google-site-verification: googled5cb964f606e7b2f.html பயிர் சாகுபடியில் உரப்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 23 மே, 2025

பயிர் சாகுபடியில் உரப்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்

    பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உரங்கள் மூலம் கொடுக்கும் பொழுது, அது எந்த அளவுக்கு பயிர்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்பது மிக முக்கியம். ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மகசூல் திறன் மற்றும் உற்பத்தி செலவு இதை அடிப்படையாக கொண்டு வேறுபடும். 

  • மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித அடிப்படையில் உரம் இடுதல் வேண்டும்.
  • பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான வடிவில் கொடுக்கும் பொழுது உரங்கள் வீணாவதை தவிர்த்து சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.
  • மண்ணின் கார அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுதல் அவசியம். அதாவது காரத்தன்மை உடைய மண் வகைகளுக்கு அதிக அமில உரங்களையும், அமிலத்தன்மை உடைய மண்ணுக்கு காரத்தன்மை உடைய உரங்களை இடவேண்டும். 
  • மணி சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இடுதல் அவசியம். ஏனெனில் இந்த உரங்கள் கரைவதற்கு போதுமான ஈரப்பதம் மற்றும் கால அவகாசம் தேவைப்படும். 
  • அடி உரமாக இடும்பொழுது உரங்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் மண்ணுக்கு அடியில் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • அவர் இல்லையெனில் மேலோட்டமாக இருக்கும் உரங்கள் ஆவியாதல் மூலம் வீணடிக்கப்படுவதுடன் அதிக களை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உரிய தருணத்தில் அதாவது பயிர்கள் விரும்பி ஊட்டச்சத்துக்களை எடுத்துக்க கூடிய வேலையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை கொடுப்பதன் மூலம் அதன் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். 
  • தழைச்சத்து உரங்களை இரண்டு அல்லது மூன்றாக பங்காக பிரித்து, ஒரு பங்கை அடி உரம் ஆகவும் மேல் உரமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
  • உரம் இட்டு பிறகு போதுமான அளவு நீர் விட வேண்டும் இதன் மூலம் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யலாம். ஆனால் நீர் தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மேல் உரமாக இடும் பொழுது களைகளை அகற்றிவிட்டு போதுமான அளவு உரம் பயிரின் தண்டு பகிர்ந்து சற்று விலகி இட வேண்டும். மேலும் இந்த உரங்கள் மண்ணால் மூடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்களை மெதுவாக கொடுக்கக்கூடிய உரங்களை பயன்படுத்தலாம் உதாரணத்திற்கு வேம்பு பூசப்பட்ட யூரியா.
  • நீண்டகால அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் மண்ணில் இருப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியாக மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
  • சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஏற்றவாறு நுண்ணூட்ட உரங்களை அடி உரமாக அளிக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பு கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts