google-site-verification: googled5cb964f606e7b2f.html பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பப்பாளி இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய பயிராக சாகுபடியில் உள்ளது. பப்பாளி பயிரின் மகசூலை பாதிக்க கூடிய பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் இருந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பீடு மற்றும் பயிர் இறத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதில் பப்பாளி வளைப்புள்ளி வைரஸ் நோய் மிக முக்கியமானது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • பயிரின் வயது, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வைரஸின் வீரிய தன்மை ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 
  • ஆரம்ப நிலையில் இலைகளில் கரும்பு பச்சை நிறத்தில் கொப்புளங்கள் பரவலாக காணப்படும்.
  • நாளடைவில் இலைகளில் பல வண்ண நிறத்தில் புள்ளிகள் காணப்படும். 
  • இலைப் பகுதியில் வளர்ச்சி தடைப்பட்டு, இலைகள் அகற்ற அமைப்புடன் இல்லாமல் நீள்வாக்கில் வளரும். 
  • இலை காம்புகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீண்டு காணப்படும்.
  • இலைகளில் தேமல் அறிகுறிகள் அதிகமாக தென்படும், நாளடைவில் இதில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • இதனால் ஒட்டுமொத்த பயிரின் வளர்ச்சி தடைப்பட்டு குன்றி காணப்படும். 
  • பயிரின் தண்டுப் பகுதி மற்றும் இலை காம்புகளில் நீர்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். 
  • காய்களில் நீர்த்த  வளையங்கள் காணப்படும்.
  • தீவிர நிலையின் போது இலைகள் மற்றும் பழங்கள் ஒழுங்கற்ற வடிவில் மாற்றம் அடைவதை காண இயலும்.

பரவும் விதம்: 

  • அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இளம் செடிகளில் சாற்றை உறிஞ்சி நொடிப்பொழுதில் மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. 
  • தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி மற்றும் பரங்கி வகை பயிர்களிலும் இந்த வகை வைரஸ் நோய் தாக்குதலை காண இயலும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த வகை வைரஸ் விதை மூலமாக பரவும் அபாயம் உள்ளதால் நோய் தாக்குதல் அல்லாத விதைகளை தேர்வு செய்வது மிக முக்கியம். 
  • வளைப்புள்ளி வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்கள் அல்லது வீரிய ஓட்டு ரகங்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்யலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • வெள்ளரி குடும்பத்தில் இருக்கும் மற்ற பயிர்களை பயிர் செய்த வயலில் பப்பாளி நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • நடவு செய்வதற்கு முன்பதாக வயலை சுற்றி இரண்டு அல்லது மூன்று வரிசையில் சோளம் பயிரிடலாம்.
  • அஸ்வினி அதிகம் தென்படும் பருவத்தில் நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • களை மேலாண்மை மிகவும் முக்கியம் ஏனெனில் அஸ்வினி களைச் செடிகளில் உயிர் வாழ்ந்து பயிரைத்தாக்கும்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து நோய் தாக்குதல் உள்ளதா என்பதை காணவும். தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் தருணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தழைச்சத்து அதிகம் கொடுப்பதை தவிர்த்து இதர ஊட்டச்சத்துக்களை இயற்கை வழி முறையில் கொடுத்து பயிர்களை எதிர்ப்பு திறன் உடையதாக மாற்றலாம்.
  • ஆரம்ப நிலையில் இருந்தே சாறு உறிஞ்சி பூச்சியை கட்டுப்படுத்தும் Verticillum lecanii மற்றும் தேமோர் கரைசல், வேப்ப எண்ணெய், அக்னி அஸ்திரம், வசம்பு கரைசல், 3g போன்றவற்றை தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். 
  • ரசாயன முறையில் அஸ்வினியை கட்டுப்படுத்த கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்.
  • Imidacloprid - 10 மில்லி.
  • Thiamethaxam - 10 கிராம்.
  • Monocrotophos- 30-40 மில்லி
  • Profenaphos - 30-40 மில்லி
  • Lambada cychlothrin - 25 milli
  • Dimethoate - 25 மில்லி.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts