google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 20 நவம்பர், 2023

மல்லிகை மலர்கள் ஏன் இளஞ்சிவப்பு நிறமாக மாறி உதிர்கிறது... அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??

மல்லிகை மலரில் மிட்ஜ் (Midge) பூச்சி தாக்குதல் :

    மல்லிகை மலரானது உலகில் உள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகைப் பூ உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் நடப்பில் சுமார் 12000 எக்டர் நிலப்பரப்பில் மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
   தற்போது நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் Contarinia maculipennis எனப்படும் மிட்ஜ் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. file:///C:/Users/ddhtv/Downloads/Bioecology_of_Blossom_Midge_of_Jasmine_Contarinia_.pdf


பூச்சியின் விவரம்:

  • இவ்வகைப் பூச்சிகள் இதழ்களின் உட்புறம் முட்டைகளை இடுகின்றன. சுமார் 24-48 மணி நேரத்திற்குள் முட்டைகளை பொறித்து லார்வா நிலைக்கு மாறுகிறது.
  • லார்வாக்கள் ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும், பின்னர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இவ்வகைப் புழுக்கள் மொட்டுகளுக்கு உள்ளே சென்று இதழ்களில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன.
  • சுமார் 4-5 நாட்களுக்குள் பியூபா நிலையை அடைந்து, செடிகளிலிருந்து தரையை சென்றடைகிறது. பியூபா நிலையில் 7-8 நாட்கள் நீடித்து, பின்னர் மிகவும் சிறிய மற்றும் மென்மையாக ஈக்களாக மாறுகிறது.
  • பெண் ஈக்கள் கறுப்பு தலை மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலைக் கொண்டும், ஆண் ஈக்கள் பழுப்பு நிறத்தில் பெண் ஈக்களை விட சற்று சிறியதாக காணப்படும்.
  • குண்டுமல்லி மொட்டுக்களின் வடிவம், அளவு மற்றும் அதனுள் உள்ள வேதியியல் பொருட்களே இவ்வகை பூச்சித் தாக்குதல் மற்ற மல்லிகை இனங்களை விட குண்டுமல்லியில் அதிகம் காணப்படுகிறது.

அறிகுறிகள்

  • லார்வாக்கள் மொட்டுகளின் அடிப்பகுதியை துளைப்பதால் பூக்களின் காம்புகள் சற்று வீக்கத்துடன்  காணப்படும்.
  • புழுக்கள் மொட்டுகளின் உள்ளே சென்று சாறை உறிஞ்சுவதால் மொட்டுக்களின் வடிவம் சிதைக்கப்பட்டு இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடைகிறது.
  • கடுமையான பூச்சி தாக்குதலின் போது மொட்டுகள் காய்ந்து உதிர்கின்றன.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html


கட்டுப்படுத்தும் முறைகள்

  • சரியான தருணத்தில் கவாத்து மேற்கொள்வதால் சூரிய ஒளி போதுமான அளவு செடிகளில் ஊடுருவி வளமான பயிரை ஊக்குவிக்கிறது.
  • பருவமல்லாத காலத்தில் போதுமான அளவு  வேப்பம்புண்ணாக்கு அல்லது குளோரிபைரிபாஸ் குருணையை மண்ணிலிட்டு மண்ணை கிளறுவதால் பியூபாக்கள் அழிக்கப்படும்.
  • நல்ல வடிகால் வசதியுடன் களைகள் இல்லாமல் வயல்களை பராமரிக்கவும்.
  • பூச்சித் தாக்குதல்களில் மிட்ஜ் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ள மல்லிகை ரகங்களை தேர்வு செய்து நடவும்.
  • பிச்சி மற்றும் காக்கர்டான் ரக மல்லிகைகள் இப்பூச்சிகளை தாங்கி வளரக்கூடியது.
  • தாக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் செடிகளின் பாகங்களை சேகரித்து அழிக்கவும்.
  • ஊடுபயிராக சாமந்தி, எள் அல்லது கொத்தமல்லியை பயிரிடுவதால் பூச்சித் தாக்குதல் 30% வரை குறைக்கப்படும். பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதை தவிர்க்கவும்.
  • பொறி பயிராக சாமந்தி செடிகளை வயலை சுற்றி நடுவதால், பூச்சித் தாக்குதலின் அளவு அளவு குறையும்.
  • வேப்பம்கொட்டை வடிநீர் கரைசல் 5% தெளிக்கலாம்.https://agritech.tnau.ac.in/horticulture/horti_flower%20crops_malligai.html
  • மிதமிஞ்சிய ஈரப்பதம் பூச்சித் தாக்குதலை அதிகரிக்கும். எனவே, அதிகமான ஈரப்பதத்தைத் தவிர்க்கவும்.
  • இயற்கை பூச்சியுண்ணிகளான லேடி பக்ஸ், லேஸ்விங்ஸ் மற்றும் ஒட்டுண்ணி குழவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
  • மஞ்சள் ஒட்டுப்பொறி 5 எண்கள் / 1 ஏக்கர்  பயன்படுத்துவதால் முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • பேவேரியானா பேசியானா – 5கி/லி தண்ணீரில் கலந்து 7 நாட்கள் இடைவெளியில்  மூன்று முறை தெளிக்கவும்.
  • டிரைக்கோடெர்மா சிலோனிஸ் ஒட்டுண்ணியை எக்டருக்கு 1 இலட்சம் எண்கள் விடுவிப்பதால் 61-79 % வரை பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோடெர்மா சிலோனிஸ், மெட்டாரைசம் அனினோபிளியே கலந்து தெளிப்பதால் 67 % வரை நோய்த் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.https://www.agrifarming.in/jasmine-farming

 

1.    Spinosad - 0.5 ml/1 lit.

2.    Thialoprid  2 ml/ 1 lit.

3.    Chlorantraniliprole - 0.3ml/ 1 lit

4.    Novaluron + Emamectin- 2 ml + 0.5g / 1 lit.

5.    Spirotetramet - 2.5 ml/ 1 lit.

6.    Rynaxypyr- 0.5 ml/1 lit.

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 

 

சின்ன வெங்காயத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறை...

முன்னுரை:

  • சின்ன வெங்காயம் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 45,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையாக சின்ன வெங்காயம் விதை காய்களை கொண்டே சாகுபடி செய்து வருகிறார்கள். இது குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயனைக் கொண்டு இருந்தாலும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது
  • இதைத் தவிர்த்திட சின்ன வெங்காயம் விதைகளை நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்து அதை பிடுங்கி நடுவது மிகவும் செலவு குறைவான முறையாகும். மேலும் இதற்கு தேவையான விதை மற்றும் இடு பொருட்களை அரசு மானியத்தில் வழங்குவது மேலும் விவசாயிகளின் செலவினத்தை குறைக்கிறது.

இரகத்தை தேர்வு செய்தல் மற்றும் விதை அளவு:

  • அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு சின்ன வெங்காய இரகங்கள் இருந்தாலும் அதில் கோ-5(On), புல்லட், டெய்லர்...... போன்ற இரகங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் உகந்தது.http://ecoursesonline.iasri.res.in/Courses/Production%20Technology%20of%20Vegetables%20&%20Flowers/HORT281/Data%20Files/lec15.html
  • விதையின் தரம், தேர்வு செய்யப்படும் இரகம், மாற்றங்கள் அமைக்கும் முறை, நிலத்தின் தன்மை மற்றும் பருவம் முதலியவற்றைப் பொறுத்து ஏக்கருக்கு 1-1.50 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure
நாற்றங்கால் அமைக்கும் முறை:

  • ஒரு ஏக்கர் நடவு செய்திட சுமார் 200 முதல் 250 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படுகிறது. இது சற்று நிழல் பாங்கான இடத்தில் இருந்தால் உகந்தது. இல்லையெனில் 50 சதவீதம் நிழல் வலை கூடாரம் அமைத்து அதில் நாற்று விடலாம்.
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்/கம்போஸ்ட் அல்லது மண்புழு உரத்துடன் தலா 100 கிராம் Trichoderma harzianum, Pseudomonas fluorescence, 2 கிலோ DAP மற்றும் இரண்டு கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு நன்கு உழுவு செய்து மண்வெட்டியால் கொத்தி விட வேண்டும்.
  • 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் நில அமைப்பை பொருத்து போதுமான அளவு நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்திட வேண்டும். அப்போது தான் பாத்தியின் ஒரு புறத்திலிருந்து விதைகளை விதைப்பு செய்தல், நீர் பாய்ச்சல், உரமிடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
  • இவ்வாறாக அமைக்கப்பட்ட மேட்டுப்பத்தியில் ஏழு முதல் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் கையால் 2-3 சென்டிமீட்டர் ஆழமுள்ள கோடுகள் இடவேண்டும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை இதில் பரவலாக இட வேண்டும். பின்னர் இதில் மக்கிய தொழு உரத்தினை தூவி விடுவதால் விதைகள் மூடிவிடும்.
  • விதைப்பு செய்த மேட்டுப்பாத்தியில் வைக்கோல், காய்ந்த புல், இலை சருகுகள்.. இதர இது போன்று ஏதேனும் ஒரு பொருட்களை மேட்டுப்பத்தியில் பரவலாக இட்டு மூடி விட வேண்டும். இது கதகதப்பு தன்மையை ஏற்படுத்தி விதைகளை எளிதில் முளைக்க செய்கிறது. விதையின் தன்மையை பொறுத்து விதைகள் விதைப்பு செய்த 6 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும்.https://www.agrifarming.in/onion-seed-germination-time-temperature-procedure

நாற்றுகளை எப்போது பிடுங்கி நட வேண்டும்:

  • ஜூன்- ஜூலை மாதங்களில் விதைப்பு மேற்கொண்ட மேட்டுப்பத்தியில் இருந்து 38-42 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நிலத்தில் நட வேண்டும். பிடுங்கி நடும் போது மிளகு வடிவ சிறு காய்கள்  நாற்றுகளில் இருப்பதை உறுதி செய்திடவும்.

  • செப்டம்பர் முதல் நவம்பர் காலங்களில் விதைப்பு  மேற்கொள்ளும் தருணத்தில் 45 லிருந்து 50 நாட்கள் கழித்து நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும்.

நாற்றுகளை பராமரிக்கும் முறை:

  • நாற்றுகளில் அழுகல் அல்லது ஏதேனும் நோய்கள் தென்பட்டால் Trichoderma harzianum அல்லது Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10  கிராம் பத்து லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • விதைப்பு மேற்கொண்ட 15 மற்றும் 30ஆம் நாளில் 19:19:19/20:20:20 என்ற நீரில் கரையும் உரத்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து மாலை நேரங்களில் ஊற்றி விடவும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இலாபம் தரும் ஆமணக்கு பயிர் சாகுபடி...

ஆமணக்கு சாகுபடி எவ்வாறு உகந்தது :

    அதிக வறட்சி, வளமற்ற மண், குறைந்த மழைப்பொழிவு, அதிக களைகள் வளரக்கூடிய நிலம், வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நோய் /பூச்சி தாக்குதல் அதிகம் உள்ள இடம் என எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வளரக்கூடியதாக திகழ்கிறது. எனவே தான் இதை சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்.

விதைதேர்வு மற்றும் நேர்த்தி :

    கோ1, TMV-5, TMV-6, YRCH-1, YTP-1, GAUCH -4, TMVCH என பல்வேறு அரசு வெளியிடப்பட்ட ரகங்களும் அதைத் தவிர பல்வேறு தனியார் நிறுவன ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு கிலோ விதை தேவைப்படும். தனியார் நிறுவன விதைகள் நேர்த்தி செய்தே வரும். உள்ளூர் ரகங்களை தேர்வு செய்யும் போது அதனை Pseudomonas மற்றும் Trichoderma கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.https://oilseeds.dac.gov.in/Castor.aspx

நிலம் தயார் செய்தல் மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல் :

    கோடைகாலத்தில் நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைத்து மண் கடினத்தன்மை இல்லாமல் இருந்தால் தான் நன்கு வேர் வளர்ச்சி காணப்படும். ஆமணக்கு வேர்கள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது எனவே மண் பொலபொலப்புடன்இருக்க வேண்டும் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு அடையும். அதிக மழை அல்லது நீர் தேங்கும் பகுதிகளில் பார் அமைத்து பயிரிடுதல் உகந்தது. ராகங்களை பொறுத்து பயிர் இடைவெளி 5 முதல் 8 அடி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/Agriculture/oilseeds_castor_ta.html

உர மேலாண்மை :

    ஏக்கருக்கு நான்கு முதல் எட்டு டன் மக்கிய தொழு உரம். முடிந்தால் உயிர் பூஞ்சான் கொல்லி கொண்டு உட்டமேற்றி இடலாம். அடி உரமாக -DAP/காம்ப்ளக்ஸ் -100 கிலோ + Gypsum -50 கிலோ + நுண்ணூட்ட உரம் -10 கிலோ. நடவு செய்த 45 நாட்கள் கழித்து மேல் உரமாக காம்ப்ளக்ஸ் இரண்டு மூட்டை.

களை மேலாண்மை:

    ஆமணக்கு விதைகள் சற்று விரைவாக முளைப்பு திறன் கூடியது என்பதால் நடவு செய்த இரண்டாம் நாளில் களை கொல்லி அடிக்க வேண்டும். நடவு செய்த 45 நாட்களில் கை களை எடுக்க வேண்டும்.

அறுவடை செய்தல்:

    தேர்வு செய்யப்படும் ரகங்களை பொறுத்து 120 முதல் 175 நாட்கள்  கழித்து அறுவடை செய்யலாம். குளையில் காணப்படும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காய்கள் பழுப்பு நிறம்  மாறும் போது கொத்தை  வெட்டி  மூன்று நாட்கள் சாக்கியில் மூடி வைத்திருந்து பின்னர் நன்கு காய வைக்க வேண்டும்.https://agritech.tnau.ac.in/ta/post_harvest/pht_oilseeds_ta.html

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

    அதில் பெரிதாக நோய் அல்லது பூச்சிகள் வருவதில்லை. அவ்வாறு தோன்றும் பட்சத்தில் இயற்கை முறையில் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop_insect_oil_castor_ta.html

மகசூல் மற்றும் விலை:

    ஏக்கருக்கு 1 டன் வரை கூட மகசூல் எடுக்கலாம். கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்கும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

சனி, 18 நவம்பர், 2023

சின்ன வெங்காயத்தில் கோழிகால்/திருகல் /தவளை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...

 
    சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் /கோழிக்கால் நோய் /ஆந்த்ரோனாக்ஸ்  / தவளை நோய்:
       சின்ன வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் விவசாயிகளுக்கு மிகவும் சவாலான நோயாக கொலெட்டோட்ரிகம் எனப்படும் ஆந்த்ரோனாக்ஸ் நோய் திகழ்கிறது. இந்நோயானது திருகல் நோய் அல்லது கோழிக்கால் நோய் அல்லது தவளை நோய் என்று விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. மூலக்கூறு ஆராய்ச்சியில்  (Molecular Research) சுமார் 29  Fusariun மற்றும் 6 Colletotrichum பூஞ்சாண வகைகள் இந்நோய் தாக்குதலுக்கு காரணமாக கருதப்படுகிறது.
நோய் காரணிகள் :
                இந்நோயானது  Colletotrichum gloeosporiodes  எனப்படும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. ஆனால் பல்வேறு வயல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சியில் இந்நோயானது  பலவகையான பூஞ்சாணங்களின் தாக்குதலால் ஏற்படுகிறது என தெரிய வருகிறது. அவற்றில் முக்கியமான சில பூஞ்சாணங்களாக Gibberella moniliformis, Colletotrichum acutatum, Colletotrichum coccodes, Colletotrichum siamense, Fusariun oxysporum, Fusariun fujikuroi, Sclerotium rolfsii, Allium ledebourianun, Allium spathianum  கருதப்படுகிறது.
                இந்நோயானது சுமார் 50% முதல் 100% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமைப்படைத்தது.
நோய் தொற்று காரணிகள்  :
                இந்நோய் தாக்குதலை உண்டாக்கும் பூஞ்சாணம் உறக்க நிலையில் சுமார் 4 ஆண்டு காலம் வரை மண்ணில் அல்லது செடிகளில் வாழும் தன்மை கொண்டது. இவ்வகை பூஞ்சாணத்தைச் சுற்றியுள்ள திரவ உறை மற்றும் அதனுள் இருக்கும் மிகையான புரதச்சத்து காரணமாக நீண்ட நாள் வாழும். நோய்த் தொற்று கீழ்க்கண்ட காரணங்களால் பரவுகிறது.
                அதிக மழை, போதுமான வெப்பநிலை (20-35Ÿc) மற்றும் காற்றின் ஈரப்பதம் (75-100) பூஞ்சாணம் பரவுவதற்கு ஏற்ற சூழல். தரைவழி நீர்ப்பாய்ச்சுதல், தெளிப்பு நீர் பாசன முறை பயன்படுத்துதல், பண்ணை உபகரணங்கள், வேளாண் குப்பைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிழங்குகள் மூலம் பரவுகிறது.


அறிகுறிகள் :
Ø தொடக்கத்தில் இலையில் வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிற சற்று பள்ளத்துடன் கூடிய புண்கள் காணப்படும்.
Ø  இப்புண்கள் நாளடைவில் விரிவடைந்து பரவ தொடங்கும்.
Ø  நாளடைவில் இப்புண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும்.
Ø  இப்புண்களில் எண்ணற்ற கருப்புநிற பூஞ்சாணங்கள் காணப்படும்.
Ø  நாளடைவில் இலை சற்று சுருள தொடங்கி மஞ்சள் நிறமாக மாறும்.
Ø  கிழங்குகளின் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுகளில் அபரிமித வளர்ச்சி காணப்படும்.
Ø  கிழங்குகள் உருளாமல் நீள்வாக்கில் வளரும்.
Ø  நோய் தீவிரமடையும் போது இலைகள் அதீத வளர்ச்சியால்  தரை மட்டத்திற்கு மடியும்.
Ø  இறுதியாக வேர் அழுகல் காணப்படும்.
Ø  சில முறை வேர் அழுகல் காரணமாக கிழங்குகளில் புழுக்கள் காணப்படுகிறது.
 
கட்டுப்படுத்தும் முறைகள்  :
Ø  நோய்த்தொற்று இல்லாத விதை / விதை கிழங்குகளை பயன்படுத்த வேண்டும்.
Ø  2-3 வருடங்களுக்கு பயறு வகை பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளுதல்.
Ø மேட்டுப்பாத்தி அமைத்து  போதுமான இடைவெளியில் (15 செ.மீ  X  15 செ.மீ) சரியான பருவத்தில் நடவு மேற்கொள்ளுதல்.
Ø  சாகுபடி செய்யப்பட்ட முந்தைய பயிர் குப்பைகளை சரியாக அகற்றுதல்.
Ø அடி உரமாக வேப்பம்புண்ணாக்கு 5 குவிண்டால் + மண்புழு உரம் 5 குவிண்டால் + டிரைக்கோடெர்மா ஹர்சியானா 10 கிலோ இடவும்.
Ø விதை / விதை கிழங்குகளை டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 2 கி.கி. / அல்லது விட்டாவாக்ஸ் (கார்பாக்சின்  + திரம்) 2 கி.கி. பவுடரை கொண்டு விதை நேர்த்தி செய்திடவும்.
Ø  தெளிப்பு நீர் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனத்தில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்சுதல்.
Ø பரிந்துரைக்கப்பட்ட  உர அளவுடன் போதுமான சல்பேட் பயன்படுத்துவதால் நோய் பரவுதலை தடுக்கலாம்.
Ø மஞ்சள், இஞ்சி மற்றும் வேம்பு இலைகளின் கரைசல்களை தெளிப்பதால் பூஞ்சாண வளர்ச்சி தடைபடும்.
Ø டிரைக்கோடெர்மா + சூடோமோனஸ் 1% 15  நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் நோயின் தீவிரம் குறைக்கப்படும்.
Ø பேசில்லஸ் + சூடோமோனஸ் 1% 15  நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் நோயின் தீவிரம் குறைக்கப்படும்.
Ø சரியான தருணத்தில்  Paclobutrazol தெளிப்பதால் Gibberella moniliformis பூஞ்சாணத்தால் உற்பத்தி செய்யப்படும் ஜிப்ரல்லின்  தடை செய்யப்படுகிறது.
Ø கீழ்க்கண்ட  பூஞ்சாணக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
1.      Thiophanate methyl
2.      Thiophanate methyl + Thiram
3.      Any Triazoles + Paclobutrazol
4.      Chlorothalanil + Strobilurin fungicide
5.      Propiconazole + Iprobenfos
6.      Propiconazole + Thiophanate methyl
7.      Pyraclostrobin + Metiram + Fluzinam  

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெள்ளி, 17 நவம்பர், 2023

எலுமிச்சை மரங்களில் கோந்து ஏன் வருகிறது...

எலுமிச்சையில் கால் அழுகல்/ கம்மோசிஸ் நோய்

நோய் அறிகுறிகள்:

  • Phytopthora என்றழைக்கப்படும் பூஞ்சாணத்தால் இந்த நோய் தோற்றுவிக்கப்படுகிறது.
  • இந்த நோய் பொதுவாக சற்று வயதான மரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் வேரில் நீர்த்த வெளிர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.
  • நாளடைவில் தண்டு, வேர் மற்றும் கிளையில் காணப்படும் புண்களில் வெடிப்புகள் (நீள்வாக்கில்) தோன்றும்.
  • இவ்வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற கோந்து வெளிவரும்.
  • கிளைகளில் வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிற தடித்த கோடுகள் காணப்படும்.
  • வெடித்த இடங்களில் பட்டைகள் உதிர்ந்து பிற பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்துவதால் மரங்கள் ஒடிந்தோ அல்லது அழுகியோ இறக்க நேரிடும்.
  • பூஞ்சாணம் வேர் பகுதியை தாக்கி வேர் பட்டைகளை உதிர செய்தால் இலைகள் மஞ்சளாகி அதிகமாக உதிரும்.

ஏன் ஏற்படுகிறது :

  • எளிதில் தாக்கக்கூடிய இரகங்கள் வேர் செடிகளை பயன்படுத்துதல்.
  • அதிகமாக நீர்பாய்ச்சுதல் (அல்லது) தண்டுகளில் தொடர்ந்து நீர் தேங்குதல்.
  • அதிக காற்று ஈரப்பதம்/ மழை / மண்கடினத்தன்மை
  • வேர் பகுதியில் உப்பு தோன்றுதல் / உப்பு நீரை பயன்படுத்துதல்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  1. அதிக நீர்பாய்ச்சுதலை தவிர்க்கவும்.
  2. உப்பு நீர்/ மண் இருக்கும் இடத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துதல் உகந்தது.
  3. ஒட்டு இரகங்களை தவிர்த்து நாட்டு இரகத்தை பயிரிடலாம்.
  4. ஒட்டு இரகத்தை பயன்படுத்த விரும்பினால் வேர் செடிகளை தேர்வில் கவனம் தேவை.
  5. கவாத்து செய்வதை தவிர்க்கவும்.
  6. அதிக வெப்பம் தண்டுகளில் படும்போதும் வெடிப்புகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் தரையிலிருந்து 1-2 அடி உயரத்திற்கு பெயிண்ட் அடிக்கவும்.
  7. அதிக மழை பொழிவு / நீர் தேக்கம் இருக்ககூடிய இடங்களில் வட்ட பாத்தி அமைக்க வேண்டும்.
  8. இப்பூஞ்சாணம் மண்ணில் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனம் உபயோகிக்கலாம்.
  9. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பட்டைகளை நன்றாக சுத்தம் செய்து 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து COC/ Bordeaux கலவையை பூசி விட வேண்டும்.
  10. டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் தலா 50 கிராம் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தொடர்ச்சியாக வேரில் ஊற்றுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.
  11. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றின் கலவையை தண்டு / கிளையில் பூசி விடுதல் மற்றும் வேரில் ஊற்ற வேண்டும். (வெயில் மாதங்களில்)

1.  Fosetyl Aluminium + Chlorpyiphose – 25 g / 10 Lit water

2.  COC-30 g + Chlorpyriphos – 25 ml -/10 lit water

3.  Copper Hydroxite + Chlopyriphos -25 ml/ 10 Lit water

4. Thiophenate Methyl+ Chlorphriphos – 25 ml/ 10 Lit water

 

Recent Posts

Popular Posts