google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்...

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்:

  • தேசிய அளவில் தென்னை சாகுபடி என்பது பிரதான பயிராக திகழ்கிறது. இந்தியா உலக அளவில் தென்னை சாகுபடியில் மூன்றாவது இடத்தினை எட்டியுள்ளது அதேபோன்று தமிழ்நாடு இந்திய அளவில் தென்னை சாகுபடியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து பயிர் காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்கள்.
  • எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாகுபடியில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தென்னை பனை காப்பீடு திட்டம் (CPIS)

ஆங்கிலத்தில் Coconut Palm Insurance Scheme எனப்படும் இந்தத் திட்டமானது தென்னை மரங்களை இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் பல இதர உடனடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமாகும்.

  • இத்திட்டத்தில் வளமான மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். 
  • சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்ய இயலாது தனிப்பட்ட மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
  • காய்ப்பில் உள்ள மரங்கள் குறைந்தது ஐந்து வளமான காய்களை காய்க்க வேண்டும். 
  • காப்பீடு நிறுவனங்களுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 
  • 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்து தொகையாக Rs. 9 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 60 வயது உடைய மரங்களுக்கு Rs. 14 ஆகும்.
  • ஒருவேளை மரங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது முழுவதும் காய்க்கும் திறனை இழந்து விட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.900 எனவும் 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.1750 எனவும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

Kera Suraksha Insurance Scheme:

இளநீர் அல்லது தென்னங் காய்களை அறுவடை செய்தல், மரத்தை சுத்தப்படுத்துதல், மற்றும் பல பணிகளுக்காக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீடு செய்வதே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆண்டிற்கு ரூபாய் 99 செலுத்த வேண்டும் மீதமுள்ள செலுத்து தொகையான ரூபாய் 299.55 ஐ தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும். 18 முதல் 65 வயது உடைய தென்னை மரம் ஏறுபவர்கள் மட்டுமே இதில் பயனடைய இயலும். காப்பீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். ஊனம் அடைந்தால் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts