google-site-verification: googled5cb964f606e7b2f.html இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 23 மே, 2025

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு அதாவது 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்கவும்.
  • இதிலிருந்து தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து அதில் நான்கு கிலோ கல்லு உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இந்த கலவையில் 3 லிட்டர் மாட்டு கோமியத்தை கலந்து இதனை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • இந்த கரைசலில் இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து 10 முதல் 15 காத்திருந்தால் கரைசலின் மேலே ஆடை தோன்றும். இதனை நீக்கிவிட்டு கரைசலை கலைகளில் தெளிக்கலாம். 
  • இயற்கையின் முறையில் தயாரித்தாலும் இந்த களைக்கொல்லி கரைசலை தொடர்ச்சியாக வயலில் தெளிக்கும் பொழுது மண்ணின் மீது உப்பு போன்ற படலம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • இந்த களைக்கொல்லி கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த இயலாது குறிப்பாக காய்கறிகள், தானிய வகை பயிர்கள், நெல் போன்ற குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
  • பல்லாண்டு தாவரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இதனை பயன்படுத்தலாம் குறிப்பாக பழத்தோட்டங்கள், மரவகைப் பயிர்கள், மலைத் தோட்ட பயிர்கள் மற்றும் பல.
  • இந்த கரைசலை பயன்படுத்தி அனைத்து வகையான களைகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட சில வகை கீரை வகை பயிர்களை மட்டும் கட்டுப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts