படுத்துவதில் எந்தவித பயணம் அளிப்பதில்லை.
  • மஞ்சள் ஒட்டு பொறியில் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் தன்மையை பொறுத்து அடுத்தடுத்து கட்டுப்படுத்தும் முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தேவையின் அடிப்படையில் இந்த பொறியை மாற்றி வைப்பது சிறந்தது.
  • இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி செலவை குறைத்து பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: 

மஞ்சள் ஒட்டு பொறியின் பலனை முழுமையாக பெற கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.


  • அட்டையின் இருபுறமும் ஒட்டும் தன்மை இருக்க வேண்டும். 
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயிர்களின் உயரத்தில் இருந்து சுமார் 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரத்தில் நிறுவ வேண்டும். 
  • இவ்வாறு நிறுவப்படும் அட்டைகளை பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். 
  • அட்டைகளை கிடை மட்டமாக நிறுவ வேண்டும். இதன் மூலம் அதிக காற்று வீசும் போது அட்டைகள் வளையாமல் இருக்கும் மேலும் அதிக பூச்சிகளை கவரலாம்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை அட்டையில் இருக்கக்கூடிய பூச்சிகளை சுத்தம் செய்து மீண்டும் ஒட்டு பசை தடவ வேண்டும். 
  • இதன் மூலம் மஞ்சள் ஒட்டு பொறியின் முழு செயல் திறனை பெற இயலும் மேலும் அட்டையில் ஒட்டி இருக்கும் இறந்த பூச்சிகளினால் பூஞ்சை அல்லது பாக்டீரியா நோய் தொற்று பயிர்களுக்கு வருவதை  தவிர்க்கலாம். 
  • அட்டைகளை காற்று வீசும் திசைக்கு இணையாக கட்ட வேண்டும். அவ்வாறு நிறுவும் பொழுது பூச்சிகள் காற்று வீசும் திசைக்கு இணைந்து பறக்கும் போது எளிதில் இதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


செவ்வாய், 1 ஜூலை, 2025

பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை சாம்பல்

பொட்டாசியம் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை  சாம்பல்...

  • PDM என்பது Potash Derived from Molasses என்பதாகும். 
  • சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் Molasses ஐ பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யப்படும் பொழுது அதிக அளவிலான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. 
  • இந்த கழிவு நீர் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பதால் இதனை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சாம்பல் உற்பத்தி செய்யப்படுகிறது. 
  • இந்த சாம்பலில் போதுமான அளவு பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் இதனை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். 
  • சுமார் 14.5% பொட்டாசியம் சத்து நிறைந்த இந்த சாம்பல் ரசாயன உரங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. 
  • இந்த சாம்பலை இயற்கை விவசாயத்தில் உரமாக பயன்படுத்த மத்திய அரசும் சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குகிறது.
  • பொட்டாசியம் ஊட்டச்சத்து தவிர சிறிதளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்தும் இதில் அடங்கியுள்ளது. 
  • இதன் சராசரி ஈரப்பதம் அளவு சுமார் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருக்கும்.

இதன் நன்மைகள்:

  • மறுசுழற்சி காரணமாக சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உப பொருட்களாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவது வெகுவாக தடுக்கப்படுகிறது. 
  • ரசாயன உரத்திற்கு மாற்றாக திகழ்வதால் மண் தன்மை மேம்படுவதுடன், நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மேம்படும். 
  • இதை பயன்படுத்துவதால் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும். 
  • பொதுவாக பொட்டாசியம் உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டின் இறக்குமதி செலவினம் குறையும்.
  • பயிர்களில் பூ பிடிப்பு மற்றும் காய்ப்பு திறன் மேம்படுவதால் உயிர் விளைச்சல் பெறலாம். 
  • இதன் சராசரி விலை  கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 ஆகும். 
  • மண் தன்மை மற்றும் பயிருக்கு ஏற்றவாறு ஏக்கருக்கு சுமார் 200 முதல் 250 கிலோ பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வாழை சாகுடியில் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறி மற்றும் சரி செய்யும் வழிமுறை

    வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களில் கால்சியமும் ஒன்று. வாழை பயிர் அதிகளவு விரும்பி எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக தழைச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் திகழ்கிறது. எனவே வாழை பயிரில் கால்சியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் கால்சியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது:

  • போதுமான அளவு கால்சியம் சத்து கொடுக்காமல் இருத்தல் 
  • மண்ணின் அமிலத்தன்மை 
  • அதிகளவு தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் இடுதல் 
  • மிகைப்படியான மண் ஈரப்பதம்
  • தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன 

பற்றாக்குறை அறிகுறிகள்:





  • கால்சியம் ஊட்டச்சத்து பயிரில் அதிகம் கடந்து செல்லாததால் நுனி பகுதியில் இதன் பற்றாக்குறை அறிகுறி காணப்படும். 
  • இளம் இலைகள் போதுமான வளர்ச்சி இன்றி காணப்படும் இதனால் இலைகள் சிறிதாக இருக்கும். 
  • குருத்து கிளைகள் சரியாக பிரியாமல் ஒழுங்கற்று காட்சியளிக்கும் சில நேரங்களில் குச்சி போன்று காணப்படும்.
  • இலை விளிம்புகள் பலவீனம்  இல்லாமலும், சுருண்டு ஒழுங்கற்று காணப்படும். 
  • இலைகள், இலை காம்புகள் மற்றும் இலை நரம்பு பகுதி எளிதில் உடைந்து விடும்.
  • காய்கள் சிறுத்து காணப்படும். எளிதில் வெடிப்புகள் தோன்றும்.

மேலாண்மை முறைகள்:

  • மண்ணின் கார அமிலத்தன்மை கால்சியம் ஊட்டச்சத்து கிடைப்பதற்கு முக்கிய பங்கு வைக்கிறது. 6-7.5 உகந்தது. 
  • தேவையின் அடிப்படையில் சுண்ணாம்பு கரைசல் தயார் செய்து விடலாம்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு கால்சியம் ஊட்டச்சத்து இடவும். 
  • இலை வழி ஊட்டத்திற்கு கால்சியம் நைட்ரேட் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் தெளிக்கலாம். சொட்டுநீர் பாசனம் வழியாக விடுவதற்கு 200 மீட்டர் தண்ணீர் மூன்று கிலோ கலந்து விடலாம். 
  • போதுமான அளவு மக்கிய தொழு உரம் இடுதல், முறையான நீர்ப்பாசனம் மற்றும் சமச்சீர் உர நிர்வாகம் கால்சியம் ஊட்டச்சத்தை கிடைப்பதை உறுதி செய்யும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts