google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 23 மார்ச், 2024

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25-28 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
  • இதன் சராசரி உற்பத்தி திறன் ஹெக்டேர் ஒன்றிற்கு சுமார் 1.4 டன் திகழ்கிறது. நிலக்கடலையில் சுமார் 50 சதவீதம் எண்ணெய் மற்றும் 26% சதவீதம் புரத சத்து நிறைந்துள்ளது. இதன் அனைத்து பகுதிகளும் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுவதால் இது விவசாயிகளுக்கு லாபகரமான பயிராகவே திகழ்கிறது.

பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட  வேண்டியவை:

  • நிலக்கடலை சாகுபடி செய்ய இருக்கும் போது நிலத்தை மிக ஆழமாக உழவு செய்யக்கூடாது. அதாவது 20 சென்டிமீட்டர் மேல் ஆழமாக போகும்போது விழுதுகள் இறங்குவது சற்று கடினம் மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும்.
  • நிலக்கடலை பொதுவாக முந்தைய பயிர்களுக்கு இடப்பட்ட உரங்களை தான் அதிகம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்திற்கு தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம் என்றால் அதற்கு இடப்படும் உரங்கள் மண்ணில் இருக்கும் அதை தான் அடுத்து நாம் சாகுபடி செய்யும் நிலக்கடலை எளிதில் எடுத்துக் கொண்டு வளர்கிறது. குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஸ் உரம்.
  • ஒரு வயலில் நிலக்கடலை சாகுபடி செய்துவிட்டு மீண்டும் அதே வயலில் நிலக்கடலை சாகுபடி செய்யும் போது அதன் பயிர் எச்சங்களை (குப்பைகளை) முழுமையாக அகற்ற வேண்டும் இல்லையெனில் அடுத்த பயிரில் வேர் அழுகல் அல்லது கழுத்து அழுகல் நோய் அதிகம் காணப்படும்.
  • பொதுவாக நிலக்கடலை விதைகளை விதைப்பதற்கு தேவையான விதைகளை நாம் பயிரிட்ட பயிரிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது அதிகபட்சமாக நான்கு வருடங்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் அதே விதையை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட ரகத்தின் தரத்தை குறைக்கிறது, நோய் தாக்குதலை அதிகப்படுத்துகிறது மற்றும் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • விதையை நிலத்தில் விதைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக மட்டும் விதை கடலையை உடைத்து பருப்புகளை எடுக்கவும். இல்லையெனில் முளைப்பு திறனில் பாதிப்பு ஏற்படும்.
  • நடுத்தர அளவு உள்ள விதைகளை மட்டும் விதைக்க வேண்டும் அப்போதுதான் முளைப்பு திறன் மற்றும் செடிகளின் வளர்ச்சி ஒருமித்து காணப்படும். பெரிய விதைகளை விதைக்கும் போது அதில் வேர் வளர்ச்சி போதுமானதாக இருக்காது மற்றும் சிறிய விதைகளை விதைக்கும் போது முளைப்பு திறன் சிக்கல்கள் ஏற்படும்.
  • நாம் பயிர்களுக்கு இடம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்தினை சுமார் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவேண்டும். இந்த உரத்தினை மேலாக இடும் பொழுது விழுதுகள் போதுமான அளவு கால்சியம் சத்துக்களை எடுக்காமல் இருப்பதால் மகசூல் குறையும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 இருக்க வேண்டும் இல்லையெனில் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது இதனால் செடிகள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும் அது மட்டுமின்றி நிலக்கடலை வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதால் மண்ணின் கார அமிலத்தன்மை 7 மேல் இல்லாமல் இருக்க வேண்டும்.

  • மண்ணிற்கு தேவையான காற்றோட்ட வசதி, நிலக்கடலையின் விழுதுகள் நன்றாக வளர்வதற்கும் காய்கள் பிடிப்பதற்கும் மாற்றும் அதில் சொத்துக்கள் வராமல் இருப்பதற்கு தேவையான கால்சியம் சத்தை நாம் ஜிப்சம் வடிவில் தருகிறோம்.
  • பூ பிடித்தலை ஊக்குவிக்க, ஒரே நேரத்தில் அதிக பூக்கள் பூப்பதை உறுதி செய்ய, பூக்கள் உதிராமல் இருத்தல் போன்றவற்றிற்கு டி ஏ பி கரைசல் இரண்டு சதவீதம் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது உடன் பிளானோ பிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • ஜிப்சம் இடும் பொழுது அதை மேல் மண்ணில் மட்டும் இட வேண்டும் அதாவது 10 சென்டி மீட்டருக்கு மேல் ஆழமாக இட கூடாது. அவ்வாறு இட்டால் அதன் பயன் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது.
  • வயலில் காணப்படும் பெரும்பான்மையான செடிகள் பூத்திருக்கும் தருணத்தில் ( விதைத்த 35 லிருந்து 40 நாட்கள்) ஜிப்சம் அதாவது கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
  • போதுமான அளவு கால்சியம் சத்து கொடுத்தால் தான் சொத்தை கடலை வராமல் இருக்கும் அது மட்டுமின்றி ஜிப்சத்தில் இருக்கும் சல்பேட் நிலக்கடலையில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • ஜிப்சம் நேரடியாக இலைகள் மீது பட்டால் இலைகள் எரிஞ்சது போன்று காணப்படும் இதனால் செடிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • ஜிப்சம் இட்டு மேல் மண்ணை சுமார் பத்து சென்டிமீட்டர் ஆழத்திற்கு கிளறி விட்டுப் பின்பு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நாம் விதைத்த ரகத்திற்கு ஏற்றவாறு நாற்பது முதல் 60 நாட்கள் இடைவெளியில் வயலில் காணப்படும் பெரும்பான்மையான பூக்கள் உதிர்ந்து விழுதுகள் நிலத்தை நோக்கி திரும்பும் தருணத்தில் கிழக்கு மேற்கு திசையில் ஒரு முறையும் தெற்கு வடக்கு திசையில் ஒரு முறையும் சுமார் 50 கிலோ மணலுடன் கூடிய ட்ரம்மை (drum) உருட்ட வேண்டும். உருட்டுவதற்கு முன்பு மிதமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கடலை பயிரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மற்ற ஊட்டச்சத்துக்களை விட இந்த மூன்றும் அதிகம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
  • தலா நான்கு மடங்கு பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இரண்டு மடங்கு மெக்னீசியம் சத்துக்கள் நிலக்கடலைக்கு அத்தியாவசியமாகும்.
  • ஏக்கருக்கு இரண்டு கிலோ போரான் சத்து இட வேண்டும். இது பூ பிடித்தலை அதிகரித்தல், ஒருமித்த பூப்பிடித்தல் திறன் மற்றும் கிழங்கு உருவாவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நிலக்கடலை பருப்பு உட்புறத்தில் காணப்படும் நிறம் மாற்றத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
  • அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும் நிலத்தில் செடிகள் நன்கு வளர்வதை நாம் கவனிக்க இயலும் ஆனால் அதில் போதுமான அளவு பூ பிடித்தல் மற்றும் விழுதுகள் இறங்காது. அவ்வாறு இருக்கும் பயிர்களுக்கு வளர்ச்சியை தடை செய்யக்கூடிய வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும்.

  • உதாரணத்திற்கு Cycocel/Maleic hydroxide ஏதேனும் ஒன்று தெளிக்க வேண்டும். இது செடி வளர்ச்சியை கட்டுப்படுத்தி பூ எடுத்தலை அதிகப்படுத்துகிறது.
  • விழுதுகள் இறங்கி காய்கள் பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் இட வேண்டும். இது திரட்சியான காய்கள் பெற உதவி புரிகிறது.

  • செடிகளை சுற்றி மண் அணைக்கும் போது செடிகளின் தண்டு பகுதி, கிளை பகுதி அல்லது இலைகள் மண்ணில் புதைய கூடாது அவ்வாறு புதைந்தால் அது பூஞ்சான நோய்கள் உருவாவதற்கு வழிவகை செய்யும்.
  • இது மட்டும் இன்றி களைகளை கட்டுப்படுத்துதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதால் நல்ல மகசூல் பெற முடியும்.

மேலும் தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்படுத்தலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

திங்கள், 18 மார்ச், 2024

வாழையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வாழையை தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • கோடை காலத்தின் போது வயலை நன்கு ஆழமாக உழவு செய்து வயலில் உறக்கத்தில் இருக்கும்(40 வருடம் வரை கூட) பூஞ்சானங்களை அழிக்க முயற்சிக்கலாம்.
  • வாடல் நோய் தாக்குதலுக்கு மிகவும் உகந்த ரகங்களான கற்பூரவள்ளி, ரஸ்தாலி, சென்கதலி,மொந்தன், கதலி, பச்சலாடன் மற்றும் பல ரகங்கள் உள்ளன அவற்றை தொடர்ந்து பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பனாமா வாடல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம். உதாரணத்திற்கு பூவன், நேந்திரன், சக்கை மற்றும் ரோபஸ்டா.
  • வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வாழை கட்டை அல்லது கன்றுகள்  நோய் தாக்க வண்ணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இல்லையெனில் வாழை கட்டை அல்லது கன்றுகளை Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • இரசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம் பயன்படுத்தலாம். இதற்கு  கிழங்கு பகுதியை நன்றாக சுத்தம் செய்து அதனை களிமண் கரைசலில் நனைத்து பின்பு அதன் மேல் Carbofuran குருணையை தூவி விட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • கட்டை அல்லது கிழங்குகளை நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன் நூற் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சானம் மண்ணில் நீண்ட நாட்கள் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து விட்டு சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றுவதால் நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கட்டுக்குள் வைக்கலாம்.
  • நடவு செய்யும் முன்னதாக இடப்படும் அடி உரத்தின் போது, போதுமான நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 3 கிலோ Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட வயலில் பண்ணை பணிகளை மேற்கொள்ளும் போது செடிகளின் வேர்கள் பாதிப்படையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வாழைக் கட்டை அல்லது கன்றுகளை நடவு செய்த 45 முதல் 60 நாட்களுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை அதிகம் இடுவதால் அதன் உள்ள மூலக்கூறுகள் வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு தன்மையை பெறுகிறது.
  • களைகள் மற்றும் முந்தைய பயிர்களின் எச்சங்கள் வயலில் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்கவும்.
  • பண்ணை கருவிகளை பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தம் செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
  • நோய் தாக்குதலை தவிர்க்க Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தலா 25 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • மேற்கண்ட வழிமுறையை நான்காம் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில்.
  • வாழை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்வதால் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

சனி, 16 மார்ச், 2024

வாழையில் வாடல் (பனாமா/ Fusarium) நோயின் அறிகுறிகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழ பயிரில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மொத்த பழங்களின் உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 40 சதவீதம் ஆகும். சந்தை மற்றும் ஏற்றுமதி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அரிசி, கோதுமை, பால் மற்றும் அதனைத் தொடர்ந்து வாழை திகழ்கிறது
  • வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் காணப்பட்டாலும் விவசாயிகளுக்கு மிகவும் சவாலான ஒன்றாக பனாமா அல்லது Fusarium வாடல் நோய் திகழ்கிறது. இதனை பனாமா வாடல், வாஸ்குலர் வாடல் மற்றும் பனாமா நோய் என அழைக்கிறார்கள்.
  • மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை, நோய் தீவிரம் மற்றும் சாகுபடி செய்யப்படும் ரகத்தினை பொறுத்து இதன் தாக்குதலால் சுமார் 40 முதல் 45 சதவீதம் வரை மகசூல் எப்படி ஏற்படுகிறது.

நோய் தாக்கும் பூஞ்சானத்தின் செயல்பாடுகள்:

  • பனாமா வாடல் நோயை ஏற்படுத்தும் Fusarium oxysporum பூஞ்சானமானது மண்ணில் வாழ கூடியதாகும். இந்த வகை பூஞ்சானம் மண்ணில் பல வருடங்களுக்கு உறக்க நிலையில் காணப்படும்.
  • எப்போது சாதகமான சூழ்நிலை மற்றும் செடிகளின் வேர் பகுதியில் காயங்கள் தென்படுகிறதோ அதன் வழியாக இதன் தாக்குதல் ஆரம்பமாகிறது.

நோய் பரவும் விதம்:

  • இந்த பூஞ்சானமானது மண்ணில் வாழ்வதால் வாய்க்கால் வழியாக நீர் பாய்ச்சும் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.
  • பண்ணையில் பயன்படுத்தும் உபகரணங்கள் வாயிலாகவும் நாம் பண்ணைப் பணி செய்யும் போதும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது. உதாரணமாக உழவு கலப்பை, மண்வெட்டி மற்றும் இதர...
  • கன்றுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் களைகளை அகற்ற டிராக்டர் அல்லது பவர் டில்லர் போன்றவற்றை பயன்படுத்தும் போது இது வேர் பகுதியில் சேதத்தை ஏற்படுத்துகிறது. சேதம் அடைந்த வேர் வழியாகவும் இந்த பூஞ்சானம் நோயை ஏற்படுகிறது.
  • இதைத் தவிர பாதிக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை நிலத்திலேயே விட்டு விடுவதால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
  • வாழை கட்டைகளை வாங்கி நடவு செய்யும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் இதன் மூலமாக அதிகமாக பரவுகிறது வேறு வயலில் இருந்து கொண்டு வரப்படும் வாழை கட்டைகளை பூஞ்சான கொல்லி பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • பனாமா வாடல் நோய் பொதுவாக 4 முதல் 5 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய செடிகளை தான் தாக்குகிறது.
  • ஒருவேளை தொடர்ச்சியாக ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றால் அந்தப் பயிர்களில் மூன்று மாத பயிர்களையும் இந்த பூஞ்சானம் தாக்கும்.

  • நோயை தாக்கக்கூடிய பூஞ்சானங்கள் தாக்குதலின் தொடக்கத்தில் பயிர்களின் வேர்களை தாக்குகிறது. பின்னர் செடிகளின் கிழங்கு பகுதிக்கு சென்றடைகிறது. இதை நாம் எளிதில் கண்டறிய இயலாது.
  • இதனால் வேர் மட்டும் கிழங்கு பகுதிகளின் உட் திசுக்களில் நிறம் மாற்றம் ஏற்படுகிறது.


  • அடுத்தபடியாக இந்த பூஞ்சானங்கள் Pseudo-stem எனப்படும் தண்டுப் பகுதியை சென்றடையும். அங்கு தான் நோய் தாக்குதலின் ஆரம்ப நிலை அறிகுறிகள் நம் கண்களுக்கு தென்படும்.
  • தண்டுப் பகுதியில் காணப்படும் வயதான வாழை உறையில் வெளிர் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டு திட்டாக நிறம் மாற்றம் காணப்படும்.


  • பாதிக்கப்பட்ட மரங்களின் அல்லது செடிகளின் உண்ணக்கூடிய தண்டு பகுதியை வெட்டி பார்க்கும்போது அதில் நிற மாற்றம் காண இயலும் அதாவது இயல்பான நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு முதல் வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காணலாம்.

  • ஆரம்ப நிலையில் இலை காம்புகளின் அடிப்பகுதியில் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிற  கோடுகள் காணப்படும். நாளடைவில் இலைக்காம்புகளுக்கு அடியில் காணப்படும் திசுக்கள் சிதைந்து சிகப்பு முதல் வெளிர் சிகப்பு நிறமாக மாறும்.

  • வாஸ்குலர் திசுக்களை பாதிப்பதால் போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செடிகளின் மேல் பகுதிகளுக்கு செல்வதில்லை.
  • இதனால் செடிகளின் அடி இலைகளின் விளிம்புகளில் இருந்து மஞ்சள் நிற மாற்றம் இலைகளின் நடுப்பகுதி நோக்கி நகரும்.
  • இவ்வாறு நிறமாற்றம் அடைந்த அடி இலைகள் ஒன்றன்பின் ஒன்றாக பழுப்பு நிறமாகி மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இலைகள் பிரியும் இடத்தில் ஒடிந்து தொங்கும்.
  • இதனைப் பார்ப்பதற்கு புடவை கட்டியது போன்று தோன்றும்.
  • நாம் எளிதில் காணக்கூடிய முதல் அறிகுறியாக தண்டின் அடிப்பாகத்தில் நீள் வட்ட வாக்கில் வெடிப்புகளை காண இயலும்.
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் போது அடி இலைகளிலிருந்து மேல் புறமாக இலைகள் காய்ந்து தொங்கும்,  நாளடைவில் வேர்கள், கிழங்கு பகுதி மற்றும் தண்டு பகுதியில் அழுகல் காணப்படும். கடைசியாக இரண்டு பகுதியில் முறிவு அல்லது செடிகள் வாடி இறந்துவிடும். அதனால் தான் இதனை வாடல் நோய் என்கிறார்கள்.


இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பல்வேறு வேளாண் தொடர்பான தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவின் இணைந்து பயன் பெறலாம்.

வியாழன், 14 மார்ச், 2024

தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்தலும் உரம் இடுதலும்

முன்னுரை:

  • "பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்" என்பது பழமொழி. 
  • இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தென்னங்கன்றுகளை தென்னம் பிள்ளைகள் என அழைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 
  • இதன் மூலம் தென்னங்கன்றுகளை நாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கான புரிதல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  • தென்னங்கன்றுகளை பராமரிப்பதில் ஒரு பகுதியாக உர மேலாண்மை பற்றி விரிவாக காண்போம்.
  • தென்னை மரங்களுக்கு உரம் இடுதல் எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் உரங்களை எவ்வாறு இட வேண்டும் என்பது முக்கியம்.
  • முதலாவதாக தென்னை மரங்களின் வேர் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் எவ்வாறு உரம் இட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளை வேர்கள் உருவாகுதல்:

  • தென்னங்காய்கள் நடவு செய்யப்பட்டு முளைக்குருத்து வரும் தருணத்தில் சிறிய வெள்ளை வேர்கள் உருவாகிறது.
  • இதை மண்ணின் கிடை மட்டத்தில் காணப்படுகிறது. பெரும்பான்மையாக இந்த வேர்கள் சுவாசிக்க பயன்படுகிறது.

இளம் பழுப்பு நிற வேர்கள் உருவாகுதல்:

  • வெள்ளை வேர்களுக்கு அடுத்தபடியாக உருவாகும் இளம் பழுப்பு நிற வேர்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை செடிகளுக்கு உறிஞ்சி கொடுக்கிறது. 
  • இந்த வகை வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே இருக்கும். மரங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க மேலிருந்து கீழ் புறமாக இந்த வேர்கள் செயலிழந்து வரும் ஆனால் இது மிக ஆழமாக சென்று வளரக்கூடிய ஆணி வேர்கள் கிடையாது.

இளம் சிகப்பு நிற வேர்கள் உருவாகுதல்:

  • இளம் பழுப்பு நிற வேர்களை சுற்றி  காணப்படும் திசுக்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தரும். செடிகளுக்கு வயது ஆக ஆக இந்த திசுக்கள் மறைந்து விடும் அடுத்தடுத்த வேர்களில் திசுக்கள் உருவாகும். வேர்களில் இருந்து திசுக்கள் மறைந்த வேர்கள் சிகப்பு நிறமாக காணப்படும்.
  • சிகப்பு வேர்கள் நாளடைவில் ஆழமாக சென்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் உறுதி தரக்கூடிய திசுக்கள் இருக்காது எனவே சுமார் 15 சென்டி மீட்டருக்கு கீழ் இருக்கும் சிகப்பு திசுக்கள் பயனற்றது.

ஆணி வேர்கள்:

  • தென்னை மரங்களை பொறுத்தவரையில் ஒரு சில ஆணி வேர்கள் மட்டுமே காணப்படும். இந்த வேர்கள் செடி அல்லது மரங்கள் மண்ணை இறுக பிடித்து நிலைத்து வளர்வதற்கு உதவி புரிகிறது. இது ஊட்டச்சத்துக்களையும் நீரையும் எடுத்து தருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • தென்னை மரங்களின் சுவாச வேர்கள் தரைமட்ட அளவில் வயதிற்கு ஏற்றவாறு இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.
  • இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நல்ல காற்றோட்ட வசதியுடைய மண் தென்னை சாகுபடிக்கு உகந்தது.
  • அவ்வாறு இல்லை என்றால் நல்ல காய்ப்பு திறன் மற்றும் செடி வளர்ச்சி பெற சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு மண்களை மாற்ற வேண்டும்.
  • எனவே நாம் அமைக்கும் வட்டப்பாத்திகள் செடிகளின் வயதிற்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 2 மீட்டர் சுற்றளவு இருக்கலாம். அதற்கு அதிகமான அளவு வட்டப்பாத்தி அமைப்பது பயனற்றது என்பது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்தாகும்.
  • 60 வருடம் வயதுடைய தென்னை மரங்களை ஆய்வு செய்யும் போது கூட அதன் சுவாச வேர்கள் இரண்டு மீட்டர் சுற்றளவை தாண்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வட்டப்பாத்தி இரண்டு மீட்டருக்கு விடாமல் இருப்பது சால சிறந்தது.
  • நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் வேறானது தரை மட்டத்திலிருந்து சுமார் 15 முதல் 20 சென்டிமீட்டர் ஆழம் வரை மட்டுமே காணப்படும். மிகவும் வயதான மரங்களை ஆய்வு செய்யும் போது கூட அதன் ஊட்டச்சத்து வேர்கள் 15 சென்டிமீட்டர் ஆழத்தை தாண்டி செல்வதில்லை.

  • எனவே நாம் உரமிடும் போது எக்காரணத்தைக் கொண்டும் 15 சென்டிமீட்டர் ஆழத்தை தாண்டி உரம் விடுதவிர்ப்பது நல்லது.
  • சரியான முறையில் வட்டப்பாத்தி அமைப்பது எவ்வாறு என்று மேலே கூறப்பட்டுள்ளது உதாரணத்திற்கு கீழே புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

உர மேலாண்மை பற்றி காண்போம்:

  • தென்னை ஒரு பல்லாண்டு பயிராக திகழ்கிறது. நாட்டு மரங்களாக இருப்பின் 60-70 வருடங்களும் ஒட்டு ரகங்கள் 40 வருடங்கள் வரை கூட பராமரிக்கலாம். 
  • எனவே இதன் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறன் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு உர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

எப்போது உரம் இட ஆரம்பிக்க வேண்டும்...

கன்றுகளை நிலத்தில் நட்ட உடன் புது வெள்ளை வேர்கள் உருவான பிறகு அதாவது சுமார் மூன்று மாதங்கள் கழித்து.

இயற்கை விவசாயத்திற்கு என்ன உரம் இடவேண்டும்...

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் எந்த அளவிற்கு இயற்கை உரங்களை இடிகிறோமோ அந்த அளவிற்கு மண்ணின் ஊட்டச்சத்து பெருகுவதுடன் மண்ணின் இறுகத்தன்மை குறைந்து மிருதுவாகிறது. மேலும் இதே போதுமான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுயிரிகளின் அளவை மேம்படுத்துகிறது. நன்கு மக்கிய தொழு உரம் (அதாவது சராசரியாக 5 மாதங்கள் மக்கியது), கோழி எரு, ஆட்டு எரு, மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் முதலீட்டில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மரத்தைச் சுற்றி ஆறு முதல் எட்டு அடியில் வட்ட பாத்தி அதில் இட வேண்டும்.
  • நமது வயலின் தன்மையை பொறுத்து தொழு உரம் இடும்போது அதனுடன் சேர்ந்து உயிர் உரங்கள்/உயிர் பூஞ்சன கொல்லிகள் அல்லது உயிர் பூச்சிக்கொல்லிகளை கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும். இல்லையெனில் பசுந்தாள் உர பயிர்களை தென்னை மரங்களை சுற்றி வளர்த்து உரமாக்கலாம்.

ரசாயன உரம் என்ன இடலாம்...

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் இதற்கு தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. இந்த முதன்மை ஊட்டச் சத்துக்களின் பற்றாக் குறைகள் பெரிதாக வெளிப்படுவதில்லை.
  • அதற்கு அடுத்தபடியாக போரான், மெக்னீசியம் மாங்கனிசு மற்றும் சல்பர் போன்ற நுண்ணூட்டங்களின் செயல்பாடுகள் இன்றியமையாதாகும்.
  • போரான் சத்தின் பங்கு நாம் அனைவரும் அறிந்ததே. மண்ணில் இடப்படும் போரான் சத்து மண்ணில் நிலை நிறுத்தப் படுவதாலும், எளிதில் கரைந்து விடுவதாலும் மற்றும் மண்ணின் உவர் தன்மை காரணமாகவும் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அவ்வாறு கிடைக்கப்பெறும் போரான் சத்து செடிகளின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகாது. எனவே இதன் பற்றாக்குறையால் துணி குருத்துகள் போதுமாக வளராமலும், குருத்து இலைகள் சரியாக விரிவடையாமலும், பிரிவடைந்த இலைகளின் நுனிகளில் வலை பின்னல் போன்ற அமைப்பு காணப்படும். தென்னையின் காய்ப்பு தருணத்தில் போதுமான பூ மற்றும் காய்கள் இன்றி காணப்படுவது, இளம் காய்கள் உதிர்தல், உதிர்ந்த காய்களின் உருவம் நீள்வாக்கில் இருத்தல் என பல்வேறு பற்றாக்குறை அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • மாங்கனிசம் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இந்த நுண்ணூட்ட சத்துக்கள் இலைகளின் உருவம், ஒளிச்சேர்க்கைக்கு தேவையான பச்சயத்தின் உற்பத்தி மற்றும் பூப்பிடித்தல் மற்றும் காய்ப்பு திறன் போது முக்கியமாக தேவைப்படுகிறது. குறுகிய மற்றும் வெளிர் நிற இலைகள், குறைவான பூ பிடித்தல் மற்றும் அதிக பூ உதிர்தல் என பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • சல்பர் காய்களின் சுவையை மேம்படுத்துவதுடன் எண்ணெயின் அளவை அதிகப்படுத்துகிறது.
  • இதே போன்ற மற்ற நுண்ணூட்டச் சத்தும் தென்னைக்கு முக்கியமானதாகும். இருப்பினும் அவைகள் பெரிதாக அறிகுறிகளை தோற்றுவிப்பதில்லை. 

எனவே 
தொழு உரம் -15-25 கிலோ
தழைச்சத்து - 1.5 கிலோ 
மணிச்சத்து - 2 கிலோ சாம்பல் சத்து -2 கிலோ
நுண்ணூட்ட சத்து - 1 கிலோ
என்ற அளவில் 5 வருடம் ஆன ஒரு மரத்திற்கு சுமார் 5-6 அடி அகலத்தில் வட்டப் பாத்தி இட்டு அதில் 10 முதல் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் மேலே உள்ள உரங்களை மரத்தைச் சுற்றி இட்டு நீர் பாய்சவும்.

  • இவைகள் அனைத்துமே பொதுவான கருத்து செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்
இது போன்ற விவசாய தகவல் மற்றும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்க கீழ்கண்ட இணைப்பில் உள்ள குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதன், 6 மார்ச், 2024

நிலக்கடலையில் சிலந்திப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் உள்ளது. அதில் சில இடங்களில் 20 முதல் 30 நாட்கள் பயிராகவும் சில இடங்களில்  70 முதல் 80 நாட்கள் ஆன நிலையில் பயிர்கள் காணப்படுகிறது.
  • நிலக்கடலையை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சிலந்திப்பேன் பூச்சி தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் நிலக்கடலையில் சிலந்திப்பேன் தாக்குதல் மிகவும் குறைவு. ஆனால் தொடர்ச்சியாக நிலவும் காலநிலை மாற்றத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தாக்குதலுக்கு தேவையான தகுந்த சூழ்நிலை:

  • அதிகப்படியான வறட்சி நிலவுதல்
  • அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று இருப்பது நிலவும் போதும்
  • செடிகள் நீர் பற்றாக்குறையை சந்திக்கும்போது
  • சாதகமான பயிர்கள் அருகில் சாகுபடி செய்யும் போதும் இதன் தாக்குதல் எளிதில் நிலக்கடலையை பாதிக்கிறது.

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • சாறு உறிஞ்சும் பூச்சியான சிலந்திப்பேனில் பல்வேறு வகைகள் காணப்படுகிறது. 
  • அதில் மிகவும் பொதுவான ஒன்று Tetranychus இனமாகும். இந்த இனம் தான் நிலக்கடலையை பாதிக்கிறது.
  • இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்படுகிறது. முட்டையில் இடப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்களில் இளம் புழுக்கள் தோன்றி பின்னர் மிகுந்த புழுக்களாக மாற்றமடைகிறது.
  • இதன் மொத்த வாழ்நாள் அதிகபட்சமாக 18 லிருந்து 20 நாட்கள் ஆகும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:

  • சிலந்தி பேன்களின் Nymphs என்று கூறப்படுகிற இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலைகளின் அடி புறத்தில் சாறுகளை உறிஞ்சுவதால் இலையின் மேற்புறத்தில் மிகச் சிறிய வெண்மை நிற புள்ளிகள் காணப்படும்.
  • தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் இலையின் மேற்பரப்பில் மிக நெருக்கமான வெள்ளை நிற புள்ளிகள் தென்படும். மேலும் இலையின் கீழ்பகுதி வெளிர் சிகப்பு நிறத்தில் மாற்றமடையும்.
  • இலையின் அடிப்பகுதி மற்றும் தண்டுப் பகுதியில் சிலந்தி பேன்களின் வலை பின்னல்கள் அதிகமாக காணப்படும்.
  • இதனால் இலை மற்றும் செடிகள் குஷ்டம் வந்தது போல் தென்படும்.
  • சாகுபடி பரப்பின் ஒரு பகுதியில் மட்டும் தென்படும் இவ்வகையான அறிகுறிகள் நாளடைவில் வேகமாக பரவும்.
  • தீவிர நிலை தாக்குதலின் போது செடிகள் பழுப்பு நிற மாற்றத்துடன் சுருங்கிய இலைகள், இலை உதிர்வு, குன்றிய வளர்ச்சி, வலை பின்னல்கள் என பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய சிலந்தி பேனை தாங்கி வளரக்கூடிய ரகங்கள் கிடையாது.
  • கோடைகாலத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள போதுமான நீர் வசதி வேண்டும் இல்லை எனில்  தவிர்க்கலாம்.
  • பொதுவாக 50 நாட்களுக்கு மேற்பட்ட செடிகள் எளிதில் சிலந்திப்பேன் தாக்குதலுக்கு உட்படுவதால் கோடை பருவத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பயிரிடலாம்.
  • கோடை பருவத்தில் பயிரிடும் போது போதுமான காற்றோட்ட வசதி இருக்குமாறு பயிர் இடைவெளி விட வேண்டும்.
  • தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் உகந்தது.
  • பயிர்களை அல்லது சாகுபடி நிலத்தை மிகவும் வறட்சி நிலைக்கு விடாமல் அவ்வப்போது நீர் பாய்ச்சவும்.
  • நிலத்தை தொடர்ச்சியாக வயல் ஆய்வு செய்து இலைகளின் அடிப்பகுதியில் பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அப்புறப்படுத்தவும்.
  • வயலில் வேட்டையாடும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட கவர்ச்சி பொறி பயிர்கள் பயன்படுத்தலாம்.
  • பேன் தாக்குதலின்  ஆரம்ப நிலையின் போது Bacillus மற்றும் verticillum போன்ற உயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

  • வேப்ப எண்ணெய் 10 லிட்டர் தண்ணீருக்கு மூன்று முதல் ஐந்து மில்லி என்ற விதத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளை ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

Spiromesifen -3 ml/ lit water

https://amzn.to/4aa33gE

Abamectin - 7 ml/ lit water

https://amzn.to/3TcBCfg

Hexythiazox - 1 ml/ lit water

https://amzn.to/3TyJHwi

Chlorfenapyr - 1 ml/ lit water

https://amzn.to/4cfmFBF

Fenpropathrin - 5 ml/ lit water

https://amzn.to/4a9vlHX

Spirotetramat - 1 ml/ lit water

https://amzn.to/4adiIMh

Propargite - 1 ml/ lit water

https://amzn.to/3VwYlFN

Fenpyroximate - 3 ml/ lit water

https://amzn.to/43cyTXO


மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp இருந்து பயன்படுத்தலாம்...

திங்கள், 4 மார்ச், 2024

மிளகாயில் அழுகல்/Choanephora கருகல் நோய் மேலாண்மை

நோயின் அறிகுறிகள்:

  • இந்த பூஞ்சான நோயானது நாற்று உற்பத்தியின் போதும் மற்றும் செடிகள் பூக்கும் நேரத்திலும் காணப்படுகிறது.
  • பூஞ்சையானது ஆரம்ப நிலையில் செடிகளின் மேல் பகுதியில் காணப்படக்கூடிய இலைகள்,  பூக்கள், பிஞ்சுகள் மற்றும் தண்டு ஆகியவற்றை தாக்குகிறது.
  • நீர்த்த புள்ளிகள் செடியின் பல்வேறு பாகங்களில் காணப்படும்.
  • நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி புண்கள் போன்று மாறும்.
  • புண்கள் பெரிதாகி பழுப்பு முதல் கருப்பு நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் சுருங்கி பின்னர் கருகி உதிரும்.
  • பாதிக்கபட்ட தண்டுப் பகுதியானது கருப்பு நிற அழுகல் நோயால் பாதிக்கப்படுவதுடன் அதன் மேல் வெண்மை நிறப் பூஞ்சான வளர்ச்சி காணப்படும்.
  • நாளடைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அழுகி உதிர்ந்து விடும்.
  • இதனால் செடிகள் நுண்ணியிலிருந்து கருகிக்கொண்டே கீழ் நோக்கி வரும்.இதைப் பார்ப்பதற்கு நுனி கருகள் நோய் போன்று தெரியும் அதனை ஆங்கிலத்தில் டைபேக் (Die back) என்பார்கள்.




நோய் பூஞ்சை பற்றிய தகவல்:

  • கத்திரி, மிளகாய், வெள்ளரி, தர்பூசணி, பரங்கி, பூசணி, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது.
  • பொதுவாக இந்த பூஞ்சானமானது பூச்சி தாக்குதல் மற்றும் பண்ணை பணியினால் செடியில் ஏற்படும் காயங்களை பயன்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • பூஞ்சானம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதிக்கப்பட்ட செடிகள், தண்ணீர், மண் மற்றும் பண்ணை உபகரணங்களை பயன்படுத்தி பரவுகிறது.

தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு.
  • அதிக காற்று ஈரப்பதம் நிலவுதல்.
  • நிலத்தை அதிகம் காயவிட்டு பிறகு அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுதல் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.
  • அதிக வெப்பநிலை நிலவும் போது அதிக நீர்ப்பாசனம் செய்தால் ஏற்படும் சீதோசன நிலை.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • இன் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்ட ஒட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • வயலில் முந்தைய பயிர்களின் எச்சங்கள் குறிப்பாக மிளகாய், கொடி வகை பயிர்கள்  சாகுபடி செய்திருந்தால் அதை முழுமையாக அகற்றிவிட்டு பின்பு உழவு செய்து நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • மழைப்பொழிவு காலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து பயிரிடலாம்.
  • போதுமான வடிகால் வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும்.
  • இறுகிய மண்ணில் சாகுபடி செய்வதற்கு முன்பு ஆழமாக உழவு செய்து ரோட்டாவேட்டர் பயன்படுத்தி நிலத்தை சீரமைக்கவும்.
  • நடவு செய்யும்போது போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் இல்லை எனில் இது நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
  • இந்த நோய்கள் தாக்கப்படும் போது தெளிப்பு நீர் பாசனம் இருப்பின் அதை தவிர்க்கவும்.
  • ஊடுபயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடலாம்.
  • தாக்குதல்கள் காணப்படுகிறதா என அறிய அவ்வப்போது வயல்களை நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.
  • நோய் தாக்குதல் தென்படும் பொழுது தழைச்சத்து உரத்தை சற்று குறைவாக பயன்படுத்தவும். இல்லையெனில் இது நோய் தாக்குதலை தீவிரப் படுத்தும்.
  • நடவு செய்வதற்கு முன்பதாக நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லிகளை கலந்து ஊட்டம் ஏற்றி பின்பு இடவும்.
  • நோய் தாக்குதலை தவிர்த்திட நடவு செய்த 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை நீர் பாய்ச்சும் பொழுது Trichoderma மற்றும் Bacillus முதலியவற்றைக் நீரில் கரைத்து விடலாம்.
  • மேற்கண்ட வழிமுறையை 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் பின்பற்றலாம்.
  • நோயின் தாக்குதல் சற்று அதிகமாக காணப்படுகிறது எனில் கீழ்கண்ட மருந்துகளில் மிக இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

பயன்படுத்த வேண்டிய மருந்துகள்

முக்கிய நிறுவனங்களில் உள்ள பொருட்களை காண

Propineb - 25 கிராம் 10  லிட்டர் தண்ணீருக்கு

 

https://amzn.to/49WNh8J


Kresoxim methyl + Hexaconazole - 25 கிராம் 10  லிட்டர் தண்ணீருக்கு

https://agribegri.com/products/buy-tata-rallis-ayaan-kresoxim-methyl-40--hexaconazole-8-wg.php

Picoxystrobin + Tricyclozole - 20 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு

https://www.bighaat.com/products/corteva-galileo-sensa-fungicide

Cymoxanil+ Mancozeb - 25 கிராம் 10  லிட்டர் தண்ணீருக்கு

 https://amzn.to/49YY7eg

https://krishibharat.in/product/godrej-elpis-cymoxanil-8-mancozeb-64-5-wp-fungicide/

Captan + Hexaconazole - 25 கிராம் 10  லிட்டர் தண்ணீருக்கு


https://amzn.to/49zi9wn


மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

Recent Posts

Popular Posts