google-site-verification: googled5cb964f606e7b2f.html மே 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 23 மே, 2025

தென்னை சாகுபடியில் கோகோகான் உயிரியல் திரவத்தின் முக்கியத்துவமும் தயாரிப்பு முறையும்

    தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும், பிரதான நோய்களாக வேர் வாடல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் காணப்படுகிறது. இந்த இரண்டு நோய்களும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் பயிர் இறந்து விடுவதால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

 இந்த நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக அல்லது ஆரம்ப நிலை அறிகுறிகள் காணப்படும் பொழுது தென்னை மரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கோகோகான் (Cococon) பயன்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையில் காணப்படும் நோய்களை  கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து அளித்து நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். 

கோகோகான் உயிரியல் திரவத்தை தயார் செய்யும் வழிமுறைகள்:

  • 200 லிட்டர் கொள்ளளவு உடைய ட்ரம்மில் 150 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • இதில் 10 கிலோ நாட்டுச் சர்க்கரை, 5 லிட்டர் தயிர் மற்றும் 500 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்த கலவையில் 5 லிட்டர் தாய் கோகோகான் கலவையை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்தக் ட்ரம்மை சாக்கு பை பயன்படுத்தி மூடி நிழலில் வைக்க வேண்டும். 
  • தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சுத்தமான மூங்கில் கழியை பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும். 
  • 7 நாட்களுக்கு பிறகு இதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் கலவை நன்கு வளர்ந்து விடும் பிறகு இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 
  • தயார் செய்த கலவையில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 8 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மரத்திற்கு 10 லிட்டர் வீதம் மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை பயன்படுத்தும் போது ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

பயன்கள்:

  • பயிர்களுக்கு தேவையான    சத்துக்களை எளிதில் கிடைக்கச் செய்கிறது. 
  • மரங்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும். 
  • நல்ல பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • காய் பிடிப்பு திறன் மேம்பட்டு காணப்படும்.
  • மண்ணில் நன்மை செய்யக்கூடிய உயிரினங்களின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படும். 
  • நீண்ட கால அடிப்படையில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு அதாவது 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்கவும்.
  • இதிலிருந்து தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து அதில் நான்கு கிலோ கல்லு உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இந்த கலவையில் 3 லிட்டர் மாட்டு கோமியத்தை கலந்து இதனை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • இந்த கரைசலில் இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து 10 முதல் 15 காத்திருந்தால் கரைசலின் மேலே ஆடை தோன்றும். இதனை நீக்கிவிட்டு கரைசலை கலைகளில் தெளிக்கலாம். 
  • இயற்கையின் முறையில் தயாரித்தாலும் இந்த களைக்கொல்லி கரைசலை தொடர்ச்சியாக வயலில் தெளிக்கும் பொழுது மண்ணின் மீது உப்பு போன்ற படலம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • இந்த களைக்கொல்லி கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த இயலாது குறிப்பாக காய்கறிகள், தானிய வகை பயிர்கள், நெல் போன்ற குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
  • பல்லாண்டு தாவரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இதனை பயன்படுத்தலாம் குறிப்பாக பழத்தோட்டங்கள், மரவகைப் பயிர்கள், மலைத் தோட்ட பயிர்கள் மற்றும் பல.
  • இந்த கரைசலை பயன்படுத்தி அனைத்து வகையான களைகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட சில வகை கீரை வகை பயிர்களை மட்டும் கட்டுப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


பயிர் சாகுபடியில் உரப்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்

    பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உரங்கள் மூலம் கொடுக்கும் பொழுது, அது எந்த அளவுக்கு பயிர்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்பது மிக முக்கியம். ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மகசூல் திறன் மற்றும் உற்பத்தி செலவு இதை அடிப்படையாக கொண்டு வேறுபடும். 

  • மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித அடிப்படையில் உரம் இடுதல் வேண்டும்.
  • பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான வடிவில் கொடுக்கும் பொழுது உரங்கள் வீணாவதை தவிர்த்து சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.
  • மண்ணின் கார அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுதல் அவசியம். அதாவது காரத்தன்மை உடைய மண் வகைகளுக்கு அதிக அமில உரங்களையும், அமிலத்தன்மை உடைய மண்ணுக்கு காரத்தன்மை உடைய உரங்களை இடவேண்டும். 
  • மணி சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இடுதல் அவசியம். ஏனெனில் இந்த உரங்கள் கரைவதற்கு போதுமான ஈரப்பதம் மற்றும் கால அவகாசம் தேவைப்படும். 
  • அடி உரமாக இடும்பொழுது உரங்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் மண்ணுக்கு அடியில் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • அவர் இல்லையெனில் மேலோட்டமாக இருக்கும் உரங்கள் ஆவியாதல் மூலம் வீணடிக்கப்படுவதுடன் அதிக களை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உரிய தருணத்தில் அதாவது பயிர்கள் விரும்பி ஊட்டச்சத்துக்களை எடுத்துக்க கூடிய வேலையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை கொடுப்பதன் மூலம் அதன் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். 
  • தழைச்சத்து உரங்களை இரண்டு அல்லது மூன்றாக பங்காக பிரித்து, ஒரு பங்கை அடி உரம் ஆகவும் மேல் உரமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
  • உரம் இட்டு பிறகு போதுமான அளவு நீர் விட வேண்டும் இதன் மூலம் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யலாம். ஆனால் நீர் தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மேல் உரமாக இடும் பொழுது களைகளை அகற்றிவிட்டு போதுமான அளவு உரம் பயிரின் தண்டு பகிர்ந்து சற்று விலகி இட வேண்டும். மேலும் இந்த உரங்கள் மண்ணால் மூடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்களை மெதுவாக கொடுக்கக்கூடிய உரங்களை பயன்படுத்தலாம் உதாரணத்திற்கு வேம்பு பூசப்பட்ட யூரியா.
  • நீண்டகால அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் மண்ணில் இருப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியாக மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
  • சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஏற்றவாறு நுண்ணூட்ட உரங்களை அடி உரமாக அளிக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பு கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts